அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, October 16, 2024

எஸ்தர்

 எஸ்தர் (Esther, /[invalid input: 'icon']ˈɛstər/; எபிரேயம்: אֶסְתֵּר‎), இயற்பெயர் அதசா (Hadassah), என்பவர் விவிலிய நூல்களில் ஒன்றாகிய எஸ்தர் நூலில் காவியத்தலைவி ஆவார். விவிலியத்தின்படி, இவர் ஒரு யூதப் பெண்ணும் பாராசீக பேரரசர் அகஸ்வேரின் பட்டத்து அரசியும் ஆவார். பேரரசர் அகஸ்வேர் அகாமனிசியப் பேரரசின் பேரரசன் சைரசு என மரபுப்படி அடையாளம் காணப்பட்டுள்ளார். எஸ்தரின் கதை பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் அடைப்படையாக அமைந்துள்ளது.

மன்னன் அகஸ்வேர் முன்செல்ல எஸ்தருக்கு ஒப்பனை செய்யப்படுகிறது (எஸ் 2:15-18). ஓவியர்: ஏட்வின் லாங். ஆண்டு: 1878. காப்பிடம்: விக்டோரியா தேசிய படக்காட்சியகம், மெல்பேர்ண்.


எஸ்தர் நூலின் பெயரும் கருப்பொருளும்
இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.
யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.

பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

இறைவாக்கினர் பாரூக்கு

 இறைவாக்கினர் பாரூக்கு (எபிரேயம்: ברוך בן נריה " பேறுபெற்றவர் ") என்பவர் கி.மு. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான பாரூக் நூலின் ஆசிரியர் இவர் ஆவார். இந்த நூல் விவிலியத்தின் பகுதியாக இந்நூல் கி.பி. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) அதிகாரப்பூர்வமாக இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்டது.

பாரூக்கு இறைவாக்கினர். விவிலிய படிம ஓவியம். காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: உருசியா.


பெயர்
பாரூக்கு என்னும் இந்நூல் செப்துவசிந்தா பதிப்பில் கிரேக்க மூல மொழியில் Barùch (Βαρούχ) என்றும் இலத்தீனில் Baruch என்றும் உள்ளது. எபிரேயத்தில் இது בָּרוּךְ (Barukh, Bārûḵ) என்னும் பெயர் ஆகும். இதற்கு "பேறுபெற்றவர்" என்பது பொருள்.

வரலாற்றுச் சுருக்கம்
இவர் இறைவாக்கினர் எரேமியாவின் செயலர் என்பது மரபு வழிச் செய்தி. எரேமியா நூலின் படி இவரின் தந்தை நேரியா ஆவார். அதே நூலில் யூதாவின் அரசனான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கினை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்து, எரேமியாவின் கட்டளைக்கிணங்க நோன்பு நாளன்று, யூதர்களின் கோவிலுக்கு சென்று அங்குக் குழுமியிருந்த மக்களின் செவிகளில் விழும்படி, தான் எழுதிவைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டினார். இக்காரியம் செய்ய மிகக்கடினமானதாக இருப்பினும், இதனை மனம்தலராமல் பாரூக்கு செய்துமுடித்தார்.

இவரும் எரேமியாவும் பாபிலோனிய மன்னன் எருசலேமின் மீது படையெடுத்து அதன் அரசனையும் நாட்டினரையும் நாடு கடத்தியதை தம் கண்களால் கண்டனர். கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி, உண்மை ஞானமாகிய திருச் சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால், கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் என்னும் செய்தியை இவரின் நூல் வலியுறுத்துகிறது. வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனிப் பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு.முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்
  •  கார்த்தேசு சங்கம்
  •  திரெந்து பொதுச் சங்கம்
  •  எரேமியா 36:4
  •  எரேமியா 36 அதிகாரம்

யோபு

 யோபு (ஆங்கில மொழி: Job; /ˈdʒoʊb/; எபிரேயம்: אִיּוֹב‎ /[invalid input: 'ʾIyyôḇ']/) என்பவர் கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோபு நூலின் நாயகன் ஆவார். விவிலியத்தில் இவரைப்பற்றியக் குறிப்புகள் யோபு நூலுக்கு வெளியே எசேக்கியேல் நூலிலும், யாக்கோபு நூலிலும் காணக்கிடைக்கின்றது. இவர் நபி என திருக்குர்ஆனிலும் குறிக்கப்பட்டிருகின்றார்.
யோபு
யோபுவின் ஏழ்மை நிலையைக் காட்டும் சித்திரம்
நீதிமான்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்பலர்
யூதர், கிறித்தவர், இசுலாமியர்

பெயர்
யோபு என்னும் பெயர் மூல எபிரேயத்தில் אִיּוֹב‎ என்று அழைக்கப்படுகிறது. இலத்தீனில் Job/Iob என்று உள்ளது. இப்பெயரின் பொருள் வெறுக்கப்படுபவர் அல்லது வதைக்கப்படுபவர் என்பதாகும்.

வரலாற்று சுறுக்கம்
முக்காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக யோபு என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு தனது மக்களையும், சொத்து சுகத்தையும், உடல் நலத்தையும் ஒவ்வொன்றாக இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத்தூற்ற வில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றார்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இவரின் வாழ்வை சித்தரிக்கும் விவிலியத்தில் இடம் பெறும் யோபு நூல்.

யோபு தன் மனைவியோடு வாக்குவாதம் செய்தல்





தனது மூன்று மகள்களோடு யோபு ஓவியர்: வில்லியம் பிளேக்



யோபு சோதிக்கப்படல், வில்லியம் பிளேக்

ஆகாய்

 ஆகாய் (ஆங்கில மொழி: Haggai; /ˈhæɡaɪ/; எபிரேயம்: חַגַּי‎, Ḥaggay or Hag-i, கிரேக்கம்: Ἀγγαῖος; இலத்தீன்: Aggaeus) என்பவர் கி.மு.6ஆம் நூற்றாண்டில் யூத மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர் ஆவார். பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள், எருசலேம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு இவரது இறைவாக்குகள் தூண்டின. மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக இவர் வழியாக கடவுள் வாக்களித்ததை ஆகாய் நூல் எடுத்துரைக்கிறது.

பெயர் விளக்கம்
ஆகாய் என்ற பெயருக்கு விழாக் கொண்டாட்டம் அல்லது திருப்பயணம் செய்பவர் என்பது பொருள். ஆகாய் கூடாரத் திருவிழாவன்று பிறந்ததால், அவருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் சிலரின் கருத்து. ஆனால் அக்காலத்தில் ‘ஆகாய்' என்பது ஒரு பொதுவான பெயராகவே இருந்துள்ளது.

வரலாற்று பின்னணி
கி.மு.587ல் நெபுகத்நேசர் படைகள் எருசலேம் கோவிலைத் தரைமட்டமாக்கின. பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள், அரசர் சைரசின் ஆணைப்படி கி.மு.538ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்கள். அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாடாகிய இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் திரும்பினார்கள். அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பியபோது, நெபுகத்நேசர் எருசலேமிலிருந்து அபகரித்துக் கொண்டு வந்திருந்த பொருட்களை அரசர் சைரஸ், அவர்களிடம் கொடுத்து அனுப்பினார். எருசலேம் திரும்பிய யூதர்கள், முதலில் கோவிலைக் கட்ட திட்டமிட்டு, அதற்கு அடித்தளமும் இட்டனர். ஆனால் அடுத்த 18 ஆண்டுகளாக கட்டட வேலை எதுவும் நடைபெறாமலே இருந்தது.

ஆகாய் இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.

