அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, November 28, 2021

நற்கருணைப் பேழை எரியாத புதுமை!

நற்கருணைப் பேழை எரியாத புதுமை! 

புனித சின்னப்பருக்கு தாமிரபரணி பாயும் கரையோரம் கற்பகவிருட்சங்கள் செழித்தோங்கி நிற்கும் சிங்கம்பாறை என்ற ஊரில் சிறிய ஒலைக்கோயில் ஒன்று 250 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.சிலுவையை நினைவில் கொண்டு சிலுவை வடிவில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. தண்ணீருக்கு பதிலாக பதனீரை பயன்படுத்தி இந்த ஆலயம் கட்டப்பட்டது. 

சிங்கம்பாறை புனித சின்னப்ப ஆலயப் பணிகள் 1911ல் ஆரம்பிக்கப்பட்டு திருச்சியிலிருந்து வந்த அருட்தந்தை அவர்கள் கோவில் என்றால் அது சிலுவை வடிவத்தில் இருக்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் கோவிலின் இருபக்கங்கள் இடிக்கப்பட்டு சிலுவை கட்டப்பட்டது. 1928ல் ஆலயம் வேலை முடிவு பெற்று திறக்கப்பட்டது. Fr.அருளப்பர் காலத்தில் சிலுவை கோவில் விரிவுப்படுத்தபட்டது. 

1949ல் சிங்கம்பாறை கோவில் தீப்பிடித்து எரிந்த போது சுருபம் மற்றும் கோவில் பொருள்கள் எல்லம் எரிந்து விட்டது. ஆனல் நற்கருணை பேழை மட்டும் எரியவில்லை. அப்போது பங்கு தந்தையாக இருந்தவர் வலண்டின் டயஸ் அவர்கள். ஆனால் கோவிலை மறுசீர் அமைப்பு செய்தது முன்னாள் பங்கு தந்தை FR.விசுவாசம் ஆவார். 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சோமனாதபேரி இருந்து செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பிறகத்தோலிக்க சமூகம் மாற்றப்படுகிறது. கத்தோலிக்க சமூக மக்கள் முக்கூடல் அருகில் மைலபுரம் குடியேறினர். இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டதால் சிங்கபாறை உருவாக்கப்பட்ட வழி வகுத்தன. 

சோமனாதபேரி கத்தோலிக்கர்கள் ஒரு முஸ்லீம் மனை இருந்து மைலபுரம் வடக்கு மற்றும் பங்குதந்தை உதவியுடன் அங்கு குடியேறினர்.  பால் நாதர், வருகையால் அது சிங்கம்பாறை என்று பெயரிடப்பட்டது. ஒரு சிறிய அறையானது இங்கே கட்டப்பட்டது. மற்றும் செயின்ட் பால் சிலை அங்கு நிறுவப்பட்டது, இது மைலபுரத்தி உள்ள செயின்ட் பீட்டர் மற்றும் பால் திருச்சபை நீக்கப்பட்டது. 

1901 சிங்கபாறை கோவில் 1894 ல் ஒரு தலைப்பில் கூரைகொண்ட விரிவான இருந்த காலத்தில் சே ந்தமரம் பங்கின் அதிகார வரம்பின் கீழ் இருந்தது. பின்னர் அது வீரவ நல்லூர் பங்குடன் சேர்க்கப்பட்டது. கேப்ரியல்1991 இல் தற்போதைய சர்ச் அடித்தளம் போடப்பட்டது. சர்ச் கட்டுமான பணி 1929 ல் முடிக்கப்பட்டது. 

புனித சின்னப்பரும், புனித ராயப்பரும் இணைந்த நிலையில் அமைந்த ஆலயங்களைத் தான் பெரும்பாலும் காணமுடியும். புனித சின்னப்பருக்கு என்று தனியாக அமைந்த சில ஆலயங்களுள் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

7 குடும்பமாக இருந்து ஊர் உருவாக்கப்பட்டது. இன்று புனித சின்னப்பர் ஆசிர்வாதத்தால் 1100 குடும்பங்கள் வளர்ந்து உள்லது. இந்த ஊரின் முதல் குருவாக புதுமை அடிகளார் 1939ல் குருபட்டம் பெற்றார். இரண்டாவதாக ஜான்சன், பின் ஜேம்ஸ், புதுமை வளன், சார்லஸ், ஆரோக்கியராஜ ஆகியோர்கள் குருபட்டம் பெற்று உள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் திருத்தல் திருவிழா ஜனவரி 16ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக 25ம் தேதி நிறைவடையும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.


சேன்றரம், (Santarem), போர்ச்சுக்கல்

சேன்றரம், (Santarem), போர்ச்சுக்கல் 13 ம் நூற்றாண்டின் நடுப்பகுதி

சேன்றரம் சேர்ந்த ஒரு பெண்மணி தனது கணவன் தனக்கு அவநம்பிக்கையாக இருப்பதாக கருதியதால் துர்மந்திரவாதியின் (குறிசொல்பவன் அல்லது செய்வினை செய்பவன் என்றும் கொள்ளலாம்) ஆலோசனையை நாடினாள். 
அந்த துர்மந்திரவாதி ஒரு நற்கருணையை கேட்டார். அதை கொண்டு வருகையில் அவள் தனது கணவனின் அன்பைப் பெற்று விடுவாள் என்று கூறினான். அந்த பெண்மணி அவளிடம் எதை செய்யக் கேட்க்கப்பட்டிருக்கிறதோ அது திட்டவட்டமாய் தவறு என்றும் உணர்ந்தாள். 
ஆயினும் அவள் திருப்பலிக்கு சென்று நற்கருணையை பெற்றுக்கொண்டாள், ஆனால் இதயத்தில் பெற்றுக்கொள்ளாமல் வாயிலிருந்து உடனே வெளியே எடுத்து கைக்குட்டையில் பொதிந்து கொண்டாள். 
அந்த அப்பமானது இரத்தம் வடிக்கிறது என்பதை கவனியாமல் அவள் தேவாலயத்தை விட்டு வெளியே விரைந்தாள். இரத்தத்தைப் பார்த்த ஒரு ஊர்வாசி அந்த பெண்தான் காயப்பட்டிருப்பதாக வருந்தி இரத்தம் வடிவதை அவள் கவனத்திற்கு கொண்டு வந்தான். 
அப்பம் தான் இரத்தம் வடிக்க ஆரம்பித்து விட்டதை பார்த்த அவள் அதை வீட்டிற்கு எடுத்து சென்று பேழையில்(trunk) வைத்தாள். 
அந்த இராவில் அவளும் அவளது கணவனும் பேழையிலிரிந்து வெளிவந்த பிரகாசமான ஒளிக்கதிர்களால் எழுந்தார்கள். பிற மக்களும் அவ்வீட்டிற்கு வந்த இந்த வினோதத்தைக் கண்டார்கள். 
அந்த பங்கு குரு அந்த அப்பத்தை ஆலயத்திற்கு மீண்டும் எடுத்துச்சென்று நற்கருணை பேழையில் ஒரு மெழுகு கலனில் வைத்தார். 
மறுமுறை அவர் பேழையை திறக்கும் போது அந்த மெழுகு கலன் உடைந்து படிகச் சிமிழல் தாங்கப்பட்டிருந்தது.

போல்ஸினா- அர்வியட்டோ

போல்ஸினா- அர்வியட்டோ 

1263 ம் ஆண்டு ப்ரேகு (Praque) நாட்டைச் சேர்ந்த பீட்டர்(Peter) உரோமிற்கு திருப்பயணம் சென்றபோது போல்ஸினா வில் (Bolseno) நிற்கிறார். அவர் ஒரு பக்திமிக்க குரு என்று சொல்லப்படுகிறார், இருந்தபோதிலும் அப்பத்தின் மாற்றத்தில் அவருக்கு ஐயம் இருந்தது. பரிசுத்த கிறிஸ்ற்றினா கல்லறையில் அவர் திருப்பலி நிறைவேற்றும் போது, வார்த்தையளவில் மட்டும் (உருக்கமில்லாமல்) எழுந்தேற்ற வார்த்தைகளைச் சொன்னபொழுது அப்பம் கொடூரமாக இரத்தம் வடிக்க ஆரம்பித்தது. உடனே ப்ரேகுவை சார்ந்த அந்த பீட்டர் அந்த அப்பத்தை பொதிந்து உடனடியாக அருகிலிருந்த பேரூர்(town) அர்வியட்டோ (Orvieto)ல் இருந்த பாப்பானவர் நான்காம் அர்பனிடம் (Urban) எடுத்து சென்றார். பரிசுத்த தந்தை, மெய்யாகவே நற்கருணை புதுமை நடந்திருந்தது என்று முடிவு செய்தார். இந்த புதுமையை சிறப்பிக்கும் வகையில் அவர் ஒரு புதிய திருநாளை ஏற்படுத்தி கிறிஸ்துவின் திருவுடல் திருநாள் (Corpus Christi) என்று அழைத்தார். இது இன்று வரை இருக்கிறது.



ப்ளானட், ஃப்ரான்ஸ் 1331!

ப்ளானட், ஃப்ரான்ஸ் 1331! 

ப்ளானட் என்ற ஊர் சித்திரம் போன்ற மலைகளால் சூழப்பட்ட, நெடிய குறுகிய, பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அமைவிடத்தால் அது முக்கியத்துவமற்று (Inconspicous) இருந்த போதிலும் கடவுளால் அனுகூலம் செய்யப்பட்டது. அவர் தான் அதை நற்கருணை புதுமையால் மேன்மை படுத்தியவர். அந்த நிகழ்வின் கண்கூடான சான்று இன்றும் அது நிகழ்ந்த தேவாலயத்தில் பேணப்படுகிறது.

அந்நாட்களில், நற்கருணை பெறுவதற்காக பீடக்கிராதியில் ஒருவர் பக்கம் மற்றொருவராக முழந்தாளில் நிற்பார். இரு பீடச்சிறுவர்கள் கிராதியில் நீளவாக்கில், பீடத்தைப்பார்த்து தொங்கிக்கொண்டிருக்கும் லெனின் துணியின் கீழ் விழிம்பை எடுத்து மடித்து பிடிப்பார்கள், நற்கருணையை பெற்றுக்கொள்வோர் துணியின் அடியில் கை வைத்திருப்பார்கள் இதனால் நற்கருணை, நற்கருணை துகள்கள் தவறி விழும்போது (நற்கருணையானது நேரடியாக குருவானவரால் நாவில் வழங்கப்படும்) தரையில் விழாது. மீண்டும் அது வழங்கப்படும். 

இந்த புதுமையானது 1331ம் ஆண்டு மார்ச் 31 உயிர்ப்பு ஞாயிறு அன்று ப்ளானட் நகரின் முதன்மை குரு ஹக்யூஸ் தே லா பா(உ)மே (Hagues De La Baume) யால் நிறைவற்றப்பட்ட முதல் திருப்பலியில் நிகழ்ந்தது. புனித விழா நிகழ்வு என்பதால் பீடச்சிறுவர்களுடன், அதே பங்கை சேர்ந்த தாமஸ் கெய்லட் (Thomas Cailot) மற்றும் கய்யட் பெஸன்(Guyot Besson) என்னும் இருவர் உதவிக்கொண்டிருந்தனர். 

திருவிருந்தின் போது திருவிருந்தினர் அனைவரும் பீடக்கிராதிக்குச்சென்று அந்த துணியின் அடிப்பகுதியில் கையினை வைத்து குருவிற்காக எதிர் பார்த்து இருந்தனர். இறுதியில் நற்கருணையை பெறுபவர்களில் ஒருவராக ஜாக்யுட்டோ (Jaquetto) என்னும் விதவை இருந்தாள். குருவானவர் அவளது நாவில் நற்கருணையை வைத்து திரும்பி பீடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

திருப்பலியில் பங்கு கொண்டோர் பலரும், அவர்களுடன் கெய்லட் மற்றும் பெஸனும் அவளது வாயிலிருந்து நற்கருணை கீழே விழுந்ததை பார்த்தனர். கெய்லட் பீடத்திற்கு சென்று இவ்வெதிர்பாரா நிகழ்வை குருவிடம் தெரிவித்தார். அவர் கிராதியை நெருங்கிவந்து மிகச்சரியாக அப்பத்தின் அளவிலே இருந்த இரத்தப்புள்ளியைப் அந்தத்துணியில் பார்த்தார். அதுவோ இரத்தத்தில் முழுதும் கரைந்துவிட்டது போல் தோன்றியது. 

