அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, January 14, 2022

எழுபது சீடர்கள்

எழுபது சீடர்கள் அல்லது எழுபத்திரண்டு சீடர்கள் (கிழக்கில் எழுபது திருத்தூதர்கள்) என்பவர்கள் லூக்கா நற்செய்தி 10:1–24இல் குறிக்கப்பட்டுள்ள இயேசு கிறித்துவின் எழுபது சீடர்கள் ஆவர். இந்த நற்செய்தியின் படி இவர்களை இயேசுவே நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். இவர்களின் எண்ணிக்கை சில முக்கிய விவிலிய கையெழுத்துப் படிகளில் எழுபது எனவும் பெரும்பாண்மையானவற்றில் எழுபத்திரண்டு எனவும் உள்ளது. புனித ஜெரோம் வுல்கேட் மொழிபெயர்ப்பின்போது எழுபத்திரண்டு என்றே மொழிபெயர்த்தார்.

மேற்கத்திய கிறித்தவம் இவர்களை சீடர்கள் என அழைத்தாலும், கிழக்கத்திய கிறித்தவத்தில் இவர்கள் திருத்தூதர்கள் என்றே அறியப்படுகின்றனர். விவிலிய மூலத்தில் இவர்கள் மறைபணியாற்ற அனுப்பப்பட்டவர்கள் என்னும் பொருள்படும் பதத்தால் அழைக்கப்படுகின்றனர். மேற்கு மற்றும் கிழக்கத்திய கிறித்தவ மரபுகள் திருத்தூதர்கள் மற்றும் சீடர் ஆகியப்பதங்களுக்கு வெவ்வேறு பொருள் கொள்கின்றன என்பது குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள்

 Catholic Encyclopedia: Disciple: "The disciples, in this disciples, in this context, are not the crowds of believers who flocked around Christ, but a smaller body of His followers.

 Orthodox Church in America: Synaxis of the Seventy Apostles

புனிதர் பொலிகார்ப்

 ✠ புனிதர் பொலிகார்ப் ✠ (St. Polycarp)


*மறைசாட்சி, திருச்சபை தந்தையர், ஆயர் : (Martyr, Church Father and Bishop)

*பிறப்பு : கி.பி. 69

*இறப்பு : கி.பி. 156 ஸ்மைரனா, ஆசியா, ரோமப் பேரரசு (Smyrna, Asia, Roman Empire)

*நினைவுத் திருநாள் : பெப்ரவரி 23

*ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church), கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church), ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion), லூதரனியம் (Lutheran Church), ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church)

*சித்தரிக்கப்படும் வகை : பாலியம் அணிந்தவாறு, ஒரு நூலினை ஏந்தியவாறு

*பாதுகாவல் : காது வலியால் அவதியுறுவோர், இரத்தக்கழிசல்

*குறிப்பிடத்தக்க படைப்புகள் : பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம்

புனிதர் பொலிகார்ப் 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த, "ஸ்மைரனா" (Smyrna) நகரின் ஆயராவார். "பொலிகார்ப்பின் மறைசாட்சியம்" (Martyrdom of Polycarp) என்னும் நூலின்படி, அடுக்கப்பட்ட விரகுகளின்மீது இவரை வைத்து உயிருடன் தீயிட்டு கொளுத்த முயன்றபோது, தீ இவரை தொட தவறியதால், இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஓரியண்டல் மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கன் மற்றும் லூதரனியம் இவரை புனிதர் என ஏற்கின்றன.

இவரை "திருத்தூதர் யோவானின்" (John the Apostle) சீடர் என "இரனேயுஸ்" (Irenaeus) மற்றும் "டேர்டுல்லியன்" (Tertullian) ஆகியோர் குறிக்கின்றனர். பொலிகார்ப், யோவானின் சீடர் என்றும், யோவானே இவரை ஸ்மைர்னா நகரின் ஆயராக திருப்பொழிவு செய்தார் எனவும் புனிதர் ஜெரோம் (Saint Jerome) கூறியுள்ளார்.

"ரோமின் கிளமெண்ட்" (Clement of Rome) மற்றும் "அந்தியோக்குவின் இஞ்ஞாசியார்" (Ignatius of Antioch) ஆகியோரோடு புனித பொலிகார்ப்பும், அப்போஸ்தலிக்க தந்தையர்களுல் (Apostolic Fathers) மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.

இவரால் எழுதப்பட்டதாக தற்போது உள்ள ஒரே ஆவணம், பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய திருமுகம் (Letter to the Philippians) ஆகும். இதனை முதன் முதலில் பதிவு செய்தவர் இரனேயு (Irenaeus of Lyons) ஆவார்.

பொலிகார்ப், ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலருள் இவரது எழுத்துக்கள் இன்னமும் இருக்கின்றன. இவர், கிறிஸ்தவ திருச்சபைகளை நிறுவுவதில், பெரும் பங்களிப்பாக இருந்த ஒரு முக்கிய சபையின் மூப்பராவார். முக்கிய மரபுகளைக் கொண்டிருந்த இவருடைய சகாப்தம் அனைத்து திருச்சபைகளாலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. விவிலிய அறிஞரான "டேவிட் ட்ரோபிக்" (David Trobisch) என்பவரின் கூற்றுப்படி, பொலிகார்ப் புதிய ஏற்பாட்டினை தொகுத்து, திருத்தி, வெளியிட்டவர்களுள் ஒருவராக இருந்திருக்கலாம். இவையனைத்தும், இவரது எழுத்துக்களை பெரும் ஆர்வம் கொண்டவைகளாக ஆக்கின.

 

Thursday, January 13, 2022

அந்தியோக்கு இஞ்ஞாசியார்

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்
இஞ்ஞாசியார் கொல்லப்படல்
ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்
பிறப்புசுமார், கி.பி 35
இறப்புசுமார் கி.பி 108
உரோமை
ஏற்கும் சபை/சமயம்கிழக்கு கிறித்தவம், கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
புனிதர் பட்டம் சட்ட உறுவாக்கத்துக்கு முன்
முக்கிய திருத்தலங்கள்சான் கிலெமான்தே, உரோமை
திருவிழாகிழக்கு மற்றும் சிரியன் கிறித்தவம்: அக்டோபர் 17
General Roman Calendar, 12th century to 1969: February 1
கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை: டிசம்பர் 20
சித்தரிக்கப்படும் வகைசங்கிலியால் கட்டப்பட்ட அல்லது சிங்கங்களால் தாக்கப்படும் ஆயர்
பாதுகாவல்கிழக்கு மத்தியத் தரைக் கடல் அல்லது நன்னிலக் கடல்பகுதி திருச்சபை; தென் ஆப்ரிக்க திருச்சபை

அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch, பண்டைக் கிரேக்கம்: Ἰγνάτιος (சுமார் கிபி 35 - கிபி 108), அல்லது தியோபோரஸ் (Θεοφόρος அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.

இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.

கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20. கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.

ஆதாரங்கள்

 See "Ignatius" in The Westminster Dictionary of Church History, ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in The Oxford Dictionary of the Saints (New York: Oxford University Press, 1987).

 The Martyrdom of Ignatius

 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.

Holy Letters and Syllables, the function and character of Scripture Authority in the writings of St Ignatius (Contains biography Ignatius as well. Doctoral thesis University of the Orange Free State 1997, Dutch, pdf) 

வெளி இணைப்புகள்

Commons-logo-2.svg

Early Christian writings: On-line texts of St. Ignatius' letters (archived)(non-archived linkபரணிடப்பட்டது 2008-01-21 at the வந்தவழி இயந்திரம்)

Catholic Encyclopedia: St. Ignatius of Antioch

The Short Syriac Version

The Ecclesiology of St. Ignatius of Antioch by Fr. John S. Romanides

Saint Ignatius

Opera Omnia by Migne Patrologia Graeca with analytical indexes

Catholic Encyclopedia: Spurious Epistles of St. Ignatius of Antioch

Ignatius of Antioch: To Meet The Lord

திருச்சபைத் தந்தையர் - - அறிமுகம்

 திருச்சபைத் தந்தையர் என்போர், திருத்தூதர்களுக்கு அடுத்த நிலையில் தொடக்க திருச்சபையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தொடக்க திருச்சபையின் ஆயர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்தவர்கள் ஆவர்.

திருத்தூதுவ தந்தையர்

1. ரோம் புனித கிளமென்ட்

2. அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்

3. சுமைர்னா புனித பொலிகார்ப்

பின்வந்த தந்தையர்

1. புனித அத்தனாசியுஸ்

2. புனித பெரிய பேசில்

3. மிலன் புனித அம்புரோஸ்

4. புனித ஜெரோம்

5. ஹிப்போ புனித அகஸ்டீன்

6. அலெக்சாந்திரியா புனித சிரில்


புனித இசிதோர்.

புனித இசிதோர் 

இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2: 52)

திருவிழா :04 ஏப்ரல்

வாழ்க்கை வரலாறு

இசிதோர், 560 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய குடும்பத்தில் இவரோடு பிறந்த சகோதரர்கள் லியாண்டர், புல்ஜென்சியஸ் மற்றும் சகோதரி ப்ளோரென்டினா என யாவருமே பிற்காலத்தில் புனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.

இசிதோர் தன்னுடைய மூத்த சகோதரர் லியாண்டர் தந்த உற்சாகத்தினால் கல்வியில் சிறந்து விளங்கி, பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளராக உருவெடுத்தார். இவருடைய எழுத்தாற்றலால் உருவான புத்தகங்கள் அதிகம். “History of the Goths, A history of the world, A Dictionary, Encyclopaedia” போன்றவை எல்லாம் இவருடைய எழுத்தாற்றலுக்கு மிகப்பெரிய சான்றுகள். இப்புத்தகங்கள் எல்லாம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

600 ஆம் ஆண்டு, செவில்லேவில் ஆயராக இருந்த இசிதோரின் மூத்த சகோதர் இறந்துவிடவே, அந்தப் பொறுப்பு இசிதோருக்குக் கொடுக்கப்பட்டது. இசிதோர் ஆயர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிறகு எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். இசிதோர் ஏழை எளிய மக்களிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய ஆயர் இல்லத்தை ஏழைகள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டி எழுப்பினார். மட்டுமல்லாமல் ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்த்து, தங்களுடைய குறைகளை தன்னிடத்தில் எடுத்துச் சொல்லலாம் என்று கூறி, அதன்படியே செய்தார்.

