''இயேசு தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும்,
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (மத்தேயு 21:31)
-- கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்ள வந்தார் இயேசு. அந்த அன்பு ஒருசில மனிதரை மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மனிதரையும் அரவணைக்கின்ற பண்புடையது. சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், பாவிகள் எனக் கருதப்பட்டவர்கள் போன்ற மக்களும் கடவுளின் அன்புக்கு உரியவர்களே என இயேசு கற்பித்தார். இயேசு எந்த அதிகாரத்தோடு போதிக்கிறார் என்று கேள்வி கேட்டனர் யூத குருக்களும் மக்களின் மூப்பர்களும். அவர்கள் யூத சமய நெறிகளை அறிந்தவர்கள், யூத சட்டத்தைத் தெரிந்தவர்கள். ஆனால் இயேசுவின் வழியாகக் கடவுள் தங்களோடு பேசுகிறார் என அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வார்த்தைகளால் மட்டுமே கூறினால் போதாது, செயல்கள் வழியாக அதைக் காட்டவேண்டும். யூத சமயத் தலைவர்கள் சமய நெறிப்படி நடப்பதாகக் கூறிக்கொண்டார்கள்; ஆனால் உண்மையில் கடவுளின் விருப்பப்படி அவர்கள் நடக்கவில்லை. எனவே இயேசு அவர்களைப் பாhத்து: ''யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை'' என்று கூறினார் (மத் 21:32). ஆனால் மக்களால் பாவிகள் எனக் கருதப்பட்ட வரிதண்டுவோரும் விலைமகளிரும் திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தியைக் கேட்டு மனம் மாறினார்கள். இவர்களை இயேசு போற்றுகிறார்.
-- கடவுளுக்குப் பணிவதாகக் கூறிக்கொண்டு உண்மையில் அவ்வாறு நாம் பணிந்து நடக்காவிட்டால் என்ன பயன்? பாவம் நிறைந்த இவ்வுலகில் குற்றம் செய்யாத மனிதர் யாருமே இல்லை. ஆனால் தவறு செய்தவர்களும் திருந்த முடியும் என நம் கடவுள் நமக்காகக் காத்திருக்கின்றார். ஒருவேளை கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டிருந்தாலும் நாம் உண்மையாகவே மனம் மாறி, கடவுளிடம் திரும்பிச் செல்ல இயேசு நம்மை அழைக்கிறார். ஆக, பாவ வாழ்வைத் துறந்துவிட்டு, கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை நாம் தழுவ வேண்டும். அப்போது கடவுளுக்கு நாம் ஏற்புடையோர் ஆவோம்.
மன்றாட்டு
இறைவா, சொல்லாலும் செயலாலும் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (மத்தேயு 21:31)
-- கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்ள வந்தார் இயேசு. அந்த அன்பு ஒருசில மனிதரை மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மனிதரையும் அரவணைக்கின்ற பண்புடையது. சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், பாவிகள் எனக் கருதப்பட்டவர்கள் போன்ற மக்களும் கடவுளின் அன்புக்கு உரியவர்களே என இயேசு கற்பித்தார். இயேசு எந்த அதிகாரத்தோடு போதிக்கிறார் என்று கேள்வி கேட்டனர் யூத குருக்களும் மக்களின் மூப்பர்களும். அவர்கள் யூத சமய நெறிகளை அறிந்தவர்கள், யூத சட்டத்தைத் தெரிந்தவர்கள். ஆனால் இயேசுவின் வழியாகக் கடவுள் தங்களோடு பேசுகிறார் என அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வார்த்தைகளால் மட்டுமே கூறினால் போதாது, செயல்கள் வழியாக அதைக் காட்டவேண்டும். யூத சமயத் தலைவர்கள் சமய நெறிப்படி நடப்பதாகக் கூறிக்கொண்டார்கள்; ஆனால் உண்மையில் கடவுளின் விருப்பப்படி அவர்கள் நடக்கவில்லை. எனவே இயேசு அவர்களைப் பாhத்து: ''யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை'' என்று கூறினார் (மத் 21:32). ஆனால் மக்களால் பாவிகள் எனக் கருதப்பட்ட வரிதண்டுவோரும் விலைமகளிரும் திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தியைக் கேட்டு மனம் மாறினார்கள். இவர்களை இயேசு போற்றுகிறார்.
-- கடவுளுக்குப் பணிவதாகக் கூறிக்கொண்டு உண்மையில் அவ்வாறு நாம் பணிந்து நடக்காவிட்டால் என்ன பயன்? பாவம் நிறைந்த இவ்வுலகில் குற்றம் செய்யாத மனிதர் யாருமே இல்லை. ஆனால் தவறு செய்தவர்களும் திருந்த முடியும் என நம் கடவுள் நமக்காகக் காத்திருக்கின்றார். ஒருவேளை கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டிருந்தாலும் நாம் உண்மையாகவே மனம் மாறி, கடவுளிடம் திரும்பிச் செல்ல இயேசு நம்மை அழைக்கிறார். ஆக, பாவ வாழ்வைத் துறந்துவிட்டு, கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை நாம் தழுவ வேண்டும். அப்போது கடவுளுக்கு நாம் ஏற்புடையோர் ஆவோம்.
மன்றாட்டு
இறைவா, சொல்லாலும் செயலாலும் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
No comments:
Post a Comment