திருப்பலி முடிந்த பின், குருவானவர் அந்தத் துணியை எடுத்து, குனிந்து ஒரு பாத்திரத்தில் உள்ள சுத்தமான நீரில் அந்த இரத்தப்புள்ளி இருந்த துணிப்பகுதியை வைத்தார். அவர் அந்தப் புள்ளியைப் பல முறை விரலால் சுரண்டிய பின் அது குறைவதற்குப் பதிலாக பெரிதாவதைக் கண்டார். அவர் அந்தத் துணியை எடுக்கும் போது அந்த நீர் இரத்தமயமாய் ஆகியிருப்பதைக் கண்டார். 

குருவானவரும் அவரது உதவியாளர்களும் ஆச்சரியமும் அத்துடன் பயமும் கொண்டு “இது நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விலை மிகுந்த இரத்தம்” என்று வியந்தனர். குருவானவர் கழுவியபின் கத்தியை எடுத்து அப்பத்தினால் ஏற்பட்ட இரத்தப்பகுதியை துணியிலிருந்து வெட்டிஎடுத்தார். 

அந்த சதுர வடிவ துண்டு துணியானது சங்கைக்குரிய விதமாக பீடப்பேழையில் பொருத்தப்பட்டது. இந்த புதுமையானது விசாரணை செய்யப்பட்டு, பின் பாப்பானவர் 22ம் அருள் சின்னப்பரால் உறுதி செய்யப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் அந்தத் துணியானது சிறப்பான கதிர் பாத்திரத்தில் வைக்கப்பட்டது. அதில் தான் அது இன்று வரை இருக்கிறது.


Friday, November 26, 2021

பெருங்கருணையின் திருவருட்சாதனம்


பேராயர் ஃபுல்டன் ஷீன் (Archbishop Fulton J. Sheen 1895-1979) அவர்கள் மரணத்திற்கு சுமார் இரு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கென பேட்டியளித்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று  "பேராயர் அவர்களே, உங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கோடிக்கணக்கான மக்களை நீங்கள் நல்வழிப்படுத்தி இருக்கிறீர்கள் . எத்தனையோ பேருக்கு ஊக்கமளித்து, விசுவாச வாழ்வுக்குத் தூண்டுதலாக இருந்தீர்கள்..  ஆனால் உங்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தியவர் யார்? அவர் ஒரு திருத்தந்தையா?" என்பது.

அதற்கு அவர் அளித்த பதில் தான் ஆச்சர்யமானது "என்னை விசுவாசத்திலே தூண்டியவர் ஒரு திருத்தந்தை  அல்லர், கர்தினாலோ, ஆயரோ, இன்னொரு குருவோ, கன்னியரோ அல்ல. ஒரு பதினோரு வயது சீனச் சிறுமி தான்" என்று கூறிவிட்டு மேலும் விளக்கலானார்.

"கம்யூனிசம் சீனாவை ஆக்கிரமித்திருந்த போது, கம்யூனிச தீவிரவாதிகள் ஒரு குருவானவரை அவரது இல்லத்திலேயே சிறைப்பிடித்தனர். வெளியே பூட்டப்பட்டிருந்த அவரது இல்லத்தின் ஜன்னல் வழியாக தனது ஆலயத்தை அந்தத் தீவிரவாதிகள் ஆக்கிரமித்தத்தை அந்தக் குரு கண்டார். அவர்கள் கோவிலைச் சூறையாடி, அங்கிருந்த பொருட்களை எல்லாம் உடைத்து, பீடத்தை நோக்கி முன்னேறினர். அங்கிருந்த நற்கருணைப் பேழையை உடைத்து வசீகரிக்கப்பட்ட அப்பங்களை தரையிலே சிதறடித்து அவசங்கை செய்தனர். அந்தக் குருவானவர் அந்த பேழையில் இருந்த அப்பங்களின் எண்ணிக்கையை அறிந்திருந்தார் - அவை மொத்தம் முப்பத்தி இரண்டு. அந்தத் தீவிரவாதிகள் செய்த அனைத்தையும் ஒரு சிறுமி மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.

அதன் பின் தினம்தோறும் நள்ளிரவில் அந்தத் தீவிரவாதிகள் அயர்ந்த நேரத்தில் அச்சிறுமி ஆலயத்திற்கு வந்தாள். ஒரு மணி நேரம் ஆண்டவரின் சமூகத்தில் நிந்தைப் பரிகார ஜெபங்களை ஏறெடுத்தாள். அங்கு அவமதிக்கப்பட்ட நற்கருணை நாதருக்கு மன்னிப்பு மன்றாட்டுக்களை ஏறெடுத்தாள். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், முழங்காலில் நின்று, குனிந்து  தரையில் கிடந்த அப்பங்களுள் ஒன்றை நாவினால் உட்கொண்டாள் (பொதுநிலையினர் கைகளில் அப்பங்களை ஏந்தக்கூடாது என்பதை அவள் அந்தச் சூழ்நிலையிலும் மறக்கவில்லை- தற்காலத்தில் இடக்கையில் நற்கருணையை வாங்கி, வலக்கையால் அள்ளி நாவில் போட்டுக் கொண்டு, சட்டையில் அசட்டையாய்க் கையைத் துடைத்துச் செல்லும் கிறிஸ்தவர்கள் சிந்திக்கவும்). இவ்வாறு அவள் தினமும் வந்து, செபித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பமாய் உட்கொண்டு செல்வதை அந்த குருவானவர் கண்டார். அவள் செய்யும் பரிகார செபங்களைக் கண்டு மகிழ்ந்தார். அவளுக்காக செபித்தார்.

முப்பத்தி இரண்டாம் நாள் அவள் கடைசி அப்பத்தை உண்டுவிட்டு, செபித்து விட்டு எழுகையில், எதிர்பாராத விதமாய் ஏதோ ஒன்றில் தடுக்கி எழுந்தாள் . அந்தச் சப்தத்தில், அந்த ஆலயத்தில் உறங்கிக் கொண்டிருந்த தீவிரவாதி விழித்துக் கொண்டான். இந்தச் சிறுமியைக் கண்டு, அவளைத் துரத்திப் பிடித்து, தனது துப்பாக்கியால் அவளை அடித்தே கொன்றான். இதையும் அந்த குருவானவர் அதிர்ச்சியோடும் வேதனையோடும் கண்டார்.

​அந்தச் சிறுமியின் இந்த இரத்த சாட்சியைக் கேட்ட பேராயர், தினமும், தான் நற்கருணை ஆண்டவர் முன் ஒரு மணிநேரம் ஆராதனை செய்வதாக உறுதி பூண்டார். இந்த எளிய, சின்னஞ்சிறு சிறுமி நற்கருணையில் இருக்கும் நமதாண்டவரை இந்த அளவுக்கு உலகிற்கு சாட்சியாகக் கூற முடியும் எனில், தான் எவ்வளவு சாட்சி பகர வேண்டும் என்பதை அறிந்தார். சாட்சிய வாழ்வின் கடமையை உணர்ந்தார்.

​அதன் பின் நற்கருணை ஆண்டவரை பிரகடனப்படுத்துவதே அவரது தலையாய பணியாக இருந்தது. தைரியத்தையும், பக்தியையும் அச்சிறுமி எண்பித்தாள். விசுவாசம் பயங்களை விலக்குவதையும், நற்கருணை ஆண்டவர் மீதுள்ள பக்தி நம் வாழ்வை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் அச்சிறுமி காண்பித்தாள். நற்கருணையில் மறைந்திருப்பது நமதாண்டவரின் அன்பின் மகிமையே! நமது விசுவாசமும், நம்பிக்கையும், ஆண்டவர் மீது கொண்டுள்ள பற்றுதலையும், குறிப்பாக நற்கருணை ஆண்டவருக்கு நாம் செய்யும் வணக்கத்தையும் கனத்தையும் ஆழ்ந்து ஆராய வேண்டிய தருணம் இது. 

மரியாள், கருணையின் மத்தியஸ்தர்

மரியாள், கருணையின் மத்தியஸ்தர்

Mary, Mediatrix of All Graces

காட்சியளித்த ஆண்டு/Year of Apparition:  1948

காட்சியளித்த இடம்/Location of Apparition: லிபா, படங்காஸ், பிலிப்பைன்ஸ்.

Lipa, Batangas, Philippines.

விழா நாள்/Feast day: செப்டம்பர் 12 (September 12)




புனித நாக் அன்னை

புனித நாக் அன்னை

Our Lady of Knock

காட்சியளித்த ஆண்டு/Year of Apparition: 1879

காட்சியளித்த இடம்/Location of Apparition: நாக், கவுண்டி மாயோ, அயர்லாந்து.

Knock, County Mayo, Ireland.

விழா நாள்/Feast day: ஆகஸ்ட் 17 (August 17)


 



Thursday, November 25, 2021

லா சலேத் அன்னை

சலேத் நகர்

பிரான்ஸ் நாட்டில் லா சலேத் என்னும் சிற்றூரில் 1846ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19 ஆம் நாள் மாக்ஸிமின் ஜீரோ (வயது 11), மெலானி மத்தியூ (வயது 14) ஆகிய இரு சிறுவர்கள் மரியன்னையைக் காட்சியில் காண்கிறார்கள். அழகிய ஒளியால் சூழப்பட்ட அழகிய நாயகி ஒரு கல்மேல் அமர்ந்து அழுது கொண்டிருக்கின்ற காட்சியைக் காண்கிறார்கள். ஆறாத் துயரத்தில் அமர்ந்திருந்த அன்னை மக்கள் தங்கள் பாவங்களால் அவரது திருமகனின் கரத்தைக் கடினப்படுத்துவதாகவும், இந்நிலை மாறாவிட்டால் மனுக்குலத்திற்கு பெரிய அழிவு ஏற்படும் என்றும் எச்சரித்தார். அன்னை சுட்டிக் காட்டிய பாவங்கள் - ஞாயிற்றுக் கடனை அனுசரிக்காமை, கெட்ட வார்த்தைகளால் இறைவனைப் பழித்து ஆணையிடுதல், தபசுகால சுத்த போஜனக் கடனைக் கடைப்பிடியாமை ஆகியவை ஆடும் இப்பாவங்களினால் ஏற்கனவே பசியாலும் பட்டினியாலும் தண்டிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி மக்கள் உடனே மனந்திரும்ப சலேத் நாயகி அறைகூவல் விடுக்கிறார். மக்கள் மனந்திரும்புவார்களேயானால் பாறைகள் கோதுமைக் குவியல்களாக மாறும். பயிர் செய்யாமலே உருளைக்கிழங்குகள் விளையும் என்று ஆறுதல் வார்த்தைகளையும் வழங்கினார். காட்சி பெற்ற பிள்ளைகளை மக்கள் மனந்திரும்ப அவர்கள் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

சலேத் நாயகியின் செய்தி

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது: மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் (மாற் 1:15) என்ற இயேசுவின் பொதுப்பணி முழக்கமே சலேத் நகரில் காட்சி தந்த அன்னையின் செய்தியாகவும் அமைகிறது. மனந்திரும்பாவிடில் அழிந்துபோவீர்கள் என்ற இயேசுவின் எச்சரிக்கை அவருடைய அன்னை வழியாக திரும்பவும் நமக்குத் தரப்படுகிறது. பாவம் மூன்று வகை அந்நியமாக்குதலை நிகழ்த்துகிறது. பாவத்தின் காரணமாக மனிதன் இறைவனிடமிருந்தும், பிறரிடமிருந்தும் தன்னிடமிருந்தும் அந்நியப்படுத்தப்படுகிறான். அந்நியப்படுத்தப்படுதல் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு. உறவற்ற வாழ்வு, செத்த வாழ்வு, உயிருள்ள வாழ்வு வாழ்ந்திட, வாழ்வை நிறைவாய்ப் பெற்றிட மனிதன் பாவத்தை விட்டொழித்து புண்ணியரான இறைவனின் நெறிமுறைகளில் நடந்ததாக வேண்டும். அது நிறைவேறும் வரை சலேத் நாயகி துயர் நிறைந்தவராக, ஆறுதல் பெற விரும்பாதவராக, அழுது கொண்டிருப்பவராகக் காட்சி தருகிறார்.

அன்னையின் காட்சிகள் - முன்னுரை

 1. இறையியல் பார்வையில் அருங்காட்சிகள்

அருங்காட்சிகள் பற்றிய ஐயப்பார்வை

அருங்காட்சிகள் என்றவுடன் இரு வித்தியாசமான நிலைப்பாடுகள் நம் எண்ணத்திற்கு வருகின்றன.

