அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, March 21, 2018

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 4 †


† கேட்டலினாவின் சாட்சியம் பாகம் 4 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

இறுதியாசீருக்கு முன் அன்னை என்னிடம் "கவனமாயிரு! பக்தி பற்றுதலுடன் சிலுவை அடையாளத்தை வரை! ஏனென்றால் இதுவே உன் வாழ்வின் கடைசி முறையாக இருக்கலாம். கோயிலை விட்டுச் செல்லும் போது மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அருள் தந்தையா்களிடமிருந்து பெறுகிற இறுதி ஆசீராக கூட இருக்கலாம் என்றார் .

இந்த மகத்துவத்தை உணராமல் எத்தனை நாள்களை வீணடித்திருக்கிறோம்?

நாம் ஏன் முன்பே ஆலயத்திற்கு வந்து முழு திருப்பலி கண்டு இறைவன் வாரி வழங்கும் அனைத்து வரங்களையும் அடையக் கூடாது?

நம்மில் பலரால் தினமும் திருப்பலிக்குச் செல்வது முடியாத ஒன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் வாரத்தின் இரண்டு அல்லது மூன்று முறை செல்லலாமே?

பல வேலைகளுக்கு நேரம் ஒதுக்கும் நாம், அற்புத பலன்களை அள்ளி தருகின்ற திருப்பலிக்கு நேரம் ஒதுக்க தயங்குகிறோமே ஏன்?

சிறிது சிந்திப்போம்...

திருப்பலியின் நிறைவில்

இயேசு என்னை நோக்கி "திருப்பலி முடிந்தவுடன்வீட்டிற்கு விரைந்து விடாதீர்கள்.என் உறவிலே சிறிது நேரம் இணைந்து இருங்கள். நானும் உங்களோடு சிறிது நேரம் இணைந்திருக்க விரும்புகிறேன்".என்றார்’’

\
அதற்கு நான் " சிறு வயதில் எனக்குக் கூறப்பட்டது என்னவென்றால் திருவிருந்திலே பங்கு பெற்றபின் நீா் எம்மோடு ஐந்து அல்லது பத்து நிமிடம் இருப்பீர் என்று, ஆனால் உண்மையில் எவ்வளவு நேரம் இருப்பீா்? என்றேன்..

இயேசு சிரித்துக் கொண்டே
"எப்போதும் நான் உன்னோடு இருக்க விருப்பமா? நாள் முழுவதும் நீ என்னோடு உறவாடினால் உன் வேலையின் போது என்னோடு பேசினால், நான் உனக்கு செவிமடுப்பேன். நான் என்றும் உன்னோடு தான் இருக்கிறேன் நீ தான் என்னை விட்டு விலகிச் செல்கிறாய். திருப்பலியோடு உன் கடமை முடிந்துவிட்டது என நினைத்துவிடுகிறாய். உன் வாழ்வை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை நீ நினைப்பதே இல்லை.

உன் வீட்டில், உண்பதற்கு, உறங்குவதற்கு சமைப்பதற்கு என்று தனி அறைகளுண்டு, எனக்கொரு அறை உண்டா? சிலா் படத்தை வைத்திருக்கிறீா்கள் ஆனால் அது தூசி படிந்தே காணப்படுகிறது. அப்படியொரு இடம் எனக்குத் தேவையில்லை. குடும்பத்தினா் அனைவரும் கூடி ஒருசில நிமிடமாவது என்னை நினைவு கூா்ந்து செபித்து நன்றி கூறி என் ஆசீரை வேண்டுகிற இடத்தையே விரும்புகிறேன்.

நீங்கள் உங்களின் வேலை நாள்களையும், விடுமுறை நாட்களையும், சுற்றுலாக்களையும் திட்டமீட்டு செயல்படுத்துகிறீா்கள், என்னை சந்திப்பதற்கு நேரத்தையும், நாள்களையும்ஒதுக்குகின்றீா்களா?

உங்கள் வாழ்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறீா்களா?

அனைத்தையும் நான் அறிந்த போதும் உங்கள் வாயினின்று கேட்க விரும்புகிறேன். என்னை உன் குடும்ப உறுப்பினராகப் பார்ப்பதிலே நான் பெருமிதமடைகிறேன்.

மனிதா்கள் என்னை ஏற்றுக் கொள்ளாமல் எத்துனை அருளை இழக்கின்றார்கள்? திருப்பலியில் நீங்கள் பெறும் என் உடலும், இரத்தமும் இன்றி வேறு எந்த சக்தியால் என் தந்தையின் முன் நீங்கள் நிற்க முடியும்?என்றார்..

மேலும் இயேசு என்னிடம் "நீங்கள் கோயிலுக்கு செல்வதிலும், நற்கருணையைப் பெறுவதிலும் பழகி போனவா்கள். பழகிப்போனத் தன்மையால் என்னை ஒவ்வொரு முறையும் பெறும் போதும் உற்சாகம் இன்றியே காணப்படுகிறீா்கள்.

எனக்காகவே தன்னை அா்ப்பணித்த பல உள்ளங்கள்[குருக்கள்] உற்சாகமிழந்து தனது அழைத்தலை ஒரு தொழிலாக மாற்றி வரையறுக்கப்பட்ட சில கடமைகளை மட்டும் செய்து விட்டு என் உண்மை அன்பில் இணையாமல் வாழ்கின்றனா். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது" என்றார்.

பின்பு இறைவன் இயேசு நாம் உட்கொள்ளும் நற்கருணையின் பலன்களைப் பற்றி கூறலானார்.

No comments:

Post a Comment