† திருப்பலி கருத்துக்களும், பணமும் †
இறைவனுக்கு இறைமக்கள் நாம் செலுத்தும் உன்னத ஆராதனை திருப்பலி என்றால் அது மிகையாகது. இந்ந திருப்பலியின் பலனை நாம் எத்தனை கோடி பணம் கொடுத்தும் வாங்க முடியாது. தன்னையே தாரை வார்த்த தியாகத் தலைவனின் பலி இது. இப்பலிக்கு இவ்வுலகில் எதுவும் நிகராகாது. அத்துணை மாண்புமிக்கது. இத்திருப்பலியை நாம் பல்வேறு கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுத்து ஜெபிக்கலாம்.
திருச்சபையின் வரலாற்றை நாம் நோக்கும் போது ஏறத்தாழ 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைமக்கள் திருப்பலிக்காக பணம் செலுத்தத் தொடங்கினார்கள். இதனுடைய நோக்கம் என்னவாக இருந்திருக்கலாம்? உண்மையிலேயே இது குருவானவருக்கு ஒரு வருவாயாகவும், மேலும் திருப்பலியை ஒர் கருத்துக்காக ஒப்புக் கொடுக்க விரும்புகின்றவர், அதற்காக தான் செய்கின்ற ஒர் தியாகச் செயலாகவும் கருதப்பட்டது. இன்று இச்செயலை நாம் எவ்வாறு புரிந்து
கொள்ளலாம். திருச்சபை சட்டத்தொகுப்பு பின்வரும் வினாக்களைத் தருகின்றது. 'தங்களுடைய கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கக் காணிக்கை அளிக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் திருச்சபையின் நலனுக்காக உதவுகின்றனர். மேலும் அக்காணிக்கை மூலம் தன் பணியாளர்களையும், அலுவல்களையும் பராமரிப்பதில் திருச்சபைக்குள்ள அக்கறையில் பங்கு பெறுகின்றனர்" (தி.ச. 946) அப்படியானால் காணிக்கை எதுவும் கொடுக்க வசதியற்ற வறியவர் ஒருவரின் கருத்துக்காக திருப்பலி ஒப்புக் கொடுப்பது சாத்தியமா? நிச்சயமாக. 'காணிக்கை எதையும் பெறாமலும், கிறிஸ்தவ விசுவாசிகளின் கருத்துக்களுக்காக, சிறப்பாக வறியவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமாறு குருக்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது". (தி. ச.945.2)
திருப்பலியினை வாங்கவோ, விற்கவோ முடியாது. ஒரே திருப்பலியில் பல்வேறு கருத்துக்களுக்காக மன்றாட முடியுமா? ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் இறந்தோர்க்காகவும், வாழ்வோர்க்காகவும் மன்றாடுகின்றோம். வாழ்வோரின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் ஒரே திருப்பலியில் மன்றாடுகின்றோம். சிலர் நன்றி சொல்லலாம், சிலர் நற்சுகத்திற்காக மன்றாடலாம், இன்னும் நீதி நிலவ, அமைதிக்காக, நல்ல தொழில் வாய்ப்புக்களுக்காக, மழை பெய்து விளைச்சல் பெருக, குருக்களுக்காக, பொதுநிலையினருக்காக, இறந்தோருக்காக இப்படி பல கருத்துக்களை சேர்த்துக் கொள்ள முடியும். அதேவேளை பல கருத்துக்களை ஒரே திருப்பலியில் குவிக்க வேண்டும் என்பதில்லை. காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, அவை காலத்திற்கு காலம் மாற்றம் காணலாம்.
திருப்பலி என்ன கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படுகின்றதோ அதை திருப்பலியின் முன் சொல்வது வரவேற்கப்படத்தக்கது. நாங்கள் எந்தக் கருத்துக்காக செபிக்க காணிக்கை கொடுத்தோமோ அக்கருத்தை குருவானவர் சொல்லத்தானே வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவ்வாறு உங்கள் கருத்து தவறுதலாக சொல்லப்படாமல் இருக்குமிடத்தில் குருக்களோடு முரண்பட தேவையில்லை. நீங்களும் திருப்பலி ஒப்புக் கொடுக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களுக்காக செபித்து ஒப்புக் கொடுக்கின்றீர்கள். குருக்கள் மாத்திரம் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதில்லை. இறைமக்கள் சமூகமே திருப்பலியை ஒப்புக் கொடுக்க, குருவானவர் தலைமையேற்று நடத்துகின்றார். உதாரணமாக தங்களுடைய திருமண ஆண்டு நினைவு நாளில், ஒர் தம்பதியினர் அமைதியாக தாங்கள் இருவரும், எவ்வித ஆரவாரமில்லாமல், திருப்பலியில் கலந்து கொண்டு, ஜெபித்து ஒப்புக் கொடுத்தால், அத்திருப்பலியின் பலனை பெறாமல் இருப்பார்களோ? நிச்சயமாக திருப்பலியின் பலனை எவரும், எதையும் கொண்டு தடுக்கமுடியாது.