ஏழை, எளிய, வெகுஜன மக்கள் அருங்காட்சிகளை வெகுவாக நம்புகிறார்கள். அத்தகைய அருங்காட்சித் திருத்தலங்களுக்கு லட்சக்கணக்கில் திருப்பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தக் காட்சித் தலங்களில் தங்களையே மறந்து செபிக்கிறார்கள். அக்காட்சித் திருத்தலங்களில் தரப்பட்டுள்ள செய்திகளை தங்கள் வாழ்வுச் செய்தியாக ஏற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய எளிய மக்களின் மனநிலை, ஆன்மீக உணர்வு மிகுந்த இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமன்று, 'கடவுள்' காட்சிப் பொருளாகிக் கொண்டிருக்கக் கூடிய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக மேலை நாடுகளில் அன்னையின் அருங்காட்சித் திருத்தலங்கள் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். பேராலயங்களெல்லாம் கண்காட்சிக் கூடமாக மாறிக் கொண்டிருக்கின்ற ஐரோப்பிய நாடுகளில் லூர்துநகர், பாத்திமா போன்ற அன்னையின் காட்சித் திருத்தலங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஏழை, எளிய மக்களின் புகலிடங்களாக அன்னையின் காட்சித் திருத்தலங்கள் காட்சி தருகின்றன.

அதே சமயம் இத்தகைய காட்சித் திருத்தலங்களும் அங்கே கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளும், செய்திகளும் பல சிந்தனையாளர்கள் மற்றும் இறையியலார்களிைேடயே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. விமர்சனக் கண்ணோட்டத்தோடு நோக்கும் சிந்தனையாளர்கள் நாத்திக மனப்பான்மையின் காரணமாக அவ்வாறு செய்வதில்லை. மாறாக, விசுவாசப் பார்வையே அவர்களை சற்று விமர்சனக் கண்ணோட்டத்தோடு உற்று நோக்க வைக்கிறது. இவர்களது விமர்சனக் கேள்விகளுக்கு ஒருசில அடிப்படைக் காரணங்கள் உண்டு. அருங்காட்சிகள் பற்றிய அறிவியல் உண்மை , அருங்காட்சித் திருத்தலங்களில் காணப்படும் பரவசமூட்டும் பக்தி முயற்சிகள், விவிலிய மரியாவின் மரியா பற்றிய மரியியல் ஆகியவை இவர்களை

இவர்களை அருங்காட்சிகளை ஐயக் கண்கொண்டு பார்க்க வைக்கின்றன.

எனவே அருங்காட்சிகள் பற்றிய அறிவியல், விசுவாச உண்மைகளை முதலில் அறிந்து கொள்வது அருங்காட்சிகளை உரிய விதத்தில் மதிப்பிட உதவியாக அமையும்.

புதிய ஏற்பாட்டில் காட்சிகள்

பொதுவாக அறிவுத்திறனை வளர்த்து, அறிவின் வழி உலகை உற்று உரத்தம் பண்பு கொண்டோர்க்கு காட்சி அனுபவம் கிடைக்கப்படாது. கட்சி காணும் பேறு குழந்தை உள்ளம் கொண்டோர்க்கும், காணமலேயே நம்பும் பேறு பெற்றோர்க்கும் (யோவா 20:29) கிடைக்கும் பேறு ஆகும்.

ஒழுக்க இறையியல் காட்சிகளை மறுக்கிறது. காட்சி அனுபவ இறையியல் (Mystical Theology) காட்சிகளை ஏற்கிறது. காட்சி அனுபவ இறையியல் காட்சி அனுபவத்தை ஆழ்ந்த விசுவாசத்தின் கனியாகக் கருதுகிறது. நம்பிக்கை (விசுவாசம்) என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை ” (எபி 11:1).

மத்தேயு, லூக்கா நற்செய்தியாளாகள் குழந்தைப் பருவ நிகழ்ச்சியுரைகளில் யோசேப்பு, மரியா, சக்கரியாஸ் ஆகியோர் காட்சி கண்டதாகக் கூறுகின்றனர். இயேசு, . சாத்தான் மின்னல் போல விழக் கண்டார். இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியை உடன் இருந்த திருத்தூதர்கள் கண்டார்கள். இயேசுவின் உயிர்ப்புக் காட்சிகளையும் அவருடைய சீடர்கள் கண்டார்கள். பவுலின் மனமாற்றம் காட்சியின் வழியாக நிகழ்ந்ததாக திருத்தூதர்பணி (அலகு 9) கூறுகிறது. புறவினத்தாருக்கும் கிறிஸ்தவம் உரியது என்ற உண்மையை கடவுள் ஒரு காட்சி வழியாக (திப 10) பேதுருவுக்கு உணர்த்துகிறார். இவ்வாறு புதிய ஏற்பாடு பல்வேறு காட்சிகள் பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்கின்றது.

திருச்சபை மரபில் காட்சிகள்

திருச்சபையின் வரலாற்றில் பல்வேறு காலக் கட்டங்களில் இயேசு, புனிதர்களின் அருங்காட்சிகள் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்காட்சிகளில் அதிகம் அறிமுகமானவை மரியன்னையின் காட்சிகள். இருப்பினும், தூய மார்க்கரீத் மதியாபுக்கு இயேசு தந்த காட்சி, பிரான்சிஸ் அசிசியார் கண்ட காட்சிகள், குழந்தை தெரசா கண்ட காட்சி, புனித யோசேப்பு கொடுத்த காட்சிகள் போன்றவை பற்றியும் செய்திகள் உள்ளன. இக்காட்சிகளில் திருச்சபையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை மரியன்னையின் காட்சிகள் என்றால் அது மிகையாகாது. மரியன்னை கொடுத்ததாகச் சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் திருச்சபையால் அங்கீகரிக்கப்படவில்லை. நீண்ட ஆழ்ந்த ஆய்விற்குப் பிறகே காட்சிகள் திருச்சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. காட்சிகளைப் பொறுத்த அளவில் திருச்சபை தொடக்கம் முதல் மிகுந்த நிதானத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வந்துள்ளது.

காட்சிகள் மதிப்பிழப்பிற்கான காரணங்கள்

இரண்டாவது நூற்றாண்டில் காட்சி காணும் கொடை பெற்றிருந்தவர்கள் தங்களின் காட்சிகளினால் கிறிஸ்தவச் செய்தியின் ஒருமைப்பாட்டு தன்மையைப் பாதித்தனர்.

பல்வேறு சமயங்களில் திருச்சபையின் அதிகாரம் காட்சியாளர்கள் முன் வைக்கும் செய்திகளால் பாதிப்பிற்குள்ளாகலாம். ஆன காட்சியாளர்களும் திருச்சபை அதிகாரிகளை விமர்சித்து உள்ளனர். காட்சியாளர்கள் அதிகாரம் பெறும்போது, மக்களிடையே நிறுவனத் திருச்சபையின் அதிகாரம் குறைய வாய்ப்புள்ளது' என்று கார்ல் ரானர் குறிப்பிட்டுள்ளார்.

காட்சி தாராளமாக ஏற்றுக்கொள்ளப்படும்போது அவை கட்டுப்பாடின்றி பரவக்கூடிய வாய்ப்புள்ளது. காட்சியாளர்களின் ஒழுக்க நேர்மையைக் கணிக்கும் வாய்ப்பில்லாததால் அவை தவறான நபர்களிடமிருந்து வர வாய்ப்பிருக்கிறது.

மேற்கூறப்பட்ட காரணங்களோடு சில தத்துவங்களும், தங்கள் தத்துவப் பின்னணியின் அடிப்படையில் காட்சிகளை ஏற்றுக் கொள்வதில்லை. பகுத்தறிவுவாதம் விண்ணகம், மண்ணகத்திற்கிடையே உள்ள தொடர்பை ஏற்றுக் கொள்வதில்லை. அதன் காரணமாக அங்கு காட்சிக்கு இடமில்லை. அதேபோன்று அறிவியல்வாதம் காட்சிகளை ஏற்றுக் கொள்வதில்லை. அவை காட்சிகளை - மாயக் காட்சி அல்லது மருட்சி என்று குறிப்பிடுகின்றன.

அருங்காட்சிகள் பற்றிய உண்மை நிலை

அறிவியல், தத்துவ இயல்கள் அருங்காட்சிகள் குறித்து எதிர்மறையிலோ, ஐயுறவிலோ தரும் பதில்கள் அருங்காட்சிகள் பற்றிய இறுதிப் பதிலாக அமைய இயலாது. அருங்காட்சிகள் விசுவாசம், இறையியல் சார்ந்த ஒரு சிந்தனைப் பொருள். இறையியல் மற்ற அறிவியல்களோடு முற்றிலும் முரண்படாத வகையில் தனது ஆய்வுப் பொருளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் தனது துறை சார்ந்த சிந்தனைப் பொருளைத் தனது அளவுகோல் கொண்டு கணித்து வழங்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் யோவேல் இறைவாக்கினர் “உங்கள் புதல்வரும், புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையம் காண்பார்கள் (யோவே 2:28) என்று அறிவித்தார். புனித பவுல் "தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளை புறக்கணிக்க 'வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள்' (1 தெச 5:19-21) என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே அறிவியல், இறையியல் ஆய்வுகளின் அடிப்படையில் அருங்காட்சிகள் நிகழ்வது சாத்தியமே. அவை இறை மனித உறவின் சந்திப்புகள். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வோ, செய்தியோ இயற்கையாவது அல்லது இயல்பாவது அருங்காட்சியாகும்.

மரியன்னையின் காட்சிகள்

பெனே லொரந்தன் என்ற சிறந்த சிந்தனையாளர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு மரியன்னையின் அருங்காட்சிகள் பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்கிறார். அன்னையின் காட்சிகள் வழியாக இயேசு உலகில் தம் ் அன்னைக்குரிய இடத்தை வெளிப்படுத்துகிறார். அன்னையின் கென் அங்கீகாரம் பெறுவதற்கு அக்காட்சிகள் ஒரு சில முக்கிய அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.

1. அன்னையின் காட்சிகள் இயேசுவிடமிருந்து ஒரு செய்தியை வழங்க வேண்டும்.

2. இயேசுவோடு அல்லது மீட்புத்திட்டத்தோடு சம்பந்தம் அற்றவையாய் இருக்கக்கூடாது.

3. மீட்புத் திட்டத்தின் தொடர்ச்சியை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.

4. வரலாற்றுத் திருப்பத்தைச் சுட்டிக் காட்டி உலகையும், மனுக்குலத்தையும் இயேசுவிடம் இட்டுச் செல்பவையாக இருக்க வேண்டும்.

5. கிறிஸ்தவ அடிப்படை விசுவாசக் கூறுகளுக்கு முரண்பட்டவைகளாக அமைதல் கூடாது.

6. இறுதியாக, இலை செய்தியற்ற காட்சிகளாகவோ, மக்களை மாயை அல்லது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்பவையாகவோ அமைதல் கூடாது.

இந்த நிபந்தனைகளை சரியாகப் பூர்த்தி செய்து, திருச்சபையின் மீட்புத் தொடர் பணிக்கு துணை செய்வதாக அமையும் காட்சிகள் திருச்சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. அருங்காட்சிகளின் அங்கீகாரத்திற்கு அரும் அடையாளங்கள் தேவைப்படுவது அக்காட்சி இறை செயல்பாட்டின் விளைவு என்பதனை நிரூபிப்பததற்காகவே.

திருச்சபையால் வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அருங்காட்சிகள் அனைத்தும் மேலே கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளன. மரியன்னை வழங்கியுள்ள காட்சிகள் கிறிஸ்தவ விசுவாச அடிப்படையிலும், இறையியல் - விசுவாச விமர்சனத் திறனாய்வு அடிப்படையிலும் மனுக்குலத்தின் மீட்பிற்கு உதவும் இறை - மனித சந்திப்பின் சின்னங்களாகவும், திருச்சபையை அலங்கரிக்கும் அணிகலன்களாகவும் அமைந்துள்ளன.

