அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, March 23, 2018

இறப்பைப் பற்றி ஆன்றோர் வாக்கு

இறப்பைப் பற்றி ஆன்றோர் வாக்கு

வாழ்வினைப் பற்றிய பயம்தான் சாவின் பயத்திற்கு அழைத்துச் செல்கிறது. வாழ்வினை முழுமையாக வாழ்பவர்கள்  எந்நேரத்திலும் சாவினை சந்திக்க  தயாராயிருக்கிறார்கள்.   மார்க் டுவைன்

இறப்பு ஒரு இழப்புத்தான். ஆனால் உயிர்வாழும்போது உன்னில் இருப்பது இறப்பினைக் கண்டால் அதுதான் பெரிய இழப்பு
 - நார்மன் கசின்ஸ்     

தன் வாழ்வில் ஏதாவது ஒன்றிற்காக உயிரைக் கொடுத்து அதனை சாதிக்க முன் வராதவர் வாழ தகுதியற்றவர்.  மார்டின் லூதர் கிங்.

கோழைகள் பலமுறை சாதிக்கிறார்கள் வீரர்கள் ஒருமுறைதான் சாதிக்கிறார்   வில்லியம் ஷேக்ஸ்பியர்.

உடல்நலம் இல்லா நிலை இறப்பின்
முன்வடிவம்  - புத்தர்.

இறப்பு என்பது ஒளியை அனைப்பதல்ல மாறாக அது விளக்கையே அகற்றுவதாகும். ஏனென்றால் அங்கு சூரிய உதயம் உண்டாகி விட்டது. -ரவிந்தரநாத் தாகூர்.

எப்போது ஒருவரிடம் நம்பிக்கை மறைகிறதோ, எப்போது  ஒருவரின் மாண்பு மறைக்கிறதோ, அப்போதுதான் அவர்  உண்மையாக சாகிறார்.   ஜான் கிரின்பீல்டு விட்டியர்.

எப்போது நம் இறப்பினை நினைக்கிறோமோ அப்போதுதான்  நம் வாழ்வு மலர்கிறது.   - மோன்டோ கொமரி கிளிப்ட்

செல்வம் வளர வளர சாவின் பயமும் வளர்கிறது.  - ஏர்னஸ்ட் யஹமிங்லே.

எப்போது ஒருவரிடம் நம்பிக்கை மறைகிறதோ, எப்போது  ஒருவரின் மாண்பு மறைக்கிறதோ, அப்போதுதான் அவர்  உண்மையாக சாகிறார்.   -  ஜான் கிரின்பீல்டு விட்டியர்.

அன்பும், சாவும் என்னும் இரண்டு இறக்கைகள் தான் ஒருவரை  விண்ணகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
 -  மைக்கேல் ஆஞ்சலோ.

Wednesday, March 21, 2018

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 09 † ✠ இறைவார்த்தை வழிபாடு ✠



† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 09 †

✠ இறைவார்த்தை வழிபாடு ✠

திருப்பலியின் இருமுக்கிய கூறுகளில் ஒன்றாகிய இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் அலசுவோம். இறைவார்த்தை வழிபாட்டின் முக்கிய நோக்கம் என்ன இப்பகுதியினூடாக இறைவனோடு இறைமக்கள் சமூகம் உரையாடலுக்கு உட்படுகின்றது. இறைவார்த்தை வழியாக பேசும் இறைவனோடு உறவாடுகின்றது. அவருடைய உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுக்கின்றது. அமைதியில் தியானிக்கின்றது, பதிலுரைப்பாடல் மூலம் பதிலளித்து, தம் வாழ்வில் இறைவார்த்தையை கடைப்பிடித்து நல்வழி நடந்திட, நம்பிக்கை அறிக்கை (விசுவாசப்பிரமாணம்) செய்து, அவர் அருள் வேண்டுவது இப்பகுதியின்
சிறப்பாகும்.

ஆதித்திருச்சபை, திருப்பலி கொண்டாட்டத்தில் இறைவார்த்தைக்கு முக்கிய இடம் கொடுத்ததை காணக் கூடியதாக உள்ளது. ஏனெனில், அருள் அடையாளக் கொண்டாட்டத்திற்கு முக்கிய கூறாக இருப்பது இறைவார்த்தையே. நற்செய்தி அறிவிப்பில்லாமல் திருமுழுக்கு அளிப்பதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் கூறப்படுவதில்லை. ஏனெனில் இறைவாக்கு அறிவிக்கப்பட்டு, விளக்கப்படும் போது தான் நம்பிக்கை (விசுவாசம்) ஏற்படுகின்றது. அதுவே திருமுழுக்கு பெற வழிசமைக்கின்றது. (தி.பணி 8: 35- 38. 10: 44- 48, 19: 4-5) இதிலிருந்து முதலாம் நூற்றாண்டில் இருந்தே திருவழிபாட்டில் இறைவாக்கு முன்னுரிமை பெற்றிருந்ததை காணக் கூடியதாக உள்ளது.

✠ இரண்டாம் வத்திக்கான சங்கமும் இறைவார்த்தையும்

"திருச்சபை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம்" செலுத்தி வந்துள்ளது போலவே இறைநூல்களுக்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது" இக்கூற்று இறைவார்த்தையின் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்துகின்றது. எனவே திருப்பலியிலும் வேறு எந்தவொரு அருட்சாதனக் கொண்டாட்டத்திலும் இறைவார்த்தை வழிபாடு என்பது கட்டாயம் நடைபெற வேண்டியதே.

✠ இதன் இயல்பு

இறைவார்த்தைகள் வழியாக இறைவனே நம்மோடு பேசுகின்றார். எனவே இந்த வார்த்தைகள் வாசிக்கப்படும் போது நாம் மிகக் கவனத்துடன் செவிமடுத்துக் கேட்க வேண்டும். கூர்ந்து கவனிக்க வேண்டும். அவ்வாறன்றி நாம் கைகளில் விவிலியத்தை வைத்துக்கொண்டோ, பக்கங்களைப் புரட்டிக்கொண்டோ, வாசிக்கப்படும் வாசகத்தை தேடிக்கொண்டோ அல்லது வாசிப்பவரோடு சேர்ந்து வாசித்துக் கொண்டோ இருக்கக்கூடாது. ஏனெனில் இறைவார்த்தை நாம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்பதற்காகவே பறைசாற்றப்படுகின்றது. இவ்வார்த்தைகளை உள்வாங்கி சமுதாயத்தில் நாமும் வார்த்தைப் பணியாளர்களாக வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றோம்.

✠ வழிபாட்டிற்கு விவிலியத்தை எடுத்துச்செல்ல வேண்டுமா?

ஆலயங்களுக்கு விவிலியத்தை எடுத்துச்செல்வது மிகவும் சிறப்பான செயல். ஏனெனில் இறைவார்த்தையை நாம் கொண்டாடுகின்றோம். வரலாற்றில் இறைவன் செயற்பட்ட விதங்களை எண்ணிப்பார்த்து இன்று அந்த வார்த்தை நம்மோடு பேசும் விதங்களை கண்டுணர்வதே இறைவார்த்தைக் கொண்டாட்டம் ஆகும். ஒவ்வொரு வழிபாட்டிலும் இறைவார்த்தை முழக்கம் இடப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. எனவே இறைவார்த்தையின் கொண்டாட்டமான திருவழிபாட்டிற்கு விவிலியத்தை எடுத்துச்செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். விவிலியத்தை எடுத்துச் செல்வதே, நாம் அதை கொண்டாடச் செல்கின்றோம் என்பதை அடையாளப்படுத்துகின்றது.

இன்று பல ஆலயங்களில் வாசக தாள்கள் அச்சடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இது முறையா? தகுமா? தாள்களில் இருந்து வாசிக்கக்கூடாது என்றால் ஏன் இவை அச்சடிக்கப்படுகின்றன? நல்ல கேள்வி. ஒரு கணம் இத்தாள்கள் உண்மையிலேயே ஏன் அச்சடிக்கப்படுகின்றன. ஞாயிறு பறைசாற்றப்படும் இறைவார்த்தைகளை தாங்கி வரும் இத்தாள் குறிப்பிட்ட ஞாயிறுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும். எதற்காக இந்த ஏற்பாடு வீட்டிலே வைத்து வாசிக்கவும், தியானிக்கவும், செபிக்கவும், இவ்வாறு ஞாயிறு திருப்பலிக்கு முன்கூட்டி தயாரிப்பு செய்து, திருப்பலியில் செயலூக்கத்துடன் பங்கேற்கவே இவ்ஏற்பாடு. இத்தாள்கள் இறைவார்த்தையைப் பிரசன்னப்படுத்துவதாக திருச்சபை ஏற்றுக்கொள்ளவல்லை. எனவே திருவழிபாட்டில் அச்சடித்த வாசக தாள்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

✠ இறைவார்த்தை ஏன் பறைசாற்றப்படுகின்றது?

✠ மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.
✠ அவசியமான போதனைகளை வழங்குகின்றது.
✠ திருச்சபைக்கு ஆக்க மும் ஊக்கமும் அளிக்கப்படுகின்றது.
✠ இறைமக்களை நம்பிக்கையில் (விசுவாசம்) உறுதிப்படுத்துகின்றது.
✠ ஆன்மாவிற்கு உணவளிக்கின்றது
✠ புனிதத்துவ வாழ்விற்கு ஊற்றாக அமைந்துள்ளது.

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் VIII † ✠ பீடத்தை முத்தி செய்தல் ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் VIII †

✠ பீடத்தை முத்தி செய்தல் ✠

உரோமையர் கிரேக்க கலாச்சாரத்தின் படி வீட்டில் உண்ணும் பிரதான உணவு வேலை ஓர் புனிதமான நிகழ்வாக இருந்தது. எனவே உணவுருந்த அமர்ந்திருப்போர் உணவு மேசையை முத்தி செய்வர். கொன்ஸ்டன்டைன் மன்னின் காலத்தில் வழிபாட்டிற்காக இடங்கள் அமைக்கப்பட்டபோது இப்பழக்கமும் உள்வாங்கப்பட்டு அதற்கு கிறிஸ்தவ பொருள் கொடுக்கப்பட்டது. காரணம் திருப்பீடம் கிறிஸ்துவை அடையாளப்படுத்தியது. மேலும் திருப்பீடம் வீரசாட்சிகளின் கல்லறைமேல் அல்லது அவர்களுடைய புனித பண்டம் திருப்பீடத்தில் பதிக்கப்பட்டது. திருப்பீடத்திற்கு தூபம் இடுதல் இன்னும் ஒரு மரியாதைக்குரிய செயலாக மாறியது. உரோமைய அரசனுக்கும் வேற்று தெய்வங்களுக்கும் தூபம் இடுவதனால் இச்சடங்கு மிகவும் மெதுவாகவே திருச்சபையின் வழிபாட்டுமுறைகை;குள் புகுந்தது. இதற்கு கிறிஸ்தவ பொருள் கொடுக்கப்பட்டது. முதன்மையாக தூபம் இறைவனை நோக்கி எழும் ஜெபமாக (திருவெளிபாடு 5:8) அடையாளப்படுத்தப்பட்டது. மேலும் பலிப்பீடம் கிறிஸ்துவை குறிப்பதனால் அது பலியிடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு எதற்கும் அதனை பயன்படுத்தக்கூடாது. எனவே திருப்பலிக்கு தேவையான திருப்பலி புத்தகம். திருமேனிதுகில், திருப்பாத்திரங்கள், திருமேனித்தட்டு போன்றவை மட்டுமே பீடத்தின் மேல் வைக்கப்பட வேண்டும் என்ற பொதுப்போதனை சொல்கிறது.

ஆகவே தான் பீடத்தின் மேல் பூக்கள் கூட வைக்க கூடாது பீடத்திற்கு அருகில் வைக்கப்படல் வேண்டும். அதுவும் உயிருள்ள, உயிர் தருகின்ற இறைவனுடைய பிரசன்னத்தில் செயற்கை பூக்கள் அல்ல இயற்கை பூக்கள் மாத்திரமே வைக்கப்படல் வேண்டும். மேலும் திருப்பலியின் ஆரம்பத்தில் திருப்பீடம் வெறுமையாக இருக்க வேண்டும். காணிக்கையின் போது தான் ஏனையவை திருப்பீடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

✠ மூவொரு கடவுள் பெயரால் ✠

பீட வணக்கம் முடிந்ததும் குரு வழிபாட்டு 'தலைவருக்குரிய இடத்திலிருந்து தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே" என்று திருப்பலியை தொடங்குகின்றார். நாம் மூவொரு இறைவன் பெயரால் திருமுழுக்கு பெற்றோம் என்பதை இது நினைவூட்டுகின்றது. சிலுவை வழியாகத்தான் நமக்கு மிட்பு உண்டாகிற்று. 'நாம் வாழ்வதும். நாம் இருப்பதும், நாம் இயங்குவதும் அவரிலே தான்" என்ற உண்மையை இது உணர்த்துகின்றது. மேலும் நாம் எதை செய்ய தொடங்கினாலும் அதை கடவுளின் பெரால் செய்யத்தொடங்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகின்றது.

† திருப்பலி - பாகம் VII † ✠ திருப்பலியின் உட்கூறுகள் ✠

† திருப்பலி - பாகம் VII †

✠ திருப்பலியின் உட்கூறுகள் ✠

இனிவரும் பதிவுகளில் திருப்பலியின் உட்கூறுகளை கற்றுக்கொள்ள உங்களை அழைத்துச் செல்கின்றேன். உரோமை பூசைப்புத்தகத்தின் பொதுப்போதனை மிகவும் இரத்தினச் சுருக்கமாக திருப்பலியின் உட்கூறுகள் பிரதானமாக இரண்டென்றும், அவைகள் இறைவார்த்தை பகுதி, மற்றது நற்கருணை விருந்தென்றும் சொல்கின்றது. ஆதி திருச்சபையின் காலம் தெடங்கி இன்று வரை திருப்பலியின் பிரதான உட்கூறுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இறைவார்த்தைக்கு செவிமடுப்பது, நன்றி கூறுவது, இதன் நிறைவாக நற்கருணை விருந்தில் பங்கேற்பது. காலங்கள் செல்ல செல்ல சிற்சில கூறுகள் சேர்க்கப்பட்டன. உதாரணமாக தொடக்கச்சடங்கு, இறுதிச்சடங்கை நாம் சொல்லலாம். எமது திருப்பலி 20 நூற்றாண்டு வரலாற்றை கொண்டது.

காலத்துக்கு காலம் திருப்பலி கொண்டாடும் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் பிரதான கூறுகளில் எவ்வித மாற்றம் இல்லை.

தொடக்கச் சடங்கு:

இச்சடங்கை ஆரம்ப அல்லது நுழைவுச் சடங்கென்றும் அழைக்கலாம். இதனுடைய பிரிவுகளாக வருகைப்பவனி, வருகைப்பாடல், பீடத்தை முத்தி செய்தல், திருச்சிலுவை அடையாளம், வாழ்த்து, முன்னுரை, பாவமன்னிப்புச்சடங்கு, ஆண்டவரே இரக்கமாயிரும், வானவர் கீதம், சபை மன்றாட்டு.

திருப்பலியில் வருகைப்பவனி 7ம் நூற்றாண்டின் இறுதியில் தான் உள்வாங்கப்படுகின்றது. திருப்பண்ட அறை (Sacristy) அந்த நாட்களில் ஆலயத்தின் நுழைவாயிலில் தான் அமைந்திருந்தது. இதுவும் காரணம் திருப்பண்ட அறையிலிருந்து பவனியாக செல்வது. மேலும் திருப்பலியில் பங்கேற்க
வந்திருப்போரையும் பங்காளிகளாக உள்வாங்கும் நோக்குடன், வருகைப்பவனி இடம் பெற்றது.

இந்த வேளையில் வருகைப்பாடல் பாடப்பட்டது. பெரும்பாலும் திருப்பாடல்கள் 120, 134 என்பன பாடப்பட்டன. திருப்பண்ட அறை பீடித்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டதும் வருகைப்பவனி ரொம்பவும் எளிமையானதாக, குறுகியதாக மாறியது. எனவே வருகைப்பாடல், திருப்பாடலின் ஓரிரு வரியாக குறைக்கப்பட்டது. இன்று வருகைப்பாடல் உண்டு, அதே போன்று வருகைப் பல்லவியும் உண்டு. வருகைப்பாடல் பாடப்பட்டால் வருகைப் பல்லவி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாம் குறைந்தது ஞாயிறு தினங்களிலாவது பவனியை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. வருகைப்பாடல் பொருத்தமானதாக, மகிழ்வானதாக மக்கள் அனைவரும் சேர்ந்து பாடக்கூடிய பரீட்சயமான விறுவிறுப்பான பாடல்களாக இருப்பது வழிபாட்டை மேலும் மெருகூட்டும் பாடல்வரிகள் நாம் பாடும்போது மறைப் பொருளை எடுத்துரைப்பதாக இருப்பது மிகவும் சால சிறந்தது.

