அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 11 † ✠ இறைவார்த்தை வழிபாடு - 3 ✠


† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 11 †

✠ இறைவார்த்தை வழிபாடு - 3 ✠


இறைவாக்கு வழிபாட்டில் இறைமக்களுடைய பணி என்ன என்பதை ஆராய முற்படும் பொழுது, பொதுப் போதனை பின்வரும் படிப்பினைகளை முன்வைக்கிறது. கிறிஸ்துவின் வாக்கு இறைமக்களை ஒன்றிணைக்கின்றது, வளர்க்கின்றது, ஊட்டம் பெறச் செய்கின்றது. இறைவாக்கை இறைமக்கள் ஏற்றுத் தம் வாழ்வோடு இணைத்து நிறைவாக்க, உயிருள்ள விசுவாசம் தேவை. அறிவிக்கப்படும் இறைவாக்கை கேட்பதால் இந்த விசுவாசம் இடையறாது ஊக்கம் பெறுகிறது.

திருநூல் சிறப்பாக திருவழிபாட்டில் அது அறிவிக்கப்படும் போது, வாழ்வுக்கும் ஆற்றலுக்கும் ஊற்றாயிருக்கின்றது. 'நற்செய்தி விசுவசிப்போர் அனைவர்க்கும் மீட்பளிக்கும் வல்லமையாய் உள்ளது" (உரோ1:16). இறைவாக்கைக்கேட்டு ஆழ்ந்து தியானிப்பதால் இறைமக்கள் நிறைவான விசுவாசம், நம்பிக்கை, மற்றும் அன்போடு தங்கள் பதிலை மன்றாட்டாலும். தற்கையளிப்பினாலும் செயல்முறையில் பதிலுரைக்க ஆற்றல் பெறுகின்றனர். அது திருப்பலியோடு நின்று விடாமல், தங்கள் கிறிஸ்தவ வாழ்வு அனைத்துமே இத்தகைய பதிலுரைகளாக மாறிட வழி பிறக்கும்.

அடுத்தப்படியாக, திருப்பலியில் இறைவார்தை அமைக்கப்பட்டிருக்கின்ற விதத்தை சற்று அலசுவோம்.

மிகவும் சுருக்கமாகச் சொன்னால், 'இறைமக்கள் தங்கள் விசுவாசத்தையும். மீட்பின் வரலாற்றையும் மேன்மேலும் ஆழ்ந்து அறிய வேண்டும" என்ற நோக்குடனேயே இது அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் வாசக நூல் மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகளையும், சொற்றொடர்களையும் விவிலியத்திலிருந்து எடுத்து, பொருத்தமாக அளிக்கிறது. இவ்வாறு திருப்பலியில் சிறிது சிறிதாக மீட்பின் வரலாறு இறைவாக்கு வழியாக நினைகூறப்படுவதனால், நற்கருணையில் பாஸ்கா மறைபொருள். மறுபிரசன்னமாகி அது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு என்பதை தெளிவுபடுத்துகிறது.

வாசகங்களின் அமைப்பை நோக்குமிடத்து, ஞாயிற்றுக்கிழமைளுக்கும், பெருவிழாக்களுக்கும் முக்கியமான பாடல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓர் குறிக்கப்பட்ட காலத்திற்குள் இறைவாக்கின் மிகச் சிறந்த பகுதிகள் மக்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட ஏதுவாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பெருவிழா நாட்கள் மூன்று ஆண்டு கால வட்டத்திற்குள் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டுள்ளன. வார நாட்களுக்கான வாசகங்கள் கீழ்க்கண்டவாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஓவ்வொரு வாரநாள் திருப்பலியிலும் இரண்டு வாசகப்பகுதிகள் உள்ளன. ஆண்டின் பொதுக் காலத்திலுள்ள 34 வாரங்களில் வரும் வார நாட்களுக்கு நற்செய்தி ஒரே கால வட்டமாக அமைந்துள்ளன. இதில் முதலாவதாக மாற்கும் (வாரம் 1-9), பின்னர் மத்தேயுவும் (வாரம் 10-21), இறுதியாக லூக்காகவும் (வாரம் 23-34) வாசிக்கப்படுமாறு வாசகங்கள் அமைந்துள்ளன.

பொதுக்காலத்தின் வார நாள்களுக்கான வாசகத் தொகுப்பில் பழைய ஏற்பாட்டின் ஒரு சில தவிர எல்லாப் புத்தகங்களும் உட்பட்டிருக்கின்றன. மேலும் புதிய ஏற்பாட்டின் திருமுகம் ஒவ்வொன்றின் பொருள் விளங்குமாறு, ஏடுகளிலிருந்து வாசகங்கள் மிக விரிவாக எடுக்கப்பட்டுள்ளன. இத்தோடு திருவழிபாட்டின் வெவ்வேறு காலங்களுக்கேற்றவாறு திருவருகை, திருபிறப்பு, தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றில் அவ்வவ் மீட்பின் மறையுண்மைகளை தெளிவுபடுத்தும் விதங்களில் இறைவாக்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஈற்றிலே மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவாவது பயன்படும் என நம்புகின்றேன். அப்படி இல்லையெனில் மன்னிக்கவும்.

No comments:

Post a Comment