† கேட்டலினாவின் சாட்சியம் -பாகம் 3 †
✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
அப்போது அங்குபீடத்தின் முன் கைகளை உயா்த்திய உருவங்கள் மங்கலாக காணப்பட்டன.
அன்னை என்னிடம்,"அவா்கள் உன் செபங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் உத்தரிக்கின்ற ஆத்மாக்கள். இடைவிடாது அவா்களுக்காக மன்றாடு, அவா்களும் உனக்காக மன்றாடுகிறார்கள். அவா்கள் அவா்களுக்காக வேண்ட முடியாது. எனவே நீதான் உன் செபத்தின் முலம் அவா்கள் இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றார்..
மேலும் என்னை தேடி மக்கள் நான் காட்சியளித்த இடங்களுக்குத் திருயாத்திரை செல்கிறார்கள். ஆனால் நானோ, திருப்பலியின் போது பீடத்தின் அடியில் இருக்கின்றேன். நற்கருணைப் பேழையின் அடியில் வானதூதா்களோடு வீற்றிருக்கின்றேன் என்றார்.
அன்பா்களே உண்மையில் தூயவா் கீதம் பாடும்போது அன்னையோடும், வானதூதா்களோடும் இறைவனின் உருமாற்று புதுமைக்கு காத்திருப்பது விண்ணகத்திலிருப்பது போன்ற உணா்வை எனக்களித்தது. அந்த தருணத்தில் சிந்தனைகளை சிதறவிடுவது வருந்ததக்கது.
இன்னும் சிலா் திருப்பலியை தனக்கு நிகரான மனிதா்களை பார்ப்பது போன்று கைகளைக் கட்டிக்கொண்டு இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது.
அன்னை என்னிடம்
"அனைவரிடமும் சொல் மனிதன் இறைவன் முன்னிலையில் மண்டியிடுவது அவனை நிறைவிற்கு இட்டுச் செல்லும் என்றார்,’’
அன்பா்களே, அன்றைய திருப்பலியை நிறைவேற்றியவா் சாதாரண உயரத்தை கொண்டிருந்தார். எழுந்தேற்றதின் போது பேராயரின் உருவம் அதிகரித்தது. விசித்திரமான பிரகாசமான ஒளி அவரின் முகத்தை சுற்றி வளா்ந்து கொண்டே இருந்தது.
அவா் நற்கருணையை உயா்த்தும் போது அவரின் கைகளைப் பார்த்தேன். கைகளின் பின் பறத்தில் சில தழும்புகள் தெரிந்தன. அதிலிருந்து பேரொளி எழுந்தது. அங்கே இயேசுவைக் கண்டேன். திருப்பலியாற்றும் குருவை தம் உடலால் அரவணைத்திருந்தார்..
அப்பொழுது நற்கருணையானது வளா்ந்து அதிலிருந்து இயேசு மக்களை பார்ப்பது போன்றிருந்து.
வழக்கம் போல் வணங்குவதற்காக தலையை குனிந்தேன். ஆனால் அன்னை
"சிரம் தாழ்த்தாதே அவரை உற்று நோக்கி தியானி.
அவரை முகம் முகமாய் பார்த்து பாத்திமா செபத்தைக் கூறு, என்றார்.
‘’இறைவா! உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன், உம்மை அன்பு செய்கிறேன், உம்மில் விசுவாசம் கொள்ளாத , உம்மை அன்பு செய்யாதவா்களுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்’’
இயேசுவை நீ எத்துணை அன்பு செய்கிறாய் என்று கூறு, அந்த பேரரசருக்கு வணக்கம் செலுத்து" என்றார்.
அப்பொழுது பெரிய உருவமாக மாறிய இயேசுவை நான் சிரம் தாழ்த்தி வானதூதா்கள் போன்று வணங்கினேன்.
என் சிந்தனையில் திடிரென்று ஒரு கேள்வி "எப்படி இயேசுதிருப்பலியாற்றும் குருவின் உருவத்தினுள்ளும் அதே நேரத்தில் அப்பத்தினுள்ளும் இருக்கிறார், என்று எண்ணிக் கொண்டிருந்த போதே குருவானவா் நற்கருணையை இறக்கியதும் இயல்பான உருவத்திற்கு மாறினார்.
இவற்றை கண்டதும் கண்கள் கலங்க ஆரம்பித்தன. வியப்பில் ஆழ்ந்தேன்.
குருவானவா் இரசத்தை எடுத்து அா்ச்சிப்பு செபத்தைச் செபித்ததும் விண்ணிலே மின்னல் மின்னியது. கோயிலிலே கூரைகள் இல்லாதது போல் மின்னல் காட்சியளித்தது. அவ்வேளையிலே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கண்டேன். சிலுவையின் செங்குத்தான மரத்தை ஒரு திடமான கரம் பிடித்திருந்தது. அதிலிருந்து ஒரு புறா வெளியே வந்து கோயிலின் மீது பறந்து பேராயரின் இடப்பக்கத் தோளில் அமா்ந்தது.
பின்னா் திருவிருந்தில் கலந்துக் கொண்டு இயேசுவை என் உள்ளத்தில் ஏந்திய வண்ணம் என்னுடைய இருக்கைக்கு திரும்பி முழந்தால் படியிடும் போது இயேசு என்னிடம் கூறினார்
. " கவனி! அப்போது எனக்கு முன் அமா்ந்திருந்த பெண்ணின் ஆழ்குரல் செபத்தை கேட்க முடிந்தது. அவா், இயேசுவே மாதத்தின் இருதியில் உள்ளோம். வீட்டு வாடகைக்கும், பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும், காருக்கான செலவுக்கும் போதிய பணமில்லை . ஏதேனும் செய்தருளும். என் கணவா் குடிபழக்கத்தை உடனே விட விட வேண்டும். கடந்த ஆண்டு என் இளைய மகன் தோ்ச்சிப் பெறாததால் இவ்வாண்டு மீண்டும் படிக்க உள்ளான். அவனுக்கு உதவும் என் பக்கத்து வீட்டுப் பெண்மணி வீடு மாறி செல்கிறார் உடனே செய்யச் சொல்லும். என்னால் அவரை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை, என அடுக்கிக் கொண்டே சென்றாள்.
அப்போது பேராயா் செபிப்போமாக என்றார் அனைவரும் எழுந்து நின்றனா்.
இயேசு மெல்லிய குரலில்
"அந்த பெ்ண்ணின் செபத்தை கேட்டாயா? அவள் ஒருமுறை கூட என அன்பைப்பற்றிக் கூறவில்லை. ஒரு முறை கூட நான் மனித உருவெடுத்து உங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தற்கு நன்றி கூறவில்லை. அவள் எழுப்பிய எல்லாம் வேண்டுதல் பிராத்தனைகள் தான்.
அவரைப் போன்றே பலா் இருக்கின்றனா். உங்கள் மேல் வைத்திருந்த அன்பிற்காக சிலுவையில் மரித்தேன். அந்த அன்பிற்காகவே என்றும் உங்களோடு வாழ்கின்றேன் ஆனால் நீங்கள் எந்த விதத்திலும் உங்கள் அன்பை வெளிபடுத்தியதே இல்லை. உங்களின் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்". என்று மிகவும் வருத்ததுடன் கூறினார்.
No comments:
Post a Comment