† திருப்பலியின் உட்கூறுகள் - பாகம் 16 †
✠ நற்கருணை விருந்து... (தொடர்ச்சி) ✠
அப்பம் பிட்குதல... (உலகின் பாவம்...)
சமாதானப் பகிர்வை தொடர்ந்து இடம் பெறுவது 'அப்பம் பிட்கும்" சடங்காகும். இது மிகவும் பழமையான சடங்காகும். மேலும் ஆதித்திருச்சபையிலே நாம் இன்று திருப்பலி என்று அழைப்பதை அவர்கள் 'அப்பம் பிட்குதல" என்றே அழைத்தனர். (தி.ப. நூல் 2:42, 46 ; 20:7, 1கொரி 10:16). அப்பம் ஏன் பிட்;க்கப்பட வேண்டும்? பகிர்ந்து கொடுப்பதற்கு என்பதே பதில். முன்னர் மக்கள் பெரிய அப்பங்களை கொண்டு வந்தனர். ஆகவே அவை பகிர்வதற்கு உடைக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் 'உலகின் பாவம் போக்கும்" என்ற செபம் சொல்லாப்படும், இச்செபம் கி.பி7ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செபத்தின் பின்னனி யோ 1:23 இல் திருமுழுக்கு யோவான் இயேசுவை உலகின் பாவம் போக்கும் செம்மறியாக சுட்டிக் காட்டுகின்றார். (1கொரி 5:7, 1பேதுரு 1: 18-19)
ஆனால் இன்று தனித்தனி அப்பங்கள் சிறு, சிறு துண்டுகளாக (வட்டம்) தயார் செய்யப்பட்டு திருப்பலியில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே குரு தமக்குரிய பெரிய அப்பத்தை மட்டும் உடைத்து, ஒரு சிறு துண்டை இரத்தத்தில் கலக்கின்றார். இது தொடக்க காலத்தில் இருந்தே வரும் "COMMINGLING” என்றழைக்கப்படும் மிகப்பழமையான பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் ஏனைய தலத் திருச்சபைக்குமிடையே உள்ள 'ஒன்றிப்பின் அடையாளம்" என்று சொல்லப்படுகின்றது. திருத்தந்தை அருகில் இருக்கும் பங்குகளுக்கு தனது திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பத்தில் இருந்து ஒரு சிறு துண்டை பகிர்வார். அவர்கள் (குரு) தங்களுடைய அடுத்த திருப்பலியில் இரத்தத்தில் இடுவார்கள்.
அவ்வாறே ஏனைய ஆயர்களும் தங்கள் குருக்களோடு பகிர்வார்கள். இது கிறிஸ்துவின் பலியின் ஒன்றிப்பினை குறித்துக் காட்டுகின்றது.
✠ நன்றி மன்றாட்டு ✠
நற்கருணை விருந்தை தொடர்ந்து இடம் பெறுவது நன்றி மன்றாட்டு. நற்கருணை விருந்தின் பொழுது பொருத்தமான பாடல் பாடப்படுகின்றது. நற்கருணை பெற்றவர்களும், பெறவிருப்பவர்களும் பாடலில் பங்கேற்க வேண்டும். நற்கருணை பெற்றவர்கள் ஆண்டவர்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வில் பெரும்பாலும் அமைதியாகி விடுவார்கள். அப்படியில்லாமல் மனதாலே ஆண்டவர்க்கு நன்றி சொன்ன வண்ணமே தொடர்ந்து பாடலில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. அனைவரும் நற்கருணை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு, புனித பாத்திரங்களை துப்பரவு செய்ததன் பிற்பாடு, குருவானவர் மன்றாடுவோமாக என்று அனைவரையும் செபிக்க அழைக்கின்றார். இதனை நன்றி மன்றாட்டு என்போம். குருவானவருடைய அழைப்பை தொடர்ந்து அனைவரும் சற்று நேரம் மௌனமாக ஆண்டவர்க்கு நன்றி கூறி செபிப்பார்.
அதனைத் தொடர்ந்து குருவானவர் தந்தையாம் கடவுளுக்கு நன்றி கூறிச் செபிப்பார். வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்காக, புத்துயிர் அளிக்கும்
கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தத்திற்காக நன்றி கூறுகின்றார். மீட்புக்காக நன்றி கூறுகின்றார். ஈற்றிலே கிறிஸ்தவ மதிப்பீடுகளை வாழ்வாக்க, கிறிஸ்தவ ஓழுக்கத்தில் வளர, அதனூடாக வானக விருந்தில் பங்கு பெற தேவையான அருளை வேண்டி மன்றாடுகின்றார். அனைவரும் 'ஆமென்" என்று பதில் அளிப்பார். இத்தோடு நற்கருணைச் சடங்கு நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருப்பலியின் நான்காம் பகுதியும், இறுதிப் பகுதியுமான 'முடிவுச் சடங்கு" இடம் பெறும்.
No comments:
Post a Comment