இசிதோர், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்று அரும்பாடு பட்டார். அதோடு கூட ஒவ்வொரு பங்காலயத்திற்குப் பக்கத்திலும் குருமடம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குருமடத்தில் சேர்ந்து இளைஞர் ஆன்மீகக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வந்தார். மக்களும் அவர் சொன்னதைக் கேட்டு, தங்களுடைய குழந்தைகளை குருமடங்களுக்கு அனுப்பி வைத்து ஆன்மீகக் கல்வியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்தார்கள்.

இப்படி இடையறாது மக்களுக்கும் இறைவனுக்கும் பணி செய்து வந்ததால், இசிதோரின் உடல் நலம் குன்றியது. அதனால் அவர் 636 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் இறப்பதற்கு சிறு நேரத்திற்கு முன்பாக இறைமக்களிடம், தான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை எல்லாம் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொண்டு, அதன்பிறகே தன்னுடைய ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1598 ஆம் ஆண்டு புனிதர் பட்டமும் 1722 ஆம் ஆண்டு இறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

தூய இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்த்த நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஏழைகளுக்கு உதவி செய்தல்

தூய இசிதோரின் வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது அவர் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பும் அதன்மூலம் அவர் அவர்களுக்குச் செய்த உதவியும் தான் நமது நினைவுக்கு வருகின்றது. இவருடைய நினைவு நாளைக் கொண்டாடுகின்ற நாம் ஏழைகளிடத்தில் அன்பும் அவர்களுக்கு உதவியும் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மிகச் சிறியோராகிய ஒருவருக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்று (மத் 25: 40). ஆம், ஏழைகளுக்குச் செய்கின்ற உதவி இறைவனுக்கே சென்று சேருகின்றது. அது நமது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருகின்றது என்பது உண்மை.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் ரீவ். அவருடைய வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று ஒருநாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட அவர் வீல்சேரில் முடங்கிப் போனார். அப்போது பத்திரிக்கையாளர் சிலர் அவருடைய மனைவி டானாலியிடம், “உங்கள் கணவருடைய புனர்வாழ்வு முறை எப்படிப் போகிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எல்லாருக்கும் நிறைய உதவி செய்கின்றோம்” என்றார். சிறுது நேர இடைவெளிக்குப் பிறகு கிறிஸ்டோபர் ரீவ் அவர்களிடம், “எப்போதெல்லாம் எதையோ இழந்த தோல்வி வருகிறதோ அப்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு உதவுவோம். நமக்கு நாமே உதவிக் கொள்ள நல்ல வழி மற்றவருக்கு உதவுவதும் அதனால் வரும் மகிழ்ச்சியும் தான்” என்று கூறினார்.இதைக் கேட்டு பத்திரிக்கையாளர்கள் மிகவும் வியந்துபோனார்.

ஆம், நமது வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஏழைகளுக்கு உதவி செய்வது. தூய இசிதோரும் ஏழைகளுக்கு அப்படித்தான் உதவி செய்தார்.

ஆகவே, தூய இசிதோரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும் அவரைப் போன்று ஏழைகளுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


எருசலேம் நகர தூய சிரில்

எருசலேம் நகர தூய சிரில் (மார்ச் 18)


எருசலேமின் ஆயராக தூய சிரில் இருந்த காலகட்டத்தில், எருசலேமில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவின்றிப் பட்டினியில் தவித்தார்கள். இதைப் பார்த்த சிரில் ஆலய உடைமைகளை விற்று, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு மக்களின் பசியைப் போக்கினார். இது பிடிக்காத ஒருசில தலைவர்கள், சிரில் ஆலயச் சொத்துகளை வீணடிக்கின்றார் என்று குற்றம் சுமத்தினார்கள். அப்போது அவர் அவர்களுக்கு அளித்த பதில், “திருச்சபையும் மக்களும் வேறு வேறா என்ன... மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அதற்கு திருச்சபையின் – ஆலயத்தின் – உடைமைகளை விற்றுக்கொடுப்பதிலே என்ன தவறு இருக்கின்றது?” என்றார். இதற்கு அவருடைய எதிரிகளால் ஒன்றும் பேச முடிவில்லை.

நல்மனதோடு நாம் மக்களுக்கு நல்லது செய்கின்றபோது, அதற்கு எதிராக ஒருசிலர் பேசித்திரிவார்கள். அத்தகையவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை சிரிலின் வாழ்வில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

சிரில், எருசலேம் நகரில் 315 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். சிரிலின் தந்தை அவர்மீது அதிகமான அன்பு வைத்திருந்த படியாலும் அவருக்கு நல்ல கல்வியைக் கொடுக்கவேண்டும் என்பதாலும் அன்றைய காலத்தில் எருசலேமில் தலைசிறந்த ஆசிரியராக இருந்த ஒருவரிடம் அனுப்பி வைத்து, அவருக்கு கல்வியறிவைக் கொடுத்தார். சிரிலும் கல்வியில் சிறந்தவராய் விளங்கி வந்தார். குறிப்பாக சிரிலின் விவிலிய அறிவைக் கண்டு எல்லாரும் வியப்படைந்தார்கள்.

படிப்பை நிறைவு செய்த சமயத்தில், சிரிலுக்கு குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படியே அவர் குருவானவராக மாறினார். அப்போது சிரிலிடம் இருந்த அறிவையும் ஞானத்தையும் கண்ட எருசலேம் நகர ஆயர் மார்க்கஸ் அவரை புகுமுக பயிற்சி பெறுவோருக்குப் பொறுப்பாளராக நியமித்தார். சிரிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்புடனே செய்தார். சிரில் புகுமுகப் பயிற்சி பெறுவோருக்கு பொறுப்பாளராக இருந்த சமயத்தில், திருமுழுக்குப் பெறுகின்றபோது எத்தகைய மனநிலையோடு பெறவேண்டும், அதற்காக ஒருவர் எப்படியெல்லாம் தன்னைத் தயார் செய்யவேண்டும் என்பதை பற்றிய நிறைய எழுதினார். அது மட்டுமல்லாமல், நற்கருணை வாங்குகின்றபோதும் எத்தகைய நிலையோடு வாங்கவேண்டும் என்பதைப் பற்றி நிறைய எழுதினார். இன்னும் சொல்லப்போனால் சிரில் அளவுக்கு நற்கருணையைக் குறித்து யாரும் அதிகமாகப் பேசியதில்லை என்று சொல்லலாம்.

இப்படி பல்வேறு கருத்துகளை குறித்து திறம்பட எழுதியும் புகுமுகப் பயிற்சிபெறுவோருக்கு நல்லவிதமாகப் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எருசலேமின் ஆயர் மார்க்கஸ் இறந்துபோனார். இதனால் சிரில் எருசலேம் நகர ஆயராகப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில்தான் கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்துப் பேசும் ஆரியபதம் தலைவிரித்து ஆடியது. இதனை சிரில் மிகக் கடுமையாக எதிர்த்து பேசினார். இதனால் ஆரிய பதத்தைத் தூக்கிப் பிடித்த அக்கரியாஸ் என்ற செசாரிய நகர், அவரோடு சேர்ந்து ஒருசிலர் சிரிலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். இதனால் சிரில் மூன்று முறை நாடு கடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கும்பொருட்டு, ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் சிரிலின் வாதம் சரியானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் அவர் மீண்டுமாக எருசலேமின் ஆயராக உயர்ந்தார். சில காலம் ஆயர் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்த சமயத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு 386 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சிரிலின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. தகுதியான நிலையோடு நற்கருணையை உட்கொள்ளுதல்

தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் இந்த சமயத்தில், அவர் சொல்லக்கூடிய ஒரே ஒரு செய்தியை மட்டும் நம்முடைய மனதில் இருத்திக்கொள்வோம், அது வேறொன்றுமில்லை நற்கருணையை தகுதியான உள்ளத்தோடு உட்கொள்வது என்பதாகும். நற்கருணையை உட்கொள்ளும் நாம், சில நேரங்களில் ஏனோ தானோவென்று அதற்குரிய மரியாதை கொடுக்காமல் உட்கொள்கின்றோம். இந்த நேரத்தில் நாம் தகுதியான உள்ளத்தோடுதான் நற்கருணையை உட்கொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்குகொள்வோர் பாவம் செய்கின்றார் என்று சொல்வார். ஆகவே, தகுதியான விதத்தில் நற்கருணை உட்கொள்வதே சரியான ஒரு வழிமுறையாகும்.

ஆகவே, தூய சிரிலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், தகுதியான உள்ளத்தோடு நற்கருணை உட்கொள்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus)

 புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus)

இவர் 430 ஆம் ஆண்டு இராவென்னா என்ற நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நகரில் புகழ்மிக்க பணக்காரர்கள் வசி த்து வந்தனர். இதனால் உரோமை பேரரச ரால் அந்நகர் சுற்றி வளைக்கப்பட்ட கைப் பற்றப்பட்டது. அரசர் ஹோனோரியுஸ் (Honorius) என்பவரால் இராவென்னா மக்கள் துன்பப்படுத்த ப்பட்டார்கள். 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 50ஆண் டுகள் கொன்ஸ்டானிநோபிளில் வாழ்ந்த அரசன் ஒருவன், திருச்சபையைப்பற்றி தவறாக போதித்தான். இதனால் ஆயர் பீட்டர் இதனை சுட்டிக்காட்டி, தவற்றை திருத்திக்கொள்ள வேண்டுமென்று எச்சரித்தார். ஆயர் தன் மறைமாநிலம் முழுவ தும் மிக எளிமையான முறையில் திருப்பலி நிறைவேற்றி, பொருள் தரும் வகையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனங் களில் இடம்பிடித்தார். பின்னர் மிலான் மறைமாநிலத்திற்கு சென்று அங்கிருந்த சில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். மீண்டும் இராவென்னா வந்த பிறகு, உரோமை அரசரின் கீழிரு ந்த தன்னுடைய மறைமாநிலத்தை, திருத்தந்தையின் அதிகார த்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அந்தியோக்கியா நகரிலிரு ந்த இறையியல் பள்ளிக்கு தேவையான சில புத்தகங்களை எழுதினார். இவரின் நூல்கள் அனைத்திலும் மரியன்னைக்கெ ன்று சிறப்பிடத்தை தந்துள்ளார். இதன் வழியாக இவர் அன்னை யின் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பதை அறியலாம்.

இவர் ஆயராக பணிசெய்த ஆண்டுகளில் கிறிஸ்துவத்தை பணக்கார மக்களிடையே பரப்பி, அவர்களை இறைவன்பால் ஈர்த்தார். பலரால் தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் மிக எளிதாக தீர்த்துவைத்தார். பல நாடுகளிடையே சமாதானத்தை கொண்டுவந்தார். ஒற்றுமையின்றி இருந்த அரசர்களை சேர்த்து வைத்து, கிறிஸ்து ஏற்றுக்கொள்ளச் செய்தார். தான் எழுதிய பல இறையியல் நூல்களின் வழியாக பல குருக்களின் வாழ்வை மாற்றி, இறையழைத்தலை பெருகச் செய்தார். இவர் தன் மறைமாநிலம் முழுவதும் பல ஆலயங்களை எழுப்பினார். பல கல்விக்கூடங்களையும், இறையியல் கல்லூரிகளையும் நிறுவினார். தான் சென்ற இடமெல்லாம் மக்களை ஒன்றுகூட்டி போதித்தார். ஒவ்வொரு போதனைகளிலும் " மனிதனுக்கு பட்டம், பதவி, பணம் இவற்றைவிட செபம் என்பது மிகவும் அவசியமானது. செபிக்காதவன் இறந்தவன்; நம் செபம் இவ்வுலகில் மணம் வீச வேண்டும்" என்று தவறாமல் கூறுவார். அவ்வாறு ஒருநாள் போதித்து முடித்தபிறகு, மிக அமைதியாக அமர்ந்தபோது, எவ்வித சலசலப்புமின்றி ஆழ்ந்த அமைதியில் இறைவனடி சேர்ந்தார்.

புனித யோவான் கிறிசோஸ்தோம்

புனித யோவான் கிறிசோஸ்தோம்
புனித பொன்வாய் அருளப்பர்
ஆயர் மற்றும் மறைவல்லுநர்
பிறப்புசுமார். 347
அந்தியோக்கியா
இறப்பு14 செப்டம்பர் 407
கோமானா, போன்தசு
ஏற்கும் சபை/சமயம்கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்கம்
லூதரனியம்
திருவிழாகிழக்கு மரபுவழி திருச்சபை: 13 நவம்பர்
(ஆயர்நிலை திருப்பொழிவு நாள்)
கத்தோலிக்க திருச்சபை:13 செப்டம்பர்
சித்தரிக்கப்படும் வகைஆயர் உடையில் ஆசீர் வழங்குவது போன்று, 
நற்செய்தி அல்லது மறைநூலைத் தாங்கிய படி. 
தேனீக்களின் கூடு, வெள்ளை புறா, விவிலியம், 
எழுதுகோல்
பாதுகாவல்காண்ஸ்டாண்டிநோபுள், கல்வி, 
விழுநோயாளிகள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள்

புனித யோவான் கிறிசோஸ்தோம் அல்லது புனித பொன்வாய் அருளப்பர் (சுமார். 347–407, கிரேக்க மொழி: Ἰωάννης ὁ Χρυσόστομος), காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக இருந்தவர். இவர் மிக முக்கியமான திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராவார். இவர் பெரிய எழுத்தாளர், மறையுரையாளர், விவிலிய விரிவுரையாளர். இறையியலாளர். இவரால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இவரது மறை உரையின் மேன்மையினை உனர்த்தும் விதமாக மக்கள் இவரை பொன்வாய் என்னும் பொருள்படும்படி கிரேக்கத்தில் கிறிசோஸ்தோமோஸ் என அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் இவரின் பெயர் ஆயிற்று.

வரலாறு

கி.பி.347ம் ஆண்டில் ரோமானியப் படைத் தளபதிக்கும், கிரேக்கப் பெண்மணிக்கும் மகனாகப் அந்தியோக்கியாவில் பிறந்த கிறிஸ்சோஸ்தம் நல்ல கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். இவருக்கு 23 வயதாகும்போது, அதுவரை பயின்று வந்த கிரேக்கப் பாடங்களிலிருந்து மாற்றி, விவிலியத்தைப் படிக்க இவரைத் தூண்டினார் இவரது நண்பரான புனித பாசில். தவவாழ்வு நடத்த விரும்பி 375ம் ஆண்டில் அந்தியோக்கியாவுக்கு அருகிலிருந்த மலைக்குச் சென்றார். ஆயினும், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 386ம் ஆண்டில் அந்தியோக்கியா திரும்பி வந்து குருப்பட்டம் பெற்றார்.

கான்ச்டண்டிநோப்புளின் ஆயராக

397ம் ஆண்டில் பேரரசர் ஆர்கேடியஸ், யாருக்கும் தெரியாமல் இவரைக் கான்ச்டண்டிநோப்புளுக்கு வரவழைத்து இவரை ஆயராக நியமித்தார். திருமறை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் இப்பொறுப்பை ஏற்றார். ஆயரானதும் சீர்திருத்தப்பணிகளில் இறங்கினார். ஆயர் இல்லத்தில் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தார். ஆயர் இல்லத்தின் ஆடம்பர வாழ்வை முற்றிலும் மாற்றினார். அடிக்கடி விருந்துகள் வைப்பதைத் தவிர்த்தார். இவரே படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஆயர் இல்லத்தில் பெண்கள் வேலை செய்வதை முதலில் நிறுத்தினாலும், பின்னர் அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் கன்னிமை வாக்குறுதியைக் கொடுக்கச் செய்தார். இவர் ஆயராகப் பொறுப்பேற்றபோது கான்ஸ்டான்டிநோபிள் நகரில் எண்ணற்ற துறவிகள் இருந்தனர். இவர்களில் துறவிக்குரிய வாழ்க்கை வாழாமல் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களைத் துறவு மடங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆடம்பர வாழ்வு வாழ்ந்து பிறருக்குத் கெட்ட எடுத்துக்காட்டாக இருந்த குருக்களைக் கண்டித்தார். கொலை மற்றும் விபச்சாரக் குற்றம் புரிந்த குருக்களை குருத்துவநிலையிலிருந்து விலக்கினார்.

யோவான் கிறிசோஸ்தோம், யுடோக்சியா பேரரசியை கன்டித்தல்

இவரது மறை போதனைகளும், இவர் எழுதியப் புத்தகங்களும் பலரையும் நல வழிப் படுத்தியதாகக் கூறப்படுகின்றது. பணக்காரர்களின் அர்த்தமற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தார். பணக்காரப் பெண்களின் வீண்பெருமையைச் சாடினார். அவர்கள் உடை அணிவதில் அடக்கத்தை வலியுறுத்தினார். ஏழைகள்மீது அக்கறை காட்டினார். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் அலெக்சாந்திரியா முதுபெரும் தலைவர் தெயோபிலஸ் உட்பட சில திருச்சபையின் அதிகாரிகள் மற்றும் உயர் பதவியிலிருந்தவர்கள் இவருக்கு எதிரிகளானார்கள். இவர்களில் யுடோக்சியா என்ற பேரரசி இவருக்குக் கடும் எதிரியானார். இவரின் மறையுரைகள் இந்தப் பேரரசிக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் பலக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் பேரரசி. அதனால் அரன் இவரை நாடு கடத்த ஆனையிட்டான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் வேகுண்டேழுந்ததைக் கண்டு இந்த முயற்சி கைவிடப் பட்டது.

இறப்பு

இவரின் கத்தீடிரலுக்கு வெளியே அரிசி யுடோக்சியாவின் வெள்ளி சிலை நிருவப்பட்டு அதன் திரப்பு விழாவுக்கு இவர் அழைக்கப்பட்டர். ஆனால் இவர் அரசியின் ஆடம்பரசெயலை கடுமையாக சாடினார். அதனால் இவரை அர்மேனியாவுக்கு நாடு கடத்தினர். அப்போதைய திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் இவருக்கு ஆதரவாக இருந்தது அரசனின் செயலை வன்மையாக கண்டித்தார்.

அவரை அந்தப் பேரரசின் கடைகோடியிலிருந்த பைதியுசுக்கு மீண்டும் நாடு கடத்தினர். அவ்விடத்துக்கு இரண்டு படைவீரர்களால் நடக்க வைத்தே அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் மழையிலும் நீண்டதூரம் நடக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே நலிந்திருந்த இவரது உடல் தாங்கவில்லை. கி.பி.407ம் ஆண்டு செப்டம்பர் 14ம்தேதி இவரால் நடக்கவே முடியவில்லை. இனிமேல் நடக்க முடியாது என அந்தப் படைவீரர்களிடம் கூறியும், அவர்கள் அதற்கு இணங்காமல் மீண்டும் ஆயரைக் கட்டாயப்படுத்தி நடக்க வைத்தனர். அவரது உடல்நிலை மோசமாகவே கோமனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அதே நாளில் தனது 52வது வயதில் இறந்தார். எல்லாவற்றிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக என்ற வார்த்தைகளைச் சொல்லி இவர் காலமானார்.

யோவான் கிறிசோஸ்தோமின் உடல் கான்ச்டண்டிநோப்புளின் திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படல்

இந்தப் புனிதர் இறந்து 31 ஆண்டுகள் கழித்து, பேரரசி யுடோக்சியாவின் பிள்ளைகளான அரசி புனித புல்கேரியாவும், அரசர் 2வது தியேடோசியசும் தம் பெற்றோரின் செயல்களூக்கு மனம் வருந்தி தவம் செய்தனர். புனிதரின் உடலை கி.பி.438ம் ஆண்டு சனவரி 27ம் நாளன்று மிக ஆடம்பரமாக கான்ச்டண்டிநோப்புளின் திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர். ஊர்வலத்தில் சவப்பெட்டியை இவர்கள் தாங்கிச் சென்றனர்.

இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராகவும், திருச்சபையின் மறைவல்லுனராகவும் கருதப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 13 செப்டம்பர். கிழக்கு மரபுவழி திருச்சபையில், இவர் காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்ட நாளான 13 நவம்பரில் இவரின் விழா நாளை நினைவு கூர்கின்றனர்.

படைப்புகள்

ஜான் கிறிஸ்சோஸ்தம், தொடக்க காலத் திருச்சபையின் மாபெரும் போதகர் என்று அறியப்படுகிறார். கிரேக்கத் திருச்சபையின் தந்தையர்களுள் இவரைப் போன்று யாரும் போதிக்கும் ஆற்றல் கொண்டிருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. விவிலியத்தில் தொடக்கநூல் பற்றி 67 மறையுரைகள், திருப்பாடல்கள் பற்றி 59 மறையுரைகள், மத்தேயு நற்செய்தி பற்றி 90 மறையுரைகள், யோவான் நற்செய்தி பற்றி 88 மறையுரைகள், திருத்தூதர்பணிகள் பற்றி 55 மறையுரைகள் என இவர் ஆற்றிய மறையுரைகள் ஏராளம், ஏராளம். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு நூல்கள் பற்றி நூற்றுக்கணக்கான விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார். இவரது மறையுரைகள் கேட்பவரது வாழ்க்கையை நேரிடையாகத் தொட்டன. இதனால் இவரது மறையுரைகளைக் கேட்கும் மக்கள் அவற்றை எழுதி அரசர் முதல் அனைவருக்கும் அனுப்பி வைத்தனர்.

ஆதாரங்கள்

1. The date of John's birth is disputed. For a discussion see Robert Carter, "The Chronology of St. John Chrysostom's Early Life", in Traditio 18:357–64 (1962) Jean Dumortier, "La valeur historique du dialogue de Palladius et la chronologie de saint Jean Chrysostome", in Mélanges de science religieuse, 8:51–56 (1951). Carter dates his birth to the year 349. See also Robert Louis Wilken, John Chrysostom and the Jews: Rhetoric and Reality in the Late Fourth Century, (Berkeley: University of California Press:1983), p.5.

 2. Newadvent.org

 3. Catholic-forum.com

 4. திருத்தந்தை விஜீலியுஸ், Constitution of Pope Vigilius, 553

நசியான் கிரகோரி

புனித நசியான் கிரகோரி
நசியான் கிரகோரியின் சுதை ஓவியம்
காப்பிடம்: இசுதான்புல், துருக்கி
ஆயர், மறைவல்லுநர்
பிறப்புகி.பி 329
அரியான்சும், கப்படோசீயா, துருக்கி
இறப்பு25 ஜனவரி 389 / 390
அரியான்சும், கப்படோசீயா
ஏற்கும் சபை/சமயம்கிழக்கத்திய கிறித்தவம், மேற்கத்திய கிறித்தவம்
முக்கிய திருத்தலங்கள்Patriarchal Cathedral of St. George in the Fanar
திருவிழாமரபுவழி திருச்சபை: ஜனவரி 25
கத்தோலிக்க திருச்சபை: ஜனவரி 2 (c. 1500–1969 மே 9)
ஆங்கிலிக்க ஒன்றியம்: ஜனவரி 2
லூதரனியம்: ஜூன் 14
சித்தரிக்கப்படும் வகைஆயர் உடைகளில்

நசியான் கிரகோரி ( கிரேக்க மொழி: Γρηγόριος ὁ Ναζιανζηνός Grēgorios ho Nazianzēnos; c. 329 – 25 ஜனவரி 389 or 390, அல்லது நசியானுஸ் கிரகோரி என்பவர் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டான்டினோபிலின் பேராயர் ஆவார். திருச்சபைத் தந்தையர்களுள் இவர் மிகவும் குறிக்கத்தக்க இடத்தைப்பெருகின்றார். நன்கு கற்றறிந்த மெய்யியலாளரான இவர் ஹெலனிசக்கொள்கைகளை துவக்கத் திருச்சபையில் கொணரக்காரனியானார். பைசாந்தியப் பேரரசில் இறையியலாளர்களின் முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார்.

கிரேக்க மற்றும் இலத்தீன் இறையியலாளர்களீடையே இவரின் திரித்துவம் குறித்த இறையியட்கொள்கைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால் இவர் திரித்துவ இறையியலாளர் எனவும் அறியப்படுகின்றார். இவர் கப்போடோசிய தந்தையர்களுள் ஒருவராவார்.

கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கிறித்தவத்தில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவர் மறைவல்லுநர்களுள் ஒருவராவார்; கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் இவரை புனித யோவான் கிறிசோஸ்தோம் மற்றும் புனித பெரிய பசீலோடு சேர்த்து மூன்று புனித தலைவர்கள் (Three Holy Hierarchs) எனப்போற்றுகின்றது.

மேற்கோள்கள்

 Liturgy of the Hours Volume I, Proper of Saints, ஜனவரி 2.

 McGuckin, John (2001) Saint Gregory of Nazianzus: An Intellectual Biography, Crestwood, NY.

கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம்

கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம்
கேன்டர்பரி நகரின் பேராயர்
Anselm of Canterbury, seal (SVG).svg
மறைமாநிலம்கேடன்பரி
மறைமாவட்டம்கேடன்பரி
ஆட்சி பீடம்கேடன்பரி
நியமனம்1093
ஆட்சி முடிவு21 ஏப்ரல் 1109
முன்னிருந்தவர்லான்ஃப்ரேன்க்
பின்வந்தவர்ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ்
பிற பதவிகள்பெக் ஆதீனத் தலைவர்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு4 டிசம்பர் 1093
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆஸ்தா நகரின் அன்சலேம்
பிறப்புஅண். 1033
ஆஸ்தா, பர்கண்டி பேரரசு
இறப்பு21 ஏப்ரல் 1109 (அகவை 75)
கேன்டர்பரி, இங்கிலாந்து
கல்லறைகேன்டர்பரி மறைமாவட்டப்பேராலயம்
பெற்றோர்கந்தால்ஃப்
எமென்பெர்கா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா21 ஏப்ரல்
கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் (Anselm of Canterbury) அல்லது பெக்கின் புனித அன்சலேம் (Anselm of Bec, /ˈænsɛlm/; அண். 1033[1] – 21 ஏப்ரல் 1109) என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேன்டர்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை (Ontological argument) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவர். தனது 27ஆம் அகவையில் பெக் ஆதீனத்தில் துறவியாக இணைந்த இவர், அவ்வாதீனத்தின் தலைவராக 1079இல் தேர்வானார். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் வில்லியமின் ஆட்சியின்போது இவர் கேன்டர்பரி நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். பணியமர்த்தல் சர்ச்சையினால் முதலில் 1097 முதல் 1100 வரையிலும், பின்னர் 1105 முதல் 1107 வரையிலும் இவர் இங்கிலந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் 1720இல் ஒரு ஆணை ஓலையின் வாயிலாக இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 21 ஆகும்.

மேற்கோள்கள்

 Walsh, p. 117.

கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது

கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது
San Bernardo by Juan Correa de Vivar, held in the டெல் பிராடோ அருங்காட்சியகம் in மத்ரித், எசுப்பானியா
மறைவல்லுநர்
பிறப்புc. 1090
பான்தேய்ன் லெஸ் தியோன், பர்கன்டி, பிரான்சிய இராச்சியம்
இறப்பு20 ஆகஸ்ட் 1153
கிலேர்வாக்ஸ் மடம், கிலேர்வாக்ஸ், பிரான்சிய இராச்சியம்
ஏற்கும் சபை/சமயம்
  • கத்தோலிக்க திருச்சபை
  • ஆங்கிலிக்க ஒன்றியம்
  • லூதரனியம்
புனிதர் பட்டம்மூன்றாம் அலெக்சாண்டர்-ஆல் 18 ஜனவரி 1174, உரோம், திருத்தந்தை நாடுகள்
முக்கிய திருத்தலங்கள்டிராய்ஸ் மறைமாவட்டப் பேராலயம்
திருவிழாஆகஸ்ட் 20
சித்தரிக்கப்படும் வகைசிஸ்டேர்சியன் துறவு ஆடை, நூல் , சிலுவை
பாதுகாவல்சிஸ்டேர்சியன் சபையினர், பர்கன்டி, தேனீ வளர்ப்பவர்கள், மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள், ஜிப்ரால்ட்டர், Algeciras, Queens' College, Cambridge, Speyer Cathedral, தேவாலய புனித வீரர்கள்

கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது அல்லது கிலேர்வாக்ஸ் நகர பெர்நார்து (இலத்தீன்: Bernardus Claraevallensis; 1090 – 20 ஆகஸ்ட் 1153) என்பவர் பர்கன்டியினைச்சேர்ந்த ஆதீனத் தலைவர் ஆவார். சிஸ்டேர்சியன் சபையின் மூலமாக கத்தோலிக்க துறவரதில் புனித ஆசிர்வாதப்பர் சபையினை புத்துயிர் பெறச்செய்ததில் குறிக்கத்தக்கப்பங்கு வகித்த்வர் இவர்.

சிற்றோ நகரில் இருந்த புனித பெனடிக்ட்டின் மிகக் கடுமையான ஒழுங்குகளுடன் கூடிய சிஸ்டேர்சியன் துறவு மடத்தில் சேர்ந்தார். இந்த மடத்தில் இவர் சேர்ந்தது மட்டுமன்று, இவரின் உடன் பிறந்தார் நால்வரும் மாமனும் இவரோடு சேர்ந்து கொண்டனர். இவர்களுடன் மேலும் 31 இளைஞர்கள் பெர்னார்துவின் முன்மாதிரிகையால் இம்மடத்தில் துறவு மேற்கொண்டனர். நாளடைவில் இங்கு இருந்த துறவிகளின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. பார்-சுர்-ஆபேவின் தென்கிழக்க்கில் ஒரு புதிய மடம் அமைக்க இவர் அனுப்பட்டப்பார். 25 ஜூன் 1115இல் மடத்தை இவர் நிருவினார்.

இவர் கன்னி மரியாவிடம் பக்தியினைப் பரப்பினார். 1128இல் இவர் டிராய்ஸ் சங்கத்தில் இவர் தேவாலய புனித வீரர்களின் சட்டவிதிகளுக்கு[a] அடிக்கோடிட்டார். 13 பெப்ரவரி 1130இல் திருத்தந்தை இரண்டாம் ஹோனோரியுஸின் இறப்புக்குப்பின்னர் திருச்சபையில் பிளவு ஏற்பட்டது. பிரான்சின் ஆறாம் லூயிஸ் அரசர் சங்கம் ஒன்றை கூட்டினார். இதற்கு பெர்நார்து நடுவராக நியமிக்கப்பட்டார். 1139இல் இவர் இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தில் பங்கு பெற்றார். 1141இல் பியேர் அபேலார்டுக்கு எதிராக சென்ஸ் சங்கத்தில் முறையிட்டார். பெர்நார்தின் சீடர் மூன்றாம் யூஜின் என்னும் பெயரின் திருத்தந்தையானார். திருச்சபையின் உள்ள நடந்த பிளவுகளை சரிபடுத்த முயன்ற இவரை இதன் பின் திரிபுக் கொள்கைகளை எதிர்க்க அழைப்பக்பட்டார். ஜூன் 1145இல் இவர், தெற்கு பிரான்சில் பயணம் மேற்கொண்டு அங்கு திரிபுக் கொள்கைகளை எதிர்த்து கத்தோலிக்க மறையினை வலுப்படுத்தினார். 1146இல் இரண்டாம் சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்த வெசெலே சங்கத்தில் அதனை ஆதரித்து மறையுரை ஆற்றினார். எடிசா முற்றுகையில் கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, திருத்தந்தை இவரை இரண்டாம் சிலுவைப் போர் வீரர்களுக்கு மறைஉரை ஆற்றப்பனித்தார். இவரின் கடைசி நாட்கள் சிலுவைப்போரின் நேர்ந்த தோல்வியின் பொருப்பு இவர்மீது சாட்டப்பட்டதால் துன்பம் மிகுந்ததாக இருந்தது. துறவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்தப்பின்னர் தனது 63ஆம் அகவையின் இவர் இறந்தார். கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம் பெற்ற முதல் சிஸ்டேர்சியன் புனிதர் இவர் ஆவார். இவருக்கு 18 ஜனவரி 1174இல் திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் புனிதர் பட்டமளித்தார். 1830இல் திருத்தந்தை எட்டாம் பயஸ் இவரை "திருச்சபையின் மறைவல்லுநர்" என அறிவித்தார்.

குறிப்புகள்

André de Montbard, தேவாலய புனித வீரர்களின் நிறுவனர்களில் ஒருவர் பெர்னார்ட்டின் தாயின் அரை சகோதரர் ஆவார்.

மேற்கோள்கள்

 Anon. 2010, பக். 534-535.

 Smith 2010, பக். 32.

புனித தாமஸ் அக்குவைனஸ்

ஆக்வினாவின் தூய தோமா
Saint Thomas Aquinas
கார்லோ கிரிவெலியின் நூலொன்றிலுள்ள செயிண்ட் தாமஸ் அக்குவைனசின் படம்.
மறைவல்லுநர்
பிறப்பு1225
ஆக்வினா, சிசிலி
இறப்பு7 மார்ச் 1274
(பொசனோவா மடாலயம், லாசியோ, இத்தாலி)
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்
புனிதர் பட்டம்திருத்தந்தை இருபத்தி இரண்டாம் யோவான்-ஆல் 18 ஜூலை 1323, ரோம்
திருவிழாஜனவரி 28
சித்தரிக்கப்படும் வகைபுத்தகம், கோவில், சூரியன்
பாதுகாவல்கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிலையங்கள்

புனித தாமஸ் அக்குவைனஸ் அல்லது தமிழில் ஆக்வினாவின் தூய தோமா (Saint Thomas Aquinas, 1225 – மார்ச் 7, 1274) ஒரு இத்தாலிய கத்தோலிக்க மதகுரு. டொமினிக்கன் பிரிவைச்சேர்ந்த இவர், ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். அக்குவைனஸ் என்பது இவரது இடத்தின் பெயராகையால் இவரைப் பெரும்பாலும் தாமஸ் என்றே அழைப்பர். இயற்கை இறையியலின் முன்னணிப் பரப்புரையாளராக இருந்ததுடன், இவர் மெய்யியல், இறையியல் என்பவற்றின் தோமியச் சிந்தனைப் பிரிவின் தந்தையும் ஆவார்.

கத்தோலிக்கத் திருச்சபை, குருமாருக்கான கல்வி பயிலுபவர்களுக்கான ஒரு மாதிரியாக இவரைப் போற்றியது. திருச்சபையால் மறைவல்லுனர் (Doctor of the Church) என்ற பட்டம் அளிக்கப்பட்ட முப்பத்து மூவரில், மிகச் சிறந்தவராக இவர் கருதப்பட்டார். இதன் காரணமாகப் பல கல்வி நிறுவனங்கள் இவருடைய பெயருடன் தொடங்கப்பட்டன.

இளமைக்காலம்

அக்குவைனஸ் இவரது தந்தையாரான கவுண்ட் லாண்டல்ப் என்பவரின் அரண்மனையில் பிறந்தார். இது அக்காலத்து சிசிலி இராச்சியத்துள் அடங்கியிருந்து. இவரது தாயார் வழியில் அக்குவைனஸ் புனித ரோமன் பேரரசர்களின் ஹோஹென்ஸ்டாபென் வம்சத்துக்கு உறவுள்ளவர். லாண்டல்பின் சகோதரர் சினிபால்ட் மொண்டே காசினோவில் இருந்த தொடக்க பெனடிக்டிய மடத்தின் மடாதிபதியாக இருந்தார். அக்குவைனசின் குடும்பத்தினர், அக்குவைனசும் தனது சிறிய தந்தையாரைப் போலவே ஒரு மடாதிபதியாக வேண்டும் என விரும்பினர். அக்காலத்தில் இத்தாலிய உயர்குடிக் குடும்பங்களில் இளைய மகன்களுக்கு இத்தகைய பாதையே பொதுவாக விரும்பப்பட்டது. அது அக்காலத்தில் சொத்து பிரிந'து விடாதிருக்க கையாளப்பட்ட ஓர் முைறயாகும். பெற்றோரின் விருப்பப்படியன்று இவர் டொமினிக்கன் சைபயில் ஓர் குருவாவைதேய எண்ணியிருந்தார். 

ஐந்து வயதில் தாமஸ் தனது ஆரம்ப கல்வியை மான்டே கஸினோவில் தொடங்கினார். ஆனால் பேரரசர் ஃபிரடெரிக் II மற்றும் போப் கிரிகோரி IX இடையேயான இராணுவ மோதலுக்குப் பிறகு, லாண்ட்ஃப்ல் மற்றும் தியோடராவுடன் தாமஸ், நேபிள்ஸ் ப்ரெடரிக்கால் நிறுவப்பட்ட ஸ்டூடியோ ஜெனரல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவருக்கு அரிஸ்டாட்டில், இப்னு றுஷ்து, மைமோனைட்சு ஆகியோர் அறிமுகம் அவரின் இறையியல் தத்துவத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. தாமஸ் நேபிள்ஸில் டொமினிகன் பிரசங்கியாகிய செயின்ட் ஜுலியின் ஜான்ஸின் செல்வாக்கின் கீழ் வந்ததாக நேபிள்ஸ் நாளிதழில் அவர் குறிப்பிட்டார். கடவுளை வழிபடுபவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காக டொமினிகன் ஆணையின் மூலம் செயலில் ஈடுபட்டு வந்தவர். அவரது ஆசிரியர் பெட்ரசு டி இபெர்னியாவிடமிருந்து அங்கு கணித, வடிவவியல், வானியல், மற்றும் இசை ஆகியவற்றைக் கற்றார்.

மான்டே சான் ஜியோவானி காம்பனோவின் கோட்டை

தனது பத்தொன்பது வயதில் தாமஸ் அப்போதைய நிறுவப்பட்ட டொமினிகன் ஆணையில் சேரத் தீர்மானித்தார். தாமஸின் இந்த மன மாற்றம் அவருடைய குடும்பத்தை பிரியப்படுத்தவில்லை. தியோடராவின் தலையீட்டை தடுக்க டொமினிக்கர்களின் முயற்சியால் தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு ரோமிற்கு சென்று அங்கிருந்து பாரிஸ் அனுப்பவும் முடிவு செய்தனர். இருப்பினும், ரோமில் தனது பயணத்தின்போது தியோடோராவின் அறிவுரைப்படி ஒரு வசந்தகாலத்தில் தாமசின் சகோதரர்கள் அவரை குடித்துவிட்டு பெற்றோர்களிடம். மான்டே சான் ஜியோவானி காம்பனோவின் கோட்டையில் ஒப்படைக்கப்பட்டனர் .

மாண்டே சான் ஜியோவானியிலுள்ள குடும்ப அரண்மனையில் தாமஸ் கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டார் டொமினிகன் பழக்கம் மற்றும் அவரது துரவரத்தை ஏற்றுக் கொள்ள விடாமல் அவரைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போப்பிற்கு தாமஸ் விடுதலையைத் தீர்ப்பதில் விட அரசியல் பிரச்சினைகள் தடுப்பதற்கான பெரம் பணிகள் இருந்தன. இது தாமஸ் தடுப்புக்காவலை நீடித்திருக்கச்செய்யும் விளைவைக் கொண்டிருந்தது. டொமினிகன் ஆணைய உறுப்பினர்களோடு தொடர்புகொள்வதன் மூலம் அவரது சகோதரிகளுக்கு பயிற்சி அளித்தார். டொமினிகன்ஸில் சேரத் தீர்மானித்திருந்த தாமஸ்ஸைத் திசைதிருப்ப குடும்ப உறுப்பினர்கள் மிகவும் ஆத்திரமடைந்தார்கள். ஒரு கட்டத்தில், அவருடைய சகோதரர்களில் இருவர் அவரை வஞ்சிக்க சில திட்டங்களை செயல்படுத்தினர்.

1244 ஆம் ஆண்டில், தாமஸின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தியோடரா குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்ற முயன்றார், தாமதமாக தனது ஜன்னல் வழியாக இரவில் தப்பித்துக்கொள்ள ஏற்பாடு செய்தார். காவலில் இருந்து இரகசிய தப்பிப்பது டொமினிக்கர்களிடம் சரணடைவதை விட குறைவான சேதம் ஏற்படும் என நினைத்தார். தாமஸ் முதன்முதலில் நேபிள்ஸிற்கு அனுப்பப்பட்டார், பின்னர் ரோமிற்கு சென்று இங்கு டொமினிகன் ஆணையின் முதன்மை ஜெனரரான ஜொஹானாஸ் வோன் வைன்டேஷோஸ்சன் சந்தித்தார்.

தத்துவவியல்

தாமஸ் அக்வினாஸ் ஒரு இறையியலாளர் மற்றும் ஒரு தத்துவவாதி ஆவார். இருப்பினும், அவர் தன்னை ஒரு தத்துவஞானியாகக் கருதவில்லை. மேலும் போலி இறை தத்துவவாதிகளை விமர்சித்தார். எப்போதும் "கிறிஸ்தவ வெளிப்பாட்டில் காணப்படும் உண்மையான மற்றும் சரியான ஞானத்தின் குறைபாடு." இதை மனதில் கொண்டு, தாமஸ் அரிஸ்டாட்டிலை மரியாதைக்குரியவராக கருதினார். அதனால் சம்மாவில் அவர் அரிஸ்டாட்டிலை "தத்துவவாதி" என்று குறிப்பிடுகிறார். அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவை தத்துவ தலைப்புகளில், மற்றும் தத்துவம் சார்ந்த கருத்துக்களாக உள்ளன. தாமஸ் 'தத்துவ சிந்தனை, குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை, பொதுவாக மேற்கத்திய தத்துவத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு, தொடர்ந்து கிறிஸ்தவ இறையியல் மீது பெரும் செல்வாக்கை செலுத்தியுள்ளது. தாமஸ் அரிஸ்டோலிசியம் மற்றும் நியோபிலோனியவாதம் ஆகியவற்றின் தூதுவராகத் திகழ்கிறார்.

அரிஸ்டாட்டில் பற்றிய விமர்சனங்கள்

தாமஸ் அக்குவைனஸ் ஆன் தி சவுல், நிகோமசான் நெறிமுறைகள் மற்றும் மெட்டாபிசிக்ஸ் போன்ற அரிஸ்டாட்டிலின் படைப்புகளில் உள்ள பல முக்கியமான கருத்துகளைப் பற்றி எழுதியுள்ளார். அரிஸ்டாட்டிலின் படைப்புகளை வில்லியம் மோர்பேக் கிரேக்கத்திலிருந்து இலத்தினுக்கு மொழிபெயர்பு செய்தவற்றுடன் தொடர்புடையதாக தாமசின் பணி இருந்தது.

அரசியல் ஒழுங்கு

தாமஸ் அரசியல் தத்துவத்தின் கோட்பாடு மிகவும் செல்வாக்கு பெற்றது. ஒரு சமூகத்தில் வாழ்கின்ற மற்றும் அதன் மற்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டுள்ள ஒரு சமூக அமைப்பாக மனிதனை அவர் காண்கிறார். இது மற்றவற்றுடன் உழைப்புப் பிரிவினருக்கு முக்கியத்துவத்திற்கு வழிவகுக்கிறது தாமஸ் ஒரு நல்ல மனிதனுக்கும் நல்ல குடிமகனுக்கும் இடையில் வேறுபாடு காட்டினார், இது சுதந்திரவாத தத்துவத்தின் வளர்ச்சிக்காக முக்கியமானது. அதாவது, தனிப்பட்ட தன்னாட்சி மாநிலத்தில் தலையிட முடியாத ஒன்றாகும் என்கிறார்.

ஒரு மன்னர் பிற நபர்களுடன் சமரசம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், முடியாட்சி அரசின் சிறந்த வடிவமாக இருப்பதாக தாமஸ் நினைக்கிறார். மேலும், தாமஸ் கருத்துப்படி, தன்னலக்குழு முடியாட்சிக்கு மேலதிகமாக கொடுங்கோன்மைக்குள் சிதைந்துவிடும். ஒரு ராஜாவை ஒரு கொடுங்கோல் ஆக்குவதைத் தடுக்க, அவருடைய அரசியல் சக்திகள் ஊக்கமளிக்க வேண்டும் என்று கருதினார். சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் ஒரு உடன்பாடு ஏற்படாத வரை, ஒரு கொடுங்கோலன் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும் இல்லையெனில் அரசியல் நிலைமை அராஜகத்திற்கு மோசமடையக்கூடும், இது கொடுங்கோன்மைக்கு விட மோசமாக இருக்கும். என்பது தாமசின் கூற்றாகும்.

அரசர்கள் தங்கள் பிராந்தியங்களில் கடவுளின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். ஆனால் பேராயர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தேவாலயக் கோட்பாடு மற்றும் அறநெறி விவகாரங்களில் அரசர்களுக்கு மேலாக இருக்கிறது. இதன் விளைவாக, அரசர்களும் பிற உலக ஆட்சியாளர்களும் கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடு மற்றும் அறநெறிகளுக்கு தங்கள் சட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அரிஸ்டாட்டிலின் அடிமைத்தனத்தைத் தொடர்ந்து, தாமஸ் இயற்கையான சட்டத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தை நியாயப்படுத்துகிறார்.[23]

மேற்கோள்கள்

 Conway, John Placid (1911). Saint Thomas Aquinas. London.

 Rev. Vaughan, Roger Bede (1871). The Life and Labours of St. Thomas of Aquin: Vol.I. London.

 See Pius XI, Studiorum Ducem 11 (29 June 1923), AAS, XV ("non modo Angelicum, sed etiam Communem seu Universalem Ecclesiae Doctorem"). The title Doctor Communis dates to the fourteenth century; the title Doctor Angelicus dates to the fifteenth century, see Walz, Xenia Thomistica, III, p. 164 n. 4. Tolomeo da Lucca writes in Historia Ecclesiastica (1317): "This man is supreme among modern teachers of philosophy and theology, and indeed in every subject. And such is the common view and opinion, so that nowadays in the University of Paris they call him the Doctor Communis because of the outstanding clarity of his teaching." Historia Eccles. xxiii, c. 9.

 Benedict XV Encyclical Fausto appetente die 29 June 1921, AAS 13 (1921), 332; Pius XI Encyclical Studiorum Ducem §11, 29 June 1923, AAS 15 (1923), cf. AAS 17 (1925) 574; Paul VI, 7 March 1964 AAS 56 (1964), 302 (Bouscaren, vol. VI, pp. 786–88).

 Aquinas, Thomas (1993). Selected Philosophical Writings. Oxford University Press. பக். Xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0192835858.

 Jean-Pierre Torrell, Saint Thomas Aquinas: The Person And His Work, CUA press, 2005, p. 3. Google Book

 Davies, Aquinas: An Introduction, pp. 1–2

 Davies, Aquinas: An Introduction, p. 2

 Hampden, The Life, pp. 21–22.

 Grabmann, Martin. Virgil Michel, trans. Thomas Aquinas: His Personality and Thought. (Kessinger Publishing, 2006), pp. 2.

 Collison, Diane, and Kathryn Plant. Fifty Major Philosophers. 2nd ed. New York: Routledge, 2006.

 Hampden, The Life, p. 23.

 name="Hampden23"

 http://www.documentacatholicaomnia.eu/03d/1225-1274,_Thomas_Aquinas,_Summa_Theologiae_%5B1%5D,_EN.pdf

 https://www.scribd.com/document/327723902/The-Life-of-the-Angelic-Doctor-Thomas-Aquinas-pdf

 https://books.google.co.in/books?id=rPTh67iygPIC&pg=PT4&lpg=PT4&dq=Landulf+and+Theodora&source=bl&ots=i6oK48mh5x&sig=donO0ANi_uJAuznD1UgnGozlRG0&hl=en&sa=X&ved=0ahUKEwjNvPXPzJrXAhVEN48KHePxA0sQ6AEIPTAJ#v=onepage&q=Landulf%20and%20Theodora&f=false

 Hampden, The Life, pp. 27–28.

 Some would not describe Thomas as a philosopher. See, e.g., Mark D. Jordan, "Philosophy in a Summa of Theology", in Rewritten Theology: Aquinas after his Readers (Oxford: Blackwell, 2006) pp. 154–70. 

 Davies, Brian (2004). Aquinas. Continuum International Publishing Group. பக். 14.

 Edward W. Younkins (January 22, 2006). "THOMAS AQUINAS' CHRISTIAN ARISTOTELIANISM". 

 https://askaphilosopher.wordpress.com/2011/10/12/influences-of-aristotle-on-thomass-philosophy/

 Smith, George S. (2008). "Aquinas, Thomas (c. 1225–1274)". The Encyclopedia of Libertarianism. Thousand Oaks, CA: SAGE; Cato Institute. DOI:10.4135/9781412965811.n11. ISBN 978-1-4129-6580-4. இணையக் கணினி நூலக மையம் 750831024. “Individuals, therefore, have a private 'sphere of action which is distinct from the whole.'” 

 Heinz-Dietrich Wendland (1962): Sklaverei und Christentum. In: Die Religion in Geschichte und Gegenwart, Third Edition, Tübingen (Germany), Vol. VI, col. 103

தாமஸ் அக்வினஸ் கத்தோலிக்க திருச்சபையின் மிகப் பெரிய இறையியலாளர்களாகவும் தத்துவவாதிகளாகவும் கருதப்படுகிறார். "இந்த (டொமினிகன்) ஆணை திருச்சபை தாமஸ் போதிக்கும் போதனை பிரகடனத்தை அறிவித்தபோது புதிய புத்துயிர் பெற்றது. அந்த டாக்டர், கத்தோலிக்க பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் புரவலர் சிறப்புத் துறவிகளால் புகழப்படுகிறார். என போப் பெனடிக்ட் XV அறிவித்தார். 'மேற்கத்திய உலகின் சிறந்த பெரிய தத்துவவாதிகளில் ஒருவர்' என்று ஆங்கில தத்துவஞானி அந்தோனி கென்னி கருதுகிறார்.



புனித ஜெரோம்

 

புனித ஜெரோம்
புனித எரோணிமுசு
புனித ஜெரோம் விவிலியத்தை மொழி பெயர்ப்பதை தேவதூதர்கள் பார்வையிடல்
ஓவியர்: Bartolomeo Cavarozzi
மறைவல்லுநர், குரு, துறவி
பிறப்புசுமார் கி.பி. 347
சிரிதோன்
இறப்பு420
பெத்லகேம்
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்புனித மரியா பேராலயம், உரோமை நகரம், இத்தாலி
திருவிழா30 செப்டம்பர் (கிழக்கு கிறித்தவம்)
15 ஜூன் (மேற்கு கிறித்தவம்)
சித்தரிக்கப்படும் வகைசிங்கம், கர்தினால், சிலுவை, மனித மண்டையோடு, 
ஊதுகொம்பு, ஆந்தை, நூல் மற்றும் எழுது பொருட்கள்
பாதுகாவல்தொல்பொருளியல்; ஆவணக் காப்பாளர்கள்; விவிலிய அறிஞர்கள்; நூலகர்; நூலகம்; பள்ளிக்கூடம் செல்லும் 
பிள்ளைகள்; மாணவர்; மொழிபெயர்ப்பாளர்
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்வுல்காத்தா - இலத்தீன் விவிலிய மொழிபெயர்ப்பு
புனித ஜெரோம் (சுமார். 347 – 30 செப்டம்பர் 420; (பழைய வழக்கில் புனித எரோணிமுசு) (இலத்தீன்: Eusebius Sophronius Hieronymus; பண்டைக் கிரேக்கம்: Εὐσέβιος Σωφρόνιος Ἱερώνυμος) என்பவர் உரோமைப் பேரரசில் வாழ்ந்த கிறித்தவ குருவும், இறையியல்லாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவரின் தந்தை யுசிபஸ்.

யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். லத்தின், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். இவர் இலத்தீனில் விவிலியத்தை மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு வுல்காத்தா (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று அறியப்படுகின்றது.[1] இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது.

இவர் பெத்லகேமுக்கு அருகில் 30 செப்டம்பர் 420இல் இறந்தார் என்பர். இவர் முதலில் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டாலும் பின்னர் இவரின் திருப்பண்டங்கள், உரோமையில் உள்ள புனித மரியா பேராலயத்துக்கு எடுத்து வரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

இவர் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் புனிதராக மதிக்கப்படுகின்றார். இவர் நூல்நிலைய கண்காணிப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கருதப்படுகிறார்.

குறிப்புகள்
 Philip Schaff, தொகுப்பாசிரியர் (1893). A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church. 2nd series. VI. Henry Wace. New York: The Christian Literature Company

புனித பீட்

 

வணக்கத்திற்குரிய புனித பீட்
நோவான் நற்செய்தியினை மொழிபெயர்க்கும் வணக்கத்திற்குரிய பீட்; ஓவியர் பென்ரோஸ் (அண். 1902)
திருச்சபையின் மறைவல்லுநர், துறவி, வரலாற்றாசிரியர்
பிறப்புc. 673
not recorded, possibly Monkton
இறப்பு26 மே 735
Jarrow, Northumbria
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
புனிதர் பட்டம்திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ-ஆல் 1899இல் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார், உரோமை
முக்கிய திருத்தலங்கள்Durham Cathedral.
திருவிழா25 மே (மேற்கில்)
27 மே மரபு வழி திருச்சபை
பாதுகாவல்எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள்
பீட் (/ˈbiːd/ BEED-'; 672/673 – 26 மே 735) அல்லது வணக்கத்திற்குரிய புனித பீட் (இலத்தீன்: Bēda Venerābilis) என்பவர் ஆங்கிலேயத் துறவியும், அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவரின் ஆங்கிலேயத் திருச்சபையின் வரலாறு (Historia ecclesiastica gentis Anglorum) என்னும் படைப்பு இவருக்கு ஆங்கிலேய வரலாற்றின் தந்தை என்னும் பட்டத்தைப் பெற்றுத்தந்தது.

1899இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இப்பட்டத்தைப்பெற்ற ஒரே ஆங்கிலேயர் இவராவார். இவர் ஒரு சிறந்த மொழியியலாளரும், மொழிபெயர்ப்பு வல்லுநரும் ஆவார். இவரின் படைப்புகள் திருச்சபைத் தந்தையரின் கிரேக்க மற்றும் இலத்தீன் படைப்புகளை ஆங்கிலோ-சாக்சன் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கின.

மேற்கோள்கள்
 Ray 2001, pp. 57–59
 Colgrave & Mynors 1969, p. xix
 Campbell 2004

தமாஸ்கஸ் நகர புனித யோவான்

தமாஸ்கஸ் நகர புனித யோவான்
தமாஸ்கஸ் நகர புனித யோவான் (அரேபிய திருஓவியம்)
மறைவல்லுநர்
பிறப்புசுமார் 676 கி.பி.
தமாஸ்கு
இறப்புதிசம்பர் 4, 749
மார் சாபா, எருசலேம்
ஏற்கும் சபை/சமயம்கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
லூதரனியம்
ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாதிசம்பர் 4

தமாஸ்கஸ் நகர புனித யோவான் (அரபு மொழி: يوحنا الدمشقي Yuḥannā Al Demashqi; கிரேக்க மொழி: Ιωάννης Δαμασκήνος Iōannēs Damaskēnos; இலத்தீன்: Iohannes Damascenus; also known as John Damascene, Χρυσορρόας/கிறிஸ்சோறோஸ், "streaming with gold"—i.e., "the golden speaker") (c. 676 – 4 திசம்பர் 749) ஒரு சிரியன் கிறித்தவ துறவியும் குருவும் ஆவார். தமாஸ்கு நகரின் பிறந்த இவர், எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் மரித்தார்.

பல்துறை வல்லுநர்

பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராக திகழ்ந்தார். இவர் தமாஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராகப் முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார். திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) எனப்படுகின்றார்.[2] இவருடைய திருவிழா நாள் திசம்பர் 4 ஆகும்.

இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

கடைசி திருச்சபைத் தந்தை

சில உரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி, புனித தமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர்.

திருவோவியங்களுக்கு வணக்கம் பற்றி

திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.

ஆதாரங்கள்

 M. Walsh, ed. Butler's Lives of the Saints(HarperCollins Publishers: New York, 1991), pp. 403.

 Christopher Rengers The 33 Doctors Of The Church Tan Books & Publishers, 200, ISBN 0895554402

மேலும் காண்க

Ioannis Damasceni Opera, 1603

Brown, Peter Robert Lamont (2003). The rise of Western Christendom: triumph and diversity, A.D. 200-1000 (2nd, illustrated ). Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0631221387, 9780631221388.

Butler, Alban; Jones, Kathleen; Burns, Paul (2000). Butler's lives of the saints: Volume 12 of Butler's Lives of the Saints Series (Revised ). Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0860122611, 9780860122616.

Jameson (2008). Legends of the Madonna. BiblioBazaar, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0554334135, 9780554334134.

Louth, Andrew (2002). St. John Damascene: tradition and originality in Byzantine theology (Illustrated ). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0199252386, 9780199252381.

McEnhill, Peter; Newlands, G. M. (2004). Fifty key Christian thinkers. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415170494, 9780415170499.

Sahas, Daniel J. (1972). John of Damascus on Islam. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004034951, 9789004034952.

Vila, David (2000). Richard Valantasis. ed. Religions of late antiquity in practice (Illustrated ). Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0691057516, 9780691057514.

The Works of St. John Damascene. Martis Publishing House, Moscow. 1997.

சிரியனான புனித எபிரேம்

சிரியனான புனித எபிரேம்
திருத்தொண்டர், மறைப்பணியாளர், மறைவல்லுநர்
பிறப்புc. 306
நிசிபிஸ் (துருக்கி)
இறப்பு9 ஜூன் 373
மெசபோடாமியா
ஏற்கும் சபை/சமயம்எல்லா கிறித்தவ பிரிவுகளும்
திருவிழா28 சனவரி (கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு மரபுவழி கத்தோலிக்க திருச்சபைகள்)

உயிர்ப்பு ஞாயிறுக்குப் முன்வரும் 7ஆம் சனி (சிரிய மரபுவழி திருச்சபை)
ஜூன் 9 (கத்தோலிக்க திருச்சபை)

ஜூன் 18 (மாரோனைட் திருச்சபை)
சித்தரிக்கப்படும் வகைதிராட்சைக் கொடி மற்றும் ஏட்டுச் சுருள், திருத்தொண்டர் உடையில் தூப கலசத்தோடு; புனித பெரிய பசீலோடு; யாழினால் பாட்டமைப்பது போல
பாதுகாவல்ஆன்ம வழிகாட்டிகள்

சிரியனான புனித எபிரேம் (சிரியம்: ܡܪܝ ܐܦܪܝܡ ܣܘܪܝܝܐ, கிரேக்கம்: Ἐφραίμ ὁ Σῦρος; இலத்தீன்: Ephraem Syrus; சுமார். 306 – 373) என்பவர் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிரிய திருத்தொண்டரும் சிரிய மொழியில் புலமைப்பெற்ற பாடலாசிரியரும், இறையியலாளரும் ஆவார்.  இவரின் படைப்புகள் கிறித்தவர்களிடையே மிகவும் புகழ்பெற்றதாய் இருந்தன. பல கிறித்தவப் பிரிவுகள் இவரை புனிதர் என ஏற்கின்றன. திருச்சபையின் மறைவல்லுநர் என கத்தோலிக்க திருச்சபையில் ஏற்கப்படுகின்றார். சிரிய மரபுவழி திருச்சபையில் இவருக்கு மிக முக்கிய வணக்கம் செலுத்தப்படுகின்றது.

எபிரேம் பாடல்கள், கவிதைகள், மறை உரைகள் மற்றும் உரைநடை வடிவில் விவிலிய விளக்க உரைகள் பல எழுதி உள்ளார். இவை துன்பவேளையில் திருச்சபையை சீர்திருத உதவும் வகையில் நடைமுறை இறையியல் படைப்புக்களாக இருந்தன. எனவே மக்கள் பல நூற்றாண்டுகளாக இவரது மரணத்திற்கு பின்னரும், இவரது பெயரில் பல நூல்களை (pseudepigraphal) எழுதினார். இவரின் படைப்புகளில் மேற்கு சிந்தனைகளின் தாக்கம் சிறிதாகவே இருப்பதால் அவை கிறித்தவத்தின் துவக்க வடிவத்தைக் காட்டுகின்றது. இவர் சிரிய மொழி பேசும் திருச்சபை தந்தையர்களுல் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.

மேற்கோள்கள்

 Karim, Cyril Aphrem (2004-12). Symbols of the cross in the writings of the early Syriac Fathers. Gorgias Press LLC. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59333-230-3. 

 Lipiński, Edward (2000). The Aramaeans: their ancient history, culture, religion. Peeters Publishers. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-429-0859-8. 

 Possekel, Ute (1999). Evidence of Greek philosophical concepts in the writings of Ephrem the Syrian. Peeters Publishers. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-429-0759-1. 

 Cameron, Averil; Kuhrt, Amélie (1993). Images of women in antiquity. Psychology Press. பக். 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-09095-7. 

 Parry (1999), p. 180

சிலுவையின் புனித யோவான்

 

சிலுவையின் புனித யோவான்
Saint John of the Cross
சிலுவையின் புனித யோவான்
ஆதினத் தலைவர், மறைவல்லுநர்
பிறப்புசூன் 24, 1542
போண்டிவேரோஸ், எசுப்பானியா
இறப்புதிசம்பர் 14, 1591 (அகவை 49)
ஊபெதா, அந்தலூசியா, எசுப்பானியா
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூத்தரன்
அருளாளர் பட்டம்திருத்தந்தை பத்தாம் கிளமன்ட்-ஆல் ஜனவரி 25 1675
புனிதர் பட்டம்திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்-ஆல் டிசம்பர் 27 1726
முக்கிய திருத்தலங்கள்எசுப்பானியா நாட்டில் உள்ள சிலுவையின் புனித யோவானின் கல்லறை
திருவிழாடிசம்பர் 14
பாதுகாவல்தியான வாழ்வு, ஆழ்ந்த சிந்தனை, மறைமெய்ம்மையியல், மறையியலாளர்கள், எசுப்பானியா நாட்டு கவிஞர்கள்
சிலுவையின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de la Cruz, ஆங்கில மொழி: Saint John of the Cross, சூன் 24, 1542 – டிசம்பர் 14, 1591), உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முப்பத்தியாறு மறைவல்லுனர்களுள் ஒருவர். கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த எசுப்பானிய மறையியலாளரான இவர் கார்மேல் சபைத் துறவியும் குருவும் ஆவார். சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான இவரது படைப்புகள் எசுப்பானிய இலக்கியத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளன.