மேலும் எனது பெற்றோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கும் திருப்பலியில் அவர்களுடைய பெயர் வாசிக்கப்பட்டால் எனது மனம் ஆறுதல் அடைகின்றது. அதேநேரம் இரண்டொரு தடவை வாசித்தால் நலம் எனக்கருதி அவ்வாறு தான் நடைமுறை இருக்க வேண்டும் என வாதிடுவது தேவையற்றது. யாது கருத்துக்களையும் குருவானவர் உச்சரித்தால் தான் அவை நிறைவேற்றப்படும் என்ற நியதியும் இல்லை. அவ்வாறு கருதுவதும் தவறு. இன்று ஒர் புதிய நடைமுறையும் நம்மிடையே ஊடறுந்துள்ளது. கருத்துக்களுக்காக காணிக்கை செலுத்தி திருப்பலி ஒப்புக் கொடுக்க விரும்பும் சிலர் அத்திருப்பலியில் பங்கேற்பது இல்லை. இத்தவறான நடைமுறை களையப்படவேண்டும்.
ஈற்றிலே மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் திருப்பலியினை எதனோடும் ஒப்பிடமுடியாது. இயேசுவின் திருஇரத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட உன்னத உடன்படிக்கையான திருப்பலிக்கு நான் செலுத்தும் காணிக்கை நான் செய்யும் ஒர் சிறிய தியாகம் என்பதை மனதிற் தெளிவாய் இருத்திக் கொள்வோம்.
இறைவனுக்கு இறைமக்கள் நாம் செலுத்தும் உன்னத ஆராதனை திருப்பலி என்றால் அது மிகையாகது. இந்ந திருப்பலியின் பலனை நாம் எத்தனை கோடி பணம் கொடுத்தும் வாங்க முடியாது. தன்னையே தாரை வார்த்த தியாகத் தலைவனின் பலி இது. இப்பலிக்கு இவ்வுலகில் எதுவும் நிகராகாது. அத்துணை மாண்புமிக்கது. இத்திருப்பலியை நாம் பல்வேறு கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுத்து ஜெபிக்கலாம்.
திருச்சபையின் வரலாற்றை நாம் நோக்கும் போது ஏறத்தாழ 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைமக்கள் திருப்பலிக்காக பணம் செலுத்தத் தொடங்கினார்கள். இதனுடைய நோக்கம் என்னவாக இருந்திருக்கலாம்? உண்மையிலேயே இது குருவானவருக்கு ஒரு வருவாயாகவும், மேலும் திருப்பலியை ஒர் கருத்துக்காக ஒப்புக் கொடுக்க விரும்புகின்றவர், அதற்காக தான் செய்கின்ற ஒர் தியாகச் செயலாகவும் கருதப்பட்டது. இன்று இச்செயலை நாம் எவ்வாறு புரிந்து
கொள்ளலாம். திருச்சபை சட்டத்தொகுப்பு பின்வரும் வினாக்களைத் தருகின்றது. 'தங்களுடைய கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கக் காணிக்கை அளிக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் திருச்சபையின் நலனுக்காக உதவுகின்றனர். மேலும் அக்காணிக்கை மூலம் தன் பணியாளர்களையும், அலுவல்களையும் பராமரிப்பதில் திருச்சபைக்குள்ள அக்கறையில் பங்கு பெறுகின்றனர்" (தி.ச. 946) அப்படியானால் காணிக்கை எதுவும் கொடுக்க வசதியற்ற வறியவர் ஒருவரின் கருத்துக்காக திருப்பலி ஒப்புக் கொடுப்பது சாத்தியமா? நிச்சயமாக. 'காணிக்கை எதையும் பெறாமலும், கிறிஸ்தவ விசுவாசிகளின் கருத்துக்களுக்காக, சிறப்பாக வறியவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமாறு குருக்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது". (தி. ச.945.2)
