வாக்குறுதிகள்
வாக்குறுதி என்பது நமது வாழ்வின் அங்கமாக இருக்கிறது. நாம் பல இடங்களில் வாக்குறுதி கொடுக்கிறோம். நமது வாழ்வின் தொடக்கத்திலிருந்து, இறுதிவரை வாக்குறுதி கொடுக்கிறோம். அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படுகின்றபோது நாம் இறைவனின் முன்னிலையில், நமது வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது புதுப்பிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகமானது, வெற்று வாக்குறுதிகளால் நமக்கு நன்மை ஒன்றும் கிட்டாது என்பதையும், வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறபோதுதான், அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
இன்றைக்கு வாக்குறுதி கலாச்சாரங்கள் மலிந்தும், நலிந்தும் விட்டன. ஏனென்றால், வாக்குறுதிகள் கவர்ச்சிப்பொருளாக மாறிவிட்டன. அரசியல் தளத்தில் எவ்வளவோ வாக்குறுதிகள் தரப்படுகிறது. அந்த வாக்குறுதிகள் நிச்சயமாக செயல்படுத்தப்பட மாட்டாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், நமது பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இதுவல்ல. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல், நாணிக்கோணி, மடிந்த வீரத்தலைமுறை நமது தலைமுறை. மீட்பின் வரலாற்றில், கடவுள் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருப்பதைப் பார்க்கிறோம். அதே பண்பாடு நமக்கும் இருக்க வேண்டும்.
கடவுள் முன்னிலையில் நாம் கொடுக்கிற வாக்குறுதிகளுக்காவது நாம் பிரமாணிக்கமாய் இருக்கிறோமா? வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற எண்ணம் நம்மிடையே இருக்கிறதா? வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் கண்ணும், கருத்துமாய் இருக்கிறோமா? சிந்திப்போம். செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
வாக்குறுதி என்பது நமது வாழ்வின் அங்கமாக இருக்கிறது. நாம் பல இடங்களில் வாக்குறுதி கொடுக்கிறோம். நமது வாழ்வின் தொடக்கத்திலிருந்து, இறுதிவரை வாக்குறுதி கொடுக்கிறோம். அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படுகின்றபோது நாம் இறைவனின் முன்னிலையில், நமது வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது புதுப்பிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகமானது, வெற்று வாக்குறுதிகளால் நமக்கு நன்மை ஒன்றும் கிட்டாது என்பதையும், வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறபோதுதான், அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
இன்றைக்கு வாக்குறுதி கலாச்சாரங்கள் மலிந்தும், நலிந்தும் விட்டன. ஏனென்றால், வாக்குறுதிகள் கவர்ச்சிப்பொருளாக மாறிவிட்டன. அரசியல் தளத்தில் எவ்வளவோ வாக்குறுதிகள் தரப்படுகிறது. அந்த வாக்குறுதிகள் நிச்சயமாக செயல்படுத்தப்பட மாட்டாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், நமது பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இதுவல்ல. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல், நாணிக்கோணி, மடிந்த வீரத்தலைமுறை நமது தலைமுறை. மீட்பின் வரலாற்றில், கடவுள் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருப்பதைப் பார்க்கிறோம். அதே பண்பாடு நமக்கும் இருக்க வேண்டும்.
கடவுள் முன்னிலையில் நாம் கொடுக்கிற வாக்குறுதிகளுக்காவது நாம் பிரமாணிக்கமாய் இருக்கிறோமா? வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற எண்ணம் நம்மிடையே இருக்கிறதா? வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் கண்ணும், கருத்துமாய் இருக்கிறோமா? சிந்திப்போம். செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
No comments:
Post a Comment