அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, June 11, 2020

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள் 

இத் தகவல் Oxford பல்கலைக்கழகம் மாணவர் ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ள தகவல்,..
1.இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் 
எடை-150 கிலோ
நீளம்-15 அடி
அகலம்-8 அடி
2.சரீர்த்தில் அறையப்பட்ட ஆணியின்:
நீளம்-8 அங்குலம்
அகலம்-3/4 அங்குலம்
3.இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:-
5 அடி 11 அங்குலம்
அவருடைய எடை: 85 கிலோ
இயேசுவின் பாடுகளை பற்றி:
"இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3 முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்". 17மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். 
அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன. அவருடைய தலையை கிழித்து 17 முட்கள் உள்ளே சென்றன. அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது. இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50 குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்.
யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான்15 அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி கிபி 30 ஆம் ஆண்டு ஏப்ரல்7 ஆம் தேதியிலே மரித்தார்.
------------------------------------------
சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதின் அர்த்தம்;
I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின் பொருள்: “நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா”. மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்
------------------------------------------
The following are the informations published by the Research Scholars of OXFORD University....
THE RARE INFORMATIONS OF JESUS, HIS SUFFERINGS AND CROSS...
1. CROSS :
Weight = 150 kg
Length = 15 feet
Breadth = 8 feet
2. NAILS :
Thickness = 3/4 inch
Length = 8 inch
3. JESUS :
Height = 5 ' 11 inch
Weight = 85 kgs
Information on Jesus's Sufferings....
JESUS stumbled and fell to the ground 3 times while carrying HIS cross to Golgotha. HE was very thirsty and HE suffered for 17 hours longing for water. There were 5480 wounds all over in HIS body. There were 150 deep wounds on HIS back alone. 17 Thorns pierced HIS head. HE shed 6 . 5 litres of blood. 350 Soldiers and 50 Horsemen dragged JESUS wiping, beating on the streets of Jerusalem.
According to JEW's Calendar.. JESUS dird on.. Ak Aboorve Konjeetha 785 , Nisaan 15. According to our Calendar JESUS DIED on April 7.
The meaning of the Latin Word written on the cross INRI..
I - IESUS
N - NAZARENE
R - REXO
I - IDONEUS
Means... JESUS the Nazarene the KING of JEWS..LUKE a Doctor, certified the DEATH OF JESUS.

சிலுவை மரணமும் புனித வெள்ளியும்:

சிலுவை மரணமும் புனித வெள்ளியும்: 

ஒரு வரலாற்றுப் பார்வை! வரலாற்றில் சிலுவை ஒரு அவமானத்தின் சின்னம்! கொடூர மரண தண்டனையின் சின்னம். உலக வரலாற்றில் சிலுவை.

வரலாற்றில் சிலுவை ஒரு அவமானத்தின் சின்னம்! கொடூர மரண தண்டனையின் சின்னம். உலக வரலாற்றில் சிலுவை மரணம் என்பது மரண தண்டனைகளின் உச்சக்கட்ட அவமான தண்டனை. குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெர்சியா நாட்டினரால் அறிமுகம் செய்யப் பட்டதாக வரலாற்று ஆய்வுகளிலிருந்து அறிகிறோம். ரோமானியர்கள் இந்த தண்டனை முறையை பிற நாட்டு குற்றவாளிகளை தண்டிக்க கி.மு. முதல் நூற்றாண்டு முதலே பயன்படுத்தினர். குற்றவாளிகளை ஆணிகள் அல்லது கயிறுகளால் நேராக நடப் பட்ட கம்பத்தில் கட்டி தொங்கவிட்டு, மூச்சு திணறடித்து கொல்வதே இந்த தண்டனை முறை. மேற்கத்திய நாடுகளில் துவக்கத்தில் தவறு செய்யும் அடிமைகளை கொலை செய்யவே இந்த தண்டனை பயன்படுத்தப்பட்டது என்பதும் வரலாறு. ஸபார்டகஸின் வரலாற்று கதையிலிருந்தும் நாம் இதை தெரிந்து கொள்ளலாம். பின்னர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களும், தேச துரோக செயல்களில் ஈடுபட்டவரும் சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டனர்