† திருப்பலி - பாகம் VI † ✠ தொடக்க கால கிறிஸ்தவ வழிபாடு ✠



† திருப்பலி - பாகம் VI †

✠ தொடக்க கால கிறிஸ்தவ வழிபாடு ✠

திருப்பலி ஒரு விழா. அது ஓர் விருந்து. திருப்பலி ஓர் கொண்டாட்டம். சாதாரண கொண்டாட்டங்களில் பங்கேற்க செல்லும் போது, தூய்மையாக, கண்ணியமாக ஆடை அணிந்து செல்வது வழமை. மேலும் நேரகாலத்தோட செல்கின்றோம். கொண்டாட்டம் முடியும் வரை அங்கிருக்கின்றோம். மகிழ்ச்சியோடு ஈடுபடுகின்றோம், கொண்டாடுகின்றோம். சாதாரண கொண்டாட்டத்தில் இத்துணை ஆயத்தமெனில், திருப்பலி எனும் இறைவன் தரும் கொண்டாட்டத்தில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும். ஆனால் நமது திருப்பலிகளில் அத்துணை பங்கேற்பு உண்டா? அப்படி இல்லையெனில் ஏன்? இதற்கு முதன்மை காரணம், திருப்பலி பற்றி போதியளவு அறிவு நமக்கில்லை. இதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கோடு இனிவரும் கட்டுரைகள் அமையும்.

தொடக்க காலத்திருச்சபையில் பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக் கொன்டனர். வழமைப் போன்று சனிக்கிழமை (ஓய்வு நாள்) தொழுகைக் கூடத்திற்குச் சென்றனர். திருத்தூதர்கள் ஆங்காங்கே சிறிய கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கினர். கிறிஸ்தவ சமூகங்களை இறைவார்த்தையில் ஊன்றச் செய்து, ஒருவர் ஒருவர் மட்டில் அக்கறை கொண்டு வாழ்ந்து மற்றும் செபித்து, வழிபாட்டில் ஈடுபட கட்டியெழுப்புவதை நாம் திருத்தூதர் பணிகளில் 2:42-47 இல் வாசிக்க கூடியதாக உள்ளது. மனம் மாறிய யூதர்கள், கிரேக்கர்கள், தங்கள் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ மயமாக்கினர். மனம் மாறிய யூதர்கள் தொழுகைக்கூட வடிவத்தை தங்கள் வழிபாடுகளில் பின்பற்றினர். ஆனால் மனம் மாறிய கிரேக்கர்கள் தனித் தலைமையைக் கொண்டு ஒன்று கூடினர்.

மனம் மாறிய யூதர்கள், நாளடைவில் செபக்கூடம் செல்வதைக் கைவிட்டனர். சனிக்கிழமை சூரியன் மறைந்த பிறகு ஒன்று கூடினர். வீடுகளில் ஒன்று கூடி செபித்தனர். தூய யஸ்டின் உரோமையில் நடந்த திருப்பலியை பற்றி குறிப்பிடுவதை நாம் பார்க்கும் பொழுது, அவர்கள் அன்று கொண்டாடியது போல் இன்றும் நாம் கொண்டாடுகின்றோம். அவர்கள் அன்று என்ன செய்தாங்க? இயேசுவின் பாடுகளை தியானித்து, ஏழைகளுக்கு உதவி செய்து, செபத்தில் நிலைத்திருந்து, அதுபோல் தலைவர்களின் கடிதங்களை வாசித்து, இறைவார்த்தைகளை தியானித்து, மறையுரையை கேட்டு மன்றாடி திருப்பலியை கொண்டாடினர். முதன் நான்கு நூற்றாண்டுகளில் கிரேக்க மொழியில் இருந்து வழிபாட்டு முறைமைகள் மாற்றம் காணத் தொடங்குகிறது. இப்பொழுது உரோமை மொழி முன்னுரிமை பெற தொடங்குகிறது. இக்காலம் உரோமை வழிபாட்டின் 'பொற்காலம்" எனக் கூறினால் அது மிகையாகாது. உரோமைய வழிபாட்டின் பொற்காலமாக இருந்தாலும், ஒட்டு மொத்த கிறிஸ்தவ வழிபாட்டின் பொற்காலம் என கூறமுடியாது. ஏனென்றால் கொன்ஸ்டன்டைன் பேரரசனின் மனமாற்றத்திற்கு பிறகு அரசாங்கமே பொதுக்கட்டிடங்களை கொடுத்தது. கோயில் (Church) என்ற அமைப்பு உருவாகிறது. வீடுகளில் ஒன்று கூடி செபிக்கும் பழக்கம் குறையத் தொடங்குகிறது. பலிக்காக ஒன்று கூடும்போது 'அன்புவிருந்தில்" (Agape) குளறுபடிகள் ஏற்படுகின்றன. மக்கள் நிறைய கூடி வருகிறார்கள். ஆகவே 'அன்பு விருந்து" நிறுத்தப்படுகிறது. வீடுகளில் கூடிய போது மேசை இருந்தது, பலிப்பீடம் இல்லை. பொது இடங்களில் கோயில் கட்ட தொடங்குகிற பொழுது நடுவில் கற்களைக் கொண்டு பலீப்பீடம் அமைத்தனர். இது இயேசுவை குறிப்பதாக கருதப்பட்டது. தெய்வீகம், இறைபிரசன்னத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. வீடுகளில் கூடியபோது இருந்த பாசம், பகிர்வு, நெருக்கம், உறவு இங்கே வெது வெதுப்போயிற்று. இயேசுவின் தெய்வீகத்தை குறைவாக மதிப்பிட்ட ஆரிய பேதகத்திற்கு எதிராக, தெய்வீக தன்மையை வலியுறுத்தும் நோக்கில் மெழுகுவர்த்திகள், தூபம், தெண்டனிட்டு வணங்குதல், பவனி, வழிபாட்டு ஆடைகள் என்பன வழிபாட்டில் சேர்க்கப்பட்டமையினால் ஆதியில் இருந்த தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆரம்பத்தில் மக்களே வீடுகளில் இருந்து அப்பம் கொண்டு வந்தனர். 8ஆம் நூற்றாண்டு காலம் தொடங்கி எளிதில் உடையக்கூடிய மென்மையான வெண்மை அப்பங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் முழுத் திருப்பலியிலும் இறைபிரசன்னம் இருப்பதை மறந்து எழுந்தேற்ற நேரத்தில் அப்பத்தில் இறைவனைக் காணும் பழக்கம் உருவாகியது. எனவே எழுந்தேற்ற நேரங்களை பார்த்து, ஆலயம் செல்லும் பழக்கம் உண்டானது. வீடுகளில் கூடிய பொழுது இருந்த பாச பிணைப்பு அற்று போனது. நற்கருணையில் இயேசு முழுமையாய் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அப்ப இரசத்தில் இயேசுவை பார்க்க முனைந்தனர். 12ஆம் நூற்றாண்டில் நற்கருணையை உற்று நோக்கிபார்த்து செபிக்கிற பழக்கம் உருவானது. எனவே நற்கருணை வாங்கும் பழக்கம் குறைந்து போனது.

இக்கலகட்டத்தில் இருந்து, 2ம் வத்திக்கான் சங்கம் வரை திருப்பலியை புரிந்து கொள்வதிலும், மீண்டும் அதன் பழைய இயல்புக்கு அழைத்துச் செல்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பழங்கால திருப்பலியில் இருந்து அழிந்துபோன நல்லவற்றை மீண்டும் திருப்பலியோடு இணைத்தது. அது மட்டுமன்றி இக்காலத்தில் தேவைக்கேற்ப, மக்கள் நன்முறையில் பங்கேற்கும் வண்ணம் திருவழிபாடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே 1970க்கு பிறகு நாம் தமிழ் மொழியில் திருப்பலியை கொண்டாடுகின்றோம்.

† திருப்பலி - பாகம் V † ✠ நற்கருணை தாபகம் ✠



† திருப்பலி - பாகம் V †

✠ நற்கருணை தாபகம் ✠

புதிய ஏற்பாட்டில் நான்கு இடங்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வினை நாம் காண்கின்றோம். (மத் 26:26-28; மாற் 14:22-24; லூக் 22:19-20; 1கொரி 11:23-26) இப்பகுதிகளை வாசிக்கும் போது, பல வித்தியாசங்களை நாம் உடனடியாக அவதானிக்க முடியும். ஏன் இத்தகைய வேறுபாடுகள் என்ற கேள்வி எழும்? வெவ்வேறு வழிபாட்டு பழக்கங்கள் இவ்வேறுபாட்டுக்கு காரணம் எனலாம். அதேவேளை சில ஒற்றுமைகளையும் இப்பகுதியில் நாம் காணலாம்.

ஒற்றுமையை நோக்கும் இடத்தில் இந்த நான்கு புதிய ஏற்பாடு பகுதிகளை இரண்டாக பிரிக்கலாம். மத்தேயு, மாற்கு நற்செய்தி பகுதிகள் ஒன்றாகவும், லூக்கா, 1கொரிந்தியர் பகுதிகள் இன்னுமொரு கூறாகவும் காணலாம்.

மத்தேயு, மாற்கு நற்செய்தியில் இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் பேற்றுவதையும், (மத்
26:26; மாற் 14:22) கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் (மத் 26:27; மாற் 14:23) கூறுகையில், லூக்காவும் பவுலும் இயேசு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என்று கூறி, ஈற்றில் 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று கட்டளையிடுவதை லூக்காவும் பவுலும் மாத்திரமே சொல்கின்றனர். (லூக் 22:19; 1கொரி 11:24-25) இக்கட்டளை மத்தேயு, மற்றும் மாற்குவில் காணப்படுவதில்லை. ஏன் இந்த வேறுபாடுகள்
காணப்படுகின்றன?

மத்தேயுவும், மாற்குவும் பாலஸ்தீன வழிபாட்டு மரபுகளை பின்பற்றி எழுதுகின்றார்கள். யூத வழிபாட்டு மரபைப் போன்று அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றுதலும், கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் காணலாம்.

லூக்காவும் பவுலும் அந்தியோக்கியா, அலெஸ்சாந்திரியா வழிபாட்டு முறைமைகளை கடைப்பிடிப்பது போன்று இயேசு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என்று சொல்கின்றார்கள். இதுவே யூதரல்லாத கிறிஸ்தவர்கள் கொண்டாடிய விதமாக காட்டப்படுகின்றது. இதில் இருந்து எங்களுக்கு கிடைக்கின்ற விளக்கம் என்ன? அதாவது யூதர்களுக்கு 'நினைவு கூறல்" மிக இன்றியமையாத ஒர் அனுபவம். வாழ்வின் முக்கிய கூறு. எனவேதான் மத்தேயு, மாற்கு 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று வெளிப்படையாக கூறுவதில்லை. ஏனெனில் 'நினைவு கூறல்" அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒர் அனுபவம். அதற்கு மாறாக லூக்காவும் பவுலும் தாம் எழுதிய யூதரல்லாதோர்க்கு இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே சொல்கின்றார்கள்.

மத்தேயு நற்செய்தியின் படி இயேசு கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி கூறிய வார்த்தைகள் '.......... பலருடைய பாவமன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28) இது மாற்கு நற்செய்தியில் காணப்படுவதில்லை.

காரணம் மத்தேயு தன் நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுகின்றார். இதில் மூன்று முக்கிய காரணிகளைக் காணலாம்.

முதலாவது, இயேசு துன்புறும் ஊழியனோடு அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்படுகின்றார். இரண்டாவது கிறிஸ்துவின் பலி, ஏனைய பலிகளை விட சிறந்தது. மூன்றாவது இயேசுவை உரோமையர்கள்/யூதர்கள் கொடுமையாக கொன்றனர் என்ற நிலைப்பாடு தவறானது.

மாறாக துன்புறும் ஊழியனாகிய இயேசு மக்களின் பாவங்களுக்காக தன்னுயிரைக் கையளித்தார் (எசா 53:6-12) என்ற உண்மைகளை வெளிப்படுத்த மத்தேயு இதனைச் சொல்கின்றார்.

யோவான் நற்செய்தி இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதை கூறுவதில்லை. கடைசி இராவுணவின் போது இயேசு சீடர்களின் பாதம் கழுவியதையும், அதன்பின் நீண்டதோர் உரை நிகழ்த்துவதையும் காண்கின்றோம். (யோவா 13:1-17, 26) மாறாக யோவான் நற்செய்தி 6ம் அதிகாரம், இயேசு உண்மையான உணவு என்பதை வலியுறுத்துகின்றது. இது இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையோடு (யோவா 6:1-15) தொடர்புடையது. இப்புதுமை நற்கருணையோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த இரண்டு நிகழ்வின்போது ஒரே வகையான செயலில் கிறிஸ்து ஈடுபடுகின்றார். இயேசு அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதனை தன் சீடர்களுக்கு கொடுத்தார். யோவான் நற்செய்தியில் 6:51-58 பகுதியில் இயேசு தன்னை விண்ணிலிருந்து இறங்கி வந்த அப்பமாக அடையாளப்படுத்துகின்றார்.

'விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர். (யோவா 6:57) மானிட மகனுடைய உடலை உண்டு, இரத்தத்தை குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" (யோவா 6:53-54) இயேசுவின் இவ்வார்த்தைகள் சிலருக்கு கடினமாக இருக்கின்றது. ஏனெனில் மோயீசனின் சட்டப்படி மனித உடல், இரத்தம் இவைகளை உண்பது தவறானதாகும். (லேவி 11:1-47; லேவி 17:10,12) கிறிஸ்துவிற்குப் பின் முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள் என்ற குற்றஞ் சாட்டப்பட்டனர். ஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளினை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். உடலை கொண்டுதான் ஒருவர் உயிருடன் இருக்கின்றாரா? என நாம் அடையாளம் காண முடியும். அதற்கு இன்றியமையாதது இரத்தம் (லேவி 17:11) இது ஒருவர் உயிருடன் உள்ளார் என்பதற்கு அடையாளம். அப்பமும், இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறி கிறிஸ்துவை நம் ஆன்மீக உணவாக பெறுகின்றோம்.

† திருப்பலி - பாகம் IV † ✠ பாவப் பரிகாரப் பலியும், திருப்பலியும் ✠



† திருப்பலி - பாகம் IV †

✠ பாவப் பரிகாரப் பலியும், திருப்பலியும் ✠

இஸ்ரயேல் வழிபாட்டு முறையிலே பாவப் பரிகாரப் பலி முக்கிய இடம் பெற்று இருந்தது. குருக்களுக்காக, மக்களுக்காக, அரசர்களுக்காக என பல தரப்பட்டவர்களுக்காக (வேலி 4:1-35), பல்வேறு விதங்களில் பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டன. உதாரணமாக எரிபலி, பாவப் பரிகாரப்பலி, சமாதானப் பலி, என வகைப்படுத்தலாம். இதில் பலியாக்கப்பட்ட விலங்கின் இரத்தம் தெளிக்கும் சடங்கு மிக முக்கியமாகும். பழைய ஏற்பாட்டின் படி இரத்தம் வாழ்வைக் கொண்டதாகவும், பாவங்களைபோக்க வல்லமை உடையதாகவும் கருதப்பட்டது (வேலியர் 17:11). மேலும் விலங்கின் இரத்தம் பீடத்தின் மேல் தெளிக்கப்பட்டது. மக்கள் மேலும் தெளிக்கப்பட்டது (விப 29:19-21). இதன் பயனாக பலியாதல், இரத்தம் சிந்துதல், புனிதமடைதல், சுத்தமாக்கிக் கொள்ளுதல், ஏற்புடையவராதல், அனைத்தும் பலியினால், இரத்தம் சிந்துதலினால் நடக்கும் என ஏற்கப்பட்டது.

புதிய ஏற்பாடனது, கிறிஸ்துவின் மரணத்தை, உன்னத பாவம் போக்கும் பலியாக காட்டுகின்றது. 'இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி; ஆட்டுக் குட்டியாம்
இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" (யோவா 1:29). 'சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணுலகிலுள்ளவை, மண்ணுலகிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொரி 1:20). 'அவர் பலியாகப் படைத்த இரத்தமும் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக் குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒரு முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கச் செய்தார்..... ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகின்றது. ஏனெனில்
என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாக கொடுத்தவர் அவரே" (எபி 9:12-14). தொடர்ந்து எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலே ஆசிரியர், கிறிஸ்துவின் பலி,சீனாய் உடன்படிக்கையைவிட மேலானது என்பதைக் காட்டுகின்றார். பின்வரும் பகுதியிலே (எபி 8:7-13) சீனாய்
உடன்படிக்கை பழையது, குறைவானது. கிறிஸ்துவின் கல்வாரிப் பலி புதியது, நிறைவானது. தொடர்ந்து புதிய உடன்படிக்கையில் கிறிஸ்துவே நமக்காக பரிந்து பேசுபவர். கிறிஸ்துவினுடைய பலியினால் சட்டங்கள் மனிதர்களுடைய இதயத்தில் பதிக்கப்படும், கற்களில் அல்ல என்று எரேமியா இறைவாக்கினரை மேற்கோள் காட்டுகின்றார் ஆசிரியர் (எரே 31:33-34). இயேசுக் கிறிஸ்து எல்லா பலிகளின் நிறைவாக, முக்காலத்திற்குமான ஒரே பலியாக
தன்னை மனமுவந்து கையளித்தார். இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்திற்கு கழுவாயாகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார் (உரே 3:25).

இறுதி இராவுணவின் போது கிறிஸ்து இரசம் நிறைந்த பாத்திரத்தை எடுத்து 'இது புதிய உடன்படிக்கைக்காக என் இரத்தம்" (மத் 26:28, மாற் 14:24, லூக் 22:20, 1கொரி 11:25) என்றார். இயேசு சிந்திய 'புதிய உடன்படிக்கைக்காக இரத்தம்" என்பதை நாம் பழைய உடன்படிக்கையான சீனாய் உடன்படிக்கையினைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடியும். சீனாய் உடன்படிக்கையில் விலங்கின் இரத்தம் பலிப்பீடத்தின் மேலும், மக்கள் மேலும் தெளிக்கப்பட்டது (விப 24:6-8). புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. விலங்கின் இரத்தத்தினால் அல்ல, மாறாக கடவுளின் மகனாகிய இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தினால் இயேசுக் கிறிஸ்து தன்னுடைய இரத்தம் சிந்துதலினால் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதை முக்காலத்திற்கும் உரிய ஒரு உன்னத, நிறைவான பலியாக ஏற்படுத்தி விட்டார். இதுவே கல்வாரிப்பலியின் சிறப்பு. கிறிஸ்து தம்மையே 'தற்கொடையாக" நமக்கு தந்து விட்டார். ஆகவே இந்தக் கல்வாரிப்பலியை நாம் மீண்டும், மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாது. ஒருமுறைதான் நடந்தேறியது. திருப்பலியில் நாம் பங்கெடுக்கும் போதெல்லம் அந்த கல்வாரிப்பலியை நினைவு கூர்கின்றோம்.
இயேசுவின் இப்பலி பாவ மன்னிப்புக்கு அவசியம். வாழ்வடைய இயேசுவின் இரத்தத்தை, உடலை உண்டு, பருக வேண்டும் (யோவா6:53). கடவுளின் இரத்தத்தால், நாம் அவர்க்கு ஏற்புடையவர்களாக அவரோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் (உரே5:9-10) இயேசுவின் இரத்தத்தினால் தூய்மை அடைகின்றோம் (1பேதுரு 1:2). நம்மை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை மாசுமறுவின்றி இயேசு கிறிஸ்துவின் உயர் விலையேற்றப்பட்ட இரத்தமாகும் (1பேதுரு 1:18-19). ஒவ்வொரு திருப்பலியிலும் பங்கேற்கும் போது மேற்சொன்ன உண்மைகளை புரிந்து கொண்டு பங்கேற்கும்போது, அதன் மகத்துவத்தை மென்மேலும் அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய அன்பின் தகனப்பலியில் நாம் இணைந்து கொண்டால் கடவுள் தரும் மீட்பை நமதாக்கிக் கொள்ள முடியும்.

† திருவழிபாடு - பாகம் III † ✠ இதை என் நினைவாகச் செய்யுங்கள் ✠


† திருவழிபாடு - பாகம் III †

✠ இதை என் நினைவாகச் செய்யுங்கள் ✠

திருப்பலியில் ஆழமான முறையில் பங்கேற்க வேண்டுமெனில், அதைப்பற்றி நாம் ஆழமாக கற்க வேண்டும்.

திருப்பலியும் கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு என்பதை ஆழ்ந்து உணர வேண்டும்.
தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள், இயேசுவும், சீடர்களும் பாஸ்கா உணவில் பங்கேற்றனர். யூத பாஸ்கா பெருவிழாவின் ஆரம்பம். இது ஒவ்வொரு யூதனுடைய வாழ்விலும் இன்றியமையாத முக்கியமான நிகழ்வு. ஏன்?

1. எகிப்தின் அடிமை வாழ்வில் இருந்து கிடைக்கப்பெற்ற அற்புதமான விடுதலை வாழ்வு.

2. இறைவனின் வலிய கரத்தினால் செங்கடலை கடந்து வந்த அற்புதச் செயல்.

3. வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்து வரப்படுகையில் அனுபவித்த இறைபராமரிப்பு இவற்றை தலைமுறை தோறும் நினைவு கூற வேண்டுமென இறைவன் பணித்தார்.

'நினைவு கூறல்"என்பதற்கு எபிரேய மொழியில் 'சிக்கரொன்" (Zikkaron) என்று பொருள்படும். இச்சொல்லின் பொருள் யாதெனில் 'இறந்தகால நிகழ்வினை, நிகழ்காலத்தில் நிஜமாக்குதல். "இதை இவ்வாறு தெளிவுபடுத்தலாம்.

பாஸ்கா உணவில் பங்கேற்பவர்கள் புளிப்பற்ற அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்டனர். கசப்பான கீரை இஸ்ராயேல் மக்கள எகிப்தில் அனுபவித்த துன்பகரமான பாடுகளை நினைவூட்டியது. மேலும் புளிப்பற்ற அப்பம் எகிப்தில் அவர்கள் அனுபவித்த உணவுப்பற்றாக்குறையை குறித்துக் காட்டுகிறது. எனவே ஒவ்வொரு யூதரும் இந்த பாஸ்கா விழாவின் போது இன்று கூட, அன்று தம் மூதாதையர் அனுபவித்த வேதனைகளை இவ்வுணவின் மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த உணவின் போது வீட்டுத் தலைவர் தன் பிள்ளைகளில் கடைக்குட்டியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எகிப்திலிருந்து தாம் பெற்ற விடுதலையை தலைமுறை தோறும் சொல்ல கடவுள் தாமே பணித்துள்ளார். இதை வெறுமனே ஓர் வரலாற்று நிகழ்வாக அல்ல, மாறாக இன்றும் இதனை கொண்டாடும், அனைவரோடும் இறைவன் தனது உடன்படிக்கையை புதுப்பிக்கின்றார். 'ஒவ்வொரு தலைமுறையினரும், தனிமனிதரும் தான் எகிப்திலிருந்து மீட்கப்பட்டதை உணர வேண்டும்" என இறைவன் பணித்ததை திருவிவிலியத்தில் (வி.ப நூல் 13:8, இ.ச.நூல் 6:23) காண்கின்றோம்.

இதன் பின்னணியிலேயே கிறிஸ்து ஓர் யூதர் என்ற முறையில் தன் சீடர்களோடு அருந்திய இறுதி இராவுணவின் போது புதியதோர் உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதனை தன் நினைவாகச் செய்யக் கட்டளையிட்டார், (மத் 26:26-28, மாற் 14:22-24, லூக்கா 22:19-20, 1 கொரி 11:23-26, யோவா 6:48-58)

'நினைவு" என்ற சொல்லுக்கு புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல் 'அனம்னேசிஸ்" (Anamnesis). இந்த சொல்லின் அர்த்தத்தை யூத பாஸ்காவின் பின்னணியில் பார்ப்பதே நலம். 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அவருடைய சிலுவை மரணத்தை குறித்துக் காட்டுகின்றன. 'இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல், உங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தம" இதன் பொருள் அன்று கல்வாரியில் நடந்த நிகழ்வு மீண்டும், மீண்டும் இன்று திருப்பலியில் நடக்கின்றதென்பதல்ல. இதனை புதிய ஏற்பாட்டு வார்த்தைகள் தெளிவாகவே கூறுகின்றன. 'இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கின்றோம். அவர் இறந்தார் பாவத்தை ஒழிக்க ஒரே ஒரு முறை இறந்தார்.

இப்போது அவர் வாழ்கின்றார். அவர் கடவுளுக்காகவே வாழ்கின்றார். (உரோ 6ஃ9-10) 'தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்தோடு ஆண்டுதோறும் தூயுகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும், மீண்டும் செய்யவில்லை...". கிறிஸ்து பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத் தாமே பலியாகக் கொடுத்தார். (எபிரேயர் 9:25-28) ஆகவே கிறிஸ்து சிலுவையிலே ஒப்புக்கொடுத்த பலி எக்காலத்திற்கும் பொருந்தும்.

எனவே திருப்பலியிலே நாம் எம்மையே கிறிஸ்துவின் பலியோடு இணைக்கின்றோம். எவ்வாறு? எமது தியாக வாழ்வு, மற்றவர்களுக்காக கிறிஸ்துவைப் போன்று நாம் எம்மையே வெறுமையாக்கும் போது, மற்றவர்களுக்காக எம்மையே உடைத்து, பகிர்ந்து கொடுக்கும் போது, கிறிஸ்துவின் பலி, எம்மில் செயலாற்றுகின்றது. நாமும் கிறிஸ்துவின் நினைவாய் வாழ்கின்றோம்.

† திருவழிபாடு - பாகம் II † † திருப்பலி கருத்துக்களும், பணமும் †

† திருப்பலி கருத்துக்களும், பணமும் †

இறைவனுக்கு இறைமக்கள் நாம் செலுத்தும் உன்னத ஆராதனை திருப்பலி என்றால் அது மிகையாகது. இந்ந திருப்பலியின் பலனை நாம் எத்தனை கோடி பணம் கொடுத்தும் வாங்க முடியாது. தன்னையே தாரை வார்த்த தியாகத் தலைவனின் பலி இது. இப்பலிக்கு இவ்வுலகில் எதுவும் நிகராகாது. அத்துணை மாண்புமிக்கது. இத்திருப்பலியை நாம் பல்வேறு கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுத்து ஜெபிக்கலாம்.

திருச்சபையின் வரலாற்றை நாம் நோக்கும் போது ஏறத்தாழ 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறைமக்கள் திருப்பலிக்காக பணம் செலுத்தத் தொடங்கினார்கள். இதனுடைய நோக்கம் என்னவாக இருந்திருக்கலாம்? உண்மையிலேயே இது குருவானவருக்கு ஒரு வருவாயாகவும், மேலும் திருப்பலியை ஒர் கருத்துக்காக ஒப்புக் கொடுக்க விரும்புகின்றவர், அதற்காக தான் செய்கின்ற ஒர் தியாகச் செயலாகவும் கருதப்பட்டது. இன்று இச்செயலை நாம் எவ்வாறு புரிந்து
கொள்ளலாம். திருச்சபை சட்டத்தொகுப்பு பின்வரும் வினாக்களைத் தருகின்றது. 'தங்களுடைய கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கக் காணிக்கை அளிக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் திருச்சபையின் நலனுக்காக உதவுகின்றனர். மேலும் அக்காணிக்கை மூலம் தன் பணியாளர்களையும், அலுவல்களையும் பராமரிப்பதில் திருச்சபைக்குள்ள அக்கறையில் பங்கு பெறுகின்றனர்" (தி.ச. 946) அப்படியானால் காணிக்கை எதுவும் கொடுக்க வசதியற்ற வறியவர் ஒருவரின் கருத்துக்காக திருப்பலி ஒப்புக் கொடுப்பது சாத்தியமா? நிச்சயமாக. 'காணிக்கை எதையும் பெறாமலும், கிறிஸ்தவ விசுவாசிகளின் கருத்துக்களுக்காக, சிறப்பாக வறியவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமாறு குருக்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது". (தி. ச.945.2)

திருப்பலியினை வாங்கவோ, விற்கவோ முடியாது. ஒரே திருப்பலியில் பல்வேறு கருத்துக்களுக்காக மன்றாட முடியுமா? ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் இறந்தோர்க்காகவும், வாழ்வோர்க்காகவும் மன்றாடுகின்றோம். வாழ்வோரின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் ஒரே திருப்பலியில் மன்றாடுகின்றோம். சிலர் நன்றி சொல்லலாம், சிலர் நற்சுகத்திற்காக மன்றாடலாம், இன்னும் நீதி நிலவ, அமைதிக்காக, நல்ல தொழில் வாய்ப்புக்களுக்காக, மழை பெய்து விளைச்சல் பெருக, குருக்களுக்காக, பொதுநிலையினருக்காக, இறந்தோருக்காக இப்படி பல கருத்துக்களை சேர்த்துக் கொள்ள முடியும். அதேவேளை பல கருத்துக்களை ஒரே திருப்பலியில் குவிக்க வேண்டும் என்பதில்லை. காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, அவை காலத்திற்கு காலம் மாற்றம் காணலாம்.

திருப்பலி என்ன கருத்துக்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படுகின்றதோ அதை திருப்பலியின் முன் சொல்வது வரவேற்கப்படத்தக்கது. நாங்கள் எந்தக் கருத்துக்காக செபிக்க காணிக்கை கொடுத்தோமோ அக்கருத்தை குருவானவர் சொல்லத்தானே வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவ்வாறு உங்கள் கருத்து தவறுதலாக சொல்லப்படாமல் இருக்குமிடத்தில் குருக்களோடு முரண்பட தேவையில்லை. நீங்களும் திருப்பலி ஒப்புக் கொடுக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களுக்காக செபித்து ஒப்புக் கொடுக்கின்றீர்கள். குருக்கள் மாத்திரம் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதில்லை. இறைமக்கள் சமூகமே திருப்பலியை ஒப்புக் கொடுக்க, குருவானவர் தலைமையேற்று நடத்துகின்றார். உதாரணமாக தங்களுடைய திருமண ஆண்டு நினைவு நாளில், ஒர் தம்பதியினர் அமைதியாக தாங்கள் இருவரும், எவ்வித ஆரவாரமில்லாமல், திருப்பலியில் கலந்து கொண்டு, ஜெபித்து ஒப்புக் கொடுத்தால், அத்திருப்பலியின் பலனை பெறாமல் இருப்பார்களோ? நிச்சயமாக திருப்பலியின் பலனை எவரும், எதையும் கொண்டு தடுக்கமுடியாது.

மேலும் எனது பெற்றோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒப்புக் கொடுக்கும் திருப்பலியில் அவர்களுடைய பெயர் வாசிக்கப்பட்டால் எனது மனம் ஆறுதல் அடைகின்றது. அதேநேரம் இரண்டொரு தடவை வாசித்தால் நலம் எனக்கருதி அவ்வாறு தான் நடைமுறை இருக்க வேண்டும் என வாதிடுவது தேவையற்றது. யாது கருத்துக்களையும் குருவானவர் உச்சரித்தால் தான் அவை நிறைவேற்றப்படும் என்ற நியதியும் இல்லை. அவ்வாறு கருதுவதும் தவறு. இன்று ஒர் புதிய நடைமுறையும் நம்மிடையே ஊடறுந்துள்ளது. கருத்துக்களுக்காக காணிக்கை செலுத்தி திருப்பலி ஒப்புக் கொடுக்க விரும்பும் சிலர் அத்திருப்பலியில் பங்கேற்பது இல்லை. இத்தவறான நடைமுறை களையப்படவேண்டும்.

ஈற்றிலே மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் யாதெனில் திருப்பலியினை எதனோடும் ஒப்பிடமுடியாது. இயேசுவின் திருஇரத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட உன்னத உடன்படிக்கையான திருப்பலிக்கு நான் செலுத்தும் காணிக்கை நான் செய்யும் ஒர் சிறிய தியாகம் என்பதை மனதிற் தெளிவாய் இருத்திக் கொள்வோம்.

† திருவழிபாடு - பாகம் I † † திருப்பலி கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு †

† திருப்பலி கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு †

திருப்பலியில் ஆழமான முறையில் பங்கேற்க வேண்டுமெனில், அதைப்பற்றி நாம் ஆழமாக கற்க வேண்டும். எனவே இந்த பதிவின் ஊடக எம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் சீடர்களாக உருமாற்றம் காண அழைப்பு தருகின்றது. அந்த விதத்தில் எங்களை விசுவாச வாழ்க்கையில், வளப்படுத்தும் திருப்பலி உட்பட திருவழிபாடு பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அர்த்தத்தோடு கற்றிட, பங்கெடுக்க அதன் வழி கிறிஸ்தவ வாழ்வில் ஆழமாக்கப்பட இப்பதிவு துணை நிற்கும் என்று நம்புகின்றேன்.

இன்று திருப்பலிக்குச் சென்று வீடு திரும்பும் பலரிடம் எங்கே போயிட்டு வாறீங்க? என்றால், பூசை பார்த்துவிட்டு வாறோம் என்பார்கள். அதேவேளை பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று வருபவரை கேட்டால் 'Birthday Party'க்கு போய் வருகிறேன் என்பார்கள். இதிலிருந்து ஒர் உண்மை புலனாகிறது. நாம் இன்னும் திருப்பலி பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்ளவில்லை.

திருப்பலி ஒரு பொருள் அல்ல நாம் பார்த்துவிட்டு வர. மாறாக அது ஒரு நிகழ்வு. ஆகவே நாம் பார்க்க போவது இல்லை. மாறாக பங்கேற்க கொண்டாட போகின்றோம். பிறந்த நாள் உற்சவத்துக்கு செல்லும் நாம், ஒரு போதும் பிறந்தநாள் நிகழ்வுக்கு போனோம் என்று சொல்வதை விடுத்து, Birthday Partyக்கு போனோம் என்றே சொல்வது வழமை.

ஆக பல வேளைகளில் நமது திருப்பலி உயிரற்ற ஒன்றாக, இதயம் தொடாத வழிபாடாகவே மாற்றிவிட்டோம். திருப்பலி வெறும் சடங்காக மாறிவிட்டது.

