அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Tuesday, January 2, 2018

​திருத் தந்தைக்கு வாழ்த்துப் பா​



​திருத் தந்தைக்கு வாழ்த்துப் பா​

 *உலகமெத்திசையும்
உம் வரவை நாடிடுதே*

 *உம் அழகு வதனமும்
உள்ளார்ந்த நட்பும் ஆசீரளித்திடுதே*

 *எளிய வழியும் எளிய நடையும்
எல்லைகளை தகர்த்திடுதே*

 *இளைஞரை இனிமையாய் ஈர்த்து
இறைப்பற்றில் இருத்திடுதே*

 *புன் சிரிப்பும் புதுமை கருத்தும்
புதுத் தெம்பை தந்திடுதே*

 *எத்தனை கூட்டத்திலும்
எளியோருக்கு நற்செய்தி கிடைத்திடுதே*

 *ஆண்டவரில் தாழ்ந்து
ஆகட்டும் என பணிந்த
இறை குரலே*

 *ஆழமான சாட்சியளித்து
ஆரவாரமின்றி வாழ்ந்து
 திரு அவை தாங்கிடும் ஆலமரமே*

 *பெயருக்கேற்ற பணிவோடு நடை போடும் மெய் ஞானமே*

 *வாழ்க பல்லாண்டு
உலகே மகிழுதுந்தன் உறவோடு....*

அன்புடன்
கஸ்மீர் ரோச்
[9:54 PM, 12/16/2017] Casiner Roch - Chinnamalai: 

குழந்தை மனதை தாருமே......

குழந்தை மனதை தாருமே......

 குழந்தையாய் யாம் மாறவே விண்ணை விட்ட மன்னவனே

குழந்தைக் கோலம் கொண்டே எம்மை மகிழ்வித்த வானமுதே

குழந்தைப் போலவே மாற கற்பித்த எமதருமை பாலகனே

குழந்தைக் கரம் பற்றி வளர்த்த தாதை சூசையின் அருந்தவமே

குழந்தையாய் கண்ட எளியோரை மகிழ்வித்து  இருளகற்றிய பேரொளியே

குழந்தைகளும்  பெரியோரும் கொண்டாட காத்திருந்த நற்றுணையே

குழந்தை பாலனாய் எமக்காக மண்ணில் வந்திட்ட அதிசயமே

குழந்தை வரம் கேட்போருக்கும் வரமழையாய் வந்திட்ட மெய்ஞானமே

பிஞ்சு கரம் பிடித்து எம்மை காத்திடுமே....

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007

ஜெபமாலையை நோக்கி.....

ஜெபமாலையை நோக்கி.....

ஜெபமாலை கண்ணெதிரே தொங்க அங்கு அமர்ந்திருக்கும் அன்னை அழகு முகம் தெரிகிறதா....

ஜெபமாலை கண்பார்வையில் தெரியும்பொழுது அங்கே அன்னை இருப்பிடம் தெரிகிறதா ?

ஜெபமாலையில் அமர்ந்துள்ள அன்னை தொடர்ந்து வேண்டச் சொல்லும் குரல் கேட்கிறதா ?

ஜெபமாலை மணிகள் ஓசை எழுப்புகையில் அன்னை நம்மை தன்னருகில் அமரச் சொல்லும் குரல் கேட்கிறதா ?

ஜெபமாலை இருக்கும் ஒவ்வொரு அறையிலும்  அன்னை இருக்கிறார்கள் என்பது தெரிகிறதா ?

ஜெபமாலை ஜெபிக்க துவங்குகையில் அன்னை நம் இல்லத்தை தம் கரங்களால் அரவணைக்கிறார்கள என உணர்கிறோமா ?

ஜெபமாலை ஜெபித்து முடிக்கும் நாள் ஒரு ஆசீர்வாதமாகவே நிறைவடையும் என அறிவோமா ?


இனி
ஜெபமாலையை
பார்த்து,
தெரிந்து,
வேண்டி,
உணர்ந்து,
சிந்தித்து,
தியானித்து,
அரவணைத்து,
அன்னைக்கு
மகிமை சேர்ப்போமா.....