2. அன்னையின் அருங்காட்சித் திருத்தலங்கள்

மரியன்னை மக்கள் வாழ்வில் கொண்டுள்ள தாக்கத்தைத் துல்லியமாக னைவரும் உணரச் செய்யும் இடங்கள் அவரது திருத்தலங்கள், பொதுவாக கத்தோலிக்கக் கோவிலை மாதா கோவில்கள் என்றே பிறர் அழைத்து அடையாளம் காட்டும் நிலை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது. கத்தோலிக்க ஆலயங்களில் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஆலயங்களே ஏராளம். இவற்றில் அன்னையின் திருத்தலங்கள் மக்களை அன்றாடம் ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் ஈர்ப்பதைக் காண்கிறோம். அன்னையின் திருத்தலங்களை மூன்று வகைப்படுத்தலாம்

(1) அன்னையின் திருவுருவம் போற்றும் திருத்தலங்கள்;

(2) அன்னையின் காட்சி திருத்தலங்கள்

(3) காட்சி நினைவுத் திருத்தலங்கள்.

திருவிவிலியம், கிறிஸ்தவ மரபு இவற்றைவிட மக்கள் மத்தியில் மரியாவை இனம் காட்டி எளிய முறையில் அவரின் பக்தியை அதிகம் உருவாக்கியிருப்பது அவருடைய காட்சிகள். 19,20 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காட்சிகள் அதிகமாக மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிரான்ஸ் நாட்டில் சலேத் நகர் (1846), லூர்து நகர் (1858), போந்துமென் (1871); போர்த்துகல் நாட்டில் பாத்திமா (1917); பெல்ஜியத்தில் போரெங் (1932) மற்றும் மெக்சிகோவில் குவாதலூப்பே (1531). இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்றுள்ள அன்னையின் காட்சித் திருத்தலம் வேளாங்கண்ணி. இது மற்றத் திருத்தலங்களை விட காலத்தால் பழமையானதாகவும் பிற சமயத்தவரை அதிகம் ஈர்க்கின்ற திருத்தலமாகவும் சிறந்து விளங்குகிறது.

மரியன்னையின் காட்சிகள் மரியா பக்தியைப் பெரிதும் வளர்ப்பவை. அக்காட்சித் திருத்தலங்களில் மக்களின் மன்றாட்டுக்கள் கேட்கப்படுவதும், அவர்கள் உடல், உள்ள பிணிகளிலிருந்தும் சுகம் பெறுவதும், மரியா பக்தி வளர்வதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மரியாவின் காட்சிகள் அடிப்படையில் அவரின் திருமகன் இயேசுவோடும், திருச்சபையோடும் தொடர்புள்ள செய்திகளை வழங்குவதற்காகவே அமைந்த காட்சிகளாக உள்ளன. மனித குல மீட்பில் மரியா கொண்டுள்ள தொடர் ஈடுபாட்டை இக்காட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

அருட்பணி. மதுரை ஆனந்த்

Wednesday, November 24, 2021

இயேசுவின் பரிசுத்த நாமம்

 இயேசுவின் பரிசுத்த நாமம்

"நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்." யோவான் 14:14

(இந்தச் செபங்கள் கையெழுத்துப் பிரதியாகக் கிடைத்தவை )

இயேசு என்கிற பரிசுத்த நாமமே!

வல்லமையுள்ள நாமமே! மகத்துவமுள்ள நாமமே !

விடுதலை கொடுக்கிற நாமமே! வாழ்விக்கிற நாமமே !

ஆசீர்வதிக்கிற நாமமே! அற்புதங்களைச் செய்கிற நாமமே!

ஒரே ஏக தெய்வத்தின் நாமமே!

உம்மை நான் ஆராதிக்கிறேன். விசுவசிக்கிறேன்.

ஏற்றுக்கொள்கிறேன். உம்மைநான் நேசிக்கிறேன்.

உம்மோடு என்னை முழுமையாக ஒன்றிக்கிறேன்.

உம்மை நம்புகிறேன். மகிமைப்படுத்துகிறேன்.

இயேசுவின் நாமத்தினாலே என்னை ஆசீர்வதிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தினாலே நான் சுகம் பெற்றுக் பெற்றுக்கொள்கிறேன்.

இயேசுவின் நாமத்தினாலே நான் பலம் அடைகிறேன்.

இயேசுவின் நாமத்தினாலே நான் வெற்றி பெறுகிறேன்.

இயேசு என்கிற நாமமே! என்னை அபிஷேகியும். என்னை உருமாற்றும் .

என்னை முழுமையாக்கும். எனது எல்லா வெற்றிடங்களையும் நிரப்பும்.

இயேசு என்னும் நாமத்தின் பிரசன்னம் எனக்குள் இறங்குவதாக.

என்னை நிரப்புவதாக. ஒளிர்விப்பதாக. அபிஷேகம் செய்வதாக அல்லேலுயா!

இயேசு என்னும் நாமமே! நீரே என் வாழ்வு! என் உயிர் மூச்சு!

என் ஆதாரம் நீரே! என் சமாதானம். என் வளமை. என் எதிர்காலம்.

என்னை பாதுகாக்கும் கோட்டையும் அரணும் நீரே! கேடயமும் நீரே!

கவசமும் நீரே நான் ஊன்றி நிற்கும் பாறையும் என் கன்மலையும் நீரே!

என் வெற்றியும் மகிழ்வும் நீரே !என் ஆறுதலும் ஆதரவும் நீரே!

இயேசு என்னும் நாமமே! என்னை சூழ்ந்துகொள்ளும்.

என்னை நெருங்கி இரும். என்னை பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

என்னுள்ளிருந்து ஜீவநீருற்றுகள் புறப்படச் செய்யும். உமது உயிர் மூச்சை எனக்குள் அனுப்பும் அல்லேலூயா!

(சிறிது நேரம் துதிக்கவும்)

இயேசுவின் பெயரால் செபம் 

1. இயேசு என்கிற மேலான வல்லமையான பெயரை என் உடலுக்குள் அனுப்பி செபிக்கிறேன். சுகப்படுத்துகிற ஆண்டவர் இயேசுவின் பெயரை என் மூளைக்குள்ளும் அதன் இயக்கங்களுக்குள்ளும், அதனால் கட்டுப்படுத்தப்படுகிற என் உடலின் எல்லா இயக்கங்களுக்குள்ளும் நான் அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற மகத்துவமுள்ள பெயரை என் உடலில் உள்ள எல்லா எலும்புகளுக்குள், முதுகு பகுதிகளுக்குள் எலும்பு மூட்டுக்கள். மூட்டுக் கிண்ணங்கள். தசைகள், தசை நார்கள் தோல், நரம்பு மண்டலங்களுக்குள் அனுப்பி செபிக்கிறேன். என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும், நுரையீரலின் ஒவ்வொரு துடிப்புக்குள்ளும் (சுருங்கி விரிதலுக்குள்) இயேசு என்கிற அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு இரத்தத் துளிகளுக்குள்ளும், நான் சுவாசிக்கும் காற்றின் அணுக்களுக்குள்ளும் இயேசு என்கிற உமது வல்லமையான பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா! 

2. நான் உண்ணுகிற உணவு, குடிக்கிற நீர் மற்றும் பானங்கள், என் உடைகள், நான் உடுத்தியிருக்கிற ஆடை, நான் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களுக்குள்ளும் இயேசு என்கிற வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன். நான் பார்க்கிற ஒவ்வொரு காட்சிக்குள்ளும், பொருட்களுக்குள்ளும், நபர்களுக்குள்ளும், என் கண்ணின் பார்வைகளுக்குள்ளும், நான் கேட்கிற ஒலிகள், இசை வார்த்தைகளுக்குள், என் உணர்வுகளுக்குள், சிந்தனைகளுக்குள், தொடு உணர்வுகளுக்குள், என் வாயின் வார்த்தைகளுக்குள் இயேசு என்கிற உம்முடைய அபிஷேகிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன் . அல்லேலூயா!

3. இயேசு என்கிற மகா பரிசுத்த பெயரை என் மனதுக்குள் அனுப்பி செபிக்கிறேன். என் மனதின் ஆழ் நிலைகளுக்குள், அதன் சுகம் பெறாத காயங்களுக்குள், விடுவிக்கப்படாத கட்டுகளுக்குள், ஒருமனப்படமுடியாத அலைக்கழிப்புகளுக்குள், நிலை நிற்க முடியாத தடுமாற்றங்களுக்குள், உம்மோடு ஒன்றிக்க முடியாத நிலைகளுக்குள், உம்மை அறிந்து கொள்ள இயலாத எல்லா அந்தகாரங்களுக்குள்ளும், விடுவிக்கிற, ஒளிர்விக்கிற, அபிஷேகிக்கிற, உறுதிப்படுத்துகிற, இயேசு என்கிற வாழ்வு தருகிற வாழ்விக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன்.

3. இயேசுவே உம்முடைய வெற்றி தருகிற பெயரை எனது மனதின் அமுக்கப்பட்ட உணர்வுகளுக்குள், நிராசைகளுக்குள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளுக்குள், சோர்வுகளுக்குள், ஏக்கங்களுக்குள், தனிமைப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நிலைகள் மற்றும் உணர்வுகளுக்குள் குற்ற உணர்வுகள், காயப்படுத்தப்பட்ட, குற்றப்படுத்தப்பட்ட நிலைகளுக்குள் அவமானப்படுத்தப்பட்ட, புறந்தள்ளப்பட்ட உணர்வுகளுக்குள், நம்பிக்கையற்ற நிலைகளுக்குள், அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற விடுதலை அளிக்கிற பெயரை என் கோப உணர்வுகள், எரிச்சல் உணர்வுகள், வெறுப்பு சலிப்பு உணர்வுகள், ஏற்றுக் கொள்ள முடியாத விட்டுக் கொடுக்க இயலாத நிலைகள், மன்னிக்க முடியாத நிலைகள், தெளிவற்ற குழப்பமான நிலைகள், முடிவெடுக்க முடியாத நிலைகள், இவற்றுக்குள் அனுப்பி செபிக்கிறேன்.

4. மனதின் எல்லா பரபரப்பான நினைவுகள் என்ன ஆகுமோ என்ற வீண் கவலைகள், படபடப்பான நிலைகள், தேவையில்லாத பேரார்வங்கள், சந்தேகமான எதிர்மறையான நிலைகள் இவற்றுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். என் மனதின் கற்பனைகள், கனவுகள், விடுபடமுடியாத பலவீனங்கள், எல்லாவிதமான நன்மையான மற்றும் தீமையான நினைவுகளுக்குள்ளாகவும் இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். எல்லாவிதமான பய உணர்வுகள், நிர்பந்தப்படுத்தப்பட்ட நிலைகள், கட்டாயப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள், மனித வார்த்தைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் என் மீது திணிக்கப்பட்டிருக்கிற எல்லாவற்றின் மீதும் இந்த நேரத்தில் அன்பு செய்கிற விடுதலை கொடுக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன்.

5. ​எல்லா வேதனையான நினைவுகள், இழப்பின் உணர்வுகள், இல்லாமை, இயலாமை உணர்வுகள், நெருக்கப்பட்ட உணர்வுகள் எனது இயற்கையான இயல்பில்லாத சகல உணர்வுகள் மீதும் இயேசு என்கிற ஆறுதல் அளிக்கிற, பலப்படுத்துகிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். என்னைக் குறித்து என் மனதில் இருக்கிற எல்லா எதிர்மறையான தீர்ப்புகள், மனித வார்த்தைகள், தீர்மானங்கள், எதிர்பார்ப்புகள், இவற்றுக்குள் மன்னிக்கிற, நேசிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா! 

6. இயேசு என்கிற மேலான பெயரை அனைத்தையும் ஆளுகை செய்கிற பெயரை என் ஆன்மாவுக்குள் அனுப்பி செபிக்கிறேன். என் ஆன்மாவின் அந்தரங்கங்களுக்குள் அதன் எல்லா அந்தரங்கங்களுக்குள் கட்டப்பட்ட உணர்வற்ற, உயிரற்ற, வறட்சியுற்ற நிலைகளுக்குள் இயேசு என்கிற உமது வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் ஆன்மாவின் உலர்ந்து போன, ஆசீர்வாதமற்ற அழுகி நாற்றமெடுக்கிற எல்லா நிலைகளுக்குள்ளும் தெய்வமே உம்முடைய பிரசன்னத்தை உணர முடியாத, தக்க வைத்துக் கொள்ள முடியாதபடி, வெளிப்படுத்த முடியாதபடி என் ஆன்மாவைக் கட்டி இருக்கிற எல்லா பாவ பலவீன தீமைகளுக்குள், என் உடலும் அதன் உணர்வு, என் மனமும் என் விருப்பங்களும் என் ஆன்மாவை அடிமைப்படுத்தி இருப்பதான எல்லா நிலைகளுக்குள்ளும் விடுதலை அளிக்கிற இயேசு என்கிற உம்முடைய அற்புத பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா! 