கடவுளை அனுபவிக்க, சுவைக்க வழி சமைத்த அப்பம் பிட்கும் நிகழ்வு, இன்று உயிர்த்த இயேசுவை கண்டுணர முடியாதவாறு திருப்பலியை மழுங்கடித்துவிட்டோம். ஏனென்றால் நாம் நம் இயேசுவின் இலட்சியத்தை ஆழ்ந்த அமைதியிலும், சிந்தனையிலும் நமதாக்க தவறியிருக்கின்றோம்.

திருப்பலி என்பது ஓர் பார்வைப் பொருள் அல்ல. அது வெறும் சடங்கும் அல்ல. இந்த மனநிலையை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

ஒவ்வொரு திருப்பலியும் கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு என்பதை ஆழ்ந்து உணர வேண்டும்.

'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" (1கொரி 11:24) எதனை தன் நினைவாகச் செய்ய ஆண்டவர் கட்டளை இடுகின்றார்?

அவர் அப்பத்தை பிட்டு, தம் சீடர்களுக்கு கொடுத்து, 'இது என் உடல்" என்றார். பின் திராட்சை இரசம் கொண்ட கிண்ணத்தை எடுத்து 'இது என் இரத்தம்" என்றார். ஆக ஓர் சடங்கை தன் நினைவாக தொடர்ந்து செய்ய கிறிஸ்து கட்டளையிட்டாரா?

குழப்பமாக இருக்கிறதா? தெளிவு வேண்டும். அதற்கு விளக்கம் தேவை. இனிவரும் பதிவுகளில் விளக்கத்தின் ஊடாக தெளிவை ஏற்படுத்த முயற்சிப்பேன்.

திருப்பலி என்பது என்ன? திருப்பலிக்கு கொடுக்கப்படும் பெயர்கள் தான் என்ன? திருப்பலி ஒர் கொண்டாட்டம், திருப்பலி ஒர் விருந்து, திருப்பலி ஒர் நினைவுப்பலி, அப்பம் பிட்குதல், நற்கருணை விருந்து, நன்றி வழிபாடு என்று பல விதமாக அழைக்கலாம்.

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்து கொண்டாடும் வழிபாடு திருப்பலி. நற்கருணை என்பது கிறிஸ்துவின் தியாக அன்பினை வெளிப்படுத்தும் ஒர் அருள் அடையாளம்.

இந்த நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், உச்சியுமாக இருக்கின்றது (திருச்சபை எண் 11) என்கிறது சங்க ஏடு.

இந்த நற்கருணை வெறும் உணவு மாத்திரமல்ல, விருந்தாகவும் தருகின்றார் இயேசு. 'உணவை தனித்து உண்ணலாம்" ஆனால் விருந்தை சேர்ந்துதான் உண்ண வேண்டும்.

எனவேதான் 'நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது. திருச்சபை நற்கருணையை உருவாக்குகின்றது" எனச் சொன்னார் மறைந்த திருத்தந்தை 2ம் ஜோன் போல்.

இறைமக்கள் சமூகம் ஒன்று கூடுமிடத்தில் நற்கருணை ஏற்படுத்தப்படுகிறது. அதேபோன்று நற்கருணை எம்மை ஒன்று சேர்க்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் அர்த்தம் புரிந்து திருப்பலியில் ஈடுபாட்டோடு பங்கேற்கவும் இத்தொடர் உதவும் என நம்புகின்றேன்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நோக்கம் இதுவே. எனவே தான் திருவழிபாட்டு கொள்கைத்திரட்டு (எண் 14) 'இறைமகன் திருவழிபாட்டில் முழுமையாக, உணர்வுப்பூர்வமாக செயலூக்கமான முறையில் பங்கேற்க வழி வகை செய்யப்பட வேண்டும்" என அழைப்புத் தருகின்றது.

✠ திருப்பலி கொண்டாட்டம் ✠

✠ திருப்பலி கொண்டாட்டம் ✠

அண்மையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் செங்கலடி பங்குத் தளத்தில் இறைமக்களின் இல்லங்களில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் முறைமை ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகள் ஒவ்வொரு பங்குத் தளங்களிலும் முன்னெடுக்கும் போது தொடக்க காலத்திருச்சபையில் இருந்த உறவின் நெருக்கம்,பாசம், பகிர்வு, திருச்பைக்கும் இறைமக்களுக்கும் இடையிலானது நெருக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்திக்கம் இல்லை.

திருப்பலி ஒரு விழா. அது ஓர் விருந்து. திருப்பலி ஓர் கொண்டாட்டம். சாதாரண கொண்டாட்டங்களில் பங்கேற்க செல்லும் போது, தூய்மையாக, கண்ணியமாக ஆடை அணிந்து செல்வது வழமை. மேலும் நேரகாலத்தோட செல்கின்றோம். கொண்டாட்டம் முடியும் வரை அங்கிருக்கின்றோம். மகிழ்ச்சியோடு ஈடுபடுகின்றோம், கொண்டாடுகின்றோம். சாதாரண கொண்டாட்டத்தில் இத்துணை ஆயத்தமெனில், திருப்பலி எனும் இறைவன் தரும் கொண்டாட்டத்தில் எவ்வளவு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும். ஆனால் நமது திருப்பலிகளில் அத்துணை பங்கேற்பு உண்டா? அப்படி இல்லையெனில் ஏன்? இதற்கு முதன்மை காரணம், திருப்பலி பற்றி போதியளவு அறிவு நமக்கில்லை. இதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கோடு இனிவரும் பதிவு அமையும்.

தொடக்க காலத்திருச்சபையில் பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக் கொன்டனர். வழமைப் போன்று சனிக்கிழமை (ஓய்வு நாள்) தொழுகைக் கூடத்திற்குச் சென்றனர். திருத்தூதர்கள் ஆங்காங்கே சிறிய கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கினர். கிறிஸ்தவ சமூகங்களை இறைவார்த்தையில் ஊன்றச் செய்து, ஒருவர் ஒருவர் மட்டில் அக்கறை கொண்டு வாழ்ந்து மற்றும் செபித்து, வழிபாட்டில் ஈடுபட கட்டியெழுப்புவதை நாம் திருத்தூதர் பணிகளில் 2:42-47 இல் வாசிக்க கூடியதாக உள்ளது. மனம் மாறிய யூதர்கள், கிரேக்கர்கள், தங்கள் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ மயமாக்கினர். மனம் மாறிய யூதர்கள் தொழுகைக்கூட வடிவத்தை தங்கள் வழிபாடுகளில் பின்பற்றினர். ஆனால் மனம் மாறிய கிரேக்கர்கள் தனித் தலைமையைக் கொண்டு ஒன்று கூடினர். மனம் மாறிய யூதர்கள், நாளடைவில் செபக்கூடம் செல்வதைக் கைவிட்டனர். சனிக்கிழமை சூரியன் மறைந்த பிறகு ஒன்று கூடினர். வீடுகளில் ஒன்று கூடி செபித்தனர். புனித யஸ்டின் உரோமையில் நடந்த திருப்பலியை பற்றி குறிப்பிடுவதை நாம் பார்க்கும் பொழுது, அவர்கள் அன்று கொண்டாடியது போல் இன்றும் நாம் கொண்டாடுகின்றோம். அவர்கள் அன்று என்ன செய்தாங்க? இயேசுவின் பாடுகளை தியானித்து, ஏழைகளுக்கு உதவி செய்து, செபத்தில் நிலைத்திருந்து, அதுபோல் தலைவர்களின் கடிதங்களை வாசித்து, இறைவார்த்தைகளை தியானித்து, மறையுரையை கேட்டு மன்றாடி திருப்பலியை கொண்டாடினர்.

முதன் நான்கு நூற்றாண்டுகளில் கிரேக்க மொழியில் இருந்து வழிபாட்டு முறைமைகள் மாற்றம் காணத் தொடங்குகிறது. இப்பொழுது உரோமை மொழி முன்னுரிமை பெற தொடங்குகிறது. இக்காலம் உரோமை வழிபாட்டின் 'பொற்காலம்" எனக் கூறினால் அது மிகையாகாது. உரோமைய வழிபாட்டின் பொற்காலமாக இருந்தாலும், ஒட்டு மொத்த கிறிஸ்தவ வழிபாட்டின் பொற்காலம் என கூறமுடியாது.

ஏனென்றால் கொன்ஸ்டன்டைன் பேரரசனின் மனமாற்றத்திற்கு பிறகு அரசாங்கமே பொதுக் கட்டிடங்களை கொடுத்தது. கோயில் (Church) என்ற அமைப்பு உருவாகிறது. வீடுகளில் ஒன்று கூடி செபிக்கும் பழக்கம் குறையத் தொடங்குகிறது. பலிக்காக ஒன்று கூடும்போது 'அன்புவிருந்தில்" (agape) குளறுபடிகள் ஏற்படுகின்றன. மக்கள் நிறைய கூடி வருகிறார்கள். ஆகவே 'அன்பு விருந்து" நிறுத்தப்படுகிறது. வீடுகளில் கூடிய போது மேசை இருந்தது, பலிப்பீடம் இல்லை. பொது இடங்களில் கோயில் கட்ட தொடங்குகிற பொழுது நடுவில் கற்களைக் கொண்டு பலீப்பீடம் அமைத்தனர். இது இயேசுவை குறிப்பதாக கருதப்பட்டது. தெய்வீகம், இறைபிரசன்னத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. வீடுகளில் கூடியபோது இருந்த பாசம், பகிர்வு, நெருக்கம், உறவு இங்கே வெது வெதுப்போயிற்று.

இயேசுவின் தெய்வீகத்தை குறைவாக மதிப்பிட்ட ஆரிய பேதகத்திற்கு எதிராக, தெய்வீக தன்மையை வலியுறுத்தும் நோக்கில் மெழுகுவர்த்திகள், தூபம், தெண்டனிட்டு வணங்குதல், பவனி, வழிபாட்டு ஆடைகள் என்பன வழிபாட்டில் சேர்க்கப்பட்டமையினால் ஆதியில் இருந்த தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆரம்பத்தில் மக்களே வீடுகளில் இருந்து அப்பம் கொண்டு வந்தனர். 8ஆம் நூற்றாண்டு காலம் தொடங்கி எளிதில் உடையக்கூடிய மென்மையான வெண்மை அப்பங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் முழுத் திருப்பலியிலும் இறைபிரசன்னம் இருப்பதை மறந்து எழுந்தேற்ற நேரத்தில் அப்பத்தில் இறைவனைக் காணும் பழக்கம் உருவாகியது. எனவே எழுந்தேற்ற நேரங்களை பார்த்து, ஆலயம் செல்லும் பழக்கம் உண்டானது. வீடுகளில் கூடிய பொழுது இருந்த பாச பிணைப்பு அற்று போனது. நற்கருணையில் இயேசு முழுமையாய் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அப்ப இரசத்தில் இயேசுவை பார்க்க முனைந்தனர்.

12ஆம் நூற்றாண்டில் நற்கருணையை உற்று நோக்கிபார்த்து செபிக்கிற பழக்கம் உருவானது. எனவே நற்கருணை வாங்கும் பழக்கம் குறைந்து போனது.
இக்கலகட்டத்தில் இருந்து, 2ம் வத்திக்கான் சங்கம் வரை திருப்பலியை புரிந்து கொள்வதிலும், மீண்டும் அதன் பழைய இயல்புக்கு அழைத்துச் செல்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பழங்கால திருப்பலியில் இருந்து அழிந்துபோன நல்லவற்றை மீண்டும் திருப்பலியோடு இணைத்தது. அது மட்டுமன்றி இக்காலத்தில் தேவைக்கேற்ப, மக்கள் நன்முறையில் பங்கேற்கும் வண்ணம் திருவழிபாடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே 1970க்கு பிறகு நாம் தமிழ் மொழியில் திருப்பலியை கொண்டாடுகின்றோம்.

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 5 †

† கேட்டலினாவின் சாட்சியம் பாகம் 5 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

நாம் உட்கொள்ளும் இந்த தெய்வீக உணவு மன மாற்றத்திற்கும் நற்செயல்களுக்கும் இட்டுச் செல்ல வேண்டும்.

சிலா் தினமும் நற்கருணை உட்கொள்கின்றனா். பல மணி நேரம் செபத்தில் ஈடுபடுகின்றனா், ஆனால் எந்த மாற்றமுமின்றி வாழ்கின்றனா்.

பொது நிலையினரான நமக்கு திருச்சபையிலே முக்கியமான பொறுப்புண்டு.

இறைஇயேசுவின் நற்செய்தியைப் பரப்ப,கடவுள் நம்மை அனுப்பியிருக்கின்றார்.

நாம் பெற்றதை பிறரோடு பகிர வேண்டியது நமது கடமை.

நாம் திருப்பலியிலும், மறையுரையிலும் அருட்சாதனங்களிலும் பெற்ற செய்தியையும் , அருளையும் உலகத்திற்கு எடுத்துச் செல்வோம்.

நாம் நமது சுகமான வாழ்வை விட்டுவிட்டு, நமது ஆறுதலான வார்த்தைகள் தேவைபடுகின்றவா்களுக்கு குறிப்பாக சிறையிலே, மருத்துவமனைகளிலே நாம் நமது செபங்களின் மூலம் உதவ முன் வர வேண்டும். ஆனால் நாம் இம்மாதிரியான காரியங்களில் தயங்குவது ஏன்?

நோயில் வாடுபவா்களுக்கு நம்முடைய செபங்களால் உறுதிப்படுத்த வேண்டும். இறக்கும் தருவாயில் உள்ள அனைவருமே மரண பயத்தால் வாடுவது இயல்பே. நாம் ஏன் அவா்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு இவைனின் அன்பையும், விரைவில் அவா்கள் காணவிருக்கும் இறைவனின் வியப்புக்குறிய மறுவாழ்வையும் எடுத்துரைத்து ஆறுதல் படுத்தக் கூடாது?

நாம் அருட்தந்தையின் தொடா் கரங்களாக விளங்க வேண்டும்.

முதலில் இறையரசை நாடுங்கள் மற்றனைத்தும் உங்களுக்குச் சோ்த்துக் கொடுக்கப்படும் என்பதிலேயே இயேசு அனைத்தையும் சுருக்கிவிட்டார்.
நாம் முழு இறைமனிதா்களாக மாறுவதிலே தயக்கம் காட்டுகிறோம். நாம் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் பயன்படுத்தி அவரின் அரசை நாடும் போது, அவா் நமக்கு அனைத்தையும் கொடுப்பார்.

சகோதர சகோதரிகளே! என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த இறைப்பணியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள, உங்களின் நேரத்தை ஒதுக்கியமைக்காக நன்றி கூறுகிறேன்.

அடுத்த முறை,நீங்கள் ஒவ்வொருவரும் திருப்பலியிலே பங்கெடுக்கும் பொழுது அதை ஆழ்ந்த அனுபவமாக மாற்றுங்கள்.

இறைவன் கொடுத்த வாக்குறுதி "நீ மறுமுறை காணும் உன் திருப்பலி அதே போல இருக்காது." என்பதை உணா்வீா்கள்.

அவரைப் பெறுகையிலே முழுமையாக அன்பு செய்யுங்கள். அவரது தோளில் சாய்வதில் பெறுகின்ற இனிய சுகத்தை நீங்களே அனுபவியுங்கள். ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட அவரின் விலாவானது நமக்கு வானகத் தந்தையின் வாயிலைத் திறந்திருக்கின்றது.

இதை உணா்ந்து, தாயைக் கண்ட குழந்தைபோல் நமது அன்பை வெளிப்படுத்துவோம்

---ஆமென்.

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 4 †


† கேட்டலினாவின் சாட்சியம் பாகம் 4 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

இறுதியாசீருக்கு முன் அன்னை என்னிடம் "கவனமாயிரு! பக்தி பற்றுதலுடன் சிலுவை அடையாளத்தை வரை! ஏனென்றால் இதுவே உன் வாழ்வின் கடைசி முறையாக இருக்கலாம். கோயிலை விட்டுச் செல்லும் போது மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அருள் தந்தையா்களிடமிருந்து பெறுகிற இறுதி ஆசீராக கூட இருக்கலாம் என்றார் .

இந்த மகத்துவத்தை உணராமல் எத்தனை நாள்களை வீணடித்திருக்கிறோம்?

நாம் ஏன் முன்பே ஆலயத்திற்கு வந்து முழு திருப்பலி கண்டு இறைவன் வாரி வழங்கும் அனைத்து வரங்களையும் அடையக் கூடாது?

நம்மில் பலரால் தினமும் திருப்பலிக்குச் செல்வது முடியாத ஒன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் வாரத்தின் இரண்டு அல்லது மூன்று முறை செல்லலாமே?

பல வேலைகளுக்கு நேரம் ஒதுக்கும் நாம், அற்புத பலன்களை அள்ளி தருகின்ற திருப்பலிக்கு நேரம் ஒதுக்க தயங்குகிறோமே ஏன்?

சிறிது சிந்திப்போம்...

