அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, March 21, 2018

† திருப்பலி - பாகம் VII † ✠ திருப்பலியின் உட்கூறுகள் ✠

† திருப்பலி - பாகம் VII †

✠ திருப்பலியின் உட்கூறுகள் ✠

இனிவரும் பதிவுகளில் திருப்பலியின் உட்கூறுகளை கற்றுக்கொள்ள உங்களை அழைத்துச் செல்கின்றேன். உரோமை பூசைப்புத்தகத்தின் பொதுப்போதனை மிகவும் இரத்தினச் சுருக்கமாக திருப்பலியின் உட்கூறுகள் பிரதானமாக இரண்டென்றும், அவைகள் இறைவார்த்தை பகுதி, மற்றது நற்கருணை விருந்தென்றும் சொல்கின்றது. ஆதி திருச்சபையின் காலம் தெடங்கி இன்று வரை திருப்பலியின் பிரதான உட்கூறுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இறைவார்த்தைக்கு செவிமடுப்பது, நன்றி கூறுவது, இதன் நிறைவாக நற்கருணை விருந்தில் பங்கேற்பது. காலங்கள் செல்ல செல்ல சிற்சில கூறுகள் சேர்க்கப்பட்டன. உதாரணமாக தொடக்கச்சடங்கு, இறுதிச்சடங்கை நாம் சொல்லலாம். எமது திருப்பலி 20 நூற்றாண்டு வரலாற்றை கொண்டது.

காலத்துக்கு காலம் திருப்பலி கொண்டாடும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் பிரதான கூறுகளில் எவ்வித மாற்றம் இல்லை.

தொடக்கச் சடங்கு:

இச்சடங்கை ஆரம்ப அல்லது நுழைவுச் சடங்கென்றும் அழைக்கலாம். இதனுடைய பிரிவுகளாக வருகைப்பவனி, வருகைப்பாடல், பீடத்தை முத்தி செய்தல், திருச்சிலுவை அடையாளம், வாழ்த்து, முன்னுரை, பாவமன்னிப்புச்சடங்கு, ஆண்டவரே இரக்கமாயிரும், வானவர் கீதம், சபை மன்றாட்டு.

திருப்பலியில் வருகைப்பவனி 7ம் நூற்றாண்டின் இறுதியில் தான் உள்வாங்கப்படுகின்றது. திருப்பண்ட அறை (Sacristy) அந்த நாட்களில் ஆலயத்தின் நுழைவாயிலில் தான் அமைந்திருந்தது. இதுவும் காரணம் திருப்பண்ட அறையிலிருந்து பவனியாக செல்வது. மேலும் திருப்பலியில் பங்கேற்க
வந்திருப்போரையும் பங்காளிகளாக உள்வாங்கும் நோக்குடன், வருகைப்பவனி இடம் பெற்றது.

இந்த வேளையில் வருகைப்பாடல் பாடப்பட்டது. பெரும்பாலும் திருப்பாடல்கள் 120, 134 என்பன பாடப்பட்டன. திருப்பண்ட அறை பீடித்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டதும் வருகைப்பவனி ரொம்பவும் எளிமையானதாக, குறுகியதாக மாறியது. எனவே வருகைப்பாடல், திருப்பாடலின் ஓரிரு வரியாக குறைக்கப்பட்டது. இன்று வருகைப்பாடல் உண்டு, அதே போன்று வருகைப் பல்லவியும் உண்டு. வருகைப்பாடல் பாடப்பட்டால் வருகைப் பல்லவி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாம் குறைந்தது ஞாயிறு தினங்களிலாவது பவனியை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. வருகைப்பாடல் பொருத்தமானதாக, மகிழ்வானதாக மக்கள் அனைவரும் சேர்ந்து பாடக்கூடிய பரீட்சயமான விறுவிறுப்பான பாடல்களாக இருப்பது வழிபாட்டை மேலும் மெருகூட்டும் பாடல்வரிகள் நாம் பாடும்போது மறைப் பொருளை எடுத்துரைப்பதாக இருப்பது மிகவும் சால சிறந்தது.

No comments:

Post a Comment