இறைவாக்குப் பணி
இந்நிலையில், கி.மு.520 ஆகஸ்டு மாதத்தில் இறைவாக்கினர் ஆகாயின் இறைவாக்குப் பணி தொடங்கியது. 'தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது' என்று ஆகாய் நூல் கூறுகிறது. ஆகாய் ஒரு குருவாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர் குருவாக இருந்தாரா என்பதற்கான தெளிவான ஆதாரம் எதுவும் விவிலியத்தில் காணப்படவில்லை. இறைவாக்கினர் செக்கரியாவைப் போன்றே, எருசலேம் கோவில் மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி இறைவாக்கினர் ஆகாய் எதுவும் பேசவில்லை. எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்புமாறு மக்களைத் தூண்டுவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. "கோவிலைக் கட்டி முடியுங்கள்; இப்போது நாட்டில் நிலவும் வறுமைக்குக் காரணம் கோவில் இல்லாமையே. கோவில் கட்டப்பட்டுவிட்டால், யாவே இறைவன் நல்ல மழையைக் கொடுத்து, நாட்டை வளமுடைய நாடாக மாற்றுவார்” என்பது ஆகாயின் அசைக்க முடியா கருத்து.

ஆதாரங்கள்
  •  ஆகாய் 1:1
  •  எஸ்ரா 6:14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர் ணாாலலை<மேமேைரயைர தய தயஒ யபல யலெஎ. ஊடிஅடி அந பரளவய நட ிநேந
  •  ஆகாய் 1:8 "என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்" என்று சொல்கிறார் ஆண்டவர்.
  •  ஆகாய் 2:19 "விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன்."

அபக்கூக்கு

 அபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ (கேட்கⓘ) or /ˈhæbəkʊk/ (கேட்கⓘ); எபிரேயம்: חֲבַקּוּק‎; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.

அபக்கூக்கு
Habakkuk
அபக்கூக்குவின் உருசிய வடிவிவ உருவம்
அபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம்
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்டொய்சேர்க்கன், ஈரான்
கடரிம், இசுரேல்
திருவிழாசனவரி 15 (உரோமன், கிரேக்கு)
திசம்பர் 2 (மரபுவழி)
சித்தரிக்கப்படும் வகைஇறைவாக்கினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அபக்கூக்கு (நூல்)

மீக்கா (Micah)

 மீக்கா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?", என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப்பகுதியில் யூதவில் இறைவாக்குரைத்தவரும், மீகா நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக்கினர்களின் சமகாலத்தவரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் ஒருவரும் ஆவார். தென்மேற்கு யூதாவிலுள்ள மெரேசேத் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.

மீக்கா
இறைவாக்கினர் மீக்காவின் உரசிய உருவப் படம்
இறைவாக்கினர், எச்சரிப்பவர்
பிறப்புமெரேசேத்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம் (ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழிச் சபை)
திருவிழாசூலை 31

யோனா

 யோனா (Jonah / Jonas எபிரேயம்: יוֹנָה, தற்கால Yona திபேரியம் Yônā ; dove; அரபு மொழி: يونس‎ Yūnus, Yūnis / يونان Yūnān ; கிரேக்கம்/இலத்தீன்: Ionas) எனப்படுபவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த தென் இசுரவேல் அரசின் இறைவாக்கினர் என எபிரேய விவிலியம் குறிப்பிடுகின்றது. யோனா நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் இவர் மீனால் அல்லது திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டது முக்கிய நிகழ்வாகும். யோனா பற்றிய விவிலியக் கதை சிறு வேறுபாடுகளுடன் குரானில் திரும்பவும் எழுதப்பட்டுள்ளது.

யோனா
மைக்கல் ஆஞ்சலோவின் யோனா ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்இறைவாக்கினர் யோனாவின் கல்லறை, ஈராக்
திருவிழாசெப்டம்பர் 21 - கத்தோலிக்கம்

 இறைவாக்கினர் ஆமோஸ் (ஆங்கில மொழி: Amos; /ˈeɪməs/; எபிரேயம்: עָמוֹס‎) என்பவர் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஆமோஸ் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் பட்டியலிடப்படுகின்றார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் ஜூன் 15 ஆகும். இவர் எசாயா, மீக்கா, ஓசேயா ஆகியோரின் சமகாலத்தவர்.

பெயர்
ஆமோஸ் என்னும் பெயர் மூல எபிரேயத்தில் עמוס (Amos,ʻāmōʷs) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αμώς (Amós) என்றும் இலத்தீனில் Amos என்றும் உள்ளது. இப்பெயரின் பொருள் சுமை சுமப்பவர் என்பதாகும்.

வரலாற்று சுறுக்கம்
இறைவாக்கு உரைப்பதற்கு முன் இடையராகவும், தெக்கோவா என்னும் ஊரில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவராகவும், காட்டு அத்திமரத் தோட்டக்காராகவும் ஆமோஸ் இருந்தார். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து இவர் காட்சி கண்டு இறைவாக்கு உரைக்க துவங்கினார் என இவரின் நூலில் இவரே குறிக்கின்றார். இவரின் நூல்வழியாக இவர் வழக்கமான இறைவாக்கினர் குழுவில் உறுப்பினராக இல்லை என்பதும், இவர் ஆடுகள் ஓட்டிக் கொண்டபோனபோது ஆண்டவரிடமிருந்து அழைப்பு பெற்றார் என்பதையும் அறியமுடிகின்றது.

விவிலியத்தில் இடம் பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதுரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று கி.மு. 750இல் இறைவாக்கு உரைத்தார். அந்நாளில் அந்நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.

வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு இவர் தன் நூலில் சீறுகிறார். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.
ஆமோஸ்
ஆமோஸ்
18ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆமோஸின் உரசியத் திருவோவியம்
இறைவாக்கினர்
இறப்பு745 கி.பி
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாஜூன் 15 (மரபுவழி சபைகள்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆமோஸ் (நூல்)

இறைவாக்கினர் யோவேல்

 இறைவாக்கினர் யோவேல் (ஆங்கில மொழி: Joel; /ˈdʒoʊ.əl/; எபிரேயம்: יואל‎) என்பவர் கி.மு. 8 முதல் 5ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோவேல் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் இரண்டாமவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெத்துவேல் ஆவார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் அக்டோபர் 19 ஆகும்.

பெயர்
யோவேல் என்னும் பெயர் மூல மொழியாகிய எபிரேயத்தில் יואל (yoèl) எனவும், கிரேக்கத்தில் Ιωήλ, (ioél) எனவும், இலத்தீனில் Ioel எனவும் ஒலிக்கப்படும். இப்பெயருக்கு யாவே இறைவனை கடவுளாகக் கொண்டவர் என்பது பொருள்.

வரலாற்று சுருக்கம்
யோவேல் இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே நமக்குத் தெரிய வருகின்றது. இந்நூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு ஆகியவற்றைக் கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள் மீது வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக யோவேல் கருதுகின்றார். மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர் கூறும் உறுதி மொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர் என்ற வேறுபாடு இன்றி அனைவர் மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருளுவார் என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இவரின் நூல் கூறுகிறது.

யோவேல்
யோவேல்
ஓவியர்: மைக்கலாஞ்சலோ (சுதை ஓவியம், சிஸ்டைன் சிற்றாலய உட்கூரை, 1508-1512).
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
திருவிழாஅக்டோபர் 19 (மரபுவழி திருச்சபைகள்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்யோவேல் (நூல்)

இறைவாக்கினர் ஓசேயா

 இறைவாக்கினர் ஓசேயா (/ˌhoʊˈziːə/ or /hoʊˈzeɪə/; கிரேக்கம் Ὠσηέ = Ōsēé) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஒசேயா நூலின் ஆசிரியர் இவர் என நம்பப்படுகின்றது. இவர் 12 சிறு இறைவாக்கினர்களுள் ஒருவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெயேரி ஆவார். சுமார் 60 ஆண்டுகள் இவர் இறைவாக்குரைத்தார். இவர் ஒருவரே இசுரேலிய இறைவாக்கினர்களுல் தனது வாக்குகளை நூல்வடிவில் விட்டுச்சென்றவர் ஆவார்.