திருப்பலியினை வாங்கவோ, விற்கவோ முடியாது. ஒரே திருப்பலியில் பல்வேறு கருத்துக்களுக்காக மன்றாட முடியுமா? ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் இறந்தோர்க்காகவும், வாழ்வோர்க்காகவும் மன்றாடுகின்றோம். வாழ்வோரின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் ஒரே திருப்பலியில் மன்றாடுகின்றோம். சிலர் நன்றி சொல்லலாம், சிலர் நற்சுகத்திற்காக மன்றாடலாம், இன்னும் நீதி நிலவ, அமைதிக்காக, நல்ல தொழில் வாய்ப்புக்களுக்காக, மழை பெய்து விளைச்சல் பெருக, குருக்களுக்காக, பொதுநிலையினருக்காக, இறந்தோருக்காக இப்படி பல கருத்துக்களை சேர்த்துக் கொள்ள முடியும். அதேவேளை பல கருத்துக்களை ஒரே திருப்பலியில் குவிக்க வேண்டும் என்பதில்லை. காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, அவை காலத்திற்கு காலம் மாற்றம் காணலாம்.
திருப்பலி என்ன கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படுகின்றதோ அதை திருப்பலியின் முன் சொல்வது வரவேற்கப்படத்தக்கது. நாங்கள் எந்தக் கருத்துக்காக செபிக்க காணிக்கை கொடுத்தோமோ அக்கருத்தை குருவானவர் சொல்லத்தானே வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவ்வாறு உங்கள் கருத்து தவறுதலாக சொல்லப்படாமல் இருக்குமிடத்தில் குருக்களோடு முரண்பட தேவையில்லை. நீங்களும் திருப்பலி ஒப்புக் கொடுக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களுக்காக செபித்து ஒப்புக் கொடுக்கின்றீர்கள். குருக்கள் மாத்திரம் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதில்லை. இறைமக்கள் சமூகமே திருப்பலியை ஒப்புக் கொடுக்க, குருவானவர் தலைமையேற்று நடத்துகின்றார். உதாரணமாக தங்களுடைய திருமண ஆண்டு நினைவு நாளில், ஒர் தம்பதியினர் அமைதியாக தாங்கள் இருவரும், எவ்வித ஆரவாரமில்லாமல், திருப்பலியில் கலந்து கொண்டு, ஜெபித்து ஒப்புக் கொடுத்தால், அத்திருப்பலியின் பலனை பெறாமல் இருப்பார்களோ? நிச்சயமாக திருப்பலியின் பலனை எவரும், எதையும் கொண்டு தடுக்கமுடியாது.
மேலும் எனது பெற்றோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கும் திருப்பலியில் அவர்களுடைய பெயர் வாசிக்கப்பட்டால் எனது மனம் ஆறுதல் அடைகின்றது. அதேநேரம் இரண்டொரு தடவை வாசித்தால் நலம் எனக்கருதி அவ்வாறு தான் நடைமுறை இருக்க வேண்டும் என வாதிடுவது தேவையற்றது. யாது கருத்துக்களையும் குருவானவர் உச்சரித்தால் தான் அவை நிறைவேற்றப்படும் என்ற நியதியும் இல்லை. அவ்வாறு கருதுவதும் தவறு. இன்று ஒர் புதிய நடைமுறையும் நம்மிடையே ஊடறுந்துள்ளது. கருத்துக்களுக்காக காணிக்கை செலுத்தி திருப்பலி ஒப்புக் கொடுக்க விரும்பும் சிலர் அத்திருப்பலியில் பங்கேற்பது இல்லை. இத்தவறான நடைமுறை களையப்படவேண்டும்.
ஈற்றிலே மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் திருப்பலியினை எதனோடும் ஒப்பிடமுடியாது. இயேசுவின் திருஇரத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட உன்னத உடன்படிக்கையான திருப்பலிக்கு நான் செலுத்தும் காணிக்கை நான் செய்யும் ஒர் சிறிய தியாகம் என்பதை மனதிற் தெளிவாய் இருத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment