அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, January 2, 2018

கபிரியேல் தூதன் இனியவை கூறவே வந்தான் மண்ணகம் விரைவோடு..

கபிரியேல் தூதன் இனியவை கூறவே வந்தான் மண்ணகம் விரைவோடு..
என்னே ஆச்சரியம் மண்ணகத்தில் ஒரு விண்ணக அனுபவம்..
கற்பனைக்கெட்டா எழில் மலராய் பூத்திட்டாள் அன்னை..
கண்ணுற்ற வானவனும் பகர்ந்திட்டான் வாழ்த்தினை மகிழ்வோடு...
ஓருகணம் திகைத்திட்டாள் மறுத்தாளில்லை....
வியந்திட்டாள் பயந்தாளில்லை..
அடிமை எனவே தன்னை ஓறுத்தாள் அங்கே...
வானம் பூத்தது வானோர் அணி சிலிர்த்தது.....
தூயகம் துள்ளியது...
வானவன் விளித்தான் நிறைவோடு...
கணவனை அறியா காரிகை
ஏற்றனள் வாக்கினையே...
வார்த்தை தன்மடியில் தவழவே போற்றி புகழ்ந்தாள் உவப்புடனே....
இறைத் திட்டம் ஏற்ற மகிழ்வுடனே மறைந்தார் வானவரும் இருப்பிடமே.....


அன்புடன்
கஸ்மீர் ரோச்

No comments:

Post a Comment