அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, June 20, 2024

புனித ஸ்தேவான் (Saint Stephen)

 புனித ஸ்தேவான் (Saint Stephen) (கிரேக்கம்: Στέφανος, ஸ்தேபனோஸ்), ண்டைய உரோமானியத் துறவி, கிறித்தவத்தின் முதல் இரத்தசாட்சி ஆவார்.

கிரேக்க மொழியில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார்.

இறப்பு

திருத்தூதர் பணிகளின் படி தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிறுத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர். (தி.ப 6:11)

விசாரணையின் போது, ஸ்தேவான் பின்வருமாறு கூறினார்.:

"இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" (தி.ப 7:56)

திருத்தூதர் பணிகள் 6 மற்றும் 7-ஆம் அதிகாரங்கள் இந்த விசாரணையை விவரிக்கின்றன.

இவர் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் தர்சு நகரைச்சேர்ந்த சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். ஸ்தேவானை துன்புறுத்திய போது யூதர்கள் எப்போது நேர்மையாளர்களை கொலை செய்வதாக அவர் சாடினார்:

"எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையம் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்." (தி.ப 7:52)

பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என்று சொல்லி உயிர்விட்டார்.

கல்லறை

கிபி 415-க்கு முன்னர் பல கோயில்கள் இவர் பெயரால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் இவரின் கல்லறையின் இடத்தை அறிந்தார் எவரும் இல்லை. எருசலேமிற்கு திருப்பயணம் செய்தபோது, லூசியன் என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின் படி இவரது கல்லறை எருசலேமிற்கு வடக்கு பக்கத்திலுள்ள காபார் கமாலா என்னும் ஊரில் இருப்பதாக நம்பப்படுகின்றது.

புனித தூர் நகர கிரகொரி (ஆயர்), பிரான்சில் உள்ள மெட்சு நகரில் ஒரு கோயில் கட்டி இவரது மீப்பொருட்களை பாதுகாத்தார்.  

புனித ஸ்தேவான்
மாட்சிமையில் புனித ஸ்தேவான்
ஓவியர்: கியாகோமோ கேவ்டன்
திருத்தொண்டர் மற்றும் முதல் இரத்தசாட்சி
இறப்புசுமார் கிபி 34
எருசலேம்
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவ பிறிவுகளிலும்
திருவிழா26 டிசம்பர் (மேற்கத்திய முறை)
27 டிசம்பர் (கிழக்கத்திய முறை)
சித்தரிக்கப்படும் வகைகற்கள், திருத்தொண்டர் உடை, தூப கலசம், நற்செய்தி நூல்
பாதுகாவல்சவப்பெட்டி செய்வோர், திருத்தொண்டர்கள், பீட சிறுவர், தலைவலிகுதிரைகள்; கொத்தனார்கள்; செர்பியா
தொகு
மறைபணியாற்றும் புனித ஸ்தேவான்

மகதலாவின் மரியா (Mary of Magadala)

 மகதலாவின் மரியா (Mary of Magadala) அல்லது மகதலேனா மரியாள் (Mary Magdalene, மேரி மக்தலீன்) புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார். இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மகதலாவின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, Lu 8:2 Mk 16:9 கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் Mark 16:9 ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு உயிர்த்தெழுந்த பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.

இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

நம்பிக்கையின் திருத்தூதர்:

திருத்தந்தை பிரான்சிஸ் சமீபத்தில் ஆற்றிய உரையில் மகதலா மரியாளை நம்பிக்கையின் திருத்தூதராக சுட்டிக்காட்டுகின்றார்.