இப்படி சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், பொதுவாக அதிலேயே தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பறவைகள், எலிகள் போன்றவை கடித்து தின்னும். சிலுவை மரணம் வழங்கப்படும் இடம் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் நிறைந்ததாகவே காட்சி அளிக்கும். இயேசுவும் ரோமானிய மன்னனுக்கு எதிராக தன்னை யூதரின் அரசன் என கூறிக்கொண்ட கலக்கார தேச துரோகி என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே சிலுவையில் அறையப்பட்டார். அவமானத்தின் சின்னமான சிலுவை இயேசு என்னும் புரட்சியாளன் ஒருவரால் புனிதப்படுத்தப்பட்டது. பிற்கால வரலாற்றில் ஒரு சில மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடுகளை எதிரிகளின் தாக்குதலிலிருந்தும் கைப்பற்றுதலிருந்தும் காத்துகொள்ள தொடுத்த உரிமைப் போர்களை கூட சிலுவைகளை ஏந்தி போரிட்டு 'சிலுவைப் போர்கள்' என அழைக்கபடும் அளவிற்கு அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை ஒரு புரட்சியாளனால் புனிதப்படுத்தப்பட்ட நாள் தான் புனித வெள்ளி! இயேசு என்கிற மாபெரும் புரட்சியாளன் செய்த குற்றமென்ன? எதற்காக கொடூர சிலுவை மரண தண்டனை? ரோமானிய பேரரசின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பாலஸ்தீன நாட்டில் பிறந்து வளர்ந்தவர் இயேசு. தான் வாழ்ந்த யூத சமூகத்தில் நிலவிய அநீதிகளை சாடி ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமூக நீதிக்காக குரல் கொடுத்தார். கடவுளின் பெயரால் மக்களை அடக்கி ஆண்ட யூத சமயத் தலைவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். மக்கள் நடுவே மதிப்பு மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட அவர்களின் வெளிவேடத்தை மக்கள் மத்தியில் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே என அம்பலப்படுத்தினார். நல்லவர்களாக நடிக்கும் சமயத் தலைவர்களை மக்கள் பின்பற்ற வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். மனித மாண்பை குலைக்கும் சட்ட ஒடுக்குமுறைகளை வன்மையாக கண்டித்தார். தன் தவ வலிமையால் பெற்றிருந்த வல்லமையால் பாவிகளாக கருதப்பட்ட புறக்கணிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சுகம் அளித்து புதுவாழ்வு அளித்தார். இதன் காரணமாக இயேசுவை பின்தொடர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதை விரும்பாத யூத சமயத் தலைவர்கள் அவரை கொலை செய்ய வழி தேடினர். பாலஸ்தீன் நாடு ரோமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்நாட்டு மக்கள் அனைவரையும் யூத சமய குருக்களே நேரடியாக ஆட்சி செய்தனர். யூதர்களின் கோவில் இருந்த எருசலேம் உள்ளடங்கிய யூதேயா பகுதியை சமய குருக்கள் அடங்கிய தலைமைச் சங்கம் என்ற அமைப்பே ஆட்சி செய்தது. அங்கு வரி வசூல் செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநர் பிலாத்து என்பவரிடம் இருந்தது. யூதர்களின் பாஸ்கா என்னும் விழாவுக்கு முந்தைய வியாழக்கிழமை இரவில் தான் இயேசு கைது செய்யப்பட்டார். பாஸ்கா விழா காலத்திலும் இரவு நேரத்திலும் ஒருவரை கைது செய்யக்கூடாது என்பது யூத சட்டம். ஆனால் மக்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் இயேசுவை கைது செய்வதற்காக, அவரது சீடரான யூதாசுக்கு பணம் கொடுத்து காட்டிக் கொடுக்க செய்து இயேசுவிடம் இரவு நேரத்தில் விசாரணை என சட்டத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய யூத தலைமைச் சங்கம் இயேசுவை கொலை செய்யும் நோக்கில் தம்மை இறைமகன் என்றும் யூதர்களின் அரசன் என்றும் கூறியதாக குற்றம் சாட்டி அவரை ரோமானியருக்கு எதிரான கலகக்காரராக சித்தரித்தனர். சட்டம் ஒழுங்கு ரோமானியர் கையில் இருந்ததால், இயேசுவைக் கொலை செய்வதற்கான அனுமதியைப் பெற ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர். இயேசு மீது சுமத்தப்பட்ட குற்றம் பெரிதாக தெரியவில்லை என்பதால் அவரை விடுவிக்க பிலாத்து வழி தேடும் போது அவரை விடுதலை செய்தால் ரோமானிய மன்னன் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது என்ற மிரட்டல் மூலம் பிலாத்துவை அடிபணியச் செய்தனர் யூத சமயத் தலைவர்கள். அவர்களது ராஜதந்திரத்தால், குற்றமற்ற இயேசுவை ஒரு களவனைப்போல் சிலுவையில் அறைந்து கொல்வதற்கான தீர்ப்பை பெற்றனர். சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, அவமானச் சின்னமாய் சிலுவை சுமந்து கொண்டு கொல்கொதா என்கிற குன்றுக்கு சென்றார் இயேசு. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், கொலைக்களம் நோக்கி குறுக்கு கம்பத்தை சுமந்து செல்வார்கள். நேர் கம்பம் கொலைக்களத்தில் முன்னதாகவே நடப்பட்டிருக்கும். செல்வாக்குள்ள ஒரு சிலரை தவிர்த்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆடையின்றி நிர்வாணமாகவே சிலுவையில் அறையப்பட்டனர்.அவர்களது உடல், கயிறுகள் மற்றும் ஆணிகளால் சிலுவையோடு பிணைக்கப்பட்டன. முழு உடலின் எடையையும் சிலுவையில் அறையப்பட்டவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால், மூச்சுத்திணறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து, தாகம் ஏற்பட்டு, சாவுடன் போராடுவதே சிலுவை தண்டனையின் உச்சகட்ட வேதனை. இத்தகைய கொடுமையான ரண வேதனைகளுக்கு மத்தியிலும் அனைத்தையும் அமைதியாக சகித்துக் கொண்ட அவதாரபுருஷனான புரட்சியாளன் இயேசு சிலுவையில் மரணிக்கும் முன்பு "தந்தையே இவர்களை மன்னியும்"என்று தன் எதிரிகளுக்காக கடவுளிடம் மன்றாடியதாக காண்கிறோம். இறைவனின் சித்தம் நிறைவேற தான் மனமுவந்து ஏற்றுக்கொண்டு வெள்ளியன்று தன் மனித மரணத்தால் புனிதமடையச்செய்த சிலுவை மரணத்தை நினைவு கூறும் நாள் தான் புனித வெள்ளி!

சிலுவை நமக்குத் தேவை :

சிலுவை நமக்குத் தேவை :
“சிலுவையிலே தான் மீட்சியுண்டு! தேடும் வானக மாட்சியுண்டு!
சிலுவை நம்மை தீமைகளிலிருந்தும், தீயோனிடமிருந்தும் நம்மை பாதுகாக்கும் கருவி! சிலுவை மீட்பின் சின்னம்! இந்த சிலுவையில்தான் நம் மாபரன் இயேசு விலைமதிப்பில்லாத தன் திருரத்தத்தை அதுவும் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்மை மீட்டார். இயேசு ஆண்டவரால் நாம் மீட்பின் பரிபூரண பலனை அனுபவிக்கின்றோம்.

இந்த மீட்பின் சின்னத்தை நம் இல்லங்களில், நம் ஸ்தாபன்ங்களில் வைக்க வேண்டும். அஞ்சக்கூடாது. சிலர் வீடுகளில் சிலுவை வைக்கக்கூடாது, கஷ்ட்டங்கள் அதிகம் என்று மூட நம்பிக்கையால் நமக்கும், நம் ஆண்டவருக்கும் உள்ள உறவை கேள்விக்குறியாக்குகிறார்கள். மீட்பின் சின்னத்தை வீடுகளில் வைக்க்கூடாதா? இது ஏதோ வினோதமாக இருக்கிறது.
நம் அந்தோனியார் “சிலுவை" அடையாளத்தை வரைந்து பேயை துரத்தினார். அவர் மட்டுமல்ல நம் சவேரியார், சிலுவை அருளப்பர் போன்ற பல புனிதர்கள். புனிதர்கள் சொருபங்களைப் பார்த்தால் சிலுவையின் மகிமை புரியும் ஏனென்றால் அவர்கள் கரங்களில் தாங்கி நிற்பார்கள், சில புனிதர்கள் தங்கள் மார்போடு சிலுவையை அனைத்துக் கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் சிலுவை இல்லாமல் புனிதம் இல்லை. அதை அவர்கள் கண்டுகொண்டதால்தான் சிலுவையைவிட்டு ஒரு நிமிடம் கூட பிரியமாட்டார்கள்.

நாம் பக்தியோடு சிலுவை அடையாளம் வரைந்தால் 50 நாட்கள் பரிபூரன பலன் உண்டு. அதுவும் துறவிகள், துறவரசபையினர் தவம் செய்து பெற்ற பரிபூரண பலனை நாம் பக்தியுடன் பாவமில்லாமல் வரையும் சிலுவை அடையாளத்தால் பெறலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் நாம் கொட்டாவி விடும்போது கூட நம்மை சிலுவை அடையாளம் வரைய வைத்துள்ளார்கள்.

ஆகையால் மீட்பின் அடையாளமான சிலுவைவை துணிச்சலாக பெரிதாக தாரளமாக நம் இல்லங்களில் வைக்கலாம். அதைப்பார்த்தால் அலகை நம் இல்லங்களில் நுழையமாட்டான்.
இன்னொரு சிலுவை நமக்கு அன்றாடம் வரும் துன்பச்சிலுவைகள். அதை நாம் மகிழ்ச்சியுடன் ஏன்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இயேசு சுவாமியே சொல்கிறார் இடுக்கான வழிகளில் நுழைபவன்தான் விண்ணரசில் நுழைவான். மேலும் சொல்கிறார், “என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும் “
லூக்காஸ் 9 : 23
“தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது." லூக்காஸ் 14 : 27
சிலுவை இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. நம் துன்பச் சிலுவைகள் இயேசுவை அடையாளம் காட்டும். இயேசுவை புரிந்துகொள்ள உதவும்; அவரை தேடச்சொல்லும்; அவரை நேசிக்க வைக்கும். நம் பாவத்திற்கு பரிகாரமாக நமக்கு வரும் சிலுவைகளை ஒப்புக்கொடுக்க வைக்கும், நம் வாழ்வில் நாம் அன்றாடம் சின்ன சின்ன சிலுவைகளை சுமப்பதால் நம்மை சுமப்பவருக்கு சின்ன சின்ன அன்பு காணிக்கைகளை கொடுக்க முடியும். சில சிலுவைகள் மனிதர்கள் உருவில் வரலாம்.

பிரச்சனைகள் உருவில் வரலாம். அசவுகரீக உருவில் வரலாம். நோய்கள் உருவில் வரலாம் ( வைத்தியம் செய்துகொண்டே சுமக்கலாம்) மழை, வெயில், மின்வெட்டு, பஸ்பயனம், உடல் வலி, வறுமை, கஷ்ட்டங்கள், வேதனை என்று எந்த உருவில் வேண்டுமானாலும் வரலாம்.

ஆகையால்  நமக்கு வரும் துன்பங்களை கண்டு கவலைப் படக்கூடாது கலங்க கூடாது. அவருக்குத்தெறியும் நம் தாங்கும் திறன் அதற்கு மேல் அவர் கொடுக்கமாட்டார்.

அவற்றை நமக்கே புண்ணியமாக மாற்றி தருவார். எப்படிப்பார்த்தாலும் சிலுவை நமக்கு நல்லது மற்றும் தேவையானது. ஆகையால் சிலுவையை, சிலுவைகளை நேசிப்போம்; விண்ணகத்திற்கு நம் டிக்கெட்டை ரிசர்வ் செய்வோம். ஏனென்றால், சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு.

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே ! புகழ் மரியாயே வாழ்க !

சிலுவை: ஒரு தோழமையின் இணைப்பு…!

சிலுவை: ஒரு தோழமையின் இணைப்பு…!
எண்21:4-9; பிலி2:6-11; யோவா3:13-17


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே.  நாம் திருச்சிலுவைக்கு மதிப்பும் வணக்கமும் அரவணைப்பும் கொடுப்பதன் வழியாக இறைவனை நம் அன்றாட வாழ்க்கை எதார்த்தங்களில் சந்தித்து, அவரோடுள்ள தோழமை இணைப்பை கொண்டாடவேண்டும். கிறிஸ்துவத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனை அடையாளம் கண்டு கொள்ளும் அடையாளமாக சிலுவை என்றும் இயங்கட்டும். நாம் கொண்டாடும் இன்றைய திருப்பலி நாம் உற்றுநோக்கும் சிலுவை ஒரு தோழமையின் இணைப்பு என்ற இயேசுவின் பங்கெடுப்பை நம்மில் என்றும் வெளிப்படுத்தட்டும். 

சிலுவையை நாம் நம்புகிறேன் ஆனால் நான் விரும்பவில்லை…….
சிலுவையை நான் தொலைவிலிருந்தே காண விரும்புகிறேன்……
சிலுவை என் அருகில் வேண்டாம் அது ஒரு கலக்கத்தை தருகுிறது……. 
இத்தகைய பதில்கள் சிலுவையின் வரலாற்று உண்மையை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை. நாம் சிலுவை வாழ்வை முழுமையாக வாழவில்லை. சிலுவைக்கு நிறைவாக சாட்சிபகரவில்லை என்பதை தெளிவாக்குகிறது. இதற்கு காரணம் இன்னும் சிலுவையை நாம் ஒரு முற்சார்பு எண்ணத்தோடு காணுவதாலும் அச்சிலுவையில் அவமானத்தோடு துன்பங்களோடு இறக்கின்ற இயேசுவை மட்டுமே காணுவதாலே எனலாம். திருச்சிலுவை மகிமையின் மாட்சியின் திருவிழா என ஒருவெற்றியின் மீட்பின் விடுதலையின் புதுவாழ்வின் கருவியாக அடையாளமாக காண நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

நம்மை சுற்றிலும் எங்கும் வன்முறை கொலைகள் போர்கள் இவைகளுக்கு மத்தியிலே எவ்வாறு சிலுவை வெற்றியை நினைவுபடுத்தமுடியும். உடைமைகளை வீடுகளைவிட்டு வெளியேறுங்கள் அல்லது எங்கள் மதத்திற்கு மாறுங்கள் இல்லையென்றால் சாகத்தாயராகுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று கொடூராமாக வெளியேற்றப்படும் கிறிஸ்தவர்கள் இன்று ஈராக்கில் அவதிப்படும் பொழுது இரண்டு பத்திரிகையாளர்களின் தலைவெட்டப்பட்டதை நாம் காண்கின்றபொழுது பல அருட் பணியாளர்கள் அருட்சகோதிரிகள் கடத்தப்பட்டிருக்கும் பொழுது எவ்வாறு சிலுவையை ஒரு விடுதலையின் கருவியாக அடையாளமாக உற்றுநோக்க முடியும்?

நாம் பெரியவெள்ளி அன்று திருச்சிலுவைக்கு வணக்கம் தெரிவிப்பதன்மூலம் இயேசுவின் பாடுகளை சிலுவை மரணத்தை நினைவுடுத்தி நம் துயரங்களையும் அவரோடு இணைத்துக்கொள்கிறோம். ஆனால் இன்றைய திருவிழா அச்சிலுவை ஒரு மகிமையின் வெற்றியின் கருவி என நாம் கொண்டாடுகிறோம். காரணம் இன்றைய நாள் இத்திருச்சிலுவை மீண்டும் அதிசய அற்புதவிதமாக கண்டெடுக்கப்பட்டதையும் இதன் வழியாக நம் வாழ்வு உயர்த்தப்பட்டதையும் மேலும் இதன் வழியாக இறை இயேசுவுக்கு நம்மிலுள்ள தோழமை இணைப்பையும் நினைவுபடுத்தவே இத்திருவிழா நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகம் எண்ணிக்கை புத்தகத்தலிருந்து நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இஸ்ராயேல் மக்களின் தொடர்பயணத்தையும் அத்தொடர்பயணம் அவர்களில் பல்வேறு இழப்புகளையும் வெறுப்புகளையும் தோல்விகளையும் மட்டுமே அதிகமாக கொணர்ந்தது இந்த கசப்பான அனுபவங்களினால் அவர்கள் பொறுமை இழந்து இறைவனுக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் அவர்கள் தீய பாம்புகளால் தாக்கப்பட இறைவனிடம் உயிருக்காக ஏங்கி வேண்டி உம்மை எங்கள் வாழ்வில் காண தவறிவிட்டோம் என கதற மோசே வழியாக வெண்கல பாம்பை ஏற்படுத்தி அதை உற்றுநோக்கும் பொழுது உயிர்பிழைப்பீர்கள் என்பது உண்மையாகிறது. இது இஸ்ராயேல் மக்கள் தங்களோடு பயணம் செய்த இறைவனை காண மறந்தபொழுது அவர்கள் வழிபட்ட பொய் கடவுள்களையும் அவர்களின் நம்பிக்கையற்றதனத்தையும் உணரச்செய்து அவர்கள் எண்ணம் என்றும் இறைவனை நோக்கியே இருந்தால் அவர்களோடு நீ என் உரிமை மக்கள் என்ற யாவே இறைவனின் பயணத்தை மாட்சியை வெற்றியை அவர்களுக்கு பெற்றுதரும் என நமக்கும் உணர்த்துகிறது. 

திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசக வரிகளில் “தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவம் ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.” என்பது வெறும் நிபந்தனையில்லா அன்பால் மட்டுமே இயேசு தோழமை உணர்வோடு தோள்கொடுத்து நம் அனைத்து போராட்ட வலிகளும் இனணந்திருப்பதை எடுத்து சொல்கிறார். சிலுவையை உற்றுநோக்கி நம்வாழ்வோடு நம்மை அரவணைத்த இயேசுவின் சிலுவை மரத்தை அரவணைக்க அழைக்கிறார். 

இன்றைய நற்செய்தியில் “தம்மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்” என்ற யோவானின் இறைவார்த்தைகள் இறைத்தந்தையின் முழுமையான அன்பினால் நம் மனிதநிலையில் இறை இயேசுவின் முழுமையான பங்கெடுப்பை ஈடுபாட்டை ஒற்றுமையான ஒன்றிப்பை எடுத்துரைக்கிறார். 

இறைவார்த்தைகள் மட்டுமல்லை சிலுவை வரலாறும் இயேசுவின் தோழமை இணைப்பை வெளிக்கொணர்கிறது. திருத்தூதர்கள் இயேசுவை நிக்கோதேமுவின் நிலத்தில் அடக்கம் செய்தபிறகு கல்வாரியில் இருந்த மூன்று சிலுவைகளையும் அருகாமையில் எங்கோ புதைத்தனர் எனவும் அது நான்காம் நூற்றாண்டுவரை மறைக்கப்பட்டிருந்தது எனவும் சொல்லப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் ஆண்டுகொண்டிருந்த புறஇனத்து அரசன் கான்ஸ்டன்டைன் உரோமை பதவிக்கு மாக்ஸ்னடைஸ் என்ற எதிரி அரசனை போரில் எதிர்கொள்ள தயங்கியபொழுது கிறிஸ்தவ உள்ளங்கள் கான்ஸ்டன்டைனை இயேசு இறைவனிடம் வேண்டி போரிட சொன்னபொழுது அதன்படி போரிட “இதன் அடையாளத்தினால் நீ வெற்றியடைவாய் என்ற வார்த்தைகளுடன் பிரகாசிக்கும் சிலுவையை மேகத்தில் கண்டதாகவும்” அதன் மூலம் வெற்றி அடைந்து 312-ல் அரசனாக பதவி ஏற்று திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக மாறி கிறிஸ்தவத்தை வெளிப்படையான அரச மதமாக ஆட்சி மதமாக அறிவித்தான். 

உரோமை அரச நிகழழ்வுகளில் போர் வீரர்களின் ஆயுத கருவிகளில் சிலுவை அடையாளம் உருவாக்க தோன்ற ஆணையிட்டான். இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில் 327-ல் செப்டம்பர் 13ம்தேதி கான்ஸ்டன்டைன் அன்னை ஹெலனாவின் ஆர்வத்தில் இயேசு சுமந்த திருச்சிலுயையை கண்டெடுத்ததை அதையே இன்றை திருவிழா நாள் நினைவுபடுத்துகிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துச்சொல்கிறது.. கண்டெடுக்கப்பட்ட மூன்று சிலுவைகளிலிருந்து தீராத நோயிலிருந்த ஒருவர் ஒரு சிலுவையை தொட்டு பூரணகுணம் பெற்றதினால் அது திருச்சிலுவையாக உயர்தப்பட்டு இயேசுவின் தோழமையின் இணைப்பை அன்றும் இன்றும் என்றும் நமக்கு  நினைவுபடுத்த இத்திருவிழா மகிமையின் வெற்றியின் விழாவாக வரலாற்று உண்மையை எடுத்துச்சொல்லும்; விழாவாக நிறைவாக கொண்டாடப்பட வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் இந்த உண்மை வரலாற்றை எடுத்துச்சொல்லி திருச்சிலுவையின் சக்தியை உடனிருத்தி இயேசுவின் தோழமை உணர்வை நம் பிள்ளைகள் எந்நாளும் நம்பி அனுபவிக்க பயிற்றுவிப்போம். 

இறையியலார்கள் சிலுவையே கிறிஸ்தவ படிப்பினை மற்றும் இறையியலின் மையமும் தொடக்கமும் ஆகும் என வலியுறுத்தி எழுதுகின்றனர். நம் பக்கம் இருக்க முடிவுசெய்த இறை இயேசுவின் உடனிருப்பு அவர் திருச்சிலுவை அனைத்து வழிகளில் தனித்து வேதனையுறும் இத்துயர மனங்களோடு தோழமையாகட்டும். 

கடந்த ஆறுவருடங்களுக்குமுன் நான் சகோதரர்களுக்கு பயிற்சியில் பொறுப்பாகயிருந்த சமயத்தில் பின்வரும் நிகழ்வு நடந்தது. ஒருநாள் ஒரு 70 வயது மதிப்பான பெரியவர் எங்கள் இல்லம் உள்ளே வந்து இங்கு கோயிலுள்ளதா நான் சிறிதுநேரம் அமைதியாக செபிக்க விரும்புகிறேன் என்று வினவினார். இங்கு சிறுபோயில் தான் என வழிநடத்தினேன். 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவர் ஒரு சிறிய சிலுவை கிடைக்குமா என்றார். நான் யாருக்கு உங்களுக்காக யாருக்காவது கொடுக்கவா என்றேன்.அவரோ தான் இந்துமதத்தை சார்ந்தவன் என்றும் அதுவும் பிராமணகுலத்தை சேர்ந்தவன் நான் ஒரு நல்ல அரச பதவியில் இருந்தேன் இப்பொழுது ஓய்வு பெற்றுவிட்டேன். தனிப்பட்ட குடும்ப நில உரிமை என்ற பல்வேறு பிரச்சனைகள் எனவும் தன்பிள்ளைகள் தன்னை வேண்டாம் என தனித்து விட்டதாகவும் கேன்சரினால் தன் மனைவி என்னை விட்டு தனிமையில் இருக்க விரும்புவதாகவும் எனச்சொல்லி தான் வெறுப்போடு மனஅழுத்ததோடு தற்கொலை எண்ணத்தோடு இருந்ததாகவும் நான் கிறிஸ்தவ பள்ளிகளில் படித்ததாகவும் அப்பொழுதிலிருந்தே சிலுவையை விரும்பி ஆர்வத்தோடு உற்றுநோக்கி பார்த்திருப்பதாகவும் இப்பொழுது சிலுவை கிடைத்தால் இயேசு அதன்மூலம் என்னோடு என் துயரங்களில் பங்கெடுக்கின்ற ஒரு தோழமை உணர்வை பெறுவேன் அது சக்தியை தரும் என்று பெற்று செனறார்; 

ஒரு இந்து மத சகோதரரின் பெரியவரின் ஆழமான நம்பிக்கை நம்மையும் திருச்சிலுவையின் தோழமை இனணப்பை நமக்கு என்றும் நினைவுபடுத்தட்டும். நாமும் உடைந்த ஏழ்மையான தனித்திருக்கும் வலியிலிருக்கும் விழுந்திருக்கும் உள்ளங்களுக்கு திருச்சிலுவை இயேசுவின் தோழமை உடனிருப்பு இணைப்பை பெற்றுதருவோம் – ஆமென்

சிலுவை உணர்த்தும் போதனை

சிலுவை உணர்த்தும் போதனை

புதிதாக ஒரு மூங்கில் செடி முளைத்து மண்ணை விட்டு வெளிவர 5 ஆண்டுகள் ஆகும். அந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மூங்கில் செடியானது ஒரு நாளைக்கு 2 அடி வீதம் உயரமாக வளர்ந்து மரமாகும். அதன்பிறகு அந்த மூங்கில் மரமானது தனது உயரத்தை தக்க வைத்து கொள்ள 5 ஆண்டுகள் வரை தனது வேர்களை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும். அதுபோல நாமும் நம்முடைய உறவுகளை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, சமூகத்தில் வியக்க வைக்கும் மனிதர்களாக இருப்போம்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் உண்மை கிறிஸ்தவர்களாக மாற வேண்டுமா? அப்படியானால் உங்கள் கருத்துகளில் சிலுவையை அணியாதீர்கள். மாறாக உங்கள் கருத்துகளை சிலுவையில் அணியுங்கள் என்றார் ஓஷோ. சிலுவை என்பது கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலம். கடவுள் ஒருவரே, மனிதர் அனைவருக்கும் சமம். 

மனித உறவில் தான் இறை உறவு வளர்கிறது என்பதே சிலுவை உணர்த்தும் ஆன்மிக சிந்தனை ஆகும். படுக்கை வசமான மரமும், செங்குத்தான மரமும் இணைகின்ற போது தான் சிலுவை தோற்றம் உருவாகிறது. அது முழுமை அடைகிறது. இதில் செங்குத்தாக இருக்கக்கூடிய மரம், இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துகின்றது. படுக்கை வசமான மரம் மனிதர்களோடு நாம் கொண்டுள்ள உறவை குறிக்கிறது. இங்கு இறையுறவும், மனித உறவும் சங்கமிக்கின்ற போது தான் சிலுவை முழுமை அமைகிறது.

கடவுள் ஒருவரே, வேறு கடவுள் உமக்கு இல்லாமல் போவதாக என்ற கிறிஸ்தவ விசுவாச கூற்றை இங்கு நினைவு கூறுவோம். படுக்கை வசமான மரம் உணர்த்த கூடிய செய்தி மாந்தர் அனைவரும் சமம். பிறப்பாலோ, வாழ்வாலோ யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக்கூடாது. கிறிஸ்துவுக்கு முன் அனைவரும் சமம். மனித உறவு இன்றி இறை உறவு சாத்தியமில்லை. இறை உறவின்றி மனித உறவு சாத்தியமில்லை என்பதே விவிலிய கருத்து. எனவே தவக்காலத்தில் இறை உறவோடு ஒன்றி வாழ்ந்து பயணிப்போம்.

-சகோதரி.அமலஅன்னை.

சிலுவை அன்றும், இன்றும், என்றும்

சிலுவை அன்றும், இன்றும், என்றும்
அருள்பணி இயேசு கருணாநிதி,மதுரை
 
யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:22-24)

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ஆர்க்கிமெடீஸ் ஒருநாள் என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் பால்வெளியில் நான் நிற்கக் கொஞ்சம் இடமும், நீண்ட நெம்புகோலும் கொடுங்கள். நான் இந்தப் பூமியின் இருப்பிடத்தை நகர்த்திக் காட்டுகிறேன்'. ஆனால் அன்று அதை அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை.

கல்வாரி என்ற இடத்தில் நின்று கொண்டு, சிலுவை என்ற நெம்புகோலால் அன்பை நோக்கி, மன்னிப்பை நோக்கி, தியாகத்தை நோக்கி பூமிப்பந்தை மாற்றிப் போட்டார் இயேசு.

எதற்காக தன் மகன் இயேசுவை கடவுள் சிலுவையில் அறையப்பட்டு இறக்க வேண்டும் என நினைத்தார்? ஒரு தந்தை எப்படி தன் மகனையே பலியாகக் கேட்டார்? சிலுவையில் இயேசு இறந்ததால் நம் பாவம் அழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலுவையில் இயேசு அறையப்பட்டபோது அங்கே அவர் கடவுளாக இறந்தாரா? அல்லது மனிதராக இறந்தாரா? கடவுளாக இறந்தார் எனில் அந்த நாளில் கடவுளின் முழுமைக்குக் குறைவு வருமே? மனிதராக இறந்தார் எனில் அவரோடு இறந்த மற்ற மனிதர்களைப் போலத்தானே அந்த இறப்பும் இருந்திருக்க வேண்டும்? இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு ஆலயம் சம்பந்தப்பட்டது. ஆலயம் சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு கல்லெறியே தண்டனை. பின் ஏன் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்? - இவைகள் எல்லாம் விடைதெரியா மில்லியன் டாலர் கேள்விகள்.

சிலுவை என்ற ஒரு எதார்த்தத்தை இறையியலாக மாற்றியவர் தூய பவுலடியார். யூதர்கள் வலுவின்மை எனவும், கிரேக்கர்கள் மடமை எனவும் நினைத்ததை கடவுளின் வல்லமை என்றும், கடவுளின் ஞானம் என்றும் எதிர்ப்பதங்களின் வாயிலாக சிலுவை இறையியலுக்கு அடித்தளமிடுகின்றார். பவுலடியாரின் இறையியில் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 2ஆம் அதிகாரத்தில் நிறைவு பெறுகிறது. 'கெனோசிஸ்' (வெறுமை) என்ற கிரேக்க வார்த்தையை மையமாக வைத்து இயேசுவின் வாழ்விற்கு சிலுவையின் வழியாக ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார்.

இன்று நாம் வாழும் உலகம் 'ஐக்கன்களின்' உலகம். ஒவ்வொன்றையும் குறிக்க, அடையாளப்படுத்த நாம் 'ஐக்கன்களை' வைத்திருக்கிறோம். 'எஃப்' என்றால் ஃபேஸ்புக், 'டி' என்றால் டுவிட்டர், 'கடித்த ஆப்பிள்' என்றால் ஆப்பிள் தயாரிப்புகள், 'நான்கு ஜன்னல்கள்' என்றால் விண்டோஸ், 'கை உயர்த்தும் பச்சை மனிதன்' என்றால் ஆண்ட்ராய்ட், 'எம்' என்றால் மோட்டோரோலா, 'எம்' என்றால் மேக்டொனால்ட்ஸ் என ஐக்கன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வகையில் 'கிராஸ்' என்பதும் இன்று ஒரு ஐக்கன். மருத்துவமனையில், ஆம்புலன்சுகளில், முதலுதவிப் பெட்டிகளில், பள்ளிகளில், ஆலயங்களில், கொடிக்கம்பங்களில், கால்குலேட்டர்களில், பெண்களின் சங்குக் கழுத்துக்களில், மோதிர விரல்களில் என எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அதிகமாக நாம் பார்த்து அதன் பொருளை மறந்துவிட்ட ஒரு ஐக்கன் தான் 'கிராஸ்'.

சிலுவைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்க முடியும். சிலுவை என்றால் இணைப்பு, சிலுவை என்றால் பிறரன்பு மற்றும் இறையன்பின் பிணைப்பு, சிலுவை என்றால் துன்பம், சிலுவை என்றால் கூட்டல் என தனிநபரைப் பொறுத்தே அர்த்தம் இருக்கின்றது.

இன்று திருச்சிலுவையின் மகிமை என்று சொல்லும் போது கூட்டத்தோடு சேர்ந்து நாமும் அதே போல சொல்லிவிட்டு வருவதற்குப் பதிலாக, 'இந்தச் சிலுவை என்றால் என்ன?' 'இந்தச் சிலுவை அடையாளம் எனக்குக் கற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது எனக்கு என்ன அர்த்தம் கொடுக்கும்?' 'சிலுவை என்றால் என்ன?' என்று இன்று நம்மை யாராவது கேட்டால் நாம் என்ன சொல்வோம்?'

சிலுவை அன்றும், இன்றும், என்றும் மறைபொருளாகவே இருக்கும்.