திருப்பலியின் நிறைவில்

இயேசு என்னை நோக்கி "திருப்பலி முடிந்தவுடன்வீட்டிற்கு விரைந்து விடாதீர்கள்.என் உறவிலே சிறிது நேரம் இணைந்து இருங்கள். நானும் உங்களோடு சிறிது நேரம் இணைந்திருக்க விரும்புகிறேன்".என்றார்’’

\
அதற்கு நான் " சிறு வயதில் எனக்குக் கூறப்பட்டது என்னவென்றால் திருவிருந்திலே பங்கு பெற்றபின் நீா் எம்மோடு ஐந்து அல்லது பத்து நிமிடம் இருப்பீர் என்று, ஆனால் உண்மையில் எவ்வளவு நேரம் இருப்பீா்? என்றேன்..

இயேசு சிரித்துக் கொண்டே
"எப்போதும் நான் உன்னோடு இருக்க விருப்பமா? நாள் முழுவதும் நீ என்னோடு உறவாடினால் உன் வேலையின் போது என்னோடு பேசினால், நான் உனக்கு செவிமடுப்பேன். நான் என்றும் உன்னோடு தான் இருக்கிறேன் நீ தான் என்னை விட்டு விலகிச் செல்கிறாய். திருப்பலியோடு உன் கடமை முடிந்துவிட்டது என நினைத்துவிடுகிறாய். உன் வாழ்வை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை நீ நினைப்பதே இல்லை.

உன் வீட்டில், உண்பதற்கு, உறங்குவதற்கு சமைப்பதற்கு என்று தனி அறைகளுண்டு, எனக்கொரு அறை உண்டா? சிலா் படத்தை வைத்திருக்கிறீா்கள் ஆனால் அது தூசி படிந்தே காணப்படுகிறது. அப்படியொரு இடம் எனக்குத் தேவையில்லை. குடும்பத்தினா் அனைவரும் கூடி ஒருசில நிமிடமாவது என்னை நினைவு கூா்ந்து செபித்து நன்றி கூறி என் ஆசீரை வேண்டுகிற இடத்தையே விரும்புகிறேன்.

நீங்கள் உங்களின் வேலை நாள்களையும், விடுமுறை நாட்களையும், சுற்றுலாக்களையும் திட்டமீட்டு செயல்படுத்துகிறீா்கள், என்னை சந்திப்பதற்கு நேரத்தையும், நாள்களையும்ஒதுக்குகின்றீா்களா?

உங்கள் வாழ்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறீா்களா?

அனைத்தையும் நான் அறிந்த போதும் உங்கள் வாயினின்று கேட்க விரும்புகிறேன். என்னை உன் குடும்ப உறுப்பினராகப் பார்ப்பதிலே நான் பெருமிதமடைகிறேன்.

மனிதா்கள் என்னை ஏற்றுக் கொள்ளாமல் எத்துனை அருளை இழக்கின்றார்கள்? திருப்பலியில் நீங்கள் பெறும் என் உடலும், இரத்தமும் இன்றி வேறு எந்த சக்தியால் என் தந்தையின் முன் நீங்கள் நிற்க முடியும்?என்றார்..

மேலும் இயேசு என்னிடம் "நீங்கள் கோயிலுக்கு செல்வதிலும், நற்கருணையைப் பெறுவதிலும் பழகி போனவா்கள். பழகிப்போனத் தன்மையால் என்னை ஒவ்வொரு முறையும் பெறும் போதும் உற்சாகம் இன்றியே காணப்படுகிறீா்கள்.

எனக்காகவே தன்னை அா்ப்பணித்த பல உள்ளங்கள்[குருக்கள்] உற்சாகமிழந்து தனது அழைத்தலை ஒரு தொழிலாக மாற்றி வரையறுக்கப்பட்ட சில கடமைகளை மட்டும் செய்து விட்டு என் உண்மை அன்பில் இணையாமல் வாழ்கின்றனா். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது" என்றார்.

பின்பு இறைவன் இயேசு நாம் உட்கொள்ளும் நற்கருணையின் பலன்களைப் பற்றி கூறலானார்.

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 3 †


† கேட்டலினாவின் சாட்சியம் -பாகம் 3 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

அப்போது அங்குபீடத்தின் முன் கைகளை உயா்த்திய உருவங்கள் மங்கலாக காணப்பட்டன.

அன்னை என்னிடம்,"அவா்கள் உன் செபங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் உத்தரிக்கின்ற ஆத்மாக்கள். இடைவிடாது அவா்களுக்காக மன்றாடு, அவா்களும் உனக்காக மன்றாடுகிறார்கள். அவா்கள் அவா்களுக்காக வேண்ட முடியாது. எனவே நீதான் உன் செபத்தின் முலம் அவா்கள் இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றார்..

மேலும் என்னை தேடி மக்கள் நான் காட்சியளித்த இடங்களுக்குத் திருயாத்திரை செல்கிறார்கள். ஆனால் நானோ, திருப்பலியின் போது பீடத்தின் அடியில் இருக்கின்றேன். நற்கருணைப் பேழையின் அடியில் வானதூதா்களோடு வீற்றிருக்கின்றேன் என்றார்.

அன்பா்களே உண்மையில் தூயவா் கீதம் பாடும்போது அன்னையோடும், வானதூதா்களோடும் இறைவனின் உருமாற்று புதுமைக்கு காத்திருப்பது விண்ணகத்திலிருப்பது போன்ற உணா்வை எனக்களித்தது. அந்த தருணத்தில் சிந்தனைகளை சிதறவிடுவது வருந்ததக்கது.

இன்னும் சிலா் திருப்பலியை தனக்கு நிகரான மனிதா்களை பார்ப்பது போன்று கைகளைக் கட்டிக்கொண்டு இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது.

அன்னை என்னிடம்
"அனைவரிடமும் சொல் மனிதன் இறைவன் முன்னிலையில் மண்டியிடுவது அவனை நிறைவிற்கு இட்டுச் செல்லும் என்றார்,’’

அன்பா்களே, அன்றைய திருப்பலியை நிறைவேற்றியவா் சாதாரண உயரத்தை கொண்டிருந்தார். எழுந்தேற்றதின் போது பேராயரின் உருவம் அதிகரித்தது. விசித்திரமான பிரகாசமான ஒளி அவரின் முகத்தை சுற்றி வளா்ந்து கொண்டே இருந்தது.

அவா் நற்கருணையை உயா்த்தும் போது அவரின் கைகளைப் பார்த்தேன். கைகளின் பின் பறத்தில் சில தழும்புகள் தெரிந்தன. அதிலிருந்து பேரொளி எழுந்தது. அங்கே இயேசுவைக் கண்டேன். திருப்பலியாற்றும் குருவை தம் உடலால் அரவணைத்திருந்தார்..

அப்பொழுது நற்கருணையானது வளா்ந்து அதிலிருந்து இயேசு மக்களை பார்ப்பது போன்றிருந்து.

வழக்கம் போல் வணங்குவதற்காக தலையை குனிந்தேன். ஆனால் அன்னை

"சிரம் தாழ்த்தாதே அவரை உற்று நோக்கி தியானி.
அவரை முகம் முகமாய் பார்த்து பாத்திமா செபத்தைக் கூறு, என்றார்.

‘’இறைவா! உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன், உம்மை அன்பு செய்கிறேன், உம்மில் விசுவாசம் கொள்ளாத , உம்மை அன்பு செய்யாதவா்களுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்’’

இயேசுவை நீ எத்துணை அன்பு செய்கிறாய் என்று கூறு, அந்த பேரரசருக்கு வணக்கம் செலுத்து" என்றார்.

அப்பொழுது பெரிய உருவமாக மாறிய இயேசுவை நான் சிரம் தாழ்த்தி வானதூதா்கள் போன்று வணங்கினேன்.

என் சிந்தனையில் திடிரென்று ஒரு கேள்வி "எப்படி இயேசுதிருப்பலியாற்றும் குருவின் உருவத்தினுள்ளும் அதே நேரத்தில் அப்பத்தினுள்ளும் இருக்கிறார், என்று எண்ணிக் கொண்டிருந்த போதே குருவானவா் நற்கருணையை இறக்கியதும் இயல்பான உருவத்திற்கு மாறினார்.

இவற்றை கண்டதும் கண்கள் கலங்க ஆரம்பித்தன. வியப்பில் ஆழ்ந்தேன்.

குருவானவா் இரசத்தை எடுத்து அா்ச்சிப்பு செபத்தைச் செபித்ததும் விண்ணிலே மின்னல் மின்னியது. கோயிலிலே கூரைகள் இல்லாதது போல் மின்னல் காட்சியளித்தது. அவ்வேளையிலே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கண்டேன். சிலுவையின் செங்குத்தான மரத்தை ஒரு திடமான கரம் பிடித்திருந்தது. அதிலிருந்து ஒரு புறா வெளியே வந்து கோயிலின் மீது பறந்து பேராயரின் இடப்பக்கத் தோளில் அமா்ந்தது.

பின்னா் திருவிருந்தில் கலந்துக் கொண்டு இயேசுவை என் உள்ளத்தில் ஏந்திய வண்ணம் என்னுடைய இருக்கைக்கு திரும்பி முழந்தால் படியிடும் போது இயேசு என்னிடம் கூறினார்

. " கவனி! அப்போது எனக்கு முன் அமா்ந்திருந்த பெண்ணின் ஆழ்குரல் செபத்தை கேட்க முடிந்தது. அவா், இயேசுவே மாதத்தின் இருதியில் உள்ளோம். வீட்டு வாடகைக்கும், பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும், காருக்கான செலவுக்கும் போதிய பணமில்லை . ஏதேனும் செய்தருளும். என் கணவா் குடிபழக்கத்தை உடனே விட விட வேண்டும். கடந்த ஆண்டு என் இளைய மகன் தோ்ச்சிப் பெறாததால் இவ்வாண்டு மீண்டும் படிக்க உள்ளான். அவனுக்கு உதவும் என் பக்கத்து வீட்டுப் பெண்மணி வீடு மாறி செல்கிறார் உடனே செய்யச் சொல்லும். என்னால் அவரை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை, என அடுக்கிக் கொண்டே சென்றாள்.

அப்போது பேராயா் செபிப்போமாக என்றார் அனைவரும் எழுந்து நின்றனா்.

இயேசு மெல்லிய குரலில்

"அந்த பெ்ண்ணின் செபத்தை கேட்டாயா? அவள் ஒருமுறை கூட என அன்பைப்பற்றிக் கூறவில்லை. ஒரு முறை கூட நான் மனித உருவெடுத்து உங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தற்கு நன்றி கூறவில்லை. அவள் எழுப்பிய எல்லாம் வேண்டுதல் பிராத்தனைகள் தான்.

அவரைப் போன்றே பலா் இருக்கின்றனா். உங்கள் மேல் வைத்திருந்த அன்பிற்காக சிலுவையில் மரித்தேன். அந்த அன்பிற்காகவே என்றும் உங்களோடு வாழ்கின்றேன் ஆனால் நீங்கள் எந்த விதத்திலும் உங்கள் அன்பை வெளிபடுத்தியதே இல்லை. உங்களின் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்". என்று மிகவும் வருத்ததுடன் கூறினார்.

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - 2 †




† கேட்டலினாவின் சாட்சியம்- பாகம் 2 †

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

† காணிக்கை -

காணிக்கையின் போது தேவதாய் என்னருகே வந்து சொல்லச் சொன்னதாவது ,

" இறைவா! என்னையே உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என் சிறுமையிலிருந்து என்னை உருமாற்றும். என் குடும்பத்திற்காக, என் உபகாரிகளுக்காக, என்னோடு பணிபுரிபவா்களுக்காக , எனனோடு சண்டையிடுபவா்களுக்காக என் செபத்தை நாடியவா்களுக்காக மன்றாடுகிறேன். என் இதயத்தை தரையில் பதித்து அதன் மேல் அவா்களை நடக்கச் செய்தருளும். இவ்வாறே புனிதகள் மன்றாடினா். நீயும் இவ்வாறே செபி" என்றார். 

திடீரென்று ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஓா் இளம் உருவம் வெளிவந்தது. வெண்ணாடை உடுத்திய அவா்கள் பீடம் நோக்கி நடந்தனா். 

அன்னை என்னிடம்

, "உற்றுநோக்கு அதோ ஒவ்வொருவரின் காவல் தூதா்களும் அவரவருடைய காணிக்கைகளையும், வேண்டுதல்களையும் பீடத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். சில காவல் தூதா்கள் பாத்திரங்களோடு சென்றனா் இவா்கள் இத்திருப்பலி வழியாக பல வேண்டுதல்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவா்களே திருப்பலியின் மகிமையை உணா்ந்தவா்கள். உன்னையே முழுமையாக அா்ப்பணம் செய். உன் துன்பங்களை, கவலைகளை, ஏக்கங்களை, வேண்டுதல்களை அவரிடம் ஒப்படை 

திருப்பலிக்கு விலை மதிப்பில்லை. எனவே கொடுப்பதிலும், கேட்பதிலும் தாராளமாக இரு" என்றார்.

சில காவல் தூதவா்கள் வெறும் கையோடு சென்றனா். அன்னை என்னிடம் 

"இவா்கள் திருப்பலியிலே ஆா்வம் காட்டாதவா்கள். இவா்களுக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றார்.. 

இன்னும் ஒரு சில காவல் தூதா்கள் கைகளை ஒன்று சோ்த்து சோகத்தில் தலையைக் கீழே வைத்துக் கொண்டு செபித்துக் கொண்டிருந்தனா். அன்னை என்னை நோக்கி இவா்கள் கட்டாயத்தினால் திருப்பலியில் கலந்து கொண்டிருக்கின்றனா். 

அவா்கள் வாயில் எழும் செபங்களை மட்டுமே அவா்களின் தூதா்கள் எடுத்துச் செல்கின்றனா் என்றார்.

அன்பா்களே உங்களுடைய காவல் தூதா்களை கவலைக்குள்ளாக்காதீா்கள். இறைவனுக்கு பிடித்த காணிக்கை நம்மையே அா்பணிப்பது தான். அன்று பார்த்த பவனியை ஒப்பிடுவதற்கு இணையேதுமில்லை.

† தூயவா்

தூயவா்பகுதி வந்த போது இறைமக்கள் அனைவரும் 'தூயவா்' என்று முழங்கிய போது குருக்களும் பின்பறம் இருந்தவைகள் மறைந்து போயின. பேராயரின் பின்புறமும் இடப்புறமும் ஆயிரக்கணக்கான வானதூதா்கள் இருப்பதைக் கண்டேன். சிறிய பெரிய இறக்கைகள் கொண்ட , இறக்கைகள் இல்லாத என அனைத்து வகையான வான தூதா்களும் வெள்ளை நிற நீள உடையுடன் கரம் குவித்து சிரம் தாழ்த்தி மண்டியிட்டனா். மக்களின் தூயவா் கீதத்துடன் இவா்களின் இனிமையான இசை முழங்கியது. 

† எழுந்தேற்றம் 

எழுந்தேற்றத்தின் போது எல்லாவற்றிற்க்கும் மேலான அதிசயம் நிகழ்ந்தது. எண்ணில்லா மக்கள் கூட்டம் பேராயரின் பின்புறம் பல வண்ண ஆடை உடுத்தி நின்று கொண்டிருந்தனா். அவா்களின் முகங்கள் புன்னகையால் ஒளிர்ந்தது. பல வயதினராக இருந்தாலும் அவா்களின் முகங்கள் சுருக்கமின்றி மகிழ்ச்சியாக ஒரே மாதிரி தொரிந்தன.

அனைவரும் மண்டியிட்டு தூயவா் தூயவா் என பாடிக்கொண்டிருந்தனா். அன்னை என்னை நோக்கி "விண்ணகத்தில் இருக்கும் புனிதா்கள் கூட்டம் இதுவே, இவா்களுள் உன் உறவினா்களும் உள்ளனா் " என்றாள்.. அன்னையோ பேராயரின் வலப்பக்கம் ஒா் அடி பின்னால் தரையிலிருந்து சறிது எழும்பப் பெற்று நின்று கொண்டிருந்தாள்.

. அவரின் ஆடை ஒளிர்ந்தது. தன் கரங்களை கூப்பி திருப்பலியாற்றும் குருவை மதிப்புடன் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அன்னை என்னை நோக்கிக் கூறியது

"நான் குருவுக்கு பின் நிற்பது உனக்கு ஆச்சர்யமாக உள்ளதா? என்னதான் என் மகன் என்னை பெருமைபடுத்தினாலும் ஒரு குருவுக்கு கொடுக்கும் மதிப்பை எனக்கு கொடுக்கவில்லை, காரணம் நான் செய்யும் புதுமைகளை விட அவா்கள் தங்கள் கரங்களால் செய்யும் அன்றாட புதுமைகள் பெரிது. இதனாலேயே அவா்களை நான்நேசிக்கிறேன். என்றார். .

அன்பானவா்களே கடவுள் எத்துனை அருளினை, எத்துணையளவு மகிமையினை, திருப்பலி நிறைவேற்றி கொண்டிருக்கும் குருக்கள் மேல் பொழிகின்றார்.என்பதை பாருங்கள் !!!.

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் - பாகம்-1†



கேட்டலினாவின் சாட்சியம்-பாகம்-1

அன்று மங்கள வார்த்தை திருவிழா, நான் ஆலயத்தினுள் நுழைகையிலே அன்னை மாரியாள் என்னை நோக்கி "நீ இன்று புதிதாக பலவற்றை அறிந்து கொள்ள போகிறாய், கூா்ந்து கவனி, ஏனெனில் இதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்" என்றார்.
எனக்கொன்றும் விளங்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளைச் சிதறடிக்காமல் கவனம் செலுத்தினேன்.

தென்றல் வந்து தீண்டுவது போல் ஆலயத்திலிருந்து பாடலொலி என்னை வந்து தீண்டியது.அதைத் தொடா்ந்து பேராயா் திருப்பலியைத் தொடங்கி பாவ மன்னிப்பு வழிபாட்டிற்குள் நுழைந்த போது
மீண்டும் அன்னையின் குரல்

"உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இளறவனுக்கு எதிராக செய்த தவறுதளுக்காக மன்னிப்பு கேள், அதன் முலம் திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுக்கலாம்" என்றது.

என் மனதில் எழுந்த சிந்தனை,

'நான் இறையருளால் நிரப்பப்பட்டிருக்கிறேன், ஏனென்றால் நேற்று மாலை தான் ஒப்புரவு அருட்சாதனம் பெற்றேன்'. என் சிந்தனையை அறிந்த அன்னை

"நீ நேற்று மாலையிலிருந்து இறைவனை புண்படுத்தவில்லையா? இதோ நீ செய்த செயல்களில் சில, ஏழை சிறுமி உன்னிடம் உதவி கேட்டு வந்த போது உன்னுடைய அவசரத்தால் அச்சிறுமியை உதாசினப்படுத்தவில்லையா?
ஆலயத்திற்கு வருவதற்கு முன் உன் மீது மோதுவது போல் வந்த பேருந்தின் ஓட்டுநரை கடும் சொற்களால் திட்டவில்லையா?
மேலும் திருப்பலிக்கு தாமதமாக வந்ததன் மூலம் எந்த முன் தயாரிப்பும் உன்னிடம் இல்லையே" என்றார்.

"போதும் அன்னையே போதும் , நான் உணா்ந்து விட்டேன்" என்று கூறி மன வேதனையுற்றேன்; இறைவனின் கருணையை நாடினேன்.

வானவா் கீதம்

திருவிழா திருப்பலியாக இருந்ததால் "உன்னதங்களிலே" செபிக்கும் முன் அன்னை என்னை நோக்கி "மூவொரு இறைவனின் படைப்பாய் இருக்கும் நீ, அவரை உன் ஆழ்ந்த அன்பினால் மகிமைபடுத்து". என்றாள்.

அன்று செய்த 'உன்னதங்களிலே' செபம் ஒரு வித்தியாசமாக இருந்தது. மிக பிரகாசமான கடவுளின் அரியணையின் முன் இருப்பது போன்று உணா்ந்தேன். நன்றி கீதம் எழுப்பிக் கொண்டே இருந்தேன்.

இரக்கம் மிகுந்த அந்த இறைவனின் திருமுகத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அப்போது நான் இறைவனை நோக்கி

"தந்தையே நான் உமக்கு சொந்தம், என்னை தீயவனிடமிருந்து காத்தருளும். உம் அமைதியால் என்னை நிரப்பும்". என்று உருக்கமாக மன்றாடினேன்.

( இறைவார்த்தை வழிபாடு )

இறைவார்த்தை வழிபாட்டில் நுழைந்த போது தேவதாய் என்னை மீண்டும், மீண்டும் சொல்ல சொன்ன வார்த்தைகள்,,

"இறைவா உம் வார்த்தையைக் கேட்டு அபரிவிதமான பலனை நான் பெற வேண்டும். தூய ஆவியே என் உள்ளத்தைத் தூய்மை படுத்தியருளும். அங்கே உம் வார்த்தை வளம் பெறுவதாக".

அன்னை மேலும் கூறினாள்,

."இறைவார்த்தையையும் மறையுறையையும் கூா்ந்து கவனி. விவிலியம் கூறுவது போல் இறைவார்த்தை பயனளிக்காமல் இராது. நன் முறையில் கவனித்தால் கேட்டவற்றில் சில உன் மனதில் பதியும். நாள் முழுவதும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவா, அவை ஒரு வசனமோ, முழுநற்செய்தியோ, ஏன் ஒரு வார்த்தையாகவோ இருக்கலாம். அதை மனதில் இருத்தி சிந்திக்கையில் அது உன்னில் ஒன்றாக மாறிவிடும். அதுவே உன் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும்.என்றார்.

அப்போது நான் இறைவார்த்தையைக் கேட்க கிடைத்த வாயப்பிற்காக நன்றி கூறி இறைவனிடம் மன்னிப்பு வேண்டினேன். ஏனெனில் அதுவரை என் பிள்ளைகளை ஞாயிறு திருப்பலிக்கு கட்டாயப்படுத்தியது கட்டளைகளை கடைபிடிப்பதற்காக மட்டுமேயன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட வேண்டுமே என்பதற்காக அல்ல.

என்னுடைய அறியாமையால் எத்தனை ஆண்டுகள் வீணடித்தேன் என்பதனை நினைத்து வேதனை உற்றேன். உலகறிவு பெற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளேன். ஆனால் இம்மண்ணகத்திலேயே விண்ணக அனுபவம் பெறக்கூடிய முயற்சியில் சிறிதும் ஈடுபடாமல் இருந்ததைக் கண்டு வருந்தினேன்

† திருப்பலி பற்றிய கேட்டலினாவின் சாட்சியம் †


இதற்கு கொச்சபாமாவின் ஆயா் ராணே பொ்னான்டஸ் உத்தரவு கொடுத்திருக்கிறார்..

[கண்டிப்பாக எல்லோரும் நேரம் ஒதுக்கி படித்து பாருங்கள்]

திருப்பலியில் புகைப்படங்கள் எடுப்பது வேண்டாம் - திருத்தந்தை

திருப்பலியில் புகைப்படங்கள் எடுப்பது வேண்டாம் - திருத்தந்தை

நவ.09,2017. திருப்பலி வேளையில், தங்களிடம் உள்ள தொலைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துவோரைக் காணும்போது தான் அதிகம் வேதனை அடைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 8, இப்புதனன்று, திருப்பலியை மையப்படுத்தி, புதன் மறைக்கல்வி உரை வழங்கிய வேளையில், புனித பேதுரு பசிலிக்கா, மற்றும் வளாகத்தில் தான் திருப்பலியாற்றும் வேளையில், பலர், தங்கள் கைப்பேசியைக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பது தனக்கு வேதனை தருகிறது என்று கூறியத் திருத்தந்தை, திருப்பலி ஒரு கேளிக்கை காட்சியல்ல என்று வலியுறுத்திக் கூறினார்.
புகைப்படங்கள் எடுப்பது, விசுவாசிகள் மட்டுமல்ல என்றும், அருள்பணியாளர்கள், ஆயர்கள் என்று அனைவரும் இந்த தவறை செய்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இந்தத் தவறை அனைவரும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தார்.
திருப்பலியின் நடுவே, பலியாற்றும் அருள்பணியாளர், 'இதயங்களை மேலே எழுப்புங்கள்' என்று சொல்கிறாரே தவிர, 'தொலைப்பேசிகளை மேலே எழுப்புங்கள்' என்று சொல்வதில்லை என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருப்பலி நேரத்தில் ஆண்டவர் மட்டுமே நம் முழு கவனத்தையும் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கூறிய இச்சொற்கள், தற்போது, சமூக வலைத்தளத்தில் பெருமளவு பகிரப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

திருப்பலி எதற்கோ, எப்படியெல்லாமோ பலியாகிறது!!

திருப்பலி எதற்கோ, எப்படியெல்லாமோ பலியாகிறது!!

அரசியல் இன்று ஊழல், இலஞ்சம் இவைகளுக்குப் பலியாகிறது போல, நிதித்துறை உண்மைக்குப் புறம்பானவைக்குப் பலியாகிறது போல, திருமண அன்பு  ரொக்கத்திற்கும், நகைகளுக்கும் பலியாகிறது போல, திருவருட்சாதன வழிபாடுகள் கூட விளம்பரங்களுக்குப் பலியாகின்றன!
திருவிழாக்கள் தெருவிழாவாக வேடிக்கைகளுக்குப் பலியாகின்றன. பாட்டுப் பூசை என்ற பெயரில் பாடகர் (ஆண், பெண் இருவரும்) குழுவினரின் பல்வேறு இசைக்கருவிகள் முழங்கும் பாட்டுக் கச்சேரிக்குத் திருப்பலி பலியாகிறது! நாம  விழா, பாராட்டு-பிரிவு உபச்சார விழா, ஜூபிலி விழாத் திருப்பலிகள் நாடக-நடனக் கொண்டாட்டங்களுடன் வெளியரங்க மேடைகளுக்குப் பலியாகினறன.
எல்லா மதத்தவரும் அவரவரது வழிபாட்டு முறைக்கேற்ப மந்திரங்கள், சுலோகங்கள், சடங்குகளை கடவுளைத் துதிக்கவோ, புகழவோ, அவரக்கு நன்றி கூறவோ, அவரிடம் மன்னிப்பு வேண்டவோ, வரஙகள் கேட்கவோ எனத் தேவைக் கேற்பப் பயன்படுத்துகிறார்கள், அதுபோல திருச்சபை திருப்பலி நிறைவேற்ற சில விதிமுறைகளை வரையறுத்துள்ளது.

இவைகளில் 1) சில வார்த்தைகள் (யார், எப்பொழுது, எவ்விதம் உச்சரிப்பது?) 2) சில நிற்பது, வணங்குவது, முழந்தாளிடுவது, கைவிரிப்பது, கைகூப்புவது போன்ற செயல்கள் பற்றியது 3) சில அணியும் உடை, நிறம், பீட, அமைப்பு, ஜோடனை மற்றும் பயன்படுத்தும் பொருள்கள் பற்றியது. 4) இன்னும் சில திருப்பலிக்குரிய இடம், நாள், நேரம் பற்றியவை. ஆக பல விதிமுறைகள் இருப்பது -  எந்த நாட்டிலும், மொழியிலும் திருப்பணியாளர் யாராயினும் முறைப்படி வழிபாடு நிறைவேற்றவும், மக்களும் குழப்பமின்றி பங்குப் பெறவும் அவை உதவும் என்பதே திருச்சபையின் கருத்து.

ஆனால் இன்றைய நாள்களில் இந்த விதிமுறைகள் சில அருள்பணியாளர்களின் விருப்பு – வெறுப்புகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் இவர்கள் தங்கள் மொழிப்புலமையையோ, திறமையையோ வெளிப்படுத்த எண்ணி திருச்சபையின் வழிபாட்டு ஒழுங்குமுறைகளைக் கண்டு கொள்ளாமல், அனுமதிக்கப்பட்ட தருணங்கள் தவிர மற்ற வேளைகளிலும் வார்த்தைகள், சைகைகளைக் கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ செபிப்பதும், செயல்படுவதும்  மக்களிடையே கசப்பை, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்விதம் ஒருவரைப் பார்த்து ஒருவர் விதிமுறைகளை மீறுவதை யார் திருத்துவது? யார் சரி செய்வது?
அன்பாலும், இரக்கத்தாலும் பிறருக்காகப் பலியாக வேண்டி நாமும் அர்த்தமற்ற வாடிக்கை வழக்கங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் அநேக நேரங்களில், இடங்களில் அனைவருமே பலியாகிக் கொண்டிருக்கின்றோம்!
திருமுழுக்கு, புதுநன்மை, திருமணம் ஆகிய திருவருட்சாதனக் கொண்டாட்டங்கள், பங்குத் திருச்சபை (பங்கு எனும் குடும்ப நிகழ்வு) என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தனிப்பட்ட வசதியுள்ள குடும்பங்களின், தலைவர்களின் தனிப்பெருமைக்கும், விளம்பரத்திற்கும், “அன்பளியுங்கள்” என்ற பெயரில் கொடுக்கல் – வாங்கலுக்கும், வியாபார வர்த்தகச் செயலுக்கும் பலியிகிக் கொண்டிருக்கின்றனர்!
பாஸ்கா விழா கொண்டாடும் அனைத்துலக மக்களும் இஸ்ரயேலரின் பாஸ்காவை நினைவு கூறும் நேரம் மாலை (இரவு) நேரம்; இயேசுவும் அன்று பாஸ்கா உணவை உண்ணும் போது தான் தம் உடலையும், இரத்தத்தையும் அப்ப, இரச வடிவில் ஒப்புக் கொடுத்தார். எனவே, முதற் திருப்லி  இயேசு கிறிஸ்துவால் மாலையில் (இரவில்) நிறைவேற்றப்பட்டது! அதிகாலையில் அன்றைய செபம், வேலை, இன்ப – துன்பம் இவைகள் அனைத்தையும் மரியாளின் தூய இதயத்தோடு இணைத்து ஒப்புக் கொடுப்பது போல, காலையில் எழுந்து உடலும், உள்ளமும் எவ்விதத் தீமைக்கும் உள்ளாகுமுன்பு, கடவுளின் அன்பில் இருக்கும் போதே தூய மனத்துடன் கல்வாரித் திருப்பலியாக நம்மையே இறைவனுக்குக் கையளிக்கும் நிகழ்வே அன்றாடக் காலைத் திருப்பலி!!
கூட்டுத்(திரு)ப்பலியா? குருக்கள் கூடிவாழும், கூடும் இடங்களில் தனித்தனியே திருப்பலிக்காகப் பீடம் தேடுவதைத் தவிர்க்கவும், குருத்துவக் கூட்டமைப்புத் தன்மையை செயலால் உணர்த்தவும் திருச்சபையே அனுமதித்துள்ள “கூட்டுத் திருப்பலி” என்பது இன்று எந்த நேரமும், எதற்கும், எத்தனைப் பேரும் கூடி இயேசுவைப் பலியாக்கும் கூட்டுத் திருப்பலி எனும் சடங்காகி விட்டது! ஒவ்வோர் அருள்பணியாளரும் தன்னுடைய காலைத் தியானம், செபம் இவைகளால் தன்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, தன்னையே பலியாக இயசுவின் திரு உடல் திரு இரத்தத்தோடு ஒப்புக் கொடுப்பதை விட்டுவிட்டு, விருப்பமான நேரத்தில், விரும்பும் காரணத்திற்காக என்று தகுதி பற்றிய சிந்தனைக்கு இடம் கொடாமல், கூட்டுப்பலி என்ற பெயரில் பார்ப்பவர் மகிழும்படி எத்தனை பேரும் நிறைவேற்றும் பலியே கூட்டுத் திருப்பலியாகி விட்டது!!
துறவற விழாக்கள், குருத்துவ விழாக்கள் கூட அர்ப்பணமாகிறவர்களின் விளம்பரமாகவோ, அன்பளிப்புகள் பெறவோ, அடியார்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்ணும் வசதிக்காகவோ அறுசுவை உணவை மையப்படுத்தி மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு முன்பு ஆலயம் செல்லாமல் வாழ்த்து, பாராட்டுக் கூட்டத்தோடு அதே மேடையில் நிறைவேற்றப்படும் நவின பழக்கத்திற்குத் திருப்பலி பலியாகிக் கொண்டிருக்கிறது!!
அன்று முதல் திருப்பலியை திருத்தூதரோடு ஒப்புக்கொடுத்த அதே இயேசுவே இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் தாமே பலி ஒப்புக்கொடுக்கும் குருவாகவும், இறைத்தந்தைக்கு உகந்த பலிப்பொருளாகவும் இருக்கிறார் எனும் உண்மையை மறந்து கூட்டுத் திருப்பலியின் போது பீடத்தருகில் இருப்போர் தவிர  மற்றக் குருக்கள் திரு உடை அணிந்திருந்தாலும் (குறிப்பாக குருப்பட்ட விழா, திருவிழா, பாராட்டு விழாக்களில்) இயேசுவின் முதற் கூட்டுத் திருப்பலியின் போது திருத்தூதர்களிடம் இருந்த அமைதியோ, பக்தி நிறைந்த மனநிலையோ எதுவும் இன்றி, அருகிலிருக்கும் குருவிடம் நலம் விசாரிப்பதும், நிகழ்பனவற்றை விமர்சிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டதால் தான் கூட்டுத் திருப்பலி கூத்துப் பலியாகி விடுகின்றது. அதோடு ஓர் ஆயரோ, பலரோ, ஒரு குருவோ, பலரோ, ஆயரும் – குருக்களும் சேர்ந்தோ  எத்தனை பேர் கூடித் திருப்பலியில் கலந்து கொண்டாலும் அங்கும் பலிப்பொருளாகவும், திருப்பலி  நிறைவேற்றுபவராகவும் விளங்குபவர் இயேசுவே என்பதால், திருப்பலியின் பலன் நமக்குக் கிடைப்பது நாம் காணும் திருப்பலி நிறைவேற்றுகிற ஆயரையோ, குருவையோ பொறுத்தது அல்ல; அல்லது திருப்பலி நிறைவேற்றுபவரின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அல்ல; திருப்பலியில் கலந்து குருவோடும், பலிப்பொருளாம் இயேசுவோடும் இணைந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நமது தகுதியைப் பொறுத்ததே என்ற மறைக்கல்வி மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.
திருநாள், பெருவிழா நாள்களில் பீடப்பகுதி பூந்தொட்டிகளால் அழகுச் செய்யப்படுவது போல ஆயரோ, குருக்கள் கூட்டமோ பீடத்திற்கு அழகு சேர்ப்பார்களே தவிர, அவர்களில் ஒருவர் வழங்கும் இறைசெய்தி மற்றும் ஒரு திருப்பலியின் பலன், இவை தவிர வேறு எதுவும் அதிகமாக அங்கு கூடும் மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும் உண்மை!
குருத்துவ வெள்ளி விழா, பொன்விழா ஆகிய விழாக்களையொட்டி மாலை வேளையில் விழா மேடைக்குக் குருக்களும் – துறவியரும் விழா நாயகர்களுடன் பவனியாக வந்து, மகிழ்வுடன் மக்களோடு இணைந்து பாராட்டு, அன்பளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்ற முறையில் திருப்பலியோடு இணைக்காமல் காலையிலேயே நன்றித் திருப்பலி, மாலையில் மேடை நிகழ்வு, இறுதியில் விருந்து என்று கொண்டாடுவது இன்னும் சிறப்பல்லாவா! அதுதோடு ஒரு கிராமத்தில் உள்ள சிறிய ஆலயமோ, மறைமாவட்டத் திருத்தலமோ, பேராலயமோ எந்தக் கோவிலாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் திருப்பலியின் பலன் ஒன்றே! ஆனால் அங்குக் கூடுகின்ற விசுவாசிகளின் பக்தி மன்றாட்டு இவைகளால் மட்டுமே உடனிருக்கும் அனைவருக்கும் அதிகமாய் இறைவன் அருள் பொழிகின்றார் என்பதால் விழாத் திருப்பலி, கூட்டுத் திருப்பலி, சிறப்புத் திருப்பலி, நவநாள் திருப்பலி எதுவாக இருந்தாலும் அப்பலியை ஒப்புக்கொடுக்கிற தனி ஒரு குருவோ, விசுவாசியோ பலன் பெறுவது அவரது தகுதியைப் பொறுத்ததே!! குறிப்பிட்ட இடமோ, நாளோ, கூட்டமோ அவரது தகுதியைத்தான் மிகுதியாக்க முடியும் என்பதும் உண்மையே!!!

† திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்? †

1. கல்வாரிப் பலியை எப்படி கொண்டாட முடியும்?

2. கோதுமை அப்பத்தை தன் உடலாகவும், திராட்சை இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றி இதை வாங்கி உண்ணுங்கள், இதை வாங்கிப் பருகுங்கள் என்று திவ்ய திருப்பலியை ஏற்படுத்தினார். அதை எப்படிக் கொண்டாட முடியும்?

3. ஆண்டவர் கெத்சமெனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து, ஜெபித்து, தன்னையே பலிபொருளாக மாற்றி, கல்வாரிப் பாடுகள்பட்டு, நிறைவேற்றிய திருப்பலியை எப்படி கொண்டாட முடியும்?

4. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று சொல்லும்போது, 'மக்களை நம் இரத்தத்தால் மீட்கப்போகிறோம், அவர்களை வான் வீட்டிற்கு தன் தந்தையின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறோம்' என்ற மகிழ்ச்சி இருந்தாலும், அன்று இரவுமுதல், மறு நாள் நண்பகல்வரை உலகத்தில் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் யாரும் அனுபவித்திராத சித்திரவதையை தாம் அனுவவிக்க இருப்பதை நினைத்து மனக்கலத்திலும் இருந்திருப்பாரே... அதையும் நாம் நினைவுகூறும் திருப்பலி எப்படி கொண்டாட்டமாக மாறும்?

5. நான் சிந்தப்போகும் இரத்தமும், பலரின் விசுவாசக்குறைவால் அவர்களுக்கு வீணாகப்போகிறதே என்றும் வருந்தியிருப்பார்... இப்போது நம்மில் பலர் திவ்ய திருப்பலியில் தகுதியில்லா உள்ளத்தோடு பங்கேற்று, திருப்பலியின் பேறுபலன்களை வீணாக்குவது போல், திருப்பலியை எப்படி கொண்டாடமுடியும்?

6. கல்வாரியில் ஒரு திருமரணம் நடைபெற்றது; அதுவே திவ்ய திருப்பலி. அந்த திருமரணத்தை நினைவுகூறும் திருப்பலி எப்படிக் கொண்டாட்டமாக மாறும்?

7. பெரிய வியாழனையும், புனித வெள்ளியையும் நினைவு கூறும் திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்?

8. முதல் கல்வாரிப்பலியில் முழுமையாக பங்கேற்று, ஆண்டவருடைய துன்பக் கலத்தில் பக்தியுடன் பங்கேற்ற, ஆண்டவரின் துன்பக் கிண்ணத்தில் பருகிய மாமரி மாதாவும், புனித அருளப்பரும் திவ்ய திருப்பலியைக் கொண்டாடினார்களா?

9. முதல் திருப்பலி ஏன் நடைபெறுகிறது? என்ன நடந்துகொண்டிருகிறது என்பதை அறியாவிட்டாலும், ஆண்டவராகிய இயேசு சுவாமி அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பப்பாடுகளை பார்த்து கண்ணீர் சிந்தி அழுத எருசலேம் மகளிர் திருப்பலியை கொண்டாடினார்களா?

எப்படிக் கொண்டாட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்?
ஒரு வேளை கல்வாரி பலிக்கு செல்கிறோம்... ஆண்டவரை உட்கொள்ள செல்கிறோம்... அதில் மிகவும் பக்தியோடும், தகுதியான உள்ளத்தோடும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் இப்படி செல்பவர்களுக்காக “கொண்டாட்டம்" என்ற வார்த்தை தானாக வந்து விட்டதோ…

10. முதல் திருப்பலியைக் கொண்டாடியவர்கள் யார் தெரியுமா?

1. தலமைக்குருக்கள்
2. பரிசேயர்கள்
3. சதுசேயர்கள்
4. படைவீரர்கள்
5. “இவனைச் சிலுவையில் அறையும்; இவனை சிலுவையில் அறையும்"; என்று வசை பாடிய ஆண்டவரை அறியாத மக்கள்.
6. பிலாத்து
7. ஏரோது
8. கெட்ட கள்ளன் இன்னும் பலர்…

அவர்களா நாம்? திருமுழுக்கு பெற்று ஆண்டவரின் பிள்ளைகளாக, கிறிஸ்தவர்களாக, அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களான நாம் திருப்பலியில், கல்வாரியில் எப்படி, என்ன மனநிலையில் கலந்து கொள்ள வேண்டும்?

1. ஆடம்பரமாக உடை உடுத்தி, திருமண வீட்டிற்கு செல்பவர்கள்போல் செல்பவர்கள்தான் தெய்வீக திருப்பலியைக் கொண்டாட முடியும்.

2. பிறர் கண்களை உறுத்தும் விரசமான ஆடைகளை (உறுத்தலின்றி) அணிந்துகொண்டு ஆலயத்திற்கு செல்பவர்கள்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

3. ஆண்டவருக்கு முன்னால் காலணிகளை எவ்வித உறுத்தலின்றி தன் முன்னால் வைத்துக்கொண்டு ஆலயத்தில் அமர்ந்திருப்பவர்கள்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

4. ஆண்டவரைப்பற்றி கவலைப்படாமல், ஆடைகளைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு, ஆன்மாவை அலங்கரிக்காமல், தங்கள் உடலை அலங்கரித்துச் செல்பவர்கள்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

5. ஆண்டவருடைய கவனத்தை தன் மேல் திருப்ப வேண்டும் என்ற கவலையில்லாமல், ஆலயத்திற்கு வருபவர்களின் கவனத்தை தன் மேல் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லும் பெண்களாலும், ஆண்களாலும்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

6. தகுந்த தயாரிப்பின்றியும், ஆண்டவரை சந்திக்க செல்கிறோம் என்ற எண்ணமின்றியும், ஏதோ கடமைக்கு திருப்பலிக்கு செல்கிறவர்களும்தான் திருப்பலியைக் கொண்டாட முடியும்.

இப்படி திருப்பலியையை மேலே சொல்லப்பட்டவர்கள் போல் கொண்டாட்டமாக கருதினால் நமக்கு என்ன கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

முதல் கல்வாரி திருப்பலியில் பாதியில் வெளியேறி, ஆண்டவரை மறுதலித்தாலும், பின் உணர்ந்து, அழுது, கண்ணீர் வடித்து, அவரைப்பின் சென்று, தன் பாவத்திற்காக மனம் வருந்தி முதல் திருப்பலியில் முழுமையாக பங்கேற்காவிட்டாலும், அடுத்த திருப்பலிக்கு தன்னை தயாரித்து, தன்னையே பரிகார பலியாக்கிய புனித ராயப்பரைப் போலவாவது மாற வேண்டாமா?

முதல் திவ்ய திருப்பலியில் உண்மையான உணர்வோடும், பக்தியோடும், தகுதியோடும், பங்கேற்ற நம் தேவ அன்னை போலும், புனித அருளப்பர் போலும், குறைந்தபட்சம், “நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று கூறி கடைசியிலாவது மனம் மாறி தப்பித்துக்கொண்ட நல்ல கள்வன் மாதிரியாவது பங்கேற்க வேண்டும்!

திவ்ய திருப்பலி கொண்டாட்டம் அல்ல... ஒரு புனித மரணத்தை நினைவு கூறி நம் பாவத்தைப்போக்கி ஆண்டவரை உட்கொண்டு ஆண்டவர் இயேசுவாக வாழ அழைக்கப்படும் கல்வாரிப்பலி கொண்டாட்டம் கிடையாது... அது ஒரு அனுபவம்!

அன்று எம்மாவூஸ் சீடர்கள் கண்ட அனுபவம்! ஒரு பக்தியான, தூய்மையான வழிபாடு!

ஆண்டவர் இயேசுவின் பாடுகளை தியானித்து நம்மை மனம் மாற்ற உதவவும், நமக்கு தேவையான, ஆன்மீக, ஞான, சரீர நன்மைகளைப் பெற்றுக்கொள்ள உதவும் தெய்வீக திருவழிபாடு, திருவருட்சாதனம், ஆன்மீக அருட்கருவி, நமக்கு மோட்சத்தில் கூட கிடைக்காத பேரின்ப பாக்கியம்!

அதுபோல ஆடம்பர திருப்பலியும் இருக்க முடியாது… திருவிழாக்காலங்களில் பலிபீடம் மட்டும் பூக்களால் அலங்கரித்து ஆடம்பரமாய் காட்சி அளித்தால் பரவாயில்லை... ஆனால் அதில் பங்கேற்கும் அனைவரும் சாதாரன நாட்களை விட அதிக தகுதியோடு பங்கேற்றால் தான் நாம் யாருக்கு திருவிழா எடுக்கிறோமோ அந்த புனிதரின் பரிந்துரையில் நாம் கேட்கும் மன்றாட்டுகள் கேட்கப்படும்... நாம் ஆன்ம சரீர நன்மைகளைப் பெறுவோம்…

அதை விடுத்து, "நான் அதைச் செய்கிறேன்; இதைச் செய்கிறேன் என்று, கும்ப ஆரத்தி.. வரவேற்பு நடனம்.. திருப்பலி முடியும் முன் பொன்னாடைப் போர்த்துகிறேன்" என்று போனால் வரங்களுக்கு பதில் சாபமே நமக்கு கிடைக்கும்!

தெய்வீகத் திருப்பலி கொண்டாட்டம் அல்ல; அது ஒரு தெய்வீக அனுபவம்!

இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!

Thursday, March 8, 2018

திருப்பலி ஒழுங்குமுறைகள்


அன்பு கத்தோலிக்க நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்:

திருப்பலி நூல் மாற்றத்தை தொடர்ந்து திருப்பலியில் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குமுறைகளும் தவிர்க்க வேண்டிய செயல்களும் என திரு அவையின் ஒப்புதலுடன் இந்திய ஆயர் பேரவையும், தமிழக ஆயர் பேரவையும் நமக்கு கொடுத்துள்ளார்கள்.
இந்த ஒழுங்கு முறைகளை கடை பிடிக்கவில்லையெனில் அத்திருப்பலி செல்லத்தக்கது ஆகாது. ஆதாவது பலனளிக்காத திருப்பலியாகும். 
1. பலிபீடம் - கல்வாரி பலியை நம் கண் முன் கொண்டுவந்து திருப்பணியாளருடன் இணைந்து நாமும் இயேசுவின் உன்னத பரிசுத்த இரத்தப்பலியை மீண்டும் மீண்டும் இப்பலிபீடத்தில் இருந்து சம்மனசுகள், இறைவனின் தூதர்கள், அனைத்து புனிதர்கள் (மாதா உள்பட) புடைசூழ தந்தையாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம். 
எனவே 
 🎺 பலிபீடத்தில் பூக்களோ வேறு எந்த பொருளும் இடம் பெறக்கூடாது. 
🎷 இயற்கையான பூக்களை தான் பீடத்துக்கு பக்கவாட்டில் வைக்க வேண்டும். அதுவும் அளவோடு தான் இருக்கவேண்டும்.
🎷 சேலைகளால் அலங்காரப்படுத்துதல் தவிர்க்க வேண்டும். பீடத்துக்கு முன்பு எந்தவோரு சுருபங்களையும் வைக்க கூடாது.
🎷 பீட அலங்காரம் பீடத்தின் மாண்பை குறைப்பதாக இருக்க கூடாது.
 🎷 திருப்பலியின் தொடக்கச் சடங்குகளும், இறுதிச் சடங்குகளும் திருப்பணியாளரின் இருக்கையில் இருந்தோ அல்லது அதற்கு என்று ஏற்படுத்தப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து தான் நடத்தப்படவேண்டும்.  
🎷 முதல் வாசகம் முதல் விசுவாசிகள் மான்றாட்டுகள் வரை (நற்செய்தி வாசகம், மறையுறை உள்பட) வாசக மேடையில் இருந்தே நடத்தப்பட வேண்டும். 
🎷 காணிக்கை முதல் திருவிருந்து இறுதி மன்றாட்டு வரை பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். 
🎷 பலிபீட முற்றத்தில் (Alter) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணியாளர்கள் பீடச்சிறார்கள், திருத்தொண்டர், உபதேசியார் தவிர மற்றவர்களின் இருப்பை தவிர்த்தல் நலம். சிறு குழந்தைகள் உட்பட மற்றவர்கள் பலிபீடத்துக்கு முன்பு தான் இருக்க வேண்டும். ஒளி - ஒலி அமைப்புகள் Alter ல் இருந்தால் வேறு இடத்துக்கு மாற்றப்படவேண்டும். அந்த காலத்தில் இங்கு தடுப்புகள் இருக்கும். பாடுபட்ட சிலுவை மற்றும் நற்கருணை பேழை மட்டுமே (Projector screen உட்பட  இருக்க கூடாது) இருக்க வேண்டும்.
🎷 இறைமக்களின் கவனம் பலிபீடத்தின் மீதும் பலி ஒப்புக் கொடுக்கும் திருப்பணியாளர் மீதும் மட்டுமே இருக்கவேண்டும். 
🎷 பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணியாளர் முழு மனதுடன் இறைமகன் இயேசுவுடன் ஒன்றித்து இறைமக்களுடன் இணைந்து இயேசுவின் இரத்தப் பலியை ஒப்புக் கொடுக்க வேண்டும். திருப்பாடல் குழுவினரையோ சிறு குழந்தைகள் / இறைமக்களையோ ஒழுங்குபடுத்தவோ / வழி நடத்தவோ முயற்சித்தல் கூடாது. திருபாடல் குழுவினரை வழி நடத்த விரும்பினால் அக்குழுவினருடன் இணைந்து அதற்குறிய இடத்தில் இருந்து முயற்சிக்கலாம். அதைவிடுத்து இறைமக்களுக்கு இடறலாக இருக்ககூடாது. 
🎷 திருப்பலி நூலில் உள்ள வார்த்தைகளை மட்டுமே திருப்பணியாளர் மற்றும் இறைமக்கள் பயன்படுத்த வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ கூடாது. 
🎷 திருப்பலி எந்தவோரு காரணத்துக்கும் இடையில் நிறுத்தப்படக்கூடாது. தொடக்கச் சடங்குகள் தொடங்கி பாவமன்னிப்பு மன்றாட்டு, இறைவாக்கு பகுதி, காணிக்கை மன்றாட்டு, நற்கருணை மன்றாட்டு,  திருவிருந்து பகுதி, நிறைவு பகுதி என தொடர்ந்து எந்த ஒரு தடங்கலும் இன்றி திருப்பலி அனைவரும் இணைந்து ஒப்புக் கொடுக்க வேண்டும்.
🎷 திருப்பலியின் நடுவில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படுதல் கூடாது.  
🎷 திருப்பலியின் நடுவில் எந்த ஒரு ஒலி-ஒளி காட்சிகள் இடம்பெறுவது கூடவே கூடாது.
🎷 திருப்பணியாளர்கள் தங்களுக்குள்ளேயோ அல்லது மற்றவர்களுடனோ பலிபீடத்தில் ஆலோசித்தல் / பேசிக் கொண்டு இருப்பது கூடவே கூடாது. தகுந்த முன் தாயரிப்பை திருப்பலிக்கு முன்பே செய்வது நலம்.
2. வருகைபவணி: 
🎷 ஆலய முற்றத்தில் இருந்தோ அல்லது வேறு இடத்திலிருந்தோ இறைமக்களும் திருப்பணியாளரும் பவணியாக வரலாம். 
🎷 பவணியின் இறுதியில் இறைமக்கள், திருப்பணியாளர் (திருவிவிலியம் உட்பட) அனைவருக்கும் சேர்த்து அஞ்சலி ஒரே முறை தான் எடுக்கப்பட வேண்டும். அஞ்சலி எடுக்கும் பெண்கள் கலச்சார உடையில் தலைக்கு முக்காடிட்டு இருப்பது ஆவசியம். 
🎷 திருவிவிலிய பவணியோ அல்லது திருவிவிலியத்திற்கு அஞ்சலியோ தனியாக செய்தல் கூடாது.