புனித மகதலா மரியாள் திருதூதர்களுக்கு நற்செய்தியினை அறிவித்தது

"மகதலா மரியா, நம்பிக்கையின் திருத்தூதர் என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென்றார், காலியான கல்லறையை அவர் கண்டார், பின், இந்தச் செய்தியை, பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் சொல்வதற்காக அங்கிருந்து திரும்பினார் என, புனித யோவான் நமக்குச் சொல்கிறார். என்ன நடந்தது என்பதை இன்னும் புரியாதநிலையில், மரியா கல்லறைக்குச் சென்றார், அங்கே உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார், அவர், மரியாவை, பெயர் சொல்லி அழைக்கும்வரை, அவரை யார் என மரியா அறியாமல் இருந்தார். இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்தபின், இது அவர் அளித்த முதல் காட்சியாகும். இக்காட்சி, மிகவும் ஓர் ஆழமான தனிப்பட்ட நிகழ்வாக உள்ளது. இயேசு, மகதலா மரியாவிடம் நடந்துகொண்டதுபோன்று, நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். தம் பிரசன்னத்தால் நம்மை மகிழ்வால் நிரப்புகிறார். இயேசுவை நாம் சந்திக்கும்போது, அது நமக்குச் சுதந்திரத்தைக் கொணர்ந்து, வாழ்வை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு, நம் பார்வையைத் திறந்து வைக்கின்றது. அது, இந்த உலகை மாற்றுகின்றது மற்றும், இறவா நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது. உயிர்த்த ஆண்டவர், மரியாவிடம், என்னை பற்றிக் கொள்ளாதே, மாறாக, போய், தம் உயிர்ப்பின் நற்செய்தியை மற்றவருக்கு அறிவி என்று சொன்னார். இவ்வாறு, மகதலா மரியா, கிறிஸ்தவ நம்பிக்கையின் திருத்தூதராக மாறுகிறார். நாமும், இவரின் செபங்களின் வழியாக உயிர்த்த ஆண்டவரைப் புதிதாகச் சந்திப்போமாக. உயிர்த்த ஆண்டவர், நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார், நம் துன்பங்களை மகிழ்வாக மாற்றுகின்றார் மற்றும், அவர் உண்மையிலேயே உயிர்பெற்றெழுந்தார் என்பதை, நம் வாழ்வால் அறிவிப்பதற்கு நம்மை அனுப்புகிறார்."

அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலி (திருத்தூதர்களுக்கு திருத்தூதுரைத்தவள்) :

சமீபத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மகதலா மரியாளின் நினைவு நாளை அப்போஸ்தலர்களை போலவே திருவிழாவாக மாற்றினார். அதில் மகதலா மரியாளின் சிறப்பான அப்போஸ்தல பணியானது சுட்டிக்காட்டப்படுகிறது. "ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் " என்பதே கிறிஸ்தவ மறையின் தலையாய விசுவாசமும் நற்செய்தியும் ஆகும்(1 கொரிந்தியர் 15:14). அதை முதன் முதலில் உலகுக்கு அறிவித்தது ஒரு பெண். அவள் தான் மகதலா மரியாள். ஏதேன் தோட்டத்தில், வாழ்வு நிறைந்திருந்த நிலையில் ஏவாள் என்னும் முதல் அன்னை மனிதனுக்கு சாவினை கனி வழியாக அறிவித்தாள். கெத்சமணி தோட்டத்தில் , சாவும் துயரமும் நிறைந்திருந்த நிலையில் மகதலா மரியாள் என்னும் அன்னை மனிதனுக்கு வாழ்வினை நற்செய்தி என்னும் இயேசுவின் கனி வழியாக அறிவித்தாள். இதை புனித தோமா அக்குவினாரும் குறிப்பிட்டுள்ளார். புனிதர்களில் இத்தகு சிறப்பு பெயரை தாங்கியுள்ள ஒருவர் புனித மகதலா மரியாள் என்பது குறிப்பிடப்பட்டது.

இறை இரக்கத்தின் சாட்சி:

கெத்சமணி தோட்டத்தில் தம் அன்பர் இயேசுவை காணாத மகதலா மரியாள் கண்ணீர் வடித்தாள் என்று திருவிவிலியம் கூறுகின்றது . அவளின் அன்புக்கண்ணீரை புனித அன்ஸ்லம் "தாழ்ச்சியின் கண்ணீர் " என்று குறிப்பிடுகின்றார். மகதலா மரியாளின் அன்பால் கசிந்த கண்ணீரை கண்டு இரங்கிய கிறிஸ்து தன் உயிர்ப்பின் மகிமையில் அவளுக்கு தோன்றினார். தான் படைத்த படைப்பு, தன்னை படைத்தவரை அன்பொழுக தேடும் போது அன்பே உருவான இறைவன் ,எவ்வாறு தன்னை மறைத்துக் கொள்வார்? புனித பாப்பரசர் பெரிய கிரகோரியார் இதை முன்னிட்டே இறை இரக்கத்தின் சாட்சியென மகதலா மரியாளை கூறுகின்றார்.

