அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, October 5, 2017

”உம் பாதைகளை அறியச் செய்தருளும்” - திருப்பாடல் 25: 4 – 9

”உம் பாதைகளை அறியச் செய்தருளும்” - திருப்பாடல் 25: 4 – 9

கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற முழுமையான அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிற உணர்வுகளாக இந்த திருப்பாடல் அமைந்திருக்கிறது. கடவுளிடம் எதற்காக செபிக்க வேண்டும்? செபிப்பதற்கு காரணம் எதுவாக இருக்க வேண்டும்? என்பதற்கு இது விளக்கம் தருகிறது. அது மட்டுமல்ல,கடவுள் மீது ஆசிரியர் வைத்திருக்கிற முழுமையான நம்பிக்கையையும், கடவுளை நோக்கி தன்னுடைய உள்ளத்தை எழுப்புகிற பாங்கையும் இந்த திருப்பாடல் விரிவாக எடுத்துரைக்கிறது.
திருப்பாடல் ஆசிரியரைப் பொறுத்தவரையில், தன்னுடைய பாதையை தொடக்கத்தில் கடவுள் அமைத்த வழியில் ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், பிறகு அவர் தன்னுடைய பாதையை தானே அமைத்துக்கொண்டார். கடவுள் அமைத்துக் கொடுத்த பாதையில் நடக்கவில்லை. அதனால், அவர் பெருத்த துன்பங்களையும், பல இழப்புக்களையும் வாழ்வில் சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை அனுபவம் தந்த பாடம், கடவுளின் மேன்மையை, மகிமையை, அவரது வார்த்தையின்படி, நடக்கக்கூடிய பாங்கை, அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. எனவே, இறைவன் வகுத்த பாதையில் நடக்க இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது.
கடவுள் நாம் நேரிய வழியில் நடக்க வேண்டும் என்று, நமக்கான பாதையை உருவாக்கித் தந்திருக்கிறார். அந்த பாதையின் வழியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த சிந்தனையை வழங்கும் திருப்பாடல் ஆசிரியரின் வரிகளுக்கு நாம் செவிசாய்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

No comments:

Post a Comment