7. என் வாழ்வின் எல்லா நிலைகளுக்குள்ளும், கடந்த காலங்கள், நிகழ்காலங்கள், எதிர்காலங்களுக்குள், இயேசு என்கிற உண்மையுள்ள உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாய் இருக்க வேண்டியவைகள் மாறுபட்டு காணப்படுகிற நிலைகள், எந்தவித நன்மைத்தனத்தையும் நிச்சயிக்கப்பட்ட நிலைகளைக் காண முடியாத நிலைகள், தெய்வத்தின் திட்டங்கள், வெளிப்படுத்தப்படாத, அறிந்து கொள்ள முடியாத கட்டப்பட்ட நிலைகள், மறைக்கப்பட்ட, புரிந்து கொள்ள முடியாத நிலைகள், இவைகளுக்குள் எல்லாம் அறிவூட்டுகிற, ஒளியூட்டுகிற ஆசீர்வதிக்கிற இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன்.

8. ​என் கடந்த கால வாழ்வின் கசப்புகள், வேதனைகள், தோல்விகள், இழப்புகள், அலைக்கழிக்கப்பட்ட நிலைகள், தெய்வத்தைப் பற்றிய அறிவும் அபிஷேகமும் இல்லாததால் நான் இழந்து போன ஆசீர்வாதங்கள், இவைகளுக்குள்ளாக இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன். என் நிகழ்காலத்தின் எல்லாத் தேவைகளுக்குள்ளும், ஆசைகளுக்குள்ளும், திட்டங்களுக்குள்ளும், செயல்பாடுகளுக்குள்ளும், வாழ்வின் நிலைகளுக்குள்ளும் இயேசு என்கிற உமது பெயரை அனுப்பி செபிக்கிறேன் அல்லேலூயா!

9. எனக்குள் இருக்கிற எல்லா பிரிவினைகளுக்குள்ளும், பிரச்சனைகளுக்குள்ளும், நானே அறிந்து கொள்ளமுடியாத, விடை காண முடியாத எல்லா கேள்விகளுக்குள்ளும்  இயேசு என்கிற தெளிவு தரும் பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனது அலட்சியங்கள், உண்மையற்ற, பரிசுத்தமற்ற நிலைகள், 'நான்' என்கிற நிலைகள், அங்கீகாரம் தேடுகிற நிலைகள், முதன்மைப்படுத்துகிற நிலைகள் இவைகளுக்குள் எல்லாம் இயேசு என்கிற உமது மீட்பளிக்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். 

10. என்னுடைய அழைத்தலின், ஊழியத்தின் திறமைகள், ஆசீர்வாதங்களின் அடைக்கப்பட்ட குகைகளுக்குள் அவற்றுக்கு உயிரும் வாழ்வும் அளிக்கிற இயேசுவின் வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன் . கட்டவிழ்க்கிற, எழும்பிக் காலூன்றி நிற்கச் செய்கிற, எல்லா கூன்களையும் நிமிர்த்தி விடுகிற, இயேசு என்கிற பெயரை எனக்கென்று தெய்வம் தந்திருக்கிற எல்லா உறவுகளுக்குள்ளும் எல்லா ஆசீர்வாதங்களுக்குள்ளும் அனுப்பி செபிக்கிறேன். இயேசு என்கிற பெயரின் மீது எனது விசுவாசத்தை பதியச் செய்கிறேன் அல்லேலூயா! 

11. நான் இயேசு என்கிற பெயரை என்னால் முடியவே முடியாது என நினைக்கிற எனது நிறைவேறாத ஆசைகளுக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். என்னுடைய எல்லா பயங்களையும், விசுவாசமாக மாற வேண்டிய அவைகளுக்குள்ளாக இயேசு என்கிற பெயரை அனுப்பி செபிக்கிறேன். பரிசுத்த ஆவியின் அமைதியால் என்னை நிரப்பும்படி இயேசுவின் பெயரை எனக்குள்ளாகவும் என்னுடைய எல்லா பதற்றங்களுக்குள்ளாகவும் அனுப்பி செபிக்கிறேன். எளிமையாய் என்னை மாற்ற இயேசுவின் பெயரை என் கோபத்துக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். கடவுள் பார்க்கிறார் என்ற பரிசுத்த உணர்வினால் என்னை நிரப்ப இயேசு என்கிற பெயரை என்னுடைய அலட்சிய மனப்பான்மைக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன் 

12. என்னுடைய பொறுமையற்ற நிலையை விசுவாசம், நம்பிக்கை, மன உறுதியால் நிரப்ப இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். எனக்குள் இருக்கிற வெறுமையையும் அவருடைய பிரசன்னத்தை உணர முடியாமல் இருக்கிற நிலையையும் நீக்க இயேசு என்கிற பெயரை எனக்குள்ளாக அனுப்பி செபிக்கிறேன். ஞானம், விவேகம், பகுத்தறியும் திறன், அறிவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளுதலால் என்னை நிரப்ப இயேசு என்னும் பெயரை எனக்குள்ளாக அனுப்புகிறேன்.

13. என் மீதும் என்னுடைய உடல், ஆவி, மனம், ஆன்மா, வாழ்வு, எதிர்காலம், அழைப்பு, பணிகள், திறமைகள், படிப்பு, புலன்கள், எண்ணங்கள், கற்பனைகள், பயணங்கள், வேலைகள், பொருளாதாரம், வீடு, சொத்துக்கள், எனது குடும்பம், நண்பர் மற்றும் உறவினர்கள் மீதும் இயேசு என்கிற பெயரை ஒரு முத்திரையாக வைக்கிறேன். இயேசுவின் பெயர் என்னை பரிசுத்தப்படுத்துவதாக! இயேசுவின் பெயர் என்னை முழுமையாக்குவதாக! அல்லேலூயா!

14. இயேசு என்கிற பெயரை எனது கவசமாகவும், வாளாகவும், காவலாகவும், கோட்டையாகவும் எடுத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரியாத, உணர முடியாத, புதைக்கப்பட்டதாக கருதப்படுகிற ஆசீர்வாதங்கள் மற்றும் என் வாழ்வின் பகுதிகள் மீதும் என் நினைவிலிருந்து மறைந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் என்னைக் கட்டுப்படுத்துகின்ற உணர்வுகள், நிகழ்வுகள் மீதும் நல வாழ்வையும் ஒளியையும் நிரப்ப வேண்டி இயேசுவின் பெயரை அனுப்புகிறேன்.

15. அன்பு, பாசம், பரிவு, அங்கீகாரம் மற்றும் எனது எல்லா உறவுகள் மூலமாக பிசாசு எனக்கு வைக்கிற எல்லா கண்ணிகளில் இருந்தும் என்னை விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன். முக்கியமாக யாரெல்லாம் என்னைத் தனக்கென வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ, அல்லது யாரெல்லாம் பரிசுத்தமற்ற ஆசையோடு என்னை என்னை அணுகுகிறார்களோ, யாரெல்லாம் தன்னல நோக்கோடு என்னை நேசிக்கிறார்களோ, மேலும் யாரெல்லாம் உமது பரிசுத்த சித்தத்திற்கு எதிரான திட்டங்களை ஆலோசனைகளை எனக்காக வைத்திருக்கிறார்களோ இவர்களிடமிருந்து விடுவிக்க இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் .

16. எனக்கெதிராக என்னைக் கட்ட அனுப்பப்பட்ட எல்லா ஏவல், பில்லி சூனிய, மந்திரவாதக் கட்டுக்கள் மற்றும் தீய அவைகளுக்குள் இயேசுவின் பரிசுத்த வல்லமையுள்ள பெயரை அனுப்பி செபிக்கிறேன். எனக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி எல்லா தீமைகளுக்கு எதிரான மிக வலிமையுள்ள பாதுகாப்பாக அதை எடுத்துக் கொள்கிறேன். நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் என்னைச் சுற்றியுள்ள வான மண்டலங்களுக்குள்ளாக இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன். இவற்றின் மூலமாக எனக்குள் எந்தத் தீமையும் நுழையாதபடி இயேசுவின் பெயரை அனுப்பி செபிக்கிறேன் இயேசுவின் பரிசுத்த பெயர் என்னுள் மகிமை அடைவதாக! இயேசுவின் பரிசுத்த பெயரின் வெற்றியில் நான் ஒரு சாட்சியாக நிற்பேனாக! ஆமென் 

17. இயேசுவின் பெயரால் நான் அமைதி அடைகிறேன். இயேசுவின் பெயரால் நான் புதுப்படைப்பாகிறேன்! இயேசுவின் பெயருக்கு என்னை அடிமைப்படுத்தி ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென் அல்லேலூயா!

18. இரக்கமுள்ள இயேசுவே! என் கண்களை உமது தூய இதயத்துக்குள்ளாக வைக்கிறேன். எனது கரங்களை உமது தூய கண்களுக்குள்ளாக வைக்கிறேன். என் தொண்டை வாய், குரல் வளையை உமது தூய தலைக்குள்ளாக வைக்கிறேன். என் இதயத்தை உமது தூய வலது கரத்துக்குள்ளாக வைக்கிறேன். என் சுவாசத்தை உமது தூய திரு இரத்தத்துக்குள்ளாக வைக்கிறேன்.  ஆமென்! அல்லேலூயா! 

இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் 

இயேசுவே எங்களுக்காக கல்வாரியில் நீர் சிந்திய உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கழுவும். எங்கள் வீடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களிலும் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வையும். எங்கள் வீடுகளின் தரைகளிலும், சுவர்களிலும், கூரைகளிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளியும். எங்கள் வீடுகளைச் சுற்றிலும் நிலங்களின் எல்லைகளைச் சுற்றிலும் உம்முடைய இரத்தத்தைத் தெளித்து வைத்து உமது காவல் தூதர்களை எங்களுக்குத் துணையாக நிறுத்தி வையும். எங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எந்தஒரு காரியமாக இருந்தாலும், மாய மந்திர சக்திகள், சாத்தானின் ஏவுதல்கள், பில்லி சூனியக் கட்டுகள் மற்றும் ஆபத்துகள், விபத்துகள், அவமானங்கள், நோய்கள், பிற தேவைகள் அனைத்திலும் எங்களைப் பாதுகாத்து வழி நடத்தும். நாங்கள் செல்லுகின்ற வழிகளில் எல்லாம் சென்றடைகின்ற ஒவ்வொரு இடங்களில் எல்லாம் உம்முடைய இரத்தத் துளிகளைத் தெளித்து வைத்து எங்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் உமது பிரசன்னத்தால் வழி நடத்தும். இதுவரை எங்களைப் பாதுகாத்து வந்த தேவன் இனிவரும் நாட்களிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தும்படி செபிக்கிறோம்.  ஆமென். 

ஆராதனை ஆயிரம்

அன்பிற்காக அழும்போது

1. பிதாவின் அன்பார்ந்த மைந்தரே

பதில்:  நன்றி ஆண்டவரே

2. அன்பாக இருக்கிறவரே, நன்றி ஆண்டவரே

3. உம் அன்பினால் ஆறுதல் தருபவரே, நன்றி ஆண்டவரே

4. நிறை அன்பால் அச்சத்தை அகற்றுபவரே, நன்றி ஆண்டவரே

5. உன் மேல் அன்பு கூருகிறேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

6. நிலை சாயா பேரன்பை எம்மேல் கொண்டிருப்பவரே, நன்றி ஆண்டவரே

7. முடிவில்லா அன்பு காட்டி பேரன்பால் எம்மை ஈர்த்துக் கொண்டவரே, நன்றி ஆண்டவரே

8. உம்மீது அன்பு கொள்வதால் எம்முள் குடிகொள்பவரே, நன்றி ஆண்டவரே

9. அன்பினாலும் இரக்கத்தினாலும் எம்மை மீட்டவரே, நன்றி ஆண்டவரே

10. பகைவர்களிடம் அன்புகூரச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

11. உம்மில் அன்புகூர்பவர்களின் நன்மைக்காக தூய ஆவியாரை அனைத்திலும் ஒத்துழைக்கச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

12. நொடிப்பொழுதே எம்மைக் கைவிட்டாலும் உம் பேரிரக்கத்தால் எம்மை ஏற்றுக் கொள்பவரே, நன்றி ஆண்டவரே

13. பொங்கி வரும் சீற்றத்தால் இமைப்பொழுதே உமது முகத்தை மறைத்தாலும் பேரன்பால் எமக்கு இரக்கம் காட்டுபவரே, நன்றி ஆண்டவரே

14. உமது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் உம் அன்பை நிறைவடையச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

15. நீடிய பொறுமையும் இரக்கமும் பேரன்பும் உள்ளவரே, நன்றி ஆண்டவரே

16. அன்பும் அமைதியும் தந்து எம்மோடு இருப்பவரே, நன்றி ஆண்டவரே

17. அந்நியர் மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவரே, நன்றி ஆண்டவரே

18. அந்நியர்க்கு அன்பு காட்டுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

 19. உம் அருள் நலமும், பேரன்பும் எம்மை புடை சூழ்ந்து வரச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

20. தீமையை வெறுப்போர் மீது அன்புகூர்பவரே, நன்றி ஆண்டவரே

21. எம்மிடம் அன்பு கொண்டிருப்பதால் எம்மைக் கண்டிக்கிறவரே, நன்றி ஆண்டவரே

22. உம் பெயரால் நாங்கள் காட்டும் அன்பையும் உழைப்பையும் மறக்காதவரே, நன்றி ஆண்டவரே

23. முடிவுறாத பேரன்பு கொண்டிருப்பவரே, நன்றி ஆண்டவரே

24. அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வருபவரே, நன்றி ஆண்டவரே

25. உம் அன்பினால் எமக்கு புத்துயிர் அளிப்பவரே, நன்றி ஆண்டவரே

26. உமக்குரியவர்கள் மேல் இறுதி வரை அன்பு செலுத்துபவரே, நன்றி ஆண்டவரே

27. யோவான் திருத்தூதரிடம் விசேச அன்பு கொண்டிருந்தவரே, நன்றி ஆண்டவரே

28. எங்களிடம் நீர் அன்பு செலுத்தியது போல நாங்களும் மற்றவர்களிடம் அன்பு செலுத்த சொன்னவரே, நன்றி ஆண்டவரே

29. நாங்கள் மற்றவர்களுக்கு செலுத்தும் அன்பிலிருந்து நாங்கள் உம் சீடர்கள் என்பதைப் பிறர் அறிந்து கொள்வர் என்றவரே, நன்றி ஆண்டவரே

30. எங்களுக்காக உம் உயிரைத் தந்து எம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தியவரே, நன்றி ஆண்டவரே

31. எம் மீது அன்புகூர்ந்து எமக்காக உம்மையே ஒப்புவித்தீரே, நன்றி ஆண்டவரே

32. என்னை அன்பு செய்கிறாயா என்று எங்கள் அன்பைக் கேட்பவரே, நன்றி ஆண்டவரே

33. எம் மீது அன்புகூர்ந்து உமது சாவு வழியாக எம் பாவங்களில் இருந்து விடுவித்தவரே, நன்றி ஆண்டவரே

34. எம் மீது விருப்பம் கொண்டிருப்பவரே, நன்றி ஆண்டவரே

35. திக்கற்றவர்கள் மீது உளமார அன்பு கூர்பவரே,  நன்றி ஆண்டவரே

36. உம் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் உமது அன்பில் நிலைத்திருப்போம் என்றவரே, நன்றி ஆண்டவரே

37. உறவை வளர்க்கும் அன்பைப் பொழிபவரே, நன்றி ஆண்டவரே

38. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தைத் தந்தவரே, நன்றி ஆண்டவரே

39. உம் மேல் அன்பு கூர்ந்து உம் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும் பேரன்பு காட்டுபவரே, நன்றி ஆண்டவரே

40. அன்பால் எம் குறைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவரே, நன்றி ஆண்டவரே

41. அன்பே எங்கள் வாழ்வின் ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக என்ற வேதவாக்கிற்காக,  நன்றி ஆண்டவரே

42. அன்பின் அடிப்படையில் உண்மை பேசி உம்மைப் போன்று எல்லாவற்றிலும் வளர வேண்டும் என்ற வேத வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

43. அச்சத்தை அகற்றும் நிறை அன்புக்காக, நன்றி ஆண்டவரே

44. உண்மையாகவே மக்களினங்களின் அன்பராக இருப்பதற்காக, நன்றி ஆண்டவரே

45. ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள் என்ற வேத வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

46.  முழுமனத் தாழ்மையோடும் , கனிவுடனும் , பொறுமையுடனும் , ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்க வேண்டும் என்ற வேத வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

47.  தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள் என்ற வேத வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

48. தூய ஆவி அருளும் அன்புக்காக,  நன்றி ஆண்டவரே

49. திரளான பாவங்களைப் போக்கும் அன்புக்காக, நன்றி ஆண்டவரே

50. தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர் என்ற வேத வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே


தனிமையில் தவிக்கும்போது

51. அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கின்றேன் என்று தேற்றுபவரே,  நன்றி ஆண்டவரே

52. நான் உனக்கு வலிமை அளிப்பேன் , உதவி செய்வேன் என்பவரே, நன்றி ஆண்டவரே

53. அஞ்சாதே உனக்குத் துணையாய் இருப்பேன் என்று என் வலக்கையைப் பற்றிப் பிடித்துச் சொல்பவரே, நன்றி ஆண்டவரே

54. அஞ்சாதே நான் உன்னை மீட்டுக் கொண்டேன் என்று திடப்படுத்துபவரே, நன்றி ஆண்டவரே

55. என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன், மதிப்பு மிக்கவன் என்றவரே, நன்றி ஆண்டவரே

56. பால் குடிக்கும் மகவைத் தாய் மறந்தாலும் உன்னை நான் மறவேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

57. என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார் அவர் என்னைத் தனியாக விட்டு விடுவதில்லை என்றவரே, நன்றி ஆண்டவரே

58. நான் தந்தையுள் இருக்கிறேன் தந்தை என்னுள் இருக்கிறார் என்றவரே, நன்றி ஆண்டவரே

59. நான் சொல்வதைக் கடைப்பிடிப்பவரிடம் என் தந்தையும் நானும் குடி கொள்வோம் என்றவரே, நன்றி ஆண்டவரே

60. உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

61. ஆபிரகாம், அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

63. அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன் என்று ஈசாக்கிடம் மொழிந்தவரே,  நன்றி ஆண்டவரே

64. மோசே, என் பார்வையில் தயை பெற்றுள்ளாய் என்றவரே, நன்றி ஆண்டவரே

65. யோசுவா, வலிமை பேரு துணிவு கொள் நான் உன்னோடு இருப்பேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே

66. யோசுவா உன்னைக் கை நெகிழ மாட்டேன் கைவிடவும் மாட்டேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

67. யோசுவா! வீறு கொள்! துணிந்து நில்! கவலைப்படாதே! நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே

68. அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று தூய அன்னை மரியாவை பரலோகம் வாழ்த்தச் செய்தவரே, நன்றி ஆண்டவரே

69. என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும் நான் தனிமையாய் இருப்பதில்லை தந்தை என்னுடன் இருக்கிறார் என்று சீடருக்கு உரைத்தவரே, நன்றி ஆண்டவரே

70. அஞ்சாதே பேசிக்கொண்டே இரு ;நிறுத்தாதே; ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன் என்று பவுலுக்கு உரைத்தவரே, நன்றி ஆண்டவரே

71. உலக முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

72. எம் எதிரியின் கையினின்று எம்மை மீட்கும் பொருட்டு எம்மோடு இருக்கிறவரே, நன்றி ஆண்டவரே

73. எமது துன்பத்தில் எம்மோடு இருப்பவரே, நன்றி ஆண்டவரே

74. எம்மோடு இருக்கும் படைகளின் ஆண்டவரே, நன்றி ஆண்டவரே

75. எமக்கு அரணாக இருக்கும் யாக்கோபின் கடவுளே, நன்றி ஆண்டவரே

76. எமக்குக் கருணை காட்டக் காத்திருக்கும் ஆண்டவரே, நன்றி ஆண்டவரே

77. இஸ்ராயேலின் தூயவரும் எம்மை விடுவிப்பவருமான ஆண்டவரே, நன்றி ஆண்டவரே

78. துன்பங்கள் அனைத்திலும் எம் மீட்பர் ஆனவரே, நன்றி ஆண்டவரே

79. எம் அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளவரே, நன்றி ஆண்டவரே

80. இடுக்கன்னுற்ற வேலையில் எமக்கு உற்ற துணையாய் உள்ளவரே, நன்றி ஆண்டவரே

81. கண்ணயராது உறங்காது எம்மைக் காப்பவரே, நன்றி ஆண்டவரே

82. எம் வலப்பக்கமிருந்து எம்மைக் காப்பவரே, நன்றி ஆண்டவரே

83. உமது முன்னிலையில் எமக்கு நிறைவான மகிழ்ச்சி இருக்கச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

84. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கிறவரே, நன்றி ஆண்டவரே

85. நாங்கள் குரல் எழுப்பும் போதெல்லாம் எம்மோடு இருப்பவரே, நன்றி ஆண்டவரே

86. உண்மையாய் உம்மை நோக்கி மன்றாடுவோர்க்கு அருகில் இருப்பவரே, நன்றி ஆண்டவரே

87. பொறுமையாய்க் காத்திருந்தால் எம் பக்கம் சாய்ந்து எமது மன்றாட்டைக் கேட்டருளியவரே, நன்றி ஆண்டவரே

88. கனிவும் கருணையும் உள்ள கடவுளே எம்மை கைவிடாதவரே, நன்றி ஆண்டவரே

89. மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கிறவரே, நன்றி ஆண்டவரே

90. எம் துணைவரே , எம் மீட்பரே, நன்றி ஆண்டவரே

91. மலைகள் நிலை சாயினும் நிலை சாயாப் பேரன்பை எம் மேல் வைத்திருப்பவரே, நன்றி ஆண்டவரே

92. எம் அரசரே, எம் கடவுளே எமக்கு வெற்றி தருபவரே, நன்றி ஆண்டவரே

93. நெருக்கடியான நேரத்தில் எம் வலிமையானவரே, நன்றி ஆண்டவரே

94. எம்மைக் கண்ணோக்கி எமக்கு அறிவுரை கூறுபவரே, நன்றி ஆண்டவரே

95. துன்ப வேலையில் கூப்பிடும்போது எம்மைக் காப்பவரே, நன்றி ஆண்டவரே

96. "நீ எனக்கு உரியவன் " என்று திடப்படுத்துபவரே , நன்றி ஆண்டவரே

97. கற்பாறையின் மேல் நாங்கள் காலூன்றி நிற்கச் செய்தவரே, நன்றி ஆண்டவரே

98. "கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்" என்றவரே, நன்றி ஆண்டவரே

99. அழிவின் குழியிலிருந்து எம்மை வெளிக்கொணர்ந்தவரே, நன்றி ஆண்டவரே

100. உமது பேரன்பில் எம்மை களிகூரச் செய்பவரே, நன்றி ஆண்டவரே


கண்ணீரில் கலங்கும்போது 

101. இம்மையில் வாழ்ந்த காலத்தில் கண்ணீர் சிந்தி மன்றாடிய இயேசுவே, நன்றி ஆண்டவரே

102. இஸ்ரயேலின் அழுகுரலைக் கேட்டு பெரிய இனத்தைத் தோன்றச் செய்தவரே, நன்றி ஆண்டவரே

103. இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் உம்மை எட்டியுள்ளது என்று இறங்கி வந்தவரே, நன்றி ஆண்டவரே

104. மனம் வெதும்பி மன்றாடிய தோபித்துக்குச் செவி சாய்த்தவரே, நன்றி ஆண்டவரே

105. கடவுளிடமே கண்ணீர் வடிக்கிறேன் என்ற யோபுவுக்கு மனதுருகியவரே, நன்றி ஆண்டவரே

106. "துயரத்தால் என் கண்ணும் என் உடலும் தளர்ந்து போயின" என்ற தாவீதுக்கு இரக்கம் காண்பித்தவரே, நன்றி ஆண்டவரே

107. உன் கடவுள் எங்கே என்று தீயோர் சொல்லும்போது இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்ற தாவீதுக்கு இரங்கியவரே, நன்றி ஆண்டவரே

108. என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும் என்ற தாவீதுக்கு பதில் தந்தவரே, நன்றி ஆண்டவரே