பெயர்
ஒசேயா என்னும் என்னும் பெயருக்கு "கடவுளே மீட்பர்" என்பது பொருள். கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூலின் பெயர் Ὠσηέ (Ōsēe) என்று வரும்.

வரலாற்று சுறுக்கம்
வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர் இவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு. 722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலை வழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரை விட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதி வரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக் கொள்ளும்; அதன் மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.

ஒசேயா
Russian icon of the prophet Hosea
18ம் நூற்றாண்டின் உருசிய திருவோவியம்
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்Safed, இசுரேல்
திருவிழாஅக்டோபர் 17 (மரபுவழி சபைகள்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒசேயா (நூல்)

தானியேல்

 தானியேல் (எபிரேயம்: דָּנִיֵּאל‎; அரபு மொழி: دانيال‎, "கடவுள் என் நீதிபதி" எனும் அர்த்தம்) எனப்படுபவர் எபிரேய விவிலியத்தில் தானியேல் நூலில் உள்ள முக்கிய பாத்திரம். இவர் பற்றிய விபரிப்பில், தானியேல் சிறுவனாக இருக்கும்போது பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு சென்று, அங்கு அவர் சாலடிய சிந்தனையைக் கற்றார். ஆனாலும், அவர் பிந்திய பாபிலானிய முறைக்கு மாறவில்லை. அவருடைய கடவுளான யாவேயின் "தெய்வீக ஞானம்" மூலம் அரசனின் கனவுகளையும் தரிசனங்களையும் தெளிவுபடுத்தி, பாபிலோனிய சபையில் முக்கிய நபராகினார். அதேவேளையில் இவர் திருவெளிப்பாடு தரிசனத்தினைக் கண்டு, அதன் பொருளை நான்கு பேரரசுகளாக விளக்கினார்.

தானியேல்
அரசனுக்கு தானியேலின் பதில் - பிரிட்டன் ரிவிரேவின் ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்புகி.மு. 7ம் நூற்றாண்டு
இறப்புகி.மு. 6ம் நூற்றாண்டு
பாபிலோன் (?)
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
உரோமன் கத்தோலிக்கம்
கிழக்கு கத்தோலிக்க சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
அட்வென்டிசம்
இசுலாம்
ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
முக்கிய திருத்தலங்கள்தானியேலின் கல்லறை, ஈரான்
திருவிழாசூலை 21 - உரோமன் கத்தோலிக்கம்
டிசம்பர் 17 - கிரேக்க சபை
சித்தரிக்கப்படும் வகைசிங்கங்களின் குகையில் விரித்துரைப்பு

எசேக்கியேல்

 எசேக்கியேல் (ஆங்கில மொழி: Ezekiel; /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈziːki.əl/; எபிரேயம்: יְחֶזְקֵאל; அரபி:حزقيال; அர்த்தம்:'கடவுள் பலப்படுத்துவார்') என்பவர் எபிரேய விவிலியத்திலுள்ள எசேக்கியேல் நூலில் மத்திய பாத்திரம் ஆவார்.

யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.
எசேக்கியேல்
எசேக்கியேல், மைக்கலாஞ்சலோவின் ஓவியம்
தீர்க்கதரிசி, குரு
பிறப்பு(ஏ) கி.மு. 622
எருசலேம்
இறப்பு(ஏ)கி.மு. 570
பாபிலோன் (?)
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்எசேக்கியேலின் கல்லறை, அல் கிஃபல், ஈராக்
திருவிழாஆகஸ்ட் 28 - ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
சூலை 23 - உரோமன் கத்தோலிக்கம்
சூலை 21 - லூத்தரணியம்

எரேமியா

 எரேமியா (ஆங்கில மொழி: Jeremiah; /[invalid input: 'icon']dʒɛr[invalid input: 'ɨ']ˈmaɪ.ə/; எபிரேயம்:יִרְמְיָה; கிரேக்கம்:Ἰερεμίας), என்னும் "யாவே புகழுகிறார்" அர்த்தமுடைய இவர் "அழும் இறைவாக்கினர்" எனவும் அழைக்கப்படுகின்றார். இவர் எபிரேய வேதாகமத்தில் பெரிய இறைவாக்கினர்களில் ஒருவராவார். எரேமியா எரேமியா (நூல்), 1 அரசர்கள் (நூல்), 2 அரசர்கள் (நூல்), புலம்பல் (நூல்) ஆகியவற்றை, தன் சீடரான பரூச் பென் நேரியாவின் எழுத்தாக்க உதவியுடன் உருவாக்கினார் என பாரம்பரியமாக நம்பப்படுகின்றார் யூதம் எரேமியா நூலை அதன் விவிலியத் திருமுறை நூலின் பகுதியாகவும், எரேமியாவை பெரிய இரண்டாவது பெரிய இறைவாக்கினராகக் கருதுகின்றது. இசுலாம் எரேமியாவை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. கிறித்தவமும் அவரை ஒர் தீர்க்கதரிசியாகக் கருதுகின்றது. புதிய ஏற்பாட்டில் அவர் பற்றிய மேற்கோள் காணப்படுகின்றது.

எரேமியா
எருசலேமின் அழிவிற்காகப் புலம்பும் எரேமியாவின ஓவியம், 1630
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 655
இறப்புகி.மு 586
எகிப்து
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்

எசாயா

 எசாயா அல்லது ஏசாயா (ஆங்கில மொழி: Isaiah; /[invalid input: 'icon']aɪˈzeɪ.ə/; எபிரேயம்: יְשַׁעְיָהוּ‎ ; கிரேக்கம்:Ἠσαΐας, Ēsaïās ; "யாவே மீட்பராக இருக்கிறார்") என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் யூத அரசில் வாழ்ந்த ஓர் தீர்க்கதரிசி ஆவார். யூதர்களும் கிறித்தவர்களும் எசாயா நூலை அவர்களின் விவிலியத் திருமுறை நூலாகக் கருதுகின்றனர். ஏசாயா பிற்கால தீர்க்கதரிசிகளில் முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளார்.

ஏசாயா
தீர்க்கதரிசி ஏசாயா - (சு)1904 இல் பிரசுரிக்கப்பட்ட விவிலிய அட்டை
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
யூத அரசு (?)
இறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
உரோமன் கத்தோலிக்கம்
கிழக்கு கத்தோலிக்க சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
இசுலாம்
ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
திருவிழாமே 9 

எலிசா

 எலிசா (/[invalid input: 'ɨ']ˈlaɪʃə/; எபிரேயம்: אֱלִישָׁע, தற்கால Elisha திபேரியம் ʼĔlîšāʻ ; "கடவுள் என் மீட்பு", Greek: Ἐλισσαῖος, Elissaîos or Ἐλισαιέ, Elisaié, அரபு மொழி: اليسع Elyasaʻ) என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதம் நிகழ்த்திய ஓர் இறைவாக்கினர். இவரைப் பற்றி இசுலாம் மற்றும் பாகாய் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவருடைய பெயர் எபிரேய மொழியின் ஊடாக ஒலிபெயராக "எலிசா" என்று உச்சரிக்கப்படுகின்றது.

எலிசா
சூனாமித்தாலின் பெண்ணின் மகனை உயிர்த்தெழச் செய்தல், ஆரம்ப 1900களின் விவிலிய அட்டை சித்தரிப்பு
இறைவாக்கினர்
இறப்புசமாரியா
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாசூன் 14
சித்தரிக்கப்படும் வகைஇறைவாக்கினர் போன்று உடுத்து, ஏட்டுச்சுருளை கொண்டிருத்தல்

எலியா

 எலியா (ஆங்கில மொழி: Elijah, /[invalid input: 'icon'][invalid input: 'ɨ']ˈlaɪdʒə/; "யாவே என் கடவுள்" எனும் பொருளுடைய எபிரேயம்: אֱלִיָּהוּ‎; (அரபு:إلياس), என்பவர் 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்பவரும் ஆவார்.

எலியா
எலியா விதவையின் மகனைப் பெறுதல்
லூயிஸ் கர்சென்டின் ஓவியம்
தீர்க்கதரிசி
பிறப்புதிஸ்பே, கிலாத்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாசூலை 20
சித்தரிக்கப்படும் வகைதீர்க்கதரிசி,
அற்புதம் செய்பவர்

சாலமோன்

 சாலமோன் (ஆங்கில மொழி: Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה‎ (Shlomo), அரபு மொழி: سليمان‎‎ (Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn)) என்பவர் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரசனின் மகனும் ஆவார்.
சாலமோன் அரசர்
இஸ்ரயேலின் அரசர்
முன்னிருந்தவர்தாவீது
பின்வந்தவர்ரெகபெயாம்
வாரிசு(கள்)ரெகபெயாம்
மரபுதாவீதின் வழி
தந்தைதாவீது
தாய்பத்சேபா
பிறப்புஎருசலேம்
இறப்புஎருசலேம்

விவிலியக் குறிப்புகள்
1 அரசர்கள், 1 குறிப்பேடு, என்னும் விவிலிய நூல்கள் சாலமோனை ஒன்றிணைந்த யூதா-இசுரயேல் நாட்டின் அரசராக அடையாளம் காட்டுகின்றன. யூத சமய நூலாகிய தால்முத் சாலமோனை 48 இறைவாக்கினருள் ஒருவராகக் கருதுகிறது. சாலமோன், தாவீது அரசருக்கும் பத்சபா என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர். சாலமோனின் தந்தை தாவீது வட பகுதியாகிய இசுரயேலையும் தென் பகுதியாகிய யூதாவையும் வலுவான அரசாக மாற்றினார். அவருக்கு முன் சவுல் இசுரயேலின் முதல் அரசராக இருந்தார். இவ்வாறு, சாலமோன் ஒன்றிணைந்த அரசின் மூன்றாவது, மற்றும் கடைசி அரசர் ஆனார்.

சாலமோனின் ஆட்சிக்குப் பின் வட நாடு இசுரயேல் என்றும், தென்னாடு யூதா என்றும் தனித்தனியாகப் பிரிந்தன.

குர்ஆன் சாலமோனை முதன்மையான இறைவாக்கினராக சுலைமான் நபி கருதுகின்றது. சாலமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.

சாலமோனின் சிறப்பு
சாலமோன் தன் நாட்டின் தலைநகராகிய எருசலேமில் கடவுளுக்கு புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது "முதல் கோவில்" (First Temple) என்று அழைக்கப்படுகிறது.. மேலும், விவிலியம் சாலமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).


அரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.

சாலலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.

சாலமோன் ஆட்சிக்காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.

சாலமோனின் வாரிசு
சாலமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43). சாலமோன் வழிமரபில் வந்த யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

தாவீது

 தாவீது (எபிரேய மொழி: דָּוִד, דָּוִיד ; Dawid; Strong's Daveed; beloved; அரபு மொழி: داوود‎ or داود‎[note A] Dāwūd) என்பவர், எபிரேய விவிலியத்தின்படி ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசின் இரண்டாவது அரசர் ஆவார். மத்தேயு, லூக்கா நற்செய்திகளின்படி, இவர் யோசேப்பு, மரியா ஆகியோர் வழியில் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவர் ஆவார். இவர் கர்த்தருக்கு பிரியமானவராகவும், சிறந்த பாடகராகவும், இசைவல்லுநராகவும், போர் வீரராகவும் திகழ்ந்தார்.
அரசர் தாவீது
David
דָּוִד
ஒன்றிணைந்த இஸ்ரயேலின் அரசர்
ஒன்றிணைந்த இசுரயேல் அரசு
ஆட்சிக்காலம்யூதா மீது c. கி.மு.1010–1003; யூதா & இஸ்ரேல் மீது c. கி.மு.1003–970
முன்னையவர்சவுல்
பின்னையவர்சாலமோன்
பிறப்புc. கி.மு.1040
பெத்லகேம்
இறப்புc. கி.மு.970
எருசலேம்
மரபுதாவீது குலம்
தந்தைஈசாய்
தாய்நிட்சவெத்

தாவீதின் திருப்பொழிவு

விவிலியத்தில்
விவிலியத்தில் தாவீதைப் பற்றி அதிகமான தகவல்கள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன.

கடவுளின் தேர்வு
இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர், அவர் தேவனுடைய ஆலோசனையை பின்பற்றாமல் தேவனை மறந்ததால் ஆண்டவர் அவரை புறக்கணித்தார்: "சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை." (1 சாமுவேல் 15:11) என்று தேவன் கூறினார்.

ஆண்டவர் சாமுவேலிடம் ஈசாயின் மகனை தெரிந்துக் கொண்டேன் அவனை இராஜவாக அபிஷேகம் செய் என்று ஈசாயின் வீட்டிற்கு அனுப்புகின்றார். அப்பொழுது ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். "இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார் சாமுவேல். அங்கு ஈசாயின் இளைய மகன் அதுவரையில் அழைக்கப் படவில்லை. "உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா? என்று சாமுவேல் கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். தாவீதின் தந்தை ஈசாயின் பார்வையில், தாவீது அவருடைய சகோதரர் எல்லாரிலும் சிறியவராக காணப்பட்டார். ஆனால் பரம தந்தையாம் தேவனுடைய பார்வையில் தாவீது தன் சகோதரர் எல்லாரிலும் பெரியவராக காணப்பட்டார். சாமுவேல் அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் "தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். (1 சாமுவேல் 16:10-13) 

சவுலின் அரசவையில் தாவீது
ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி, சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார்; தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார். (1 சாமுவேல் 16:14,23)

தாவீது கோலியாத்தின் தலையை கொய்தல்
தாவீதும் கோலியாத்தும்
காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான். தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார். தாவீது தம் கோலை கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய். நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர் என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கர்த்தர் துணை கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறி நின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார். (1 சாமுவேல் 17:4-51)

தாவீதும் யோனத்தானும்
தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை. பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார். தாவீது, சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர். (1 சாமுவேல் 18:1-4)

தாவீது மேல் உள்ள பொறாமையால், தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையாய் இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள். நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் என்றார். (1 சாமுவேல் 19:1-3)

அரசர் சவுலும் தாவீதும்
மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார். அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார். (1 சாமுவேல் 19:8-10)
சிறிது காலத்திற்கு பின் சவுலைக் கொல்ல தாவீதுக்கு வாய்ப்பு கிடைத்தும், அவர் அவ்வாறு செய்யவில்லை; அதனால் இருவரும் சமாதானம் அடைந்தனர். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்! என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார். (1 சாமுவேல் 26:25)

இஸ்ரயேல் அரசர் தாவீது
பெலிஸ்தியரோடு நடைபெற்ற போரில் சவுலும் யோனத்தானும் இற்ந்ததும், தாவீது யூதாவின் அரசர் ஆனார். அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து போர்களிலும் தாவீது வெற்றி பெற்று ஒன்றிணைந்த இஸ்ரயேல் அரசை உருவாக்கி, எருசலேமை அதன் தலைநகர் ஆக்கினார். தாவீது பாவங்களுக்காக இறைவாக்கினர் நாத்தான் அவரைக் கண்டித்தபோது, தாவீது மனம் வருந்தி தவம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டினார். திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவர் மகன் அப்சலோம் இவருக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்டார். தாவீது முதுமை அடைந்த வேளையில், மகன் சாலமோனைத் தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். தாவீது இறந்ததும் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

இசைவல்லுநர் தாவீது
தாவீது யாழ் மீட்டுதல்

விவிலியத்தின் பல பகுதிகள் தாவீதின் இசைப் பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. திருப்பாடல்கள் நூலின் பெரும்பாலான பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை. தாவீது யாழ் மீட்டுவதில் வல்லவராய் திகந்தார். இவர், இஸ்ரயேலின் பல்வேறு இறைப்புகழ்ச்சி பாடல்களை இயற்றியுள்ளார்.

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தாவீது பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். – திருப்பாடல்கள் 34:6-11

ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் ஆண்டவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப்பாடியது:
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். – திருப்பாடல்கள் 18:1-3

தாவீது ஆண்டவரில் மகிழ்ந்து பாடிய புகழ்ப்பாடல்:
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். – திருப்பாடல்கள் 40:1-3


தாவீது அரசரின் அரண்மனை மீதங்கள். (அகழ்வாய்வு சான்று)

தாவீதின் வரலாற்றுத்தன்மை
அகழ்வாய்வு சான்றுகள்:
அர்மேனிய அரசன் ஒருவன் இஸ்ரயேல் அரசனை வெற்றிகொண்ட நிகழ்வை எடுத்துரைக்கும், கி.மு.850-835 காலத்தைச் சார்ந்த அர்மேனிய நினைவுச் சின்னம் ஒன்றில், இஸ்ரயேலைக் குறிக்க தாவீதின் இல்லம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கி.மு.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தாவீதின் நகரில், தாவீது அரசர் வாழ்ந்த அரண்மனையின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விவிலிய பதிவுகள்:
விவிலியத்தின் பல நூல்கள் தாவீதைப் பற்றி பேசுகின்றன. சிறப்பாக பழைய ஏற்பாட்டின் 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 அரசர்கள், 1 குறிப்பேடு, 2 குறிப்பேடு நூல்கள், புதிய ஏற்பாட்டின் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் ஆகியவை தாவீதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

தாவீதின் கல்லறை
தாவீது அரசர் கல்லறை அல்லது தாவீதின் கல்லறை (King David's Tomb; எபிரேயம்: קבר דוד המלך‎) என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி இசுரயேல் அரசரான தாவீது அரசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது எருசலேமின் சீயோன் மலையில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலைப் பகுதியி உள்ள கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும், கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை" என அடையாளங் காணப்பட்டது. இக்கட்டடம் தற்போது "புலம்பெயர் யெசிவா"வின் பகுதியாகவுள்ளது.

வரலாறு
கல்லறை "ககியா சீயோன்" என்ற பழைய ஆராதனை இல்லத்தின் எச்சங்களின் கீழ்ததள அறையின் மூலையில் அமைந்துள்ளது. இக்கட்டத்தின் மேல் தளம் இயேசுவின் மேல அறை என பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. தாவீது அடக்கம் செய்யப்பட்ட இடம் தெரியாதெனினும், டனாக் சீலோவாமுக்கு அண்மையில் தாவீதின் நகரின் தெற்குப் பக்கம் எனக் காட்டுகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில், தாவீதும் அவருடைய தந்தையும் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. பின்னர் சீயோன் மலை என கி.பி 9 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கருத்து காணப்பட்டது. துடேலா பெஞ்சமின் 1173 இல் எழுதிய எழுத்துப்படைப்பு இதுபற்றிய மீள் விபரிப்புக்குட்படுத்தியது. இரு யூதத் தொழிலாளிகள் தாவீதின் மூல அரண்மனைக்கு குறுக்காக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது, பொன்னால் நிறைந்த முடியையும் செங்கோலையும் கண்டுபிடித்ததால் அவ்விடம் தாவீதின் கல்லறையாக இருக்க வேண்டும் என்ற தீர்மானிக்கச் செய்தது. தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள கோதிக் வெறுங்கல்லறை சிலுவைப் போர் வீரர்களால் கட்டப்பட்டது. சாமுவேல் நூலின்படி சீயோன் மலை தாவீதினால் வெற்றி கொள்ளப்பட்டது என்பதால் மத்தியகால யாத்திரிகர்களால் இவ்விடம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டு, இங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என கருதப்பட்டது. 1335 இல், பழைய தேவாலயம் பிரான்சிஸ்கன் சபையின் துறவியர் மடமாக மாறியதாயினும், கிரேக்க மரபுவழித் திருச்சபைத் தலைமைக் குருக்களுடனான பதட்டம் காரணமாக பிரான்சிஸ்கன் வாசிகள் இவ்விடத்தை மூடிவிட்டனர்.

எருசலேமிலுள்ள பிரான்சிஸ்கன் துறவியர் மடம் தற்போதுள்ள தாவீது அரசர் கல்லறைத் தொகுதியில் 16 ஆம் நூற்றாண்டில் அமைந்திருக்கவில்லை. அது ஒரு துறவியர் மடமாக அல்ல, மாறாக சிறிய துறவியர் மட அறையாக, தற்போதுள்ள தாவீதின் கல்லறையின் மேற்குப் பகுதியில் இறுதி இரவுணவு இடமாகக் கருதப்பட்டது. துறவியர் கழிவுகளை இன்றுள்ள கல்லறைத் தொகுதியில் கிழக்குப் பகுதியில் எறிவதற்குப் பயன்படுத்தினார்கள். சரிப் அஃமட் தயானி என்பவர் இன்று தாவீது அரசரின் கல்லறையப் பக்கம் கவனித்தில் கொள்ளப்படாமல் இருந்த கிழக்குப் பகுதியை துப்புரவு செய்து, 1490 களில் கட்டி முடித்தார். அவர் தற்போதுள்ள தொகுதியின் கிழக்குப் பகுதியில் முசுலிம் தொழுகைக்கான இடத்தை உருவாக்கினார். 1524 இல் எருசலேம் குடியிருப்பாளர்களால் பிரான்சிஸ்கன்கள் மலையிலிருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர். எருசலேம் குடியிருப்பாளர்களால் சரிப் அஃமட் தயானிக்கு வழங்கப்பட்ட பெயரான "இபன் டாவூட்" என்ற பெயரைக் கொண்ட முசுலிம் தொழுகைக்கான பள்ளிவாசலை சுல்தான் சுலைமான் என்பவரின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.

சாமுவேல்

 சாமுவேல் (ஆங்கிலம்:Samuel; /ˈsæm.juː.əl/; எபிரேயம்: שְׁמוּאֶל, தற்கால Shmu'el திபேரியம் Šəmûʼēl; கிரேக்க மொழி: Σαμουήλ Samouēl; இலத்தீன்: Samvel; அரபு மொழி: صموال Ṣamawal; Strong's: Shemuwel) என்பவர் எபிரேய விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடும் பண்டைய இசுரேலின் தலைவர் ஆவார். இவர் குரானில் பெயர் குறிப்பிடாமல் இறைவாக்கினராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
சாமுவேல்
குழந்தை சாமுவேல் ஓவியம் - 1723
இறப்பு
பெஞ்சமின் ஊரில் உள்ள இராமா நகர்
யூத போதக இலக்கியத்தின்படி இவர் கடைசி எபிரேய நீதித்தலைவரும், இசுரேல் நாட்டினுள் இறைவாக்குரைத்த முதலாவது பெரிய இறைவாக்கினரும் ஆவார். சாமுவேல் நூலின்படி, இவர் முதலிரு இசுரேலிய அரசர்களான சவுலையும் தாவீதையும் அரசர்களாக எண்ணெய் பூசி அருட்பொழிவு செய்தார்.

யோசுவா

 யோசுவா (எபிரேயம்: יְהוֹשֻׁעַ; கிரேக்க மொழி: Ἰησοῦς, அரபு மொழி: يوشع بن نون‎), என்பவர் தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நபரும், இஸ்ரேலுக்கான உளவாளிகளில் ஒருவரும் (எண் 13-14), மோசேக்கு உதவியாக விடுதலைப் பயணத்தில் இருந்தவரும் ஆவார். இவர் எபிரேய விவிலியத்தின் யோசுவா நூலின் மத்திய பாத்திரமும் ஆவார். விடுதலைப் பயண நூலின்படியும் எண்ணிக்கை நூலின்படியும் யோசுவா நூலின்படியும், இவர் இஸ்ரேலிய கோத்திரங்களின் தலைவராக மோசேயின் மரணத்தின் பின் திகழ்ந்தார். ஓசேயா என முன்பு பெயர் கொண்டிருந்த இவருடைய தந்தை எபிராயிம் கோத்திரத்தைச் சேர்ந்த நூன் ஆவார். ஓசேயா என்ற இவரை மேசே யோசுவா என அழைத்தார்.(Numbers 13:16) தனது பற்றுறுதி காரணமாக மிகச்சிறந்த போர் வீரராகவும் திகழ்ந்தார்.
யோசுவா
மேசேயும் கானானிலிருந்து செய்தியாளர்களும், கியோவானியின் எண்ணெய் வர்ணம் 85-3/4 x 97 அங்குலம்
விவிலிய நீதித்தலைவர்
பிறப்பு1550-1440 கி.மு
இறப்பு1550-1440 கி.மு
கானான்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம், கிறித்தவம், இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்யோசுவா கல்லறை
திருவிழா
  • சூலை 26 - ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
  • செப்டம்பர் 1 - உரோமன் கத்தோலிக்கம்
  • செப்டம்பர் 1 - கிழக்கு மரபுவழி திருச்சபை
சித்தரிக்கப்படும் வகைகானானிலிருந்து திராட்சையினை சுமந்து வருதலுக்கான காலேபுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புக்கள்
 Great Synaxaristes: (கிரேக்கம்) Ὁ Ἅγιος Ἰησοῦς ὁ Δίκαιος. 1 Σεπτεμβρίου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
 Righteous Joshua the son of Nun (Navi. OCA - Feasts and Saints.
 Michael D. Coogan, "A Brief Introduction to the Old Testament" page 166-167, Oxford University Press, 2009

ஆரோன்

 ஆரோன் (எபிரேயம்: אַהֲרֹן ′ahărōn, அரபு மொழி: هارون‎, romanized: Hārūn, கிரேக்கம் (செப்துவசிந்தா): Ἀαρών;) என்பவர் ஆபிரகாமிய சமயங்களில் கூறப்படும் ஒரு இறைவாக்கினரும், தலைமைக்குருவும் மோசேயின் சகோதரரும் ஆவார். இவரைப் பற்றிய குறிப்புகள் விவிலியம் மற்றும் குரான் போன்ற சமய நூல்களில் காணப்படுகின்றன.
ஆரோன்
ஆரோனின் உருவம், 17ஆம் நூற்றாண்டு
இறைவாக்கினர், தலைமைக் குரு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்

எபிரேய விவிலியம்
விடுதலைப் பயணம் நூலின் படி, மோசேயின் உதவியாளராக ஆரோன் முதன்முதலாக செயல்பட்டார். ஏனென்றால், தன்னால் நன்றாக பேசமுடியாது என்று மோசே புகார் செய்ததால், கடவுள் ஆரோனை மோசேவின் இறைவாக்கினராக நியமித்தார். மோசேயின் கட்டளைப்படி ஆரோன் தன் கோலை விட்டெறிய அது பாம்பாக மாறியது. பிறகு தன் கோல் மூலம் எகிப்தில் முதல் மூன்று வாதைகளை ஏற்படுத்தினார். அதன்பிறகு மோசே ஆரோனின் துணையின்றி தானாக பேசவும் செயல்படவும் செய்தார். அமலேக்கியருக்கு எதிரான போரின் போது கடவுளின் கோலை மோசே பிடித்திருந்த போது ஆரோனும் மிரியமின் மகன் ஊரும் அவருக்கு உதவி செய்தனர். கடவுள் ஆரோனை தலைமைக் குருவாக நியமித்தார்.

மோசே மலையின் மேல் ஏறிச் சென்று கடவுளோடு நாற்பது நாளும் நாற்பது பகலும் மலையிலேயே தங்கியிருந்தார். மலையடிவாரத்தில் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்தார்கள். அவர்கள் ஆரோனிடம் வந்து, “மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியாது. நீர் எம் மக்களுக்காக ஒரு தெய்வத்தைச் செய்து கொடும்” என்றார்கள். ஆரோன் அவர்கள் சொன்னதற்கு உடன்பட்டார். அவர்களுடைய பொற்காதணிகளைச் சேகரித்து ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து கொடுத்தார். மக்கள் அதையே தங்கள் தெய்வமென கொண்டாடி, ஆடிப் பாடி விருந்துண்டு கேளிக்கைகளில் மூழ்கினார்கள்.

மோசே கடவுளின் கட்டளைகள் அடங்கிய கற்பலகையோடு கீழே வருகையில் நிகழ்ந்தவற்றைக் கண்டு கடும் கோபமடைந்தார். அந்த பொன் கன்றுக்குட்டியைச் சாம்பலாய் எரித்துத் தண்ணீரில் கரைத்து மக்களைக் குடிக்க வைத்தார். கடவுளின் பக்கம் இல்லாத பலர் அழிக்கப்பட்டனர். ஆனால் மோசேயின் வேண்டுதல் காரணமாக கடவுள் ஆரோனை தண்டிக்கவில்லை.

மோசே மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு அவரது சகோதரர்களான மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். அவர்கள் மூவரையும் ஆசாரிப்பு கூடாரத்திற்கு அழைத்தார். அவர் மிரியமை தொழுநோய் மூலம் தண்டித்தார். ஆனால் கடவுள் ஆரோனை தண்டிக்கவில்லை. இவ்வாறு மீண்டும் ஒருமுறை கடவுளின் தண்டனையில் இருந்து ஆரோன் தப்பினார்.

இறப்பு
மோசேவைப் போன்று ஆரோனும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் மெரிபா நிகழ்வின் போது பொறுமையிழந்து ஆண்டவரின் கட்டளையை மீறிவிட்டனர். பின்னர் ஆரோன் தன் மகன் எலியாசர் மற்றும் மோசேவுடன் ஓர் என்ற மலையில் ஏறினார். அங்கு மோசே, ஆரோனின் குருத்துவ உடைகளை உரிந்து அவற்றை எலியாசருக்கு அணிவித்தார். ஆரோன் மலையுச்சியில் இறந்தார். அவருக்காக இஸ்ரயேல் மக்கள் 30 நாட்கள் துக்கம் அனுசரித்தனர். ஆரோன் இறந்த போது அவருக்கு வயது 123.

வழிமரபுகள்
இயேசுவிற்கு திருமுழுக்கு அளித்த திருமுழுக்கு யோவான், ஆரோன் வழிமரபைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்
  •  Wells, John C. (2008), Longman Pronunciation Dictionary (3rd ed.), Longman, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405881180
  •  Exodus 6:16-20
  •  Exodus 7:7
  •  திருக்குர்ஆன் 7:103–156
  •  திருக்குர்ஆன் 19:41–53
  •  திருக்குர்ஆன் 20:9–98
  •  திருக்குர்ஆன் 28:34
  •  Ibn Hisham 1967, ப. 604; §=897
  •  Luke 1:5

மோசே

 மோசே அல்லது மோயீசன் (எபிரேயம்: מֹשֶׁה‎, Modern Moshe Tiberian Mōšéh ISO 259-3 Moše ; அரபு மொழி: موسى Mūsā ) என்பவர் என்பவர் எபிரேய விவிலியம், திருக்குர்ஆன் மற்றும் பகாய் சமய நூல்களின் படி, இவர் ஓர் இறைவாக்கினர் சமயத்தலைவர் மற்றும் சட்டம் அளித்தவர் என்று அறியப்படுகிறார். யூத மரபுப்படி இம்மதத்தின் படிப்பினைகள் அனைத்தையும் தொகுத்து இவரே தோராவை எழுதினார். யூத சமயத்தின் முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவராக மோசே கருதப்படுகிறார். கிறித்துவத்திலும் ஆபிரகாமிய சமயங்களிலும் இவர் மிகவும் குறிக்கத்தக்கவராவாகவும் விளங்குகிறார்.

மோசே
மோசே பத்துக்கட்டளைகளுடன் – ரெம்பிரான்ட்
சுய தரவுகள்
பிறப்பு
கோசேன், கீழ் எகிப்து
இறப்பு
நேபோ மலை, மோவாப்
தொல்பொருளியளாலர்களிடையே விடுதலைப் பயணம் குறித்தும், மோசேயின் வரலாற்றுத் தன்மைக் குறித்தும் ஒத்தக்கருத்தில்லை. பலர் இதனை வெண்கலக் காலத்தின் முடிவில் இசுரயேலர்களால் கானான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக்கதையாகக் கருதுகின்றனர்.

விடுதலைப் பயண நூலின் படி இசுரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இவர் பிறந்தார் எனக்கூறப்படுகிறது. அடிமைகளாக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது; இதனால் எகிப்திய அரசர் தங்களை எகிப்திய எதிரிகளோடு இணைத்துக் கொள்ளலாம் என்று கருதினார். இதன் தொடர்ச்சியாக எகிப்தில் பெருகிவரும் இசுரேலியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக புதியதாகப் பிறந்த ஆண்குழந்தைகள் அனைவரையும் கொன்று விடும்படியும் ஆணையிட்டார். குழந்தையினைக்கொல்ல மனம்வராத மோசேயின் தாயார் குழந்தை மோசேவை ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் மிதக்கவிட்டார். கூடை எகிப்தின் இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு ஓர் அரசக் குடும்பத்தின் தத்துப்பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஒரு எகிப்தியனைக் கொன்றதற்காக மிதியான் நாட்டில் பதுங்கியிருந்த போது இவருக்கு கடவுள் அருள் கிடைத்ததாக நம்பப்படுகிறது.

அடிமைத்தனத்திலிருந்து இசுரவேலரை விடுதலை செய்விக்கும்படி கூறி கடவுள் மோசேயை எகிப்துக்கு திருப்பி அனுப்பினார். பேச்சாற்றலுடன் தன்னால் பேச இயலாது  என்று மோசே உறுதியுடன் கூறியதைத் தொடர்ந்து, ஆரோன் இவருடைய செய்தித் தொடர்பாளாராக இருக்க அனுமதிக்கப்பட்டார். மேலும் எகிப்தியரை விடுவித்து வரும் வழியில் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கடவுளிடமிருந்து பெற்று இசுரயேலர்களுக்கு இவர் அளித்தார் எனவும் பாலைவனத்தில் அலைந்து திரிந்த 40 வருடங்களுக்குப் பிறகு, வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையாமலேயே இவர் இறந்தார் எனவும் விவிலியம் விவரிக்கின்றது.

பாரம்பரிய யூதமதத்தின் படி மோசேயின் காலம் கி.மு 1391–1271 வரை உள்ளதாக நம்பப்படுகின்றது; 4ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த புனித ஜெரோம் கி.மு 1592. என்றும் 17ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த உஷ்சர் கி.மு 1619 என்றும் இவரின் பிறப்பு ஆண்டினைக் கணிக்கின்றனர்.
மோசே
மோசே பாறையை அடித்தல்
இறைவாக்கினர்
பிறப்புகோசேன், கீழ் எகிப்து
இறப்புநேபோ மலை, மோவாப்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
இசுலாம்
கிறித்தவம்
திருவிழாகிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையில்: செப்டம்பர் 4
சித்தரிக்கப்படும் வகைபத்துக்கட்டளைகளோடு

விவிலியத்தில் மோசே
கிறிஸ்தவ விவிலியத்தின் யாத்திராகமம் நூலில் மோசேயின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இதன் படி மோசேயின் தந்தை அம்ராம் ஆவார் அவரது தாய் யோகெபேத் ஆவார். மோசே இஸ்ரவேலின் லேவி எனப்பட்ட குருத்துவ குலத்தில் பிறந்தார். மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தில் அவர்களது அடிமை வாழ்விலிருந்து விடுவித்து பாலைவனமூடாக இஸ்ரவேல் மக்களை கானான் நாடு நோக்கி (தற்போதைய இஸ்ரவேல் பலஸ்தீன நாடுகள் உள்ள பிரதேசம்) வழிநடத்தி சென்றார். மேலும் வழியில் கடவுள் சீனாய் மலை மீது இறைவனது திருச்சட்டத்தை கொடுத்தார். இச்சட்டமே இயேசு வரும் வரைக்கும் மாற்றமின்றி பயன்படுத்தப்பட்ட சட்டமாகும். மோசே வாழ்ந்த காலம் பற்றிய கணக்கீடுகளின் படி மோசே கி.மு. 13-16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

மோசே ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை முதன் முதலாக எடுத்து கூறியவராவார். இது கடவுள் மோசே மூலமாகக் கொடுத்த பத்து கட்டளைகளில் முதலாவதாகும். மோசே கிறிஸ்தவ,இஸ்லாம்,யூத,மற்றும் பஹாய் சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாகக் கொள்ளப்படுகிறார்.

பிறப்பும் குழந்தைப் பருவமும்
மோசே, இஸ்ரவேலர் எகிப்தில் பார்வோன் அரசனின் ஆட்சியில் அடிமைகளாக இருக்கும் போது ஒரு அடிமை பெற்றோருக்கு பிறந்தார். அச்சமயம் இஸ்ரவேலரின் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பார்வோன் எகிப்தில் ஒரு சட்டத்தைப் பிறப்பித்திருந்தான். அதன்படி இஸ்ரவேலருக்குப் பிறந்த சகல ஆண் குழந்தைகளும் நைல் நதியில் வீசி கொலை செய்யப்பட வேண்டும். விவிலியத்தில் இந்த பாராவோ யார் என குறிப்பிடப்படவில்லை. அனால் ஆய்வாளரின் கருத்துப்படி மூன்றாவது துட்டுமோஸ் (Thutmose III) அல்லது இரண்டாம் ரம்சீஸ் (Ramses II) என கருதப்படுகிறது.

மோசே பிறந்தவுடன் அவரது தாய், குழந்தை அழகுள்ளது எனக்கண்டு, குழந்தையை நதியில் எறிய மனதில்லாது ஆறுமாதம் வரை குழந்தையை வீட்டில் ஒளித்து வைத்தார். மேலும் குழந்தையை ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையைக் கிடத்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். குழந்தைக்கு என்ன நடக்கும் என்பதை அறியும்படி அதன் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் நீராட வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் இருந்தார்கள். இளவரசி நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள் பிள்ளை அழுதது அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது அடிமைகளாக இருக்கும் இஸ்ரவேல் பிள்ளைகளில் ஒன்று என ஊகித்துக்கொண்டாள்.

அப்பொழுது இதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் தமக்கை பார்வோனின் மகளை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி இஸ்ரவேல் பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா? என்றாள். அதற்கு இளவரசி இணங்கவே அவள் போய் குழந்தையின் தாயையே அழைத்துக் கொண்டுவந்தாள். பின்னர் இளவரசி குழந்தயை அவளிடம் கொடுத்து குழந்தை பால் மறக்கும் வரை வளர்க்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்காகச் சம்பளமும் கொடுத்தாள்.அப்படியே குழந்தை தன் சுய தயிடமே வளர்ந்தது. பிள்ளை பெரியவனானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடத்தில் கொண்டுபோய் விட்டாள்.

மோசே பிறப்பின் விவிலியப் பதிவு, அவருடைய பெயருக்கான குறிப்பிடத்தக்க விளக்கத்தை ஒரு நாட்டுப்புற சொற்பிறப்பியல் விளக்கமாக வழங்குகிறது. அரசருடைய மகளான இளவரசிக்கு இவர் மகனாகிய போது மோசே என்ற பெயரை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. செங்கடல் தண்ணிரில் இருந்து வெளியே எடுத்த காரணத்தால் அவனை நீரிலிருந்து எடுத்தேன் என்று பொருள்படும்படி, குழந்தைக்கு மோசே என்று பெயரிட்டாள்.

