அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, December 21, 2018

ஆமென் என்ற வார்த்தையை சொல்லுவதில் கவனம் தேவை !!!

நாம் ஆமென் என்ற வார்த்தையை பொதுவாக ஜெபங்கள் முடியும் போது சொல்லுவோம். இப்போதெல்லாம் மறை செய்தியாளர்கள் தங்கள் செய்தி கொடுக்கும் போது இடை இடையே ஆமென் என்ற வார்த்தையை சொல்லுவார்கள். சில சபைகளில் இந்த ஆமென் என்ற வார்த்தையை  வெகு சரளமாக சொல்லுவார்கள் சில  வேளைகளில் எதற்கு ஆமென் என்று சொல்லுகின்றோம் என்று அறியாமலே சொல்லுவார்கள். ஆமென் என்ற வார்ததைக்கு அப்படியே ஆகட்டும் என்றே அர்த்தம்  ஆக இந்த வார்த்தைக்கு நாம் ஏன் அதிக கவனமாய் சொல்ல வேண்டும் ???
இந்த வார்த்தைக்கு நாம் வெகு கவனம் செலுத்த வேண்டிய காரணம். அது நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின்  பெயர் தான் என்றால் நீங்கள் எல்லாம் அசந்து போவீர்கள்.
“இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே" (தி. வெ. 3 : 14) இந்த இறை வார்த்தைகளில் நாம் காண்கின்றோம்  ஆமென் எனப்படுபவரும் என்று எழுது என்று யோவானுக்கு கடடளை ஈடுபவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான். அவரே தன் பெயரை இவ்வாறு வெளி விடுகின்றார்.  அதாவது விண்ணகத்தில் உள்ள கோடான கோடி வான தூதர்களும் மற்றும் உள்ள உயிர்களும் ஆண்டவரை ஆமென் என்றே அழைத்தன . கிறிஸ்து இம்மண்னுலகிற்கு வந்த பின் அவர் பெயர் இயேசு என்று வைக்கப் பட்டது. இயேசு அபிஷேகம் பண்ணப் படடவர் என்பதால் தான் கிறிஸ்து என்றும் அழைக்கப் படடார்.
ஆக விண்ணும் மண்ணும் தோன்றும் முன்பே, இயேசுவை வான தூதர்கள்  "" ஆமென் "" என்று தான் அழைத்தார்கள். தந்தையாம் கடவுள்  எதையாவது விரும்பி அல்லது எதையாவது படைக்க வேண்டும் என்று நினைத்து விரும்பினால்  இரண்டாம் ஆளாகிய இயேசு  தந்தையின் விருப்பம் அறிந்து ஆமென் என்று சொல்லுவார். இவர் ஆமென் என்று சொன்ன உடனே பரிசுத்த ஆவியானவர் தன்பெரும் வல்லமையோடு  தந்தை விரும்பிய காரியத்தை செய்து முடிப்பார்.  தந்தை விரும்பிய போதிலும் இயேசு ஆமென் என்று சொல்ல வில்லை என்றால் பரிசுத்த ஆவியானவர் செயல் பட மாட்டார். இதை வான தூதர்கள் கண்டு இவர் ஆமென் என்று சொல்ல வில்லை என்றால் எதுவுமே நடக்காது என்பதை அறிந்து இவர் எப்போது ஆமென் என்று சொல்லுவார் என்று காத்து இருப்பார்கள் . இயேசு ஆமென் என்று சொல்லிய உடனே விண்ணகமே பெரும் குரலெழுப்பி ஆர்ப்பரிக்கும்.
இதை தான் யோவான் தன் நற்செய்தியில் இவ்வாறு கூறுகின்றார்
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;
அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.✠  ( யோவான் 1 : 1 - 3 )
எனவே யோவான் தெளிவாக கூறுகின்றார் தொடக்கத்தில் வாக்கு இருந்தது  என்று அந்த வாக்கு அதாவது அந்த வார்த்தை  '''ஆமென்  "" என்பது தான். அந்த ஆமென் கடவுளாயும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின. உண்டான எதுவும் அவரால் அன்றி எதுவும்  உண்டாகவில்லை  என்பதில் நமக்கு தெளிவாகின்றது .
நாம் இது வரை ஆதியிலே வாக்கு இருந்தது என்று சொல்லு கின்றோம். வாக்கு என்பது வார்த்தை தான். அந்த வார்த்தை என்ன வென்று  யோவான் முதற்கொண்டு கூற துணிவு பெறவில்லை. ஏனென்றால் அது உன்னதமானது என்பதை அவர் உணர்ந்து இருந்தார்.
ஆண்டவராகிய இயேசு ஆமென் என்று சொல்லி தான் விண்ணுலக மகிமையை துறந்து மண்ணில் மனிதனாக பிறந்தார். ஆமென் என்று சொல்லி தான் சிலுவை பாடுகளை ஏற்று கொண்டார்.
“என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்.  ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்”  என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.✠ (மத் 26 : 38)  எனவே தந்தையின் விருப்பம் நிறைவேற்றவே இயேசு ஆமென் என்ற வார்த்தையை உபயோகிக்க அவரது பெயரும்  ஆமென் என்றே அழைக்கப்பட்ட்து. விண்ணும் மண்ணும் தோன்றும் முன்னே இப்பெயர் இயேசுவிற்க்கு வைக்கப்பட்டது. இயேசு தன் வாழ்நாளில் என்றுமே தன்னை இயேசு என்று சொல்லி கொண்டது இல்லை. ஆனால் திருவெளிப்பாட்டில் இயேசுவே தன் பெயரை ஆமென் என்றே வெளிப்படுத்தியுள்ளார்.
நாமும் தெரிந்தோ தெரியாமலோ நம் ஜெபவேளையில் இயேசுக் கிறிஸ்துவின் பெயராலே  என்று சொல்லி இயேசுவின் உண்மை பெயரான  *ஆமென்*  என்ற பெயரையே உறுதி படுத்துகின்றோம்.  திருப்பலியிலும் கூட கிறிஸ்துவின் சரீரம் என்று குருவானவர் கூறி  இயேசுவின் உடலை நாம் பெரும் போதும் "" ஆமென்'' என்று சொல்லியே பெறுகின்றோம்.
ஒரு ரகசியம் உங்களின் துன்ப வேளையிலும், வேதனைகளிலும்  என்ன செய்வோம் என்று தவிக்கும் போது  நீங்கள் இயேசுவின் பெயரான  ஆமென்  என்று சொல்லுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை காண்பீர்கள் '''''''''''' ஆமென் ''''''''''''

No comments:

Post a Comment