மகதலா மரியா
சிலுவை அடியில் மகதலா மரியா
பிறப்புதகவலில்லை
இறப்புதகவலில்லை
எபேசி அல்லது மார்செலிஸ் பிரான்ஸ்
திருவிழாஜூலை 22
சித்தரிக்கப்படும் வகைநறுமணத் தைலப் பெட்டி, நீளமான கூந்தல்
பாதுகாவல்மருந்து செய்து விற்பவர்; தியான வாழ்வு வாழ்பவர்; மனம் மாறியவர்கள்; கையுறை செய்பவர்கள்; சிகை அலங்காரம் செய்பவர்கள்; பெண்கள், செய்த பிழைக்கு மனம் வருந்துபவர் இத்தாலியர் ;

இவர் உரோமன் கத்தோலிக்க திருச்சபைகிழக்கு மரபுவழி திருச்சபைஅங்கிலிக்கன் திருச்சபை ஆகியவற்றால் புனிதராக மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். லூதரன் திருச்சபைகளும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.

நம்பிக்கையின் திருத்தூதர்:

திருத்தந்தை பிரான்சிஸ் சமீபத்தில் ஆற்றிய உரையில் மகதலா மரியாளை நம்பிக்கையின் திருத்தூதராக சுட்டிக்காட்டுகின்றார்.

புனித மகதலா மரியாள் திருதூதர்களுக்கு நற்செய்தியினை அறிவித்தது


புனித தீத்து

 

புனித தீத்து (Titus) என்பவர் பண்டைக்காலக் கிறித்தவ சபையின் ஒரு தலைவரும் புனித பவுலின் துணையாளரும் ஆவார். இவரைப்பற்றிய குறிப்புகள் பவுலின் பல திருமுகங்களில் காணக்கிடக்கின்றன.


பவுலோடும் பர்னபாவோடும் தீத்து அந்தியோக்கியாவில் இருந்தார். பின்னர் அவர்களோடு எருசலேம் சங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றார். "பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் தீத்துவையும் கூட்டிகொண்டு பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்" (கலாத்தியர் 2:1) என்று பவுல் எழுதுகிறார். ஆயினும் தீத்துவின் பெயர் திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படவில்லை.

தீத்து யூத இனத்தைச் சாராத புற இனத்தார் என்று தெரிகிறது. அவர் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவையில்லை என்று பவுல் மிகக் கண்டிப்பாகக் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது: "என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" (கலாத்தியர் 2:3). கிறித்தவ நம்பிக்கையை ஏற்று வாழ்வதற்கு விருத்தசேதனம் தேவையில்லை என்றுதான் பவுல் வாதாடினார்.

தீத்து ஆற்றிய அறப்பணி
பவுல் எபேசு நகரில் கிறித்தவத்தை அறிவித்தபோது திமொத்தேயு மற்றும் தீத்து அவரோடு பணியாற்றினர். அங்கிருந்து பவுல் தீத்துவை கொரிந்து நகருக்கு அனுப்பினார். அந்நகரிலிருந்து காணிக்கை பிரித்து, எருசலேம் சபையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு தீத்து அனுப்பப்பட்டார். "எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்" என்று பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 8:6).

பவுல் மாசிதோனியாவில் பணிபுரிந்த போது தீத்து அவரிடம் சென்றார். கொரிந்து நகரில் திருச்சபை வளர்ந்து வந்ததை தீத்து பவுலிடம் எடுத்துக் கூறினார். அது பற்றி பவுல் இவ்வாறு கூறுகிறார்: "மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்த போது எங்களிடம் மன அமைதியே இல்லை. வெளியே போராட்டம், உள்ளே அச்சம்; இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார். அவரது வருகையால் மட்டும் அல்ல; நீங்கள் தீத்துவுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம்...நாங்கல் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்" (2 கொரிந்தியர் 7:5-8).

தீத்து கிரேத்து சபைக்குப் பொறுப்பேற்றல்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீத்துவின் பெயர் பவுல் சிறைப்பட்டதை ஒட்டியும், தீத்து கிரேத்து சபைக்குப் பொறுப்பேற்றது பற்றியும் வரும் குறிப்பில் மீண்டும் காணப்படுகிறது. "நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்" (தீத்து 1:5) என்று பவுல் தீத்துவுக்கு எழுதுகிறார்.

பவுல் உரோமையில் இருந்தபோது தீத்து தல்மாத்தியாவுக்குச் சென்றார் என்பதே தீத்து பற்றிய இறுதிக் குறிப்பு. "தேமா இன்றைய உலகப்போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்" (2 திமொத்தேயு 4:10) என்று பவுல் குறிப்பிடுகின்றார்.

இறப்பு
தீத்துவின் இறப்புப் பற்றிய குறிப்பு புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை.

மரபுப்படி, பவுல் தீத்துவை ஆயராகத் திருநிலைப்படுத்தி, கிரேத்து தீவின் கோர்ட்டின் நகர ஆயராக அவரை நியமித்தார். தீத்து கி.பி. 107இல் தமது தொண்ணூற்று ஐந்தாம் வயதில் இறந்தார்.

திருவிழா
தீத்துவின் திருவிழா 1854இல் திருவழிபாட்டு நாள்குறிப்பில் சேர்க்கப்பட்டது. அப்போது அது பெப்ருவரி 6ஆம் நாள் கொண்டாடப்பட்டது. 1969இல் உரோமன் கத்தோலிக்க திருச்சபை தீத்துவின் திருவிழாவை சனவரி 26ஆம் நாளுக்கு மாற்றியது. இவ்வாறு, சனவரி 25ஆம் நாள் புனித பவுல் திருவிழாவும், அதற்கு அடுத்த நாள் பவுலோடு நெருங்கி ஒத்துழைத்துப் பணிசெய்த அவருடைய சீடர்களாகிய திமொத்தேயு மற்றும் தீத்து ஆகிய இருவரின் திருவிழாவும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்க நற்செய்தி லூத்தரன் சபை திமொத்தேயு, தீத்து ஆகிய இருவரோடு பவுலின் மற்றொரு சீடராகிய சீலாவின் பெயரையும் சேர்த்து, சனவரி 26ஆம் நாள் விழாக் கொண்டாடுகிறது.

மரபு வழிச் சபை தீத்துவின் திருவிழாவை ஆகத்து 25 மற்றும் சனவரி 4 ஆகிய நாள்களில் கொண்டாடுகிறது.

தீத்துவின் மீபொருள்கள்
துருக்கியர் ஆட்சிக்காலத்தில் வெனிசு நகருக்குக் கொண்டுபோகப்பட்டிருந்த புனித தீத்துவின் மீபொருள்கள் அவர் பணிசெய்து உயிர்துறந்த கிரேத்து தீவுக்கு 1969இல் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது அப்பொருள்கள் கிரேத்து தீவில் அமைந்துள்ள ஹெராக்ளியோன் கோவிலில் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன.

புனித தீத்து விருது
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத் திருப்பணியாளர்களில் சிறப்பான சேவை செய்வோருக்கு அளிக்கப்படும் விருது "புனித தீத்து விருது" என்று அழைக்கப்படுகிறது.
Saint Titus
புனித தீத்து
ஆயர், மறைச்சாட்சி
பிறப்புகி.பி. முதல் நூற்றாண்டு
இறப்புகி.பி. 96 அல்லது 107
கோர்ட்டின், கிரேத்து
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்கம்,
கீழை மரபுவழி சபை,
கீழை மரபுவழி கத்தோலிக்க சபைகள்,
லூத்தரன் சபை,
ஆங்கிலிக்க சபை
புனிதர் பட்டம்வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம்
முக்கிய திருத்தலங்கள்ஹெராக்ளியோன், கிரேத்து
திருவிழாசனவரி 26;
பழைய நாள்காட்டிப்படி, பெப்ருவரி 6
புனித தீத்து கோவில். இடம்: ஹெராக்ளியோன், கிரேத்து