(கருத்து உதவி;திருமதி்.கோமளா,நெல்லை)
அன்புடன்
கஸ்மீர் ரோச்

பகிர்வு கிறிஸ்மஸ்

பகிர்வு கிறிஸ்மஸ்

அலங்கார கிறிஸ்மஸ்
அருகில் இருக்கும் அயலாரின் குறிப்பறிந்து உதவுவது

 ஆச்சரிய கிறிஸ்மஸ்
பகையுடன் இருப்பவரை வாழ்த்தி அன்பை பரிமாறுவது

 இனிய கிறிஸ்மஸ்
இல்லாதோரை கண்டுபிடித்து சிறு அன்பளிப்பால் மகிழ வைப்பது

 ஈகை கிறிஸ்மஸ்
கண்ணிழந்த ஒருவருக்கு எவ்வகையிலாவது உதவுவது

 உன்னத கிறிஸ்மஸ்
உரிமை இழந்த ஒருவரின் அருகமர்ந்து அன்புடன் உரையாடுவது

 ஊக்கமான கிறிஸ்மஸ்
ஊக்கமிழந்த ஒரு பெரியவரையாவது சந்தித்து பரிசளிப்பது

 எளிய கிறிஸ்மஸ்
நாம் துணி வாங்க இருக்கும் பண மதிப்பை குறைத்து பிறருக்கு அளிப்பது

 ஏற்றமிகு கிறிஸ்மஸ்
உதவி கேட்க வெட்கப்படும் ஒருவருக்காவது உணவுப் பொருட்கள் தருவது

 ஐயமற்ற கிறிஸ்மஸ்
நம்பிக்கையிழந்த ஒருவருக்காவது நம்பிக்கையளிக்கும் நல்வார்த்தை பகர்வது

 ஒப்பற்ற கிறிஸ்மஸ்
ஒதுங்கி ஒதுங்கியே பழகிய ஒருவரை இல்லத்திற்கு அழைத்து மதிப்பளிப்பது

 ஓங்கு நல் கிறிஸ்மஸ்
ஓராயிரம் இல்லையென்றாலும் பகிரும் ஒவ்வொன்றிலும் அன்பை இழையோட வைப்பது

 ஔடத கிறிஸ்மஸ்
மருந்தோ மாத்திரையோ தேவைப்படுவோருக்கு வாங்கி கொடுப்பது

 பகிர்வோம் கிறிஸ்மஸ்

அன்புடன்
கஸ்மீர் ரோச்

நான் என்ன தர....

நான் என்ன தர....

குடிலின் உறுப்பினர்களோடு ஒரு உரையாடல்.....

 நான் ;வாங்க...வாங்க....பாலனுக்கு நீங்க என்ன தரப் போறீங்க ?

 கழுதை ; துணிகளை சுமந்து பொதிந்து தரட்டுமா?

 காளை ; என் உழைப்பின் பலனை அர்ப்பணிக்கவா ?

 ஆட்டுக் குட்டி; துள்ளித் துள்ளிக் குதித்து பாலனை மகிழ்ச்சிப்படுத்தவா?

 ஒட்டகம் ; திருக்குடும்பத்தை சுமந்து செல்லட்டுமா ?

 புல் ; பாலன் நிழலை சுற்றி அழகு படுத்தவா ?

 பனி ; நீர் துளிகளை குறைத்து இதமளிக்கவா ?

 கூரை ; திருக்குடும்பம் நடுங்காமலிருக்க குளிரை தாங்கிக் கொள்ளவா ?

 மலைத் தாள்;
வண்ணம் தந்து பாலன் எண்ணம் கவரவா ?

 வண்ண விளக்குகள்; மின்மினியாய் அணைந்து எரிந்து கண் சிமிட்டவா ?

 நட்சத்திரம் ; உயரே நின்று உறவைப் பாடவா ?

 மண் ; பாலன் நடக்க பூக்களை  அள்ளிப் போடவா ?

எல்லாம் திரும்பி என்னைப் பார்த்து...