கிறித்தவத்தில்
விடுதலைப்பயணம் விடுத்து பிற பழைய ஏற்பாடு நூல்கள் அனைத்தயும் விட மோசே புதிய ஏற்பாடு நூல்களில் அதிகம் குறிக்கப்படுகின்றார். கிறித்தவத்தில், இவர் இறை சட்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றார். இது இயேசு கிறித்துவின் போதனைகளில் வெளிப்படுகின்றது. புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் இயேசுவின் நற்செய்தியினை விளக்க இயேசுவின் செயல்களையும் மோசேயின் வார்த்தைகளையும் அடிக்கடி ஒப்புமை படுத்தியுள்ளனர். திருத்தூதர் பணிகள் 7:39–43, 51–53,இல் இசுரயேலரின் மூதாதையர் மோசேவுக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளியதும் கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தியதும் இயேசுவின் நற்செய்தியினை ஏற்க மறுப்பவரோடு ஒப்பிடப்படுகின்றது.

இயேசுவின் போதனைகள் பலவற்றிலும் மோசே இடம்பெற்றுள்ளார். யோவான் நற்செய்தி 3ஆம் அதிகாரத்தில், பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவருமான நிக்கதேமோடு உரையாடுகையில் "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். என்று குறிப்பிடுகின்றார்.

மத்தேயு நற்செய்தி 17, மாற்கு நற்செய்தி 9, மற்றும் லூக்கா நற்செய்தி 9, ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் எலியாவுடன் மோசேவும் இயேசுவோடு பேசுவதாக அமைந்துள்ளது. பிற்கால கிறித்தவர்கள் மோசேயின் வாழ்வோடும், இயேசுவின் வாழ்வோடும் பல ஒப்புமைகளைக்கண்டனர். இயேசுவின் பிறப்பின் போது நடந்த மாசில்லா குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து இயேசு தப்பித்ததும், மோசேயின் பிறப்பின் போது குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து மோசே தப்பித்ததும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை மற்றும் லூதரனியத்தில் இவரின் விழா நாள் செப்டம்பர் 4 ஆகும். அர்மேனிய திருத்தூதர் திருச்சபையில் இவரின் விழா நாள் ஜூலை 30 ஆகும்.

மொர்மனியத்தில்
மற்ற கிறித்தவப் பிரிவுகளைவிடவும் பின்னாள் புனிதர் இயக்க மரபினைச் சேர்ந்த மொர்மனியத்தில் பல கூடுதல் நம்பிக்கைகள் உள்ளன. இவர்கள் விவிலிய விவரிப்பினை ஏற்றாலும், அதோடு, மோசே இறக்காமல் விண்ணகம் சென்றதாகவும் நம்புகின்றனர். மோசேயின் புத்தகங்கள் என்னும் நூலையும் தங்களின் புனித நூலாகக்கருதுகின்றனர். இந்த நூலை பிற கிறித்தவ பிரிவினர் திருமுறையாக ஏற்பதில்லை.

இரண்டாம் யோசப்பு இசுமித்து மற்றும் ஆலிவர் கௌடரி ஏப்ரல் 3, 1836 அன்று மோசே மகிமையில் அவர்களுக்குக் காட்சியளித்ததாகவும் அவர்களிடம் பூமியின் நான்கு பாகங்களில் உள்ள இசுரயேலரினை கூட்டிச்சேர்க்கவும், மற்றும் வடக்கு நிலத்தில் வாழும் பத்து பழங்குடியினரை வழிநடத்தவும் சாவிகளை அவர்களிடம் அளித்ததாகக் கூறியுள்ளனர்.

இசுலாமில்
திருக்குர்ஆன் அதிகமுறை குறிப்பிடப்பட்டுள்ள நபர் மோசே ஆவார். நபிமார்கள் அனைவரிலும் இவரின் வாழ்வே அதிகம் சித்தரிக்கப்படுள்ளது. மோசேவின் பெயர் குர்ஆனில் 502 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. 49-61, 7.103-160, 10.75-93, 17.101-104, 20.9-97, 26.10-66, 27.7-14, 28.3-46, 40.23-30, 43.46-55, 44.17-31, மற்றும் 79.15 -25 பத்திகளில் மோசே இடம்பெற்றிருப்பதைக் காணலாம். . மோசேயுடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் பெரும்பாலானவை விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன.

பகாய் சமயத்தில்
பகாய் சமயத்தில் மோசே கடவுளின் தூதராக கருதப்படுகின்றார். மோசேக்கு இச்சமயத்தாரால் கொடுக்கப்படும் ஒரு அடைமொழி கடவுளோடு உரையாடுபவர் என்பது ஆகும். பகாவுல்லாவின் வெளிப்படுத்துதலுக்கு மோசே வழிவகுத்தார் என இவர்கள் நம்புகின்றனர். அப்துல்பகா போன்ற பகாய் சமயத்தின் முக்கிய நபர்கள் ஆபிரகாமைப் போலவே மோசேவும் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கவில்லை என்கின்றனர். ஆனால் கடவுளுடைய உதவியால் மோசே பல அரிய சாதனைகளை நிகழ்த்தியவர் என்பதை ஏற்கின்றனர். வனாந்தரத்திலே ஒரு மேய்ப்பனாக இருப்பதாக மோசே விவரிக்கப்படுகிறார். பகாவுல்லாவிற்கும் அவரது இறுதி வெளிப்பாட்டிற்கும் வழிகாட்டியாகவும், சத்தியத்தின் ஆசிரியராகவும் மோசே விளங்கினார். இவருடைய போதனைகள் அவருடைய காலத்தின் பழக்கவழக்கத்திற்கு இசைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இறப்பு
மோசே மரணமடைந்தபோது 120 வயதுடையவராக இருந்தார்" இன்றுவரை அவரது எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இறக்கும் வரை இவருடைய கண் மங்கிப்போகவில்லை, அவருடைய பலமும் குறைவுபடவில்லை. 120 வயதுவரை நீங்கள் வாழலாம்" என்ற சொற்றொடர் யூதர்களிடையே பொதுவான ஆசீர்வாதமாக மாறியுள்ளது.

மேற்கோள்கள்
  •  Maimonides, 13 principles of faith, 7th principle
  •  Deuteronomy 34:10
  •  "Princeton University Press Press Reviews, retrieved 6th June 2009". Press.princeton.edu. 2011-11-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03.
  •  The Quest for the Historical Israel: Debating Archeology and the History of Early Israel, 2007, Society of Biblical Literature, Atlanta, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-277-0.
  •  John Van Seters, "The life of Moses", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-390-0112-X
  •  Exodus 1:10
  •  Douglas K. Stuart (15 June 2006). Exodus: An Exegetical and Theological Exposition of Holy Scripture. B&H Publishing Group. p. 110-113.
  •  Exod. 4:10
  •  Seder Olam Rabbah[Full citation needed]
  •  ஜெரோமின் Chronicon (4th century)
  •  Annals of the World, 1658
  •  Naomi E. Pasachoff, Robert J. Littman, A Concise History of the Jewish People, Rowman & Littlefield, (1995) 2005 p.5.
  •  Great Synaxaristes: (கிரேக்கம்) Ὁ Προφήτης Μωϋσῆς. 4 Σεπτεμβρίου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
  •  "About Mormons". About Mormons. Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2010-03-02.
  •  "The Book of Moses". Lightplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2010-03-02.
  •  The Doctrine and Covenants 110:11
  •  Annabel Keeler, "Moses from a Muslim Perspective", in: Solomon, Norman; Harries, Richard; Winter, Tim (eds.), Abraham's children: Jews, Christians, and Muslims in conversation, by . T&T Clark Publ. (2005), pp. 55 – 66.
  •  திருக்குர்ஆன் 28:7
  •  Historical Context of the Bábi and Bahá'í Faiths
  •  Paradise and Paradigm: Key Symbols in Persian Christianity and the Baháí̕ Faith, Christopher Buck – 1999
  •  The Bahá'í: The Religious Construction of a Global Identity – Page 256, Michael McMullen – 2000
  •  McMullen, Michael (2000), The Bahá'í: The Religious Construction of a Global Identity, p. 256