புனித திமொத்தேயு

 புனித திமொத்தேயு

ரோமானிய அனடோலியாவை சேர்ந்த ஆரம்ப கால கிறித்தவ நற்செய்தியாளர் மற்றும் பிஷப்

திமொத்தேயு (கிரேக்கம்:Τιμόθεος= Timótheos) என்பவர் கிறித்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும் ஆயரும் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும் "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறித்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும் (காண்க: 1 திமொத்தேயு), 2 திமொத்தேயு..

Saint Timothy
புனித திமொத்தேயு
ஆயர்
பிறப்புகி.பி. சுமார் 17
இறப்புகி.பி. சுமார் 97
மசெதோனியா
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்கம்
கீழை மரபுவழி சபைகள்
கிழக்கு மரபுவழி சபை
ஆங்கிலிக்கன் சபை
லூத்தரன் சபை
திருவிழாசனவரி 22 (கீழைத் திருச்சபை)
சனவரி 26 (உரோமன் கத்தோலிக்கம், லூத்தரன் சபை)
சனவரி 24 (1970 நாள்காட்டி சீர்திருத்தத்துக்கு முன் சில தலத் திருச்சபைகள்)


பிரிஸ்கில்லா மற்றும் அக்கில்லா

 பிரிஸ்கில்லா மற்றும் அக்கில்லா என்பவர்கள் புதிய ஏற்பாட்டில் குறிக்கப்படும் முதலாம் நூற்றாண்டில் மறைபணியாற்றிய தம்பதியராவர். இவர்கள் மரபுப்படி எழுபது சீடர்களில் பட்டியலிடப்படுகின்றனர். விவிலியத்தில் திருத்தூதர் பவுல் இவர்களை, கிறிஸ்து இயேசுவுக்காக தம்மோடு சேர்ந்து உழைக்கின்றவர்கள் என்று கூறுகின்றார்.Rom. 16:3 NASB இவர்கள் ஆதி கிறுத்தவர்களுக்கு ஊக்கமூட்டி கிறித்தவ நெறியில் முனைப்புடன் இருக்க தூண்டினர். பவுல் இவர்களை தமது கடிதங்களில் மிகவும் புகழ்ந்துள்ளார்.Rom. 16:3-4 பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவுக்கு கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கியதாக விவிலியம் குறிக்கின்றது.Acts 18:26 எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் பிரிஸ்கில்லா என சிலர் நம்புகின்றனர். புதிய ஏற்பாட்டின் நான்கு புத்தகங்களில் இவர்கள் ஆறு முறை குறிக்கப்படுகின்றனர். இவர்கள் தனித்தனியே எங்கும் குறிக்கப்படவில்லை எனினும் மூன்று முறை பிரிஸ்கில்லாவின் பெயர் முதலில் குறிக்கப்படுகின்றது. இது அக்காலத்தின் ஆணாதிக்க வழக்கிற்கு மாறானது என்பது அறிஞர் கூற்று.

பர்னபா

 பர்னபா

பர்னபா (பண்டைக் கிரேக்கம்: Βαρναβᾶς), இயற்பெயர் யேசேப்பு, என்பவர் ஆதி கிறித்தவரும் இயேசுவின் சீடர்களுல் ஒருவரும் ஆவார். திருத்தூதர் பணிகள் 4:36இன் படி இவர் சைப்பிரஸில் வாழ்ந்த யூதராவார். திருத்தூதர் பணிகள் 14:14 இவரையும் ஒரு திருத்தூதர் எனக்குறிக்கின்றது. இவரும் பவுலும் திருத்தூது பயணங்கள் மேற்கொண்டு யூத கிறித்தவர்களிடம் புறவினத்தாரான கிறித்தவர்களுக்காக பரிந்து பேசினர். இவர்கள் இருவரும் எருசலேம் சங்கத்தில் கலந்து கொண்டனர். பர்னபா மற்றும் பவுல் அனத்தோலியாவில் தொழுகைக் கூடங்களுக்கு வந்திருந்த புறிவினத்தார் பலரை மனந்திருப்பினர்.

பர்னபாவைக்குறிது திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுலின் திருமுகங்களிலும் காணக்கிடைக்கின்றது. திர்தூளியன் இவரை எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர் எனக்குறிக்கின்றார்., ஆயினும் இதற்கு எவ்வித சான்றும் இல்லை.

சுமார் கி.பி 61இல் பர்னபா மறைசாட்சியாக சைப்பிரஸில் கொல்லப்பட்டார் என்பது மரபு. இவர் சைப்பிரஸ் மரபுவழி திருச்சபையினை நிறுவியவர் என நம்பப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா நாள் ஜூன் 11ஆம் ஆகும்.

கொலோசையர் (நூல்) 4இன் அடிப்படையில் பர்னபா, மாற்குவின் உறவினர் என நம்பப்படுகின்றது. சில மரபுகளின் படி எழுபது சீடர்களில் ஒருவராகக்கருதப்படும் அரிஸ்தோபுலுஸ் பர்னபாவின் சகோதரராக நம்பப்படுகின்றது.

இறைவாக்கினர், சீடர், அந்தியோக்கியா மற்றும் சைப்பிரஸின் திருத்தூதர், மறைப்பணியாளர் மற்றும் மறைசாட்சி
பிறப்புதகவல் இல்லை
சைப்பிரஸ்
இறப்பு61 கி.பி
சைப்பிரஸ்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபைகிழக்கு மரபுவழி திருச்சபைஆங்கிலிக்க ஒன்றியம்லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்புனித பர்னபா மடம், சைப்பிரஸ்[
திருவிழாஜூன் 11
சித்தரிக்கப்படும் வகைகைத்தடி; ஒலிவ மரக் கிளை; மத்தேயு நற்செய்தியினை ஏந்திய படி
பாதுகாவல்சைப்பிரஸ், அந்தியோக்கியா, ஆலங்கட்டி மழையிலிருந்து காக்கப்பட, அமைதி ஏற்பட

Wednesday, June 19, 2024

புனித சிலுவையின் தெரெசா பெனடிக்டா

 ✠ புனித சிலுவையின் தெரெசா பெனடிக்டா ✠ (St. Teresa Benedicta of the Cross)


கார்மேல் சபை அருட்சகோதரி மற்றும் மறைசாட்சி :(Discalced Carmelite nun and Martyr) 

புனித சிலுவையின் தெரெசா பெனடிக்டா
கன்னியர், இரத்த சாட்சி
பிறப்புஅக்டோபர் 12, 1891
வார்க்லோ, ஜெர்மன் பேரரசு
இறப்புஆகத்து 9, 1942 (அகவை 50)
ஆசுவிச் நாசி இருட்டறை சிறை முகாம், போலந்து
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்மே 1, 1987, கோலோன், செருமனி by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்அக்டோபர் 111998 by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
திருவிழா9 ஆகஸ்ட்
சித்தரிக்கப்படும் வகைபுத்தகம், அக்கினிக் கொழுந்து, மஞ்சள் நிற தாவீதின் விண்மீன்
பாதுகாவல்ஐரோப்பா, அனாதைகள், உலக இளைஞர் தினம்[
பிறப்பு : அக்டோபர் 12, 1891 ப்ரெஸ்லவ் (சிலேசியா), ஜெர்மனி (தற்போது வ்ரோக்ளோ, போலந்து) (Breslau, German Empire (Now Wrocław, Poland)

இறப்பு : ஆகஸ்ட் 9, 1942 (வயது 50) ஔஸ்விட்ஸ் - சித்திரவதை முகாம், பொது அரசு (நாஜி-ஆக்கிரமிக்கப்பட்ட போலந்து)  (Auschwitz concentration camp, General Government (German-occupied Poland)

அருளாளர் பட்டம் : மே 1, 1987  திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II), கோலோன், ஜெர்மனி (Cologne, Germany)

புனிதர் பட்டம் : அக்டோபர் 11, 1998 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

சித்தரிக்கப்படும் வகை :  ஒரு புத்தகம் (A book), தீ நாக்கு (Flames), கார்மேல் பெண் துறவியின் ஆடையில் தாவீதின் மஞ்சள் நிற விண்மீன் (Yellow Star of David on a Discalced Carmelite nun's habit, Flames, a book)

பாதுகாவல் : ஐரோப்பா (Europe), பெற்றோரை இழந்தோர் (Loss of Parents), மனம் மாறிய யூதர்கள் (Converted Jews), மறைசாட்சியர் (Martyrs), உலக இளைஞர் தினம் (World Youth Day)

"புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டா" (St. Teresa Benedicta of the Cross), ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மனம் மாறிய ஒரு ஜெர்மானிய - யூத தத்துவயியலாளர் (German Jewish Philosopher) ஆவார். 13 வயதில், யூத மதத்தின் மீது நம்பிக்கை இழந்ததாலும், கத்தோலிக்க திருச்சபையின் மீது கொண்ட உறுதியான விசுவாசத்தாலும், மறைகல்வி பயின்று 1 ஜனவரி 1922 அன்று கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார். 1934ம் ஆண்டு, "தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்ட கார்மேல் சபையில்" (Discalced Carmelite) இணைந்து துறவு வாழ்வினை மேற்கொண்டார்.

வரலாறு :  "எடித் ஸ்டைன்" (Edith Stein) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1891ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 12ம் நாள், அப்போதைய ஜெர்மனியின் "ப்ரெஸ்லவ்" (Breslau) நகரத்தில் யூதப் பெற்றோருக்கு 11வது குழந்தையாகப் பிறந்தார். இந்நகரம் தற்போது போலந்து நாட்டில் "வ்ரோக்ளோ" (Wrocław, Poland) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. யூதர்களின் முக்கிய விழாவான "பிராயச்சித்த நாள்" விழாவின்போது (Day of Atonement) இவர் பிறந்தார். இவருக்கு 2 வயது நடந்த போது இவரின் தந்தை இறந்தார்.

எடித், மெய்யியல் படிப்பில் சிறந்து விளங்கினார். உண்மையைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது 14வது வயதில் கடவுள் நம்பிக்கையை கைவிட்டார். தன்னை ஒரு நாத்திகர் என்றே அறிவித்தார். ஒரு சிறந்த கத்தோலிக்கப் பேராசிரியரின் விதவை மனைவிக்கு உதவிகள் செய்து வந்தார். இந்த விதவை, தனது அத்தனை துன்பங்களிலும் சிலுவையில் அறையுண்ட இயேசுவில் விசுவாசம் கொண்டிருந்தது இவருடைய வாழ்வை மாற்றியது.

ஒருசமயம் தனது நண்பரின் இல்லம் சென்றிருந்த சமயத்தில் "புனிதர் அவிலாவின் தெரேசாவின்" (St. Teresa of Avila) வாழ்க்கை வரலாறு புத்தகம் கிடைத்தது. அதையும் எடுத்து வாசித்தார் எடித். இது அவரது அகக் கண்களை திறந்தது. இதன் விளைவாக திருமறை விளக்க நூல் ஒன்றையும் திருப்பலி புத்தகம் ஒன்றையும் வாங்கி வாசித்தார். கத்தோலிக்க நம்பிக்கையினைத் தழுவினார். 1 ஜனவரி 1922 அன்று திருமுழுக்கு பெற்ற இவர், 1923 முதல் 1931 வரை "ஸ்பேயர்" (Speyer) எனுமிடத்திலுள்ள "டோமினிக்கன் அருட்சகோதரியர் பள்ளியில்" (Dominican nuns' school) கற்பிக்கும் பணி செய்தார்.

எடித் கற்பிக்கும் பணியை விட்டுவிடவேண்டுமென "நாசி அரசாங்கம்" (Nazi government) வற்புறுத்தியது. திருத்தந்தை "பதினோராம் பயஸ்" (Pope Pius XI) அவர்களுக்கு இவர் எழுதிய கடிதமொன்றில், நாஜி ஆட்சியை கண்டனம் செய்த இவர், கிறிஸ்துவின் பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துவதற்காக, நாஜி ஆட்சியை வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டினார். அவர் திருத்தந்தைக்கு எழுதிய இந்த நீண்ட கடிதத்திற்கு திருத்தந்தையிடமிருந்து பதிலேதும் வரவில்லை. கடிதத்தை திருத்தந்தை படித்தாரா என்பதே தெரியாது. (இருப்பினும், 1937ம் ஆண்டு, நாஜி ஆட்சியை கண்டித்து, ஜெர்மனி மொழியில் ஒரு சுற்றறிக்கையை திருத்தந்தை வெளியிட்டார்.)

இதனால் இவர் 1933ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கொலோன் (Cologne) நகரிலுள்ள "சமாதானத்தின் அன்னை" (St. Maria vom Frieden (Our Lady of Peace) கார்மேல் துறவற (Discalced Carmelite monastery) சபையில் சேர்ந்தார். "சிலுவையின் தெரெசா பெனடிக்ட்டா" என்ற ஆன்மீக பெயரை ஏற்றார். திருச்சிலுவையினால் ஆசீர்வதிக்கப்பட்ட தெரெசா என்பது இதன் பொருள்.

அச்சமயத்தில், 1937ம் ஆண்டில், ஹிட்லரின் நாசிப் படையினர் ஜெர்மனியில் யூதர்களை சித்திரவதை செய்வது தலைதூக்கியது. ஜெர்மனியில் யூதர்களின் எண்ணிக்கை பெருகி வந்ததையும் அவர்களது வளமான வாழ்வையும் ஹிட்லரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் அடையாளமாக முதலில் கொலோன் யூதமதத் தொழுகைக் கூடத்தைத் தீக்கிரையாக்கினான் ஹிட்லர்.

எனவே எடித்தின் பாதுகாப்புக்காகவும், கத்தோலிக்கத்துக்கு மாறியிருந்த எடித்தின் இன்னொரு சகோதரி ரோசாவின் (Rosa) பாதுகாப்பிற்காகவும், இவர்களிருவரையும் நெதர்லாந்து நாட்டிலிருந்த "எச்ட்" (Echt, Netherlands) எனும் இடத்திலிருந்த துறவு மடத்துக்கு இவர்களது சபையினர் அனுப்பி வைத்தனர். இறுதியில் நெதர்லாந்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை.

ஹிட்லரின் நாசிப் படைகள் 1940ம் ஆண்டில் நெதர்லாந்தை ஆக்கிரமித்தன. 2 ஆகஸ்ட் 1942 அன்று, தெரேசா, ரோசா மற்றும் பல யூதர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் அவர்கள் "அமெர்ஸ்ஃபூர்ட்" மற்றும் "வெஸ்டேர்பொர்க்" (Amersfoort and Westerbork) ஆகிய சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். "வெஸ்டேர்பொர்க்" முகாமில், எடித்தின் விசுவாசம் மற்றும் அமைதியால் ஈர்க்கப்பட்ட "டட்ச்" அதிகாரி (A Dutch official) ஒருவர், சகோதரியர் இருவரும் தப்பிச் செல்ல ஒரு திட்டம் வகுத்து தந்தார். ஆனால், அதனை எடித் தீர்க்கமாகவும் கடுமையாகவும் அவரது உதவியை மறுத்துவிட்டார். அத்துடன், "இந்த கட்டத்தில் யாரோ ஒருவர் தலையிட்டு, அவரது ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளின் தலைவிதியினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எடுத்துவிட்டால், அது முற்றிலும் நிர்மூலமான அழிவு ஆகும்" என்றார்.

1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 7ம் நாளன்று, அதிகாலை, 987 யூதர்கள் "ஆஷ்விட்ஸ்" (Auschwitz) சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அம்முகாமில் 1942ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 9ம் தேதியன்று, புனிதர் சிலுவையின் தெரெசா பெனடிக்டாவும் அவரது சகோதரியும் இன்னும் பலரும் நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு இறந்தனர்.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II), இவரை ஐரோப்பாவின் ஆறு பாதுகாவலர்களுல் ஒருவராகவும் அறிவித்தார்.