 அப்ப நீங்க பாலனுக்கு என்ன தரப் போறீங்க.....?

பதில்.............


அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709008

கபிரியேல் தூதன் இனியவை கூறவே வந்தான் மண்ணகம் விரைவோடு..

கபிரியேல் தூதன் இனியவை கூறவே வந்தான் மண்ணகம் விரைவோடு..
என்னே ஆச்சரியம் மண்ணகத்தில் ஒரு விண்ணக அனுபவம்..
கற்பனைக்கெட்டா எழில் மலராய் பூத்திட்டாள் அன்னை..
கண்ணுற்ற வானவனும் பகர்ந்திட்டான் வாழ்த்தினை மகிழ்வோடு...
ஓருகணம் திகைத்திட்டாள் மறுத்தாளில்லை....
வியந்திட்டாள் பயந்தாளில்லை..
அடிமை எனவே தன்னை ஓறுத்தாள் அங்கே...
வானம் பூத்தது வானோர் அணி சிலிர்த்தது.....
தூயகம் துள்ளியது...
வானவன் விளித்தான் நிறைவோடு...
கணவனை அறியா காரிகை
ஏற்றனள் வாக்கினையே...
வார்த்தை தன்மடியில் தவழவே போற்றி புகழ்ந்தாள் உவப்புடனே....
இறைத் திட்டம் ஏற்ற மகிழ்வுடனே மறைந்தார் வானவரும் இருப்பிடமே.....


அன்புடன்
கஸ்மீர் ரோச்

ஆண்டவரின் அடிமையே

ஆண்டவரின் அடிமையே

அண்டிடும் எம் மகிமையே

அஞ்சா சாத்தானின் பகைமையே

எங்கள் அனைவரின் பெருமையே

திருச்சபையின் வல்லமையே

மாந்தரின் மங்கா நன்மையே

கருணை வழியும் வாய்மையே

என்றும் எம் தாய்மையே

கலங்கும் உள்ளத்து  உரிமையே

தூய ஆவியின் அறிவுக் கூர்மையே

இறை அர்ப்பணிப்பு கன்னிமையே

வல்ல மகனின் அருமையே

உலகோரின் ஞான எளிமையே

ஈடில்லா ஒளி வெண்மையே

சரித்திரமாய் வாழும் புதுமையே

வாழ்க மரியாயே....

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
[7:51 PM, 12/24/2017] Casiner Roch - Chinnamalai: 

மாசற்ற வீரர்கள்

மாசற்ற வீரர்கள்


மாசின்றி பிறந்த இணையில்லா பாலனின் போர் படை தளபதிகளே


இம்மானுவேலனுக்காய் இன்னுயிர் தந்திட்ட செல்வங்களே


இறைத் திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்திட்ட செம்மல்களே


எல்லாம் அறிந்த மகனாருக்காக பறந்திட்ட வெண்ணுடை வேந்தர்களே


இரத்தம் சிந்தி நம்மை மீட்டெடுக்க புறப்படும் முன்னே இரத்த ஆறான குருதிக் குழுவினரே


ஏரோது என்ற கொலைகாரனின் இரத்த வேட்டைக்கு ஆளான பாவமறியா மான்களே


இரத்தக் கோட்டைக்குள் எமக்கு அடைக்கலம் தரவே இரத்த சாட்சிகளான மாணிக்கங்களே


தாயின் அரவணைப்பில் தஞ்சமடைந்தும் கொடுமையாய் குற்றுயிரான மழலைகளே


மாசு மருவற்ற உம்மைப் போலவே எம் பிள்ளைகளும் மாசின்றியே வாழவும் பாவ நிலையைத் தவிர்க்கவும் வேண்டிடுவீரே


சஞ்சலம் போக்கியே சாதனை படைக்கவே இன்னாளில் ஆசீர்வதித்திடும் குழந்தை இயேசு பாலனே !


உலகெங்கும் மழலைகளுக்கு நடக்கும் அக்கிரமங்களில் இருந்து விடுவித்தருளும் பாலனே !

அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

*ஆண்டவரே... ஆனந்த ஒளியே....*

*ஆண்டவரே...
ஆனந்த ஒளியே....*

ஆதி மோசேயின் சட்டப்படியே
ஆலயம் நாடியே...
ஆண் தலைப்பேறு
ஆண்டவருக்கே என்றே
ஆங்கே புறாக்கள்
ஆசையாய் தந்தனரே...

ஆண்டவர் வாக்கறிந்த
ஆனந்த சிமியோன்
ஆறுதலை எதிர்நோக்கியவராமே...

ஆவியின் வரம்
ஆட்கொண்ட அவருமே
ஆள்பரை கண்ணால்கண்டாரே
ஆகையால் மகிழ்வடைந்தாரே.

ஆண்டவரை கையிலேந்தி
ஆகாயத்தை பார்த்தே
ஆனந்தக் கண்ணீர் வடித்தாரே

"ஆண்டவரே உம்மை ஏந்திய
ஆறுயிரை அமைதியுடன்
ஆற்றுப் படுத்திடுமே..
ஆசையுடன் காத்திருந்த
ஆண்டவரை என் கண்கள்
ஆராதித்து விட்டனவே...
ஆவலுடன் கண்ட உலக ஒளியே
ஆதரவாம் இஸ்ரயேலின்
ஆனந்தப் பெருமையே என்றே
ஆசீர் வழங்கினாரே"....

ஆகட்டும் என்ற அன்னையும்
ஆராயாத தந்தையும்
ஆச்சரியமடைந்தனரே...

"ஆளவந்த அரசர் பலரின்
ஆசீராகவும்,வீழ்ச்சியாகவும்
ஆகிடுவார் என்றுரைத்து
ஆழ் மனதில் இருத்தும்படியாய்
ஆற்றொண்ணா துன்ப வாள்
ஆட் கொள்ளும்"என்றே பகர்ந்தாரே....

லூக் 2:3-11

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

திருக்குடும்ப நாளில் "திரு" செபம்

திருக்குடும்ப நாளில் "திரு" செபம்


 திரு க் கரங்களால் எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும் திருக்குடும்பமே


 திரு விவிலியமும் திருசெபமாலையும் என்றும் எம்மை வழி நடத்த வரம் தாரும் திருக்குடும்பமே


 திரு மணமான மணமக்களையும், திருமணத் தயாரிப்பிலுள்ள மக்களையும்  என்றும் வளமாக்கிடும் திருக்குடும்பமே


 திரு டனைப் போல் வரும் சாத்தானின் சோதனை களிலிருந்து எமை தினமும் காப்பாற்றும் திருக்குடும்பமே


 திரு ம்பத் திரும்ப எமை சோதனைக்கு உள்ளாக்கும் தீயவற்றைத் தவிர்க்க உதவும் திருக்குடும்பமே


 திரு நாமத்தையும்,திருநாட்களையும் பக்தியுடன் குடும்பத்தோடு அனுசரிக்க கிருபை செய்யும் திருக்குடும்பமே


 திரு இரத்தத்தில் எமை தோய்த்து உம் மகிமையில் நாளும் வாழ துணை செய்யும் திருக்குடும்பமே


 திரு ச் சிலுவையைக் கொண்டு மகிமையின் உத்தானத்தில் எமை ஆசீர்வதியும் திருக்குடும்பமே ! !


