அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, October 5, 2017

கடவுளின் உண்மையான மகன்

கடவுளின் உண்மையான மகன்

யூதர்களில் அதிகார வர்க்கத்தினர் கடவுளுக்கு கீழ்ப்படிவதாக சொல்லிக்கொண்டனர். ஆனால், உண்மையில் கீழ்ப்படியவில்லை. பாவிகளும், வரிதண்டுகிறவர்களும் மனம்போன போக்கில் வாழ்ந்தனர். கடவுளைப்பற்றி கவலை கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இறுதியில் கடவுளிடம் திரும்பி, திருந்தி வந்தனர். இதுதான் இன்றைய நற்செய்தியின் சாராம்சம். இந்த நற்செய்தியில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய உண்மை, இரண்டு பேருமே பாராட்டப்படவில்லை. நடப்பது அப்படியே சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இரண்டுபேரில் யார் சிறந்தவர்? என்கிற கேள்வி இங்கே எழுப்பப்படவில்லை.
இரண்டு மகன்களுமே தந்தைக்கு திருப்தி தரவில்லை. இரண்டுபேருமே தந்தைக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஆனால், இரண்டாவது மகன் முதல் மகனைவிட பரவாயில்லை என்கிற தொனியில் நற்செய்தி தரப்படுகிறது. ஒரு தந்தையின் உண்மையான மகன் என்று சொல்லப்படுகிறவர், தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதை அப்படியே செய்துமுடிக்கிறவர் தான். அதாவது, தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கையளிப்பது. தனது விருப்பங்களை விடுத்து, தந்தையின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பது. இயேசு உண்மையான மகனுக்கு எடுத்துக்காட்டாகத்திகழ்கிறார்.
நாம் ஒவ்வொருவருமே கடவுளின் பிள்ளைகள். நான் எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன்? என்ற கேள்வியை நாம் நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிகிற உண்மையுள்ள மகனாக மாற, முயல்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment