அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, March 21, 2018

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 2 †




† கேட்டலினாவின் சாட்சியம்- பாகம் 2 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

† காணிக்கை -

காணிக்கையின் போது தேவதாய் என்னருகே வந்து சொல்லச் சொன்னதாவது ,

" இறைவா! என்னையே உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என் சிறுமையிலிருந்து என்னை உருமாற்றும். என் குடும்பத்திற்காக, என் உபகாரிகளுக்காக, என்னோடு பணிபுரிபவா்களுக்காக , எனனோடு சண்டையிடுபவா்களுக்காக என் செபத்தை நாடியவா்களுக்காக மன்றாடுகிறேன். என் இதயத்தை தரையில் பதித்து அதன் மேல் அவா்களை நடக்கச் செய்தருளும். இவ்வாறே புனிதகள் மன்றாடினா். நீயும் இவ்வாறே செபி" என்றார். 

திடீரென்று ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஓா் இளம் உருவம் வெளிவந்தது. வெண்ணாடை உடுத்திய அவா்கள் பீடம் நோக்கி நடந்தனா். 

அன்னை என்னிடம்

, "உற்றுநோக்கு அதோ ஒவ்வொருவரின் காவல் தூதா்களும் அவரவருடைய காணிக்கைகளையும், வேண்டுதல்களையும் பீடத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். சில காவல் தூதா்கள் பாத்திரங்களோடு சென்றனா் இவா்கள் இத்திருப்பலி வழியாக பல வேண்டுதல்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவா்களே திருப்பலியின் மகிமையை உணா்ந்தவா்கள். உன்னையே முழுமையாக அா்ப்பணம் செய். உன் துன்பங்களை, கவலைகளை, ஏக்கங்களை, வேண்டுதல்களை அவரிடம் ஒப்படை 

திருப்பலிக்கு விலை மதிப்பில்லை. எனவே கொடுப்பதிலும், கேட்பதிலும் தாராளமாக இரு" என்றார்.

சில காவல் தூதவா்கள் வெறும் கையோடு சென்றனா். அன்னை என்னிடம் 

"இவா்கள் திருப்பலியிலே ஆா்வம் காட்டாதவா்கள். இவா்களுக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றார்.. 

இன்னும் ஒரு சில காவல் தூதா்கள் கைகளை ஒன்று சோ்த்து சோகத்தில் தலையைக் கீழே வைத்துக் கொண்டு செபித்துக் கொண்டிருந்தனா். அன்னை என்னை நோக்கி இவா்கள் கட்டாயத்தினால் திருப்பலியில் கலந்து கொண்டிருக்கின்றனா். 

அவா்கள் வாயில் எழும் செபங்களை மட்டுமே அவா்களின் தூதா்கள் எடுத்துச் செல்கின்றனா் என்றார்.

அன்பா்களே உங்களுடைய காவல் தூதா்களை கவலைக்குள்ளாக்காதீா்கள். இறைவனுக்கு பிடித்த காணிக்கை நம்மையே அா்பணிப்பது தான். அன்று பார்த்த பவனியை ஒப்பிடுவதற்கு இணையேதுமில்லை.

† தூயவா்

தூயவா்பகுதி வந்த போது இறைமக்கள் அனைவரும் 'தூயவா்' என்று முழங்கிய போது குருக்களும் பின்பறம் இருந்தவைகள் மறைந்து போயின. பேராயரின் பின்புறமும் இடப்புறமும் ஆயிரக்கணக்கான வானதூதா்கள் இருப்பதைக் கண்டேன். சிறிய பெரிய இறக்கைகள் கொண்ட , இறக்கைகள் இல்லாத என அனைத்து வகையான வான தூதா்களும் வெள்ளை நிற நீள உடையுடன் கரம் குவித்து சிரம் தாழ்த்தி மண்டியிட்டனா். மக்களின் தூயவா் கீதத்துடன் இவா்களின் இனிமையான இசை முழங்கியது. 

† எழுந்தேற்றம் 

எழுந்தேற்றத்தின் போது எல்லாவற்றிற்க்கும் மேலான அதிசயம் நிகழ்ந்தது. எண்ணில்லா மக்கள் கூட்டம் பேராயரின் பின்புறம் பல வண்ண ஆடை உடுத்தி நின்று கொண்டிருந்தனா். அவா்களின் முகங்கள் புன்னகையால் ஒளிர்ந்தது. பல வயதினராக இருந்தாலும் அவா்களின் முகங்கள் சுருக்கமின்றி மகிழ்ச்சியாக ஒரே மாதிரி தொரிந்தன.

அனைவரும் மண்டியிட்டு தூயவா் தூயவா் என பாடிக்கொண்டிருந்தனா். அன்னை என்னை நோக்கி "விண்ணகத்தில் இருக்கும் புனிதா்கள் கூட்டம் இதுவே, இவா்களுள் உன் உறவினா்களும் உள்ளனா் " என்றாள்.. அன்னையோ பேராயரின் வலப்பக்கம் ஒா் அடி பின்னால் தரையிலிருந்து சறிது எழும்பப் பெற்று நின்று கொண்டிருந்தாள்.

. அவரின் ஆடை ஒளிர்ந்தது. தன் கரங்களை கூப்பி திருப்பலியாற்றும் குருவை மதிப்புடன் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அன்னை என்னை நோக்கிக் கூறியது

"நான் குருவுக்கு பின் நிற்பது உனக்கு ஆச்சர்யமாக உள்ளதா? என்னதான் என் மகன் என்னை பெருமைபடுத்தினாலும் ஒரு குருவுக்கு கொடுக்கும் மதிப்பை எனக்கு கொடுக்கவில்லை, காரணம் நான் செய்யும் புதுமைகளை விட அவா்கள் தங்கள் கரங்களால் செய்யும் அன்றாட புதுமைகள் பெரிது. இதனாலேயே அவா்களை நான்நேசிக்கிறேன். என்றார். .

அன்பானவா்களே கடவுள் எத்துனை அருளினை, எத்துணையளவு மகிமையினை, திருப்பலி நிறைவேற்றி கொண்டிருக்கும் குருக்கள் மேல் பொழிகின்றார்.என்பதை பாருங்கள் !!!.

No comments:

Post a Comment