 *ஓ !அன்பால் பிணைக்கப்பட்ட திருக்குடும்பமே

எம் எல்லா  குடும்பங்களையும் இன்றும் என்றும் காத்தருளும்.*


அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

இறைவனின் தாயே

இறைவனின் தாயே

இணையில்லா தாயே

இத்தரணியின் தாயே

இல்லத்தில் அமர்ந்தாயே

இவ்வருடத்தை தந்தாயே

இளையோரின் அன்புத்தாயே

இயங்கிட அருள்செய் தாயே

இறைஉறவின் தாயே

இன்னலில் அடைக்கலத்தாயே

இமைமூடாமல் காத்தாயே

இத்தரணியில் வந்து மகிழ்ந்தாயே

இறைவார்த்தையை ஏற்ற தாயே

இந்தியாவின் இனிய தாயே

இதோ உன் தாய் என்றதும்

இம் மானிடரை அணைத்தாயே

இம் மட்டும் எமை வாழ்வித்தாயே

இன்றுமென்றும் எம் தாயே - விண்

இருப்பிடம் எமக்கு தயாரித்தாயே

இப்பூமியில் வரமளித்தாயே

இயங்க வைத்து வளமளித்தாயே

இங்கு மறுப்போரை மன்னித்தாயே

இதயத்தில் இதமளித்தாயே

இழந்த உறவுகளை சேர்த்தாயே

இழையோடிடும் இனிமை தந்தாயே

இனிமையே !

இடைவிடா சகாயமே !

வாழ்க மரியாயே !!!

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

கனவுகள் மெய்ப்பட்டு களிப்பு தங்கட்டும்

கனவுகள் மெய்ப்பட்டு
களிப்பு  தங்கட்டும்

காத்திருந்தவை
காலந்தாழ்த்தாது சேரட்டும்

கிடைத்தற்கரியவை
கிடைத்து நிறையட்டும்

கீறல்மனங்கள்- உதய
கீதம் பாடட்டும்

குறைகளெல்லாம்
குறைந்து போகட்டும்

கெட்டவை யாவும்
கெட்டொழியட்டும்

கேளாத வேண்டுதல்
கேட்கப்படட்டும்

கைவிடப்பட்ட நல்லவை
கையருகில் சேரட்டும்

கொடாத மனங்கள்
கொடையாளராகட்டும்

கோபமும் சாபமும்
கோலோச்சாமல் இருக்கட்டும்

கௌரவமும் மேன்மையும்
என்றும் தங்கிடட்டும்

வாழ்க வளமுடன்
என வாழ்த்தும்

கஸ்மீர் ரோச் குடும்பத்தினர்

புதுவருடத்தில்

புதுவருடத்தில்.....

2⃣ இரண்டு மனதாக இல்லாமல்

 0⃣  உமக்குமுன் நாங்கள்*ஒன்றுமில்லை* என உணர்ந்து

1⃣ ஒருமனதாக        உம்மை *பற்றிக் கொண்டு

8⃣ எட்டும் செயல்கள்     உம் கருணையால் வெற்றியடைய          நல்லருள்  புரிவீர் இறைவா...



 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை

Lyric for 31st December 2017

 Lyric for 31st December 2017

Before the year draws to a close
For all blessings, let’s thank our Lord
Let’s change our ways of living
For the New Year let’s please God.


A  HUMBLE  THANKSGIVING

Thank you Lord for the breath that you give
Thank you Lord for the lives that we live

Thank you Lord for the food that we eat
Thank you Lord for the shoes on our feet

Thank you Lord for the roof o’er our head
Thank you Lord for our lovely warm bed

Thank you Lord for this year going past
Thank you Lord for your love that will last

Thank you Lord for the hurdles and trials
Thank you Lord, we were never in denial

Thank you Lord for the strength and power
Thank you Lord for holding us in a difficult hour

Thank you Lord for your mercy and love
Thank you Abba Father Our God up above.

Thank you Lord for the blessings that overflow
We plead for your mercy as we stand at the door

The year TWENTY EIGHTEEN is about to begin
Bless us dear Lord so we avoid every sin

Keep your eye on us, wherever we go
Let your light shine on us daily more and more.

(Have a great last day of 2017 and keep praising and thanking the Lord)

இதோ அவரது ஆசி:

*சனவரி 1

வருடத்தின் முதல் நாள்

அன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நாம் எடுக்கும் அனைத்து காரியங்களையும். எண்ணங்களையும். நம்மையும். நமது உறவுகளையும், நண்பர்களையும் கடவுள் ஆசிர்வதித்து ஞானத்தில் இந்த வருடம் முழுதும் வழிநடத்துவார்.

இதோ அவரது ஆசி:

“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!''


இதே ஆசிரை நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கும், அனைத்து சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் மனதார பகிருங்கள்.