அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, March 21, 2018

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 5 †

† கேட்டலினாவின் சாட்சியம் பாகம் 5 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

நாம் உட்கொள்ளும் இந்த தெய்வீக உணவு மன மாற்றத்திற்கும் நற்செயல்களுக்கும் இட்டுச் செல்ல வேண்டும்.

சிலா் தினமும் நற்கருணை உட்கொள்கின்றனா். பல மணி நேரம் செபத்தில் ஈடுபடுகின்றனா், ஆனால் எந்த மாற்றமுமின்றி வாழ்கின்றனா்.

பொது நிலையினரான நமக்கு திருச்சபையிலே முக்கியமான பொறுப்புண்டு.

இறைஇயேசுவின் நற்செய்தியைப் பரப்ப,கடவுள் நம்மை அனுப்பியிருக்கின்றார்.

நாம் பெற்றதை பிறரோடு பகிர வேண்டியது நமது கடமை.

நாம் திருப்பலியிலும், மறையுரையிலும் அருட்சாதனங்களிலும் பெற்ற செய்தியையும் , அருளையும் உலகத்திற்கு எடுத்துச் செல்வோம்.

நாம் நமது சுகமான வாழ்வை விட்டுவிட்டு, நமது ஆறுதலான வார்த்தைகள் தேவைபடுகின்றவா்களுக்கு குறிப்பாக சிறையிலே, மருத்துவமனைகளிலே நாம் நமது செபங்களின் மூலம் உதவ முன் வர வேண்டும். ஆனால் நாம் இம்மாதிரியான காரியங்களில் தயங்குவது ஏன்?

நோயில் வாடுபவா்களுக்கு நம்முடைய செபங்களால் உறுதிப்படுத்த வேண்டும். இறக்கும் தருவாயில் உள்ள அனைவருமே மரண பயத்தால் வாடுவது இயல்பே. நாம் ஏன் அவா்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு இவைனின் அன்பையும், விரைவில் அவா்கள் காணவிருக்கும் இறைவனின் வியப்புக்குறிய மறுவாழ்வையும் எடுத்துரைத்து ஆறுதல் படுத்தக் கூடாது?

நாம் அருட்தந்தையின் தொடா் கரங்களாக விளங்க வேண்டும்.

முதலில் இறையரசை நாடுங்கள் மற்றனைத்தும் உங்களுக்குச் சோ்த்துக் கொடுக்கப்படும் என்பதிலேயே இயேசு அனைத்தையும் சுருக்கிவிட்டார்.
நாம் முழு இறைமனிதா்களாக மாறுவதிலே தயக்கம் காட்டுகிறோம். நாம் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் பயன்படுத்தி அவரின் அரசை நாடும் போது, அவா் நமக்கு அனைத்தையும் கொடுப்பார்.

சகோதர சகோதரிகளே! என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த இறைப்பணியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள, உங்களின் நேரத்தை ஒதுக்கியமைக்காக நன்றி கூறுகிறேன்.

அடுத்த முறை,நீங்கள் ஒவ்வொருவரும் திருப்பலியிலே பங்கெடுக்கும் பொழுது அதை ஆழ்ந்த அனுபவமாக மாற்றுங்கள்.

இறைவன் கொடுத்த வாக்குறுதி "நீ மறுமுறை காணும் உன் திருப்பலி அதே போல இருக்காது." என்பதை உணா்வீா்கள்.

அவரைப் பெறுகையிலே முழுமையாக அன்பு செய்யுங்கள். அவரது தோளில் சாய்வதில் பெறுகின்ற இனிய சுகத்தை நீங்களே அனுபவியுங்கள். ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட அவரின் விலாவானது நமக்கு வானகத் தந்தையின் வாயிலைத் திறந்திருக்கின்றது.

இதை உணா்ந்து, தாயைக் கண்ட குழந்தைபோல் நமது அன்பை வெளிப்படுத்துவோம்

---ஆமென்.

No comments:

Post a Comment