109. அழுது கொண்டே தலையை மூடிக் கொண்டு வெறுங்காலோடு நடந்து சென்ற தாவீதை வெற்றியுடன் அரியணைக்கு திரும்பச் செய்தவரே, நன்றி ஆண்டவரே

110. கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பிக்க வேண்டி கதறி மன்றாடிய எலியாவுக்கு செவிசாய்த்து அற்புதம் செய்தவரே, நன்றி ஆண்டவரே

111. துணை வேண்டி காலைவரைக் கதறிய எசேக்கியாவுக்குத் துணையாக வந்தவரே, நன்றி ஆண்டவரே

112. மாடப்புறாவைப் போல் விம்முகிறேன்; மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன என்ற எசேக்கியாவின் மேல் கருணைக் கண் நோக்கியவரே, நன்றி ஆண்டவரே

113. உன் கண்ணீரைக் கண்டேன் இதோ உன்னைக் குணப்படுத்துவேன் என்று எசேக்கியாவுக்கு சுகமும் நீடிய ஆயுளும் தந்தவரே, நன்றி ஆண்டவரே

114. எரேமியாவின் இறைவாக்கைப் புரிந்து கொள்ள மூன்று வாரங்களாக அழுது ஜெபித்துக் கொண்டிருந்த தானியேலுக்காக தூதனை அனுப்பியவரே, நன்றி ஆண்டவரே

115. நயீம் ஊர்க் கைம்பெண் மேல் மனமிரங்கி அழாதே என்று கூறி அவளது ஒரே மகனை உயிர்ப்பித்தீரே, நன்றி ஆண்டவரே

116. இலாசர் இறந்ததற்காக கண்ணீர் விட்டு அழுதவரே; இலாசரை உயிர்ப்பித்தவரே, நன்றி ஆண்டவரே

117. பாவ மனஸ்தாபக் கண்ணீர் பொழிந்த பெண்ணை வாழ்த்தி, மன்னிப்பும் அமைதியும் தந்தவரே, நன்றி ஆண்டவரே

118. மறுதலித்ததற்காக மனம் நொந்து அழுத பேதுருவை மன்னித்தவரே, நன்றி ஆண்டவரே

119. கல்லறைக்கருகில் அழுது கொண்டிருந்த மரியாவைப் பார்த்து "ஏனம்மா அழுகிறாய்?" என்று விசாரித்தவரே, நன்றி ஆண்டவரே

120. எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைப்பவரே, நன்றி ஆண்டவரே

121. எங்கள் கண்கள் கலங்காதபடியும், எங்கள் கால்கள் இடறாதபடியும் செய்தவரே, நன்றி ஆண்டவரே

122. எங்கள் புலம்பலைக் களி நடனமாக மாற்றுபவரே, நன்றி ஆண்டவரே

123. துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் தரவும் சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும் வந்தவரே, நன்றி ஆண்டவரே

124. உம் தோற்பையில் எம் கண்ணீரைச் சேர்த்து வைத்திருப்பவரே, நன்றி ஆண்டவரே

125. உங்கள் அழுகையை மகிழ்ச்சியாக மாற்றுவேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

126. அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் பெறுவீர்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

127. நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்றவரே, நன்றி ஆண்டவரே

128. எங்கள் அழுகுரலுக்கு செவிசாய்ப்பவரே, நன்றி ஆண்டவரே

129. சொல்வடிவம் பெற முடியாத உம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக எமக்காகப் பரிந்து பேசும் பரிசுத்த, ஆவியானவரே,  நன்றி ஆண்டவரே

130. எங்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்து வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்பவரே,  நன்றி ஆண்டவரே

131. அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார் என்ற வாக்குக்காக,  நன்றி ஆண்டவரே

132. கண்ணீரோடு விதைக்கிறவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள் என்ற வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

133. அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம் என்ற வாக்கிக்ற்காக, நன்றி ஆண்டவரே

134. கைம்பெண்ணின் கண்ணீர், கன்னத்தினின்று வானம் வரை ஏறுகின்றது என்ற வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

135. இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் / திண்ணமாய் அருள்கூர்வேன் என்ற உம் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

136. அழுகையோடு வருபவர்க்கு ஆறுதல் அளிப்பேன் என்ற உம் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

137. உன் அழுகையை நிறுத்து, கண்ணீர் வடிக்காதே, உன் உழைப்புக்கு பயன் கிடைக்கும் என்ற உம் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

138. ஆண்டவரை நோக்கி இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழிந்திடு என்ற வாக்குக்காக, நன்றி ஆண்டவரே

139. இன்று ஆண்டவரின் புனித நாள். எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம் என்ற நெகேமியாவின் வார்த்தைக்காக, நன்றி ஆண்டவரே

140. துயருறுவோரே, நீங்கள் பேறு பெற்றோர் .ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

141. இப்பொழுது அழுது கொண்டிருப்போரே நீங்கள் பேறு பெற்றோர் ; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள் என்றவரே , நன்றி ஆண்டவரே

142. யூதர்களின் சூழ்ச்சிகளால் ஏற்பட்ட சோதனையின் போது மிகுந்த தாழ்மையோடும் கண்ணீரோடும் உமக்குப் பணிபுரிந்த பவுலுக்காக, நன்றி ஆண்டவரே

143. தன் அன்பரின் அழுகையைக் கண்டு தயங்கி விடாமல், உமது பெயருக்காக சாகவும் துணிந்த பவுலுக்காக  , நன்றி ஆண்டவரே

144. உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும் , உங்கள் பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன் என்ற எச்சரிக்கைக்காக,  நன்றி ஆண்டவரே

145. மக்கள் ஒடுக்கப்பட்டு கண்ணீர் சிந்துகிறார்கள்; அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை என்ற சாலமோனின் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

146. என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு கண்கள் குளமாயின என்ற எரேமியாவின் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே 

147. மனந்திரும்பாத எருசலேமைப் பார்த்து அழுதவரே, நன்றி ஆண்டவரே

148. எனக்காக அழ வேண்டாம் உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

149. அழுது புலம்பிக் கொண்டு முழு இருதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்று சொன்னவரே, நன்றி ஆண்டவரே

150.  மாலையிலோ அழுகை காலையிலோ ஆர்ப்பரிப்பு என்ற வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே


மனசஞ்சலத்தில் மருளும்போது

151. மனவேதனையில் முகம் வாடி இருந்த நெகேமியாவுக்கு தயவு காண்பித்தவரே, நன்றி ஆண்டவரே

152. என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின என்ற தாவீதுக்கு மனதுருகியவரே, நன்றி ஆண்டவரே

153. மனத்துயரால் உள்ளம் உடையும்போது அகமகிழ்ச்சியால் முகமலரச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

154. உடல் நலம் தரும் மன அமைதி தருபவரே,  நன்றி ஆண்டவரே

155. மனமகிழ்ச்சி உள்ளவராக்க எல்லா நாட்களையும் விருந்து நாட்களாக்குபவரே,  நன்றி ஆண்டவரே

156. மனமுடைந்த நிலையில் இருக்கும்போது எங்களது துன்பத்தை நினையாது இருக்கச் செய்பவரே,  நன்றி ஆண்டவரே

157. உம்மீது மனவுறுதி கொண்டவர்களை அமைதியால் உறுதிப்படுத்துபவரே, நன்றி ஆண்டவரே

158. உள்ளத்தில் உறுதி இழக்கும்போது திடன் கொள் அஞ்சாதே என்பவரே, நன்றி ஆண்டவரே

159. அறிவுத் தெளிவோடு எங்கள் மனம் செயலாற்றச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

160. மனசஞ்சலத்தோடு இருந்த புனித சூசையப்பருக்கு கனவு வழியாகத் தெளிவு தந்தவரே, நன்றி ஆண்டவரே

161. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்கு இளைப்பாறுதல் தருபவரே, நன்றி ஆண்டவரே

162. உம் நுகத்தை ஏற்றுக் கொண்டு உம்மிடம் கற்றுக்கொள்பவருக்கு இளைப்பாறுதல் தருபவரே, நன்றி ஆண்டவரே

163. எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது என்று கலங்கியவரே, நன்றி ஆண்டவரே

164. திருமுழுக்கு நிறைவேறுமளவும் மிகவும் மனநெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே

165. இப்பொழுது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்லுவேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே

166. என் கை எப்பொழுதும் உன்னோடு இருக்கும்; என் புயம் உன்னை வலிமைப்படுத்தும் என்றவரே,  நன்றி ஆண்டவரே

167. நொடிப்பொழுதே உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே

168. எம் உள்ளம் புதுப்பிக்கப்பட்டு மாற்றம் அடையச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

169. தாயைப் போல் எம்மை தேற்றி எங்கள் இதயங்களை மகிழ்விக்கச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

170. என் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது ஏன்? கடவுளையே நம்பி இரு என்ற வாக்கிற்காக ,  நன்றி ஆண்டவரே

171. என் மனம் விரும்புவதைத் தந்தருள்கின்ற ஆண்டவரே, நன்றி ஆண்டவரே

172. எம் உள்ள விருப்பத்தை மறக்காமல் தருபவரே, நன்றி ஆண்டவரே

173. உமது திருச்சட்டத்தையே எமக்கு இன்பமாகத் தருபவரே, நன்றி ஆண்டவரே

174. நலமளிக்கும் மருந்தாக மகிழ்வார்ந்த உள்ளம் தந்தவரே, நன்றி ஆண்டவரே

175. எமக்குக் கருணை காட்டக் காத்திருப்பவரே, நன்றி ஆண்டவரே

176. மன்னிப்பதில் தாராள மனதுள்ளவரே, நன்றி ஆண்டவரே

177. உமது ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிக்கச் செய்கிறவரே, நன்றி ஆண்டவரே

178. துன்பமும் கவலையும் எம்மைப் பற்றிக் கொண்ட போது உமது கட்டளையால் எம்மை மகிழ்வித்தவரே, நன்றி ஆண்டவரே

179. என் பெயரால் உனது வலிமை உயர்த்தப்படும் என்றவரே, நன்றி ஆண்டவரே

180. அவமானத்திற்குப் பதிலாக இருமடங்கு நன்மை தருபவரே, நன்றி ஆண்டவரே

181. வன்மத்திற்கு இடங்கொடாத உள்ளத்தை உயர்வு பெறச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

182. உம் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பவர்களுக்கு ஞானம் அறிவு மகிழ்ச்சி அளிப்பவரே, நன்றி ஆண்டவரே

183. இருள் சூழ் பள்ளத்தாக்கில் நாங்கள் நடக்க நேர்ந்தாலும் எத்தீங்கிர்க்கும் அஞ்சிடாதிருக்கச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

184. உள்ளம் கலங்க வேண்டாம் மருள வேண்டாம் என்பவரே, நன்றி ஆண்டவரே

185. உமது அமைதியை விட்டுச் சென்றவரே, நன்றி ஆண்டவரே

186. உம்மிலேயே மகிழ்ச்சி கொள்வதால் எம் உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றுபவரே, நன்றி ஆண்டவரே 

187. உள்ளம் கலங்காது உம் தந்தையிடமும் உம்மிடமும் நம்பிக்கை கொள்ள அழைப்பவரே, நன்றி ஆண்டவரே

188. உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துபவரே, நன்றி ஆண்டவரே

189. முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

190. துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாட்களை வெட்கத்தில் கழிக்கவும் தான் பிறந்தேனோ என்று புலம்பிய எரேமியாவுக்கு இரக்கம் காண்பித்தவரே, நன்றி ஆண்டவரே

191. கிறிஸ்து இயேசுவுடன் இணைந்துள்ள எங்கள் உள்ளத்தையும் மனத்தையும் அறிவெல்லாம் கடந்த அமைதியால் பாதுகாப்பவரே, நன்றி ஆண்டவரே

192. பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம் போல் ஆக்குவேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

193. என் உள்ளங்கையில் உன்னைப் பொறித்து வைத்துள்ளேன் என்று எம்மைப் பாதுகாப்பவரே , நன்றி ஆண்டவரே

194. உடைந்த உள்ளத்தோருக்கு அருகில் இருப்பவரே, நன்றி ஆண்டவரே

195. ஏழை எளியவர் எம்மீது அக்கறை கொண்டுள்ளவரே, நன்றி ஆண்டவரே

196. கலங்காதே நானே உன் கடவுள் என்று எமக்கு வலிமை அளிப்பவரே, நன்றி ஆண்டவரே

197. எமக்கு நிழலாக இருப்பவரே, நன்றி ஆண்டவரே

198. எங்கள் மீது இரங்கி எமக்கு ஆசி தருபவரே, நன்றி ஆண்டவரே

199. உம் திருமுக ஒளியை எம்மீது வீசச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

