கேட்டலினாவின் சாட்சியம்-பாகம்-1
அன்று மங்கள வார்த்தை திருவிழா, நான் ஆலயத்தினுள் நுழைகையிலே அன்னை மாரியாள் என்னை நோக்கி "நீ இன்று புதிதாக பலவற்றை அறிந்து கொள்ள போகிறாய், கூா்ந்து கவனி, ஏனெனில் இதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்" என்றார்.
எனக்கொன்றும் விளங்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளைச் சிதறடிக்காமல் கவனம் செலுத்தினேன்.
தென்றல் வந்து தீண்டுவது போல் ஆலயத்திலிருந்து பாடலொலி என்னை வந்து தீண்டியது.அதைத் தொடா்ந்து பேராயா் திருப்பலியைத் தொடங்கி பாவ மன்னிப்பு வழிபாட்டிற்குள் நுழைந்த போது
மீண்டும் அன்னையின் குரல்
"உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இளறவனுக்கு எதிராக செய்த தவறுதளுக்காக மன்னிப்பு கேள், அதன் முலம் திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுக்கலாம்" என்றது.
என் மனதில் எழுந்த சிந்தனை,
'நான் இறையருளால் நிரப்பப்பட்டிருக்கிறேன், ஏனென்றால் நேற்று மாலை தான் ஒப்புரவு அருட்சாதனம் பெற்றேன்'. என் சிந்தனையை அறிந்த அன்னை
"நீ நேற்று மாலையிலிருந்து இறைவனை புண்படுத்தவில்லையா? இதோ நீ செய்த செயல்களில் சில, ஏழை சிறுமி உன்னிடம் உதவி கேட்டு வந்த போது உன்னுடைய அவசரத்தால் அச்சிறுமியை உதாசினப்படுத்தவில்லையா?
ஆலயத்திற்கு வருவதற்கு முன் உன் மீது மோதுவது போல் வந்த பேருந்தின் ஓட்டுநரை கடும் சொற்களால் திட்டவில்லையா?
மேலும் திருப்பலிக்கு தாமதமாக வந்ததன் மூலம் எந்த முன் தயாரிப்பும் உன்னிடம் இல்லையே" என்றார்.
"போதும் அன்னையே போதும் , நான் உணா்ந்து விட்டேன்" என்று கூறி மன வேதனையுற்றேன்; இறைவனின் கருணையை நாடினேன்.
வானவா் கீதம்
திருவிழா திருப்பலியாக இருந்ததால் "உன்னதங்களிலே" செபிக்கும் முன் அன்னை என்னை நோக்கி "மூவொரு இறைவனின் படைப்பாய் இருக்கும் நீ, அவரை உன் ஆழ்ந்த அன்பினால் மகிமைபடுத்து". என்றாள்.
அன்று செய்த 'உன்னதங்களிலே' செபம் ஒரு வித்தியாசமாக இருந்தது. மிக பிரகாசமான கடவுளின் அரியணையின் முன் இருப்பது போன்று உணா்ந்தேன். நன்றி கீதம் எழுப்பிக் கொண்டே இருந்தேன்.
இரக்கம் மிகுந்த அந்த இறைவனின் திருமுகத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அப்போது நான் இறைவனை நோக்கி
"தந்தையே நான் உமக்கு சொந்தம், என்னை தீயவனிடமிருந்து காத்தருளும். உம் அமைதியால் என்னை நிரப்பும்". என்று உருக்கமாக மன்றாடினேன்.
( இறைவார்த்தை வழிபாடு )
இறைவார்த்தை வழிபாட்டில் நுழைந்த போது தேவதாய் என்னை மீண்டும், மீண்டும் சொல்ல சொன்ன வார்த்தைகள்,,
"இறைவா உம் வார்த்தையைக் கேட்டு அபரிவிதமான பலனை நான் பெற வேண்டும். தூய ஆவியே என் உள்ளத்தைத் தூய்மை படுத்தியருளும். அங்கே உம் வார்த்தை வளம் பெறுவதாக".
அன்னை மேலும் கூறினாள்,
."இறைவார்த்தையையும் மறையுறையையும் கூா்ந்து கவனி. விவிலியம் கூறுவது போல் இறைவார்த்தை பயனளிக்காமல் இராது. நன் முறையில் கவனித்தால் கேட்டவற்றில் சில உன் மனதில் பதியும். நாள் முழுவதும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவா, அவை ஒரு வசனமோ, முழுநற்செய்தியோ, ஏன் ஒரு வார்த்தையாகவோ இருக்கலாம். அதை மனதில் இருத்தி சிந்திக்கையில் அது உன்னில் ஒன்றாக மாறிவிடும். அதுவே உன் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும்.என்றார்.
அப்போது நான் இறைவார்த்தையைக் கேட்க கிடைத்த வாயப்பிற்காக நன்றி கூறி இறைவனிடம் மன்னிப்பு வேண்டினேன். ஏனெனில் அதுவரை என் பிள்ளைகளை ஞாயிறு திருப்பலிக்கு கட்டாயப்படுத்தியது கட்டளைகளை கடைபிடிப்பதற்காக மட்டுமேயன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட வேண்டுமே என்பதற்காக அல்ல.
என்னுடைய அறியாமையால் எத்தனை ஆண்டுகள் வீணடித்தேன் என்பதனை நினைத்து வேதனை உற்றேன். உலகறிவு பெற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளேன். ஆனால் இம்மண்ணகத்திலேயே விண்ணக அனுபவம் பெறக்கூடிய முயற்சியில் சிறிதும் ஈடுபடாமல் இருந்ததைக் கண்டு வருந்தினேன்
No comments:
Post a Comment