அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 15 † ✠ திருவிருந்துச் சடங்கு ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 15 †

✠ திருவிருந்துச் சடங்கு ✠

5ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நற்கருணை மன்றாட்டைத் தொடர்ந்து, நற்கருணை விருந்து இடம் பெற்றது. 'டிடாக்கே" என்ற ஆவணத்திலிருந்து இது தெளிவாகின்றது. திருவிருந்துச் சடங்கில் இருக்கும் பல்வேறு கூறுகள் வெவ்வேறு காலங்களில் சேர்க்கப்பட்டவையாக உள்ளன. பல்வேறு காலங்களில் இக்கூறுகளின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஈற்றில் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினூடாக இக்கூறுகள் ஓர் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன. இன்று உரோமைத் திருப்பலியில் நற்கருணை திருவிருந்து சடங்கில் பின்வரும் கூறுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1. இயேசு கற்பித்த செபம்,
2. அமைதிக்கான சடங்கு
3. அப்பத்தை பிட்குதல்
4. சிறுதுண்டு திரு அப்பம் இரத்தத்தோடு கலத்தல்
5. உலகின் பாவம் போக்கும் செம்மறி
6. குருவானவர் தம்மை ஆயத்தம் செய்யும் தனிப்பட்ட செபம்,
7. திருவிருந்துக்கு அழைப்பு, திருவிருந்துப் பல்லவி அல்லது பாடல்,
8. நன்றி மன்றாட்டு

✠ இயேசு கற்பித்த செபம் ✠

திருப்பலியில் வசீகரத்தின் பின் செபம் சொல்வது மிகவும் பழமையான மரபாகும். 4 நூற்றாண்டு அளவில் இது நடைமுறையில் இருந்துள்ளது. நற்கருணை மன்றாட்டுக்குப் பிறகும், திருவிருந்தில் பங்கேற்கும் முன்னும் இச்செபம் சொல்லப்பட்டது.

ஏன் இவ்விடத்தில் இச்செபம் சொல்லப்பட்டது?

இச்செபத்தின் முதல் பகுதி இறைவனை புகழ்வதாகும், ஆகவே நற்கருணை மன்றாட்டின் ஓர் தொடர் போன்று உள்ளது. மேலும் இரண்டாம் பகுதி அன்றாட உணவிற்காக, பாவ மன்னிப்புக்காக செபிப்பது திருவிருந்து சடங்கோடு இணைக்கின்றது. இயேசு கற்பித்த செபம் நற்செய்தியாளர்கள் மத்தேயு 6: 9- 13, லூக்கா 11:2-4 ஆகியோரால் தரப்பட்டுள்ளன. இருப்பினும் மத்தேயு நற்செய்தியில் உள்ள செபமே திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது.

ஆண்டவரே தீமை... (THE EMOLISM) இயேசு கற்பித்த செபத்தின் தொடர்ச்சியாக 'ஆண்டவரே தீமைகள்..." என்ற செபம் இடம் பெறுகிறது. இச்செபத்திற்கு கிரேக்க மொழியை தழுவிய ஒரு சொல் பாவிக்கப்படுகின்றது. அது “EMOLISM” என்றழைக்கப்படுகின்றது. இதன் பொருள் 'இடைச் செருகல்" என்பதாகும். இயேசு கற்பித்த செபத்திலே 'எங்களை தீமைகளில் இருந்து பாதுகாத்தருளும்" என்று செபித்து முடிக்க, அதன் தொடர்ச்சியாக அனைத்து தீமைகளிலிருந்தும் எம்மை பாதுகாக்க, அதாவது குழப்பங்கள், பாவம் போன்றவற்றிலிருந்து சகலவிதமான அங்கலாய்ப்புக்களில் இருந்து பாதுக்க வேண்டுவதோடு, நீதி நிறைந்த அமைதி குடி கொள்ள மன்றாடுகின்றோம்.

உலகில் அமைதி வேண்டுமெனில் தனிமனித வாழ்வில் அமைதி தேவை என்பதை மறத்தலாகாது. ஈற்றிலே நாம் இறையேசுவின் மீள் வருகைக்காக மகிழ்வோடு கூடிய எதிர்நோக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று குருவானவர் செபிக்க, 'ஏனெனில், அரசம், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே" என்று இறைமக்கள் சமூகம் ஆர்ப்பரித்து பதில் சொல்லும்.

✠ அமைதிக்கான செபம் ✠

திருவிருந்தில் பங்கேற்குமுன் சமாதான உறவுப் பரிமாற்றம் அவசியம். இச்செபம் கிறிஸ்து தன்னுடைய
சீடர்களுக்கு கொடுத்த வாக்குறுதியோடு ஆரம்பாமாகிறது. 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்".. (யோ 14: 27) எபிரேய மொழியில் அமைதிக்கு 'ஷாலோம்" என்பர். இதன் பொருள் 'நலமாக இருத்தல்" அதாவது இறைவனோடு, அயலாரோடு, இயற்கையோடு, தன்னோடு, நலமான உறவு இருப்பது அவசியம் அமைதியோடு வாழ்வதற்கு. இத்தகைய அமைதி இயேசுவின் பாஸ்கா மறைபொருளினால் நமக்கு கிடைத்த கொடை.

சமாதான வாழ்த்து மற்றும் பரிமாற்றம் இச்செபத்தைத் தொடர்ந்து, உறவின் வாழ்த்தை அறிவித்து, அமைதியை பகிர்ந்து கொள்ள இறைமக்களை குரு அழைக்கின்றார். ஏனெனில் தம் சகோதர, சகோதரிகளோடு சமாதானம் இன்றி, நற்கருணை விருந்தில் பங்கேற்பது பொருள் அற்றது. (மத் 5:24) ஆகவே மக்கள் உண்மையாகவே மற்றவரோடு சமாதான உறவை பகிர வேண்டும். ஒருவரை ஒருவர். விசேஷமாக எனக்கு தீங்கு செய்தவரை நான் மன்னிக்க வேண்டும். கடமைக்காக, கட்டாயத்திற்காக, வாடிக்கையாக இச் சடங்கில் பங்கேற்கக்கூடாது. ஒருவர் ஒருவருடைய முகத்தைப்பார்த்து, புன்முறுவலோடும், மகிழ்வோடும், சமாதானத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் இரு பக்கமும் யாருமில்லாத போதும் கும்பிடுவதும், தலையாட்டி போன்று இருபக்கமும் தலையாட்டுவதும் பொருளற்றது. எனவே தவிர்க்கப்படவேண்டியது.

No comments:

Post a Comment