கார்மேல் சபையைச் சீர்திருத்திய இவர், புனித அவிலா தெரேசாவோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்குவதில் பெரும் பங்காற்றினார். திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 1726 இல் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.

மேற்கோள்கள்
 Thompson, C.P., St. John of the Cross: Songs in the Night, London: SPCK, 2002, p. 27.
 Roth, Norman. Conversos, Inquisition, and the Expulsion of the Jews from Spain, Madison, WI: The University of Wisconsin Press, 1995, pp. 157, 369

புனித பெரிய ஆல்பெர்ட்

புனித பெரிய ஆல்பர்ட்
புனித பெரிய ஆல்பர்ட்திருஓவியம், 1352, திரிவிசோ, இத்தாலி
ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு1193/1206
லவீசன், பவேரியா
இறப்புநவம்பர் 15, 1280
கோல்ன், புனித உரோமைப் பேரரசு
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம் 1622, உரோமை நகரம்
புனிதர் பட்டம்பதினொன்றாம் பயஸ்-ஆல் 1931, உரோமை நகரம்
முக்கிய திருத்தலங்கள்புனித ஆன்டிரியாஸ் கோவில், கோல்ன்
திருவிழாநவம்பர் 15
பாதுகாவல்சின்சினாட்டி; உலக இளையோர் நாள்; மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள்; இயற்கை அறிவியல், தத்துவ; விஞ்ஞானிகள்; மாணவர்கள்

புனித பெரிய ஆல்பெர்ட், O.P. ( 1200க்கு முன்பு – நவம்பர் 15, 1280), பெரியவர் ஆல்பெர்ட் என்றும் கொலோனின் ஆல்பெர்ட் என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு கத்தோலிக்க முனிவர் (புனிதர்) ஆவார். இவர் செருமானியத் தொமினிக்கத் துறவியும் ஆயரும் ஆவார். இவர் தம் வாழ்நாளில் அகற்பொது முனைவர் என்றும் புலவாண்மை முனைவர் என்றும் பாராட்டப்பட்டவர். வாழ்நாள் இறுதியில் தன்பெயருக்கு முன் புனித என்பது மட்டுமன்றி பெரியவர் என்ற பெருமையையும் பெற்றவர். ஜேம்சு ஏ.விஷீப்பிள், ஜோச்சிம் ஆர்.சோடர் போன்ற புலமையாளர்கள் இவரை இடைக்காலத்தின் மாபெரும் மெய்யியலாளராகவும் இறையியலாளராகவும் மதித்தனர். கத்தோலிக்கத் திருச்சபை இவரை திருச்சபை (மறையியல்) முனைவராக தகைமையீந்து பெருமதிப்பு தந்தது. இதுபோல திருச்சபையின் தகைமை பெற்றவர் 36 பேரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

உலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. ஆர்சனிக் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் இவரே. அத்துடன் வெள்ளி நைத்திரேட்டு போன்ற ஒளியுணர் வேதிப் பொருட்களை ஆராய்ந்தவர்.

வாழ்க்கை

ஆல்பெர்ட் போலிசுதாத் என்பவரின் மகனாகப் பிறந்தார். 1280இல் இவர் இறந்தபோது இவருக்கு 80 அகவை எனக்கூறப்படுவதால், இவர் 1200க்கு முன்பே பிறந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தக்க சான்றுகளின்படி இறக்கும்போது 87 அகவை முடிந்திருந்ததாக அறியப்படுவதால், இவர் 1193இல் பிறந்ததாகப் பொதுவாக ஏற்கப்படுகிறது. ஆல்பெர்ட் (இப்போது பவாரியா எனப்படும்) இலௌவிங்கெனில் பிறந்திருக்கலாம். ஏனெனில் இவர் தன்னை இலௌவிங்கெனின் ஆல்பெர்ட் என அழைத்துக்கொண்டார். அல்லது அது வெறுமனே அவர் குடும்பப் பெயராகவும் இருக்கலாம்.

தொமினிகன் சபையில் சேர்ந்தார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் கோல்னில் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். தியுதோனிச் மாவட்ட சபை அதிபராக தேர்வுச் செய்யப்பட்ட இவர், இரெயின்ஸ்பர்க் ஆயராக நான்கு ஆண்டு பணியாற்றிய பின், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர் பல பல்கலை கழகங்களில் இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார். இவரது மாணவர்களில் புனித தாமஸ் அக்குவைனஸ் ஒருவர். இவரும் அக்வினாஸும் அறிவு சார்ந்த விசுவாசத்தை தங்கள் இறையியல் விளக்கங்களில் பறைசாற்றினர். லியோன் பொதுச்சங்கத்தில் முக்கியப் பங்காற்றி, தன் மாணவரான தாமஸ் அக்குவினாஸின் எழுத்துக்களையும் படிப்பினைகளையும் விளக்கி அதற்கு ஆதரவாகப் பேசினார்.

1280ஆம் ஆண்டு நவம்பர் 15 இறந்த ஆல்பர்ட், 1931ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார்.

மேலும் காண்க

கத்தோலிக்க முனிவர்கள் (புனிதர்கள்) பட்டியல்

இடக்காலத்தில் அறிவியல்

மேற்கோள்கள்

 Weisheipl, James A. (1980), "The Life and Works of St. Albert the Great", in Weisheipl, James A. (ed.), Albertus Magnus and the Sciences: Commemorative Essays, Studies and texts, 49, Toronto: Pontifical Institute of Mediaeval Studies, p. 46, ISBN 0-88844-049-9

 Joachim R. Söder, "Albert der Grosse – ein staunen- erregendes Wunder,” Wort und Antwort 41 (2000): 145; J.A. Weisheipl, "Albertus Magnus,” Joseph Strayer ed., Dictionary of the Middle Ages 1 (New York: Scribner, 1982) 129.

 இன்றைய புனிதர்: புனித ஜெரோம் - வத்திக்கான் வானொலி

 Emsley, John (2001). Nature's Building Blocks: An A-Z Guide to the Elements. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 43,513,529. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-850341-5.

 Davidson, Michael W. (2003-08-01). "Molecular Expressions: Science, Optics and You — Timeline — Albertus Magnus". The Florida State University. 

 Szabadváry, Ferenc (1992). History of analytical chemistry. Taylor & Francis. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2-88124-569-2.

 Kennedy, Daniel. "St. Albertus Magnus." The Catholic Encyclopedia. Vol. 1. New York: Robert Appleton Company, 1907. 10 Sept. 2014

 Tugwell, Simon. Albert and Thomas, New York Paulist Press, 1988, p. 3, 96–7

தகவல் வாயில்கள்

Tugwell, Simon. Albert and Thomas, Paulist Press, New York, 1988

 This article incorporates text from a publication now in the public domain:  "article name needed". Cyclopædia, or an Universal Dictionary of Arts and Sciences (first). (1728). James and John Knapton, et al. 


பிரிந்திசி இலரான்ஸ்


பிரிந்திசி இலரான்ஸ்
மறைவல்லுநர்
பிறப்புசூலை 22, 1559
பிரிந்திசி
இறப்புசூலை 22, 1619 (அகவை 60)
லிஸ்பன்
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்திருத்தந்தை ஆறாம் பயஸ்-ஆல் 1783
புனிதர் பட்டம்பதின்மூன்றாம் லியோ-ஆல் 1881
திருவிழாஜூலை 21
பாதுகாவல்பிரிந்திசி
பிரிந்திசி இலரான்ஸ் (Lawrence of Brindisi, இயற்பெயர்: கியுலியோ செசாரெ ரூசோ, சூலை 22, 1559 - சூலை 22, 1619), ஒரு கத்தோலிக்கக் குருவும், கப்புச்சின் சபைத் துறவியும் ஆவார்.

இவர், வெனிஸ் நகர வணிகர் குடும்பத்தில், பிரிந்திசி நேபிள்ஸ் மாகாணத்தில் பிறந்தவர். சிறுவன் ஜூலியஸ் ஒழுக்கமான, பக்தியான வாழ்வால் பிரிந்திசி நகர மக்களால் சின்ன சம்மனசு என்று அழைக்கப்பட்டார். சிறு வயதிலே பெற்றோர்களை இழந்ததால் தாய்மாமன் உதவியால் வளர்ந்தார். வெனிஸ் நகரில் உள்ள புனித மார்க் கல்லூரி கல்விபயின்ற பின்னர் சகோதரர் இலரான்ஸ் என்னும் பெயரோடு வெரோனா உள்ள கப்புச்சின் சபை சபையில் இணைந்தார். இவர் பதுவை நகர பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர், இவர் சரளமாக பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் செமித்திய மொழிகளை பேசுவார். 1582 இல் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட இலாரன்ஸ் ஒரு அறிவு செறிந்த குருவாக திகழ்ந்தார்.

1596-இல் உரோமில் உள்ள கப்புச்சின் சபைக்கு தள தலைவராக நியமிக்கப்பட்டார்; திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் இவரை அந்த நகரத்தில் உள்ள யூதர்களிடம் மறைபணியாற்ற அனுப்பினார். 1599-இல் தொடங்கி, லாரன்ஸ் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கு பெரிது உதவினார்.

1601-இல் புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் ருடால்பின் படைக்கு ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்போது ஓட்டோமேன் டர்க்குகள் எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை அறிவுறுத்தினார் (Philippe Emmanuel). உதுமானியப் பேரரசிடமிருந்து Székesfehérvár என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த போரின் போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.

1602-இல் இவர் கப்புச்சின் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1605-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் திருப்பீட தூதுவராக பவேரியாவுக்கு பணியாற்றினார். பிறகு ஸ்பேயின் நாட்டின் திருப்பீட தூதுவராக பணியாற்றியபின்னர், இவர் 1618 இல் ஓய்வுபெற்றார். 1619-இல் ஸ்பெயின் அரசருக்கு நேபிள்ஸ் வைஸ்ராயாயின் நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு தூதராக இவர் அனுப்பப்பட்டார். இந்த பணியை முடித்த பிறகு, லிஸ்பனில் தனது பிறந்த நாள் அன்று இறந்தார்.

இவருக்கு 1783-இல் திருத்தந்தை ஆறாம் பயஸ் அருளாளர் பட்டமும், 1881-இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவினால், புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. 1959-இல் இவர் மறைவல்லுநராக திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் அறிவிக்கப்பட்டார்.

இவரின் விழா நாள் ஜூலை 21.

சான்றுகள்
ஆ.தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 37-43

வெளி இணைப்புகள்
St. Lorenzo Da Brindisi
Saint Laurence of Brindisi 
Saint Lawrence of Brindisi 
A Homily by Lawrence of Brindisi