3. காணிக்கை பவணி:
🎷 காணிக்கையாக கொடுக்கப்படும் பொருள்கள் திருப்பலியில், ஆலயத்தில் பயன்படுத்தக் கூடியதாகவோ அல்லது எழைகளுக்கு உதவக்கூடியதாகவோ இருக்க வேண்டும்.
🎷 அடையாளக் காணிக்கை கூடாது. அதுவும் விசுவாசிகள் மன்றாட்டுடன் சேர்த்து அடையாள காணிக்கை கொடுப்பதும் தவறு. 
🎷 காணிக்கை எழைகளுக்கு உதவக்கூடியப் பொருள்களாக இருக்கும் பட்சத்தில் எழைகளுகளுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட வேண்டும். வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவது கூடாது. அல்லது வீண் செய்யப்படக்கூடாது.
4. இறைவாக்கு பகுதி: 
🎷 முதல் வாசகம் முதல் விசுவாசிகள் மன்றாட்டு முடிய வாசக மேடையில் இருந்து மட்டுமே நடக்கவேண்டும்.
🎷 அனைத்து வாசகங்களும் வாசக நூலில் இருந்து மட்டுமே வாசிக்கப்படவேண்டும். முதல் வாசகத்திற்கு பின்பு வரக்கூடிய பதிலுரைப்பாடலும் (தியானப் பாடல் கண்டிப்பாக கூடாது) இரண்டாம் வாசகத்திற்கு பின்பு வரக்கூடிய அல்லேலூயா பாடலும் வாசக நூலில் உள்ளபடியே பாடவோ / வாசிக்கவோ வேண்டும்.

5. திரு இசை:
🎷 அனைவரும் ஒருமித்து ஒன்றிப்புடன் திருப்பலி ஒப்புக் கொடுக்க திரு இசை பாடல் உதவியாக இருக்க வேண்டும். தேவையற்ற அதிகப்படியான சத்தம் தவிர்க்கப்பட வேண்டும். 
🎷 ஆயர்ப்பேரவையினால் அனுமதிக்கப்பட்ட பாடல்களை மட்டுமே பாடவேண்டும். 
🎷 பதிவு செய்யப்பட்ட பாடல்களை (Recorded songs) இசைதட்டுகள் (CDs) / விரலி (PEN DRIVE) மூலம் இசைக்கக் கூடாது. 
🎷 புதிய பாடல் / தெரியாத பாடலாக இருப்பின் நன்கு பயிற்சி பெற்ற பின்பே பாடவேண்டும். இறைமக்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுப்பது வரவேற்கத்தக்கது.
🎷 பாடல் குழுவில் உள்ளவர்களோ அல்லது திருப்பணியாளரோ தங்களது புலமையை காட்டும் விதமாக மிக சத்தமாக தனியாக குழுவினருடன் / இசையுடன் ஒட்டாமல் பாடுதல் கூடாது. 
🎷 திருப்பணியாளர் பலிபீடத்தில் இருந்தவாறு பாடல் குழுவினரை வழிநடத்தும் விதமாக பாடுதல் / சைகை செய்தல் கூடாது. 

6. காணிக்கை மற்றும் நற்கருணை மன்றாட்டு:
🎷 திருப்பலி நூலில் உள்ளபடியே வாசிக்கப்படவோ / பாடவோ வேண்டும். ஒரு வார்த்தை கூட கூட்டவோ / குறைக்கவோ கூடாது. 
🎷 திருப்பலி கருத்துகள் கூட வாசிக்கக் கூடாது. திருப்பலி கருத்துகள் வருகைப் பாடலுக்கு பின்பு தந்தை மகன் என்ற தொடக்க நிகழ்வுக்கு முன்பு  உள்ள இடைப்பட்ட நேரத்தில் வாசிக்கப்படவேண்டும். 
🎷 நற்கருணை எழுந்தேற்றத்தின் போதே பீடத்திற்கு முன்பு மட்டுமே அஞ்சலி எடுக்கப்பட வேண்டும். 
🎷 அஞ்சலிக்கு என்று தனியாக பாடல் பாடுவது கூடாது. இறைமக்கள் "ஆமென்" என்று சொன்னவுடன் நற்கருணை மன்றாட்டு பகுதி முடிவடைந்து விடுகிறது. எனவே திருப்பணியாளர் "இவரோடு இவரில்" என்று தொடங்கியதில் இருந்து இறைமக்கள் "ஆமென்" என்று சொல்லி முடிப்பதற்குள் அஞ்சலி எடுக்கப்படவேண்டும்.
🎷 அஞ்சலி எடுக்கும் பெண்கள் கலச்சார முறைப்படியான உடையில் இருப்பதுடன் முறைப்படி தலைக்கு முக்காடுடன் மண்டியிட்டவாறு அஞ்சலி எடுக்க வேண்டும். 
🎷 அஞ்சலி எடுக்கும் போது பலிபீடத்தையோ திருப்பணியாளரையோ மறைப்பதாக இருக்க கூடாது.

7.  திருவிருந்து பகுதி:
🎷 கர்த்தர் கற்பித்த செபத்தில் இருந்து திருவிருந்துக்கு பின்புள்ள திருவிருந்து இறுதி மன்றாட்டு வரையுள்ள பகுதியே திருவிருந்து. 
🎷 நற்கருணை வாங்க வரும்போது மீதியடி (செருப்பு) இல்லாமல் வருவது சாலச்சிறந்தது. பெண்கள் தலைக்கு முக்காடிட்டு வருதல் நலம். ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் மற்றவர் கவனம் சிதறாத வண்ணமும், மனம் தடுமறாத வண்ணமும் உடை உடுத்தவேண்டும்.
🎷 திவ்விய நற்கருணையை வரிசையில் வந்தோ/ மண்டியிட்டவாறோ தலைகுணிந்து வணங்கி நாவிலோ அல்லது கையிலோ பய பக்தியுடன் தகுந்த முன் தாயரிப்புக்கு பின்பே வாங்கவேண்டும். (நாவில் வாங்குவதே காலங்காலமாக பழக்கத்தில் உள்ளது. சிறந்ததும் கூட)
🎷 கையில் வாங்குவோர் அதே இடத்திலேயே திருப்பணியாளர் முன்பே உட்கொள்ள வேண்டும். நற்கருணையை கையில் வாங்கி திரும்பி நடந்துக் கொண்டோ / இடத்திற்கு எடுத்துச் சென்றோ உட் கொள்ளுதல் மிகப் பெரிய தவறு ஆகும்.
🎷 திருப்பலி ஒப்புக் கொடுக்கும் திருப்பணியாளர்களை தவிர மற்ற குருவானவர், அருட்சகோதரிகள் உட்பட திருத்தொண்டர், நற்கருணை பணியாளர் மற்றும் இறைமக்கள் என யாரும் நற்கருணை பாத்திரத்தில் இருந்து நேரிடையாக நற்கருணையை எடுத்து உட்கொள்ளக் கூடாது.
🎷 திருவிருந்து முடிந்த பின்பு சிறிது நேரம் அமைதியுடன் செபித்த பின் இறுதி நன்றி மன்றாட்டு திருப்பணியாளரால் செபிக்க வேண்டும். 
🎷 திருவிருந்து முடிந்தவுடன் இறுதி மன்றாட்டுக்கு முன்பு அறிவிப்பு கூடவே கூடாது. இந்த நேரம் நற்கருணை நாதருக்கு நன்றி சொல்லவே.
🎷 இறுதி மன்றாட்டு முடிந்தவுடன் ஒலை வாசித்தல், அன்பிய நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், அந்த வாரத்தில் வரும் புனிதர்களின் நினைவு நாள், ஆலய நிகழ்வுகள் போன்ற 5 நிமிடங்களுக்கு மிகாமல் உள்ள எழுதப்பட்ட சிறு அறிவிப்புகளை திருத்தொண்டரோ / உபதேசியரோ அல்லது பங்கு தந்தையோ அறிவிக்கலாம். (2005 ஆண்டு தமிழக ஆயர் பேரவை வெளியிட்ட திருவழிப்பாட்டு ஒழுங்குமுறைகள் என்ற அறிக்கையில் தெளிவாக இது வழியுறுத்தப்பட்டுள்ளது. இப்போதும் இதுவே நடைமுறையில் தொடர்கிறது.)
🎷 அறிவிப்புகள் அதிகமாக இருப்பின் அல்லது யாருக்காவது நன்றி / பாராட்டு தெரிவிப்பதாக இருப்பின் அல்லது பொன்னாடை போர்த்துவது அல்லது மற்ற எவ்வளவு பெரிய முக்கிய நிகழ்வாக இருப்பினும் கண்டிப்பாக திருப்பலி முடிந்தவுடன் ஆலய முற்றத்தில் அல்லது வேறு இடத்தில் நடத்த வேண்டும். திருப்பலி முடிந்த பின்பு கூட பலி பீடத்திலோ அல்லது பலி பீடத்துக்கு முன்போ நடத்த கூடாது. 

8. திருப்பலியின் இறுதி பகுதி:
🎷 திருப்பணியாளரின் இறுதி வாழ்த்துரைக்குப் பின்பு இறுதி ஆசியுரை மிக மிக முக்கியம். இறுதி ஆசியுரை இறை மகன் இயேசு கிறிஸ்துநாதரே திருப்பணியாளர் வழியாக வழங்குவதாகவே திரு அவை போதிப்பதால் இறைமக்கள் மற்ற திருப்பணியாளர்கள் உட்பட அனைவரும் சென்று வாருங்கள் என்று சொல்லும் வரை வெளியே செல்லக் கூடாது. 
🎷 திருப்பலி முடியும் முன்னரே வெளியேறுவது "இயேசுவின் இறுதி இரவு விருந்தில் இருந்து பாதியிலேயே யூதாஸ் ஸ்காரியத் வெளியேறியதற்கு" ஒப்பாகும். 
🎷 பாதியில் வெளியேறுவோர் யாராக இருந்தாலும், என்ன / எவ்வளவு பெரிய / முக்கிய காரணமாக இருந்தாலும் அவர் / அது யூதாஸ்க்கு ஒப்பாவர்.

சிந்தனைக்கு: 
🎤 மனித மீட்புக்கான இயேசுவின் மாக உன்னத பரிசுத்த ஈடு இணையற்ற இரத்த பலியாகிய திருப்பலியை இயேசுவின் வடிவமான திருப்பணியாளருடன் இணைந்து பலிபீடத்தில் ஒப்புக் கொடுக்கும் நாம், இயேசுவின் கல்வாரி பலியில் இயேசுவுடன் கூடவே பங்கு பெற்ற பின்வரும் இவர்களில் நமது பங்கு யாரை ஒத்து இருக்கிறது என சிந்திக்க முன்வருவோமா:
🔔   இயேசுவின் துயரத்தில் பங்கு பெற்ற தாய் மரியாளா?
🔔இயேசுவின் திருமுகத்தை துடைத்து ஆறுதல் கொடுத்த வெரோணிக்காளா?
🔔   இயேசுவின் சிலுவையை சுமந்த சீரேனே ஊரானாகிய சீமோனா?
🔔   இயேசுவை சந்தித்து இயேசுவுக்காக அழத எருசலேம் நகர பெண்களா?
🔔   இயேசுவுடன் கூட சிலுவையில் தொங்கிய நல்ல கள்வனா
🔔 இயேசுவே "அம்மா இதோ! உம்மகன்" என்று குறிப்பிட்ட இயேசுவின் அன்பு சீடரா?
🔔இயேசுவின் சிலுவைருகில் நின்று கொண்டிருந்த அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாவா? மதலேன் மரியாளா?
🔔 இயேசுவின் உயிரற்ற உடலை மடியில் சுமந்து மிகுந்த வியகுலமடைந்த வியகுல மாதாவா?
🔔 இயேசுவின் உடலை துணிவுடன் அடக்கம் செய்த அரிமத்தியாவூர் சூசையா?
🔔   வெள்ளைப் போளமும் அகில் தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டு வந்து இயேசுவின் சடலத்தை யூதரின் அடக்க முறைப்படி பரிமளப்பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்ட அரிமத்தியாவூர் சூசைக்கு உதவி செய்த நிக்கொதேமுவா?
🔔 "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்று உண்மை சாட்சியம் அளித்த நூற்றுவர் தலைவனா?
அல்லது
🔔 "ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்" என்ற பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்து பின்பு மனம் வெதும்பி அழுத பேதுருவா?
🔔 கெத்சமணி தோட்டத்தில் இயேசு பிடிபட்டவுடன் அவரை விட்டு ஓடிய சீடர்களா?
அல்லது
🔔 இயேசுவிடம் குற்றம் ஒன்றும் இல்லை என தெரிந்தும் தலைமை குருக்களின் வற்புறுத்தலுக்கு பயந்து அநியாய தீர்ப்பளித்த பிலாத்துவா?
🔔 இயேசு அருஞ்செயல் ஏதாவது செய்யக் காணலாம் என காத்திருந்து அவரை பார்த்து மகிழ்ச்சியுற்று பல கேள்விகளை கேட்டும், தலைமை குருக்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து அவரை அவமானப்படுத்தி எள்ளி நகையாடிய ஏரோதுவா?
அல்லது
🔔 இயேசுவுடனே உண்டு குடித்து இருந்து, அவரது இறுதி உணவின் போது பாதியிலேயே வெளியேறி, இயேசுவை "ரபி" என்று நண்பனாக முத்தமிட்டு காட்டி கொடுத்த யூதாஸ் ஸ்காரியத்தா?
அல்லது
🔔 "உன்னை அடித்தவன் யாரென்று தீர்க்கதரிசனமாகச் சொல்" என பழித்து பேசி அடித்து ஏளனம் செய்த காவலர்களா?
🔔 இயேசுவிடம் குற்றம் ஏதாவது கண்டுபிடிக்கவும் பொய் குற்றம் சாட்டிய தலைமைக் குருக்களா? மறைநூல் அறிஞர்களா? மூப்பர் சபையினரா?
🔔 இயேசுவுக்கு ஒசான்னா என்று புகழ் பாடி, பின்பு "இவரை கொல்லும்! கொல்லும்" என்று இயேசுவுக்கு எதிராக கூச்சலிட்ட மக்கள் கூட்டமா?
🔔 இயேசுவுக்கு மூள்முடி சூட்டி சாட்டையால் அடித்த படைவீரர்களா?
🔔 இயேசு சிலுவை சுமந்து சென்ற போது அவரை அடித்து துன்புறுத்திய குதிரை படைவீரர்களா?
🔔 இயேசுவின் உடையை உரித்து அதன் மீது சீட்டு போட்டு பிரித்துக்கொண்ட வீரர்களா?
🔔 இயேசுவை சிலுவையில் ஆணிகளால் துளைத்த வீரர்களா?
🔔 "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று இயேசுவை பழித்த சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவனா?
🔔 "மற்றவர்களை காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப் பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக் கொள்ளட்டும்!" என்று ஏளனம்  செய்த வழிப் போக்கர்களா?
🔔 இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்ற போது கடற்காளானை காடியில் தோய்த்து, ஈசோப்பில் பொருத்தி அவரது வாயில் வைத்த படை வீரனா?
🔔 இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்திய படை வீரனா?

🎄🎄🎄 இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று தன்னை பலியாக்கியவர்களை மன்னித்தார். 
🎄🎄🎄🎄 திவ்விய திருப்பலியை நமது குற்ற செய்கையால் தெரிந்தே செல்லாததாக செய்யும் போது அதற்கு மன்னிப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொண்டு இயேசுவின் இரத்த பலியில் பக்தி சிரத்தையுடன் தகுந்த முன் தாயரிப்புடன் பங்கேற்க முயற்சி செய்வோம்.
🎄🎄🎄🎄🎄முழுமையான செல்லத்தகுந்த பலனுள்ள திவ்விய திருப்பலியில் பங்கேற்க நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. திருஅவை இயேசுவின் இரத்த பலியான திருப்பலியில் பங்கேற்க முழு உரிமையும் அளித்து இருக்கிறது. இந்த உரிமையில் ஏதேனும் குறைவுபடுமேயானால் திருஅவையிடம் முறையிட உரிமையும் பொறுப்பும் உள்ளது.