அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, April 5, 2018

† திருப்பலியின் உட்கூறுகள் - இறுதிப் பாகம் † ✠ முடிவுச் சடங்கு ✠



† திருப்பலியின் உட்கூறுகள் - இறுதிப் பாகம் †

✠ முடிவுச் சடங்கு ✠

அறிவித்தல்கள் வழமையாக பெரும்பாலான ஆலயங்களில் நற்கருணை விருந்தின் பின், அறிவித்தல்கள், திருமண அறிவித்தல்கள் இடம் பெறுவதை காண்கின்றோம். ஆனால் இவையெல்லாம் நன்றி மன்றாட்டுக்குப் பிறகு தான் வாசிக்கப்பட வேண்டும் என்பது திருச்சபையின் போதனையாக இருக்கின்றது. (எண் 123)

இறுதி ஆசீர்:

7ம் நுற்றாண்டு சவால்களில். இறைமக்களை ஆயர் ஆசீர்வதித்தார். 11ம் நூற்றாண்டின் பின் தான் இறைமக்கள் ஆசீர்வதிக்க குருக்கள் அனுமதிக்கப்பட்டனர். 2ம் வத்திக்கான் சங்கத்தின் விளைவால் புதிய திருப்பலி புத்தகத்தில் மூன்று வகையான ஆசீர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

(அ) சாதாரண ஆசீர் :-
இது தினமும் திருப்பலியில் பயன்படுத்தப்படும் ஆசீர் (எல்லா வல்ல இறைவன் பிதா....)

(ஆ) சிறப்பு ஆசீர் :-
இச்சிறப்பு ஆசீரில் பொதுவாக மூன்று ஆசியுரைகள் இருக்கும். இவ்வாசீர் வழங்கப்படும் போது, இறைமக்கள் யாவரும் சிரம் தாழ்த்தி வேண்டுவர். ஒவ்வொரு ஆசியுரைக்கு பிறகு மக்கள் 'ஆமென்" என்று பதில் கூறுவர். அதன் பிறகு குரு மக்களுக்கு ஆசீர் வழங்குவார்.

(இ) மக்கள் மீது மன்றாட்டு :-
மேலே கூறப்பட்ட சிறப்பு அசீருக்குப் பதிலாக குரு 'மக்கள் மீது மன்றாட்டு" எனப்படும் சிறப்பு ஆசீரை மக்கள் மீது கைகளை விரித்து செபிக்க, மக்கள் சிரம் தாழ்த்தி நின்றவர்களாய். செபத்தின் நிறைவில் 'ஆமென்" என்று பதிலளிக்க, குருவானவர் ஆசீர் வழங்குவார். இத்தகைய 'மக்கள் மீது மன்றாட்டுக்கள்" மொத்தம் 27 திருப்பலி புத்தகத்தில் உண்டு.

அனுப்பி வைத்தல்:

நிறைவாக, இறை ஆசீர் பெற்ற, இறைமக்கள் சமூகத்தை நோக்கி, குருவானவர் 'சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது" என்கின்றார். மக்களும் 'இறைவா உமக்கு நன்றி" என்று பதில் அளிக்கின்றார். திருப்பலி முடிந்து மக்கள் வீட்டிற்கும். பணி வாழ்விற்கும் திரும்பிச் செல்லும் போதும், திருப்பலியில் செவி கொடுக்கப்பட்ட இறைவார்த்தைகள் வாழப்பட வேண்டுமென்பதையும், பங்கேற்ற திருவிருந்தைப் போன்று நாமும் பிறர்க்காக வாழ பலியாக்கப்பட வேண்டுமென்பதையும் நினைவூட்டி
வழியனுப்பி வைக்கப்படுகின்றனர் 'வாழ்விருந்து மலர்வதே வழிபாடு. அவ்வழிபாட்டின் தொடர்ச்சியே வாழ்க்கை" என்பதை உணர்வோம்.

திருப்பலி மறைஉண்மை: முற்றும்

No comments:

Post a Comment