200. உமது பேரின்ப நீரோடையில் எங்கள் தாகத்தைத் தணிப்பவரே, நன்றி ஆண்டவரே


பயத்தினால்  பதறும்போது  

201. அஞ்சாதே நாம் உம் அடைக்கலமும் மிகச் சிறந்த பரிசுமாக இருக்கின்றோம் என்று ஆபிரகாமுக்கு மொழிந்தவரே, நன்றி ஆண்டவரே

202. அஞ்ச வேண்டாம் நீங்கள் நின்று கொண்டே இன்று ஆண்டவர் செய்யப் போகிற மகத்துவங்களைப் பாருங்கள் என்று மோசே வழியாகப் பேசினவரே, நன்றி ஆண்டவரே

203. திகைக்கவோ மதி கலங்கவோ வேண்டாம் ஏனெனில் நீ போகும் இடமெல்லாம் நாம் உன்னோடு இருப்போம் என்று யோசுவாவுக்குச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

204. நீ அஞ்சாது தைரியமாய் இரு, எதிரியின் நகரையும் நாட்டையும் உம் கையில் ஒப்படைத்தோம் என்று யோசுவாவுக்குச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

205. எதிரிகளின் பெரும் படையைக் கண்டு அஞ்ச வேண்டாம் நிலை கலங்கவும் வேண்டாம் என்று யோசபாத்துக்குச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே 

206. அஞ்சாதே ,போதித்துக் கொண்டே இரு, நிறுத்தி விடாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று பவுலுக்குச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே 

207. உன் பகைவர்களைக் கண்டு அஞ்சாதே என்றவரே, நன்றி ஆண்டவரே

208. அந்நிய தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

209. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் தீமையானது எதற்கும் அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றவரே, நன்றி ஆண்டவரே

210. தாவீதின் மன்றாட்டைக் கேட்டு எல்லாவித அச்சத்தினின்றும் விடுவித்தவரே, நன்றி ஆண்டவரே

211. துன்பமிகு நாளில் நான் அஞ்ச வேண்டியதில்லை என்றவரே, நன்றி ஆண்டவரே

212. இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் அம்புக்கும் அஞ்ச வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

213. இருளில் உலவும் கொள்ளை நோய்க்கு அஞ்ச வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

214. நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் அஞ்ச வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

215. நீ அஞ்சாதே ஏனெனில் நாம் உன்னோடு இருக்கிறோம் என்றவரே, நன்றி ஆண்டவரே

216. நீ அஞ்சாதே நம்பிக்கையில் தளராதே ஏனெனில் நான் உன் கடவுள் என்றவரே, நன்றி ஆண்டவரே

217. அஞ்சாதே ஏனெனில் உன்னை மீட்டோம் என்றவரே, நன்றி ஆண்டவரே

218. அஞ்சாதே ஏனெனில் நாமே உன்னைப் பெயரிட்டு அழைத்தோம் என்றவரே, நன்றி ஆண்டவரே

219. அஞ்சாதே ஏனெனில் நீ நமக்கே சொந்தம் என்றவரே, நன்றி ஆண்டவரே

220. நீங்கள் கலங்காதீர்கள் அஞ்சாதீர்கள். நம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ? புகலிடம் வேறில்லை என்றவரே, நன்றி ஆண்டவரே 

221. மனிதரின் நின்தைக்கோ பழிப்புரைக்கோ அஞ்சவோ கலங்கவோ வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

222. நாமே உங்களைத் தேற்றுவோம் சாகக்கொடிய மனிதனுக்கு அஞ்ச வேண்டாம் என்றவரே, நன்றி ஆண்டவரே

223. இஸ்ரயேலே அஞ்சாதே பயப்படாதே நாமே உன் சந்ததியை அடிமைத்தனத்திலிருந்து  விடுவிப்போம் என்றவரே, நன்றி ஆண்டவரே

224. ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோர்க்கு அஞ்சாதீர்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

225. உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

226. உமக்கு அஞ்சி நடந்து உமது பெயரைச் சிந்திக்கிறவர்களை நினைவு நூலில் எழுதி வைத்திருப்பவரே, நன்றி ஆண்டவரே

227. உமது திருப்பெயருக்கு அஞ்சி நடப்பவர் மேல் நீதியின் கதிரவனாக எழுந்து சுகம் தருபவரே, நன்றி ஆண்டவரே

228. தைரியமாக இருங்கள் நான் தான் அஞ்சாதீர்கள் என்று திருத்தூதர்களை திடப்படுத்தியவரே, நன்றி ஆண்டவரே

229. அச்சத்திற்க்குள்ளாக்கும்  அடிமை உள்ளம் அல்ல மாறாக பிள்ளைகளாக்கும் தேவ ஆவியைத் தந்தவரே, நன்றி ஆண்டவரே

230. உமக்கு பயந்து வாழ்வோரைச் சுற்றி உமது தூதர் சூழ்ந்து காக்கச் செய்கிறதற்காக, நன்றி ஆண்டவரே

231. உமக்கு அஞ்சுவோருக்கு எதுவும் குறைவுபடாமல் காப்பதற்காக, நன்றி ஆண்டவரே

232. உமக்கு அஞ்சுவோருக்கு வெற்றிக் கொடி நாட்டுவதற்காக, நன்றி ஆண்டவரே

233. உமக்கு அஞ்சி நடப்போருக்கு மீட்பு மெய்யாகவே அண்மையில் இருப்பதற்காக , நன்றி ஆண்டவரே

234. உமக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு தயவு காண்பிப்பதற்காக, நன்றி ஆண்டவரே

235. உமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காண்பிப்பதற்காக, நன்றி ஆண்டவரே

236. உம்மீதுள்ள அச்சமே ஞானத்தின் தொடக்கமாக இருப்பதற்காக, நன்றி ஆண்டவரே

237. உமக்கு அஞ்சுகிறவர்களின் ஆசைகளை நிறைவேற்றுகிறவர்களுக்காக, நன்றி ஆண்டவரே

238. உமக்கு அஞ்சுவதால் ஆயுள் நாட்கள் நீடிக்கச் செய்வதற்காக, நன்றி ஆண்டவரே

239. உமது கட்டளைகளுக்குப் பயப்படுகிறவர்களை சமாதானத்தில் நிலைத்திருக்கச் செய்வதற்காக, நன்றி ஆண்டவரே

240. உம்மீதுள்ள அச்சம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதற்காக, நன்றி ஆண்டவரே

241. அஞ்சாதீர் உமது மன்றாட்டு கேட்கப்பட்டது என்று சக்கரியாசுக்கு மொழிந்ததற்காக, நன்றி ஆண்டவரே

242. அஞ்ச வேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் என்று அன்னை மரியாவுக்குச் சொல்லியதற்காக, நன்றி ஆண்டவரே

243. உமது இரக்கம் உமக்கு அஞ்சுவோருக்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதற்காக, நன்றி ஆண்டவரே

244. அஞ்சாதே உன் பொருட்டு கடவுள் உன்னுடன் பயணம் பண்ணுகிற யாவர்க்கும் உயிர் பிச்சை அளித்துள்ளார் என்று பவுலுக்கு உரைத்ததற்காக, நன்றி ஆண்டவரே

245. உமக்கு அஞ்சி பரிசுத்தத்தின் முழுமையை அடையச் சொல்வதற்காக, நன்றி ஆண்டவரே

246. கணவன் மனைவி கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருக்க சொல்லுவதற்காக, நன்றி ஆண்டவரே

247. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை, நிறையன்பு அச்சத்தை அகற்றும் என்பதற்காக, நன்றி ஆண்டவரே

248. நாம் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டோம் ஆகையால் அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்ற வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே

249. கலங்காதீர்கள் அஞ்சாதீர்கள் நீங்கள் என் சாட்சிகள் என்ற உம் வாக்கிற்காக , நன்றி ஆண்டவரே

250. ஆட்டுக் குட்டிகளாகிய எங்களை உம் கையால் ஒன்று சேர்ப்பதற்காக, நன்றி ஆண்டவரே


சோதனையில் சறுக்கும்போது 

251. உம் துன்ப சோதனைகளில் உம்முடன் நிலைத்து நின்றவர்களுக்கு அரசுரிமை வழங்குவதாக உறுதியளித்தவரே, நன்றி ஆண்டவரே

252. எங்களால் தாங்கக் கூடிய சோதனை மட்டும் வரச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

253. வெல்ல முடியாத சோதனைக்கு உள்ளாகும்படி எம்மை விடாதவரே, நன்றி ஆண்டவரே

254. சோதனை வரும்போது அதை தாங்கிக் கொள்ள திறன் அளிப்பவரே, நன்றி ஆண்டவரே

255. சோதனையினின்று தப்பவும் வழி செய்கிறவரே, நன்றி ஆண்டவரே

256. சோதனையில் எம்மைக் காத்து தீமையில் இருந்து எங்களை மீட்டவரே, நன்றி ஆண்டவரே

257. இறைப்பற்றுள்ளவர்களை துன்பச் சோதனையினின்று விடுவிக்கத் தெரிந்த ஆண்டவரே, நன்றி ஆண்டவரே

258. பலவகை சோதனைகளுக்கு நாங்கள் உள்ளாகும்போது அவை எல்லாம் மகிழ்ச்சி என்றே எண்ணச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

259. சோதனைகளை மனவுறுதியோடு தாங்குபவர் பேறுபெற்றவர் என்றீரே, நன்றி ஆண்டவரே

260. சோதனைகளை மனவுறுதியோடு தாங்குவதால் எங்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் என்றவரே, நன்றி ஆண்டவரே

261. நாங்கள் சோதனைக்கு உட்படுவது எங்கள் சொந்த இச்சையினாலே தான் என்று உணர்த்தியவரே, நன்றி ஆண்டவரே

262. எங்கள் வாழ்நாளில் சோதிக்கப்பட்டால் முடிவில் வெற்றி பெறுவோம் என்று உறுதி தந்தவரே, நன்றி ஆண்டவரே

263. சோதனையில் பிரமாணிக்கமுள்ளவராகக் காணப்பட்ட ஆபிரகாமை மகிமைப்படுத்தியவரே, நன்றி ஆண்டவரே

264. சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

265. எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும் என்று செபிக்கக் கற்றுத் தந்தவரே, நன்றி ஆண்டவரே

266. சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனாலே சோதிக்கப்படுகிற எங்களுக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறவரே, நன்றி ஆண்டவரே

267. நாங்கள் சோதிக்கப்படுவது அலகையினால் என்பதை தெளிவாக்கியவரே, நன்றி ஆண்டவரே

268. நாங்கள் பல்வேறு சோதனைகளினால் துன்புறுவது சொற்ப காலமே என்று உணர்த்துபவரே, நன்றி ஆண்டவரே

269. எங்களைச் சோதித்த பின் பசும்பொன் போல வெளிப்படச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

270. நாங்கள் பல்வேறு சோதனைகளால் துன்புற்றாலும் அப்பேற்றினை நினைத்து களிகூரச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

271. எங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே சோதனைகள் நிகழச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

272. எங்கள் விசுவாசம் சோதிக்கப்படுவதால் நீர் வெளிப்படும் நாளில் அது எங்களுக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும் என்றவரே, நன்றி ஆண்டவரே

273. ஆண்டவரின் ஆவியை நாங்கள் சோதிக்கக் கூடாது என்று எச்சரித்தவரே, நன்றி ஆண்டவரே

 274. உம் துன்ப சோதனைகளில் உம்முடன் நிலைத்து நின்றவர்களுக்கு அரசுரிமை வழங்குவதாக உறுதியளித்தவரே, நன்றி ஆண்டவரே

275. தோபித்து உமக்குப் பிரியமானவனாக இருந்ததனால் அவரைப் பரிசோதிக்க சோதனைகளை அனுமதித்தவரே, நன்றி ஆண்டவரே

276. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே நாங்கள் உம்மைச் சோதிக்கக் கூடாது என்று கட்டளை தந்தவரே, நன்றி ஆண்டவரே

277. ஆபிரகாமைச் சோதிப்பதற்காக அவரது ஒரே மகனைத் தகன பலியாக ஒப்புக் கொடுக்கச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

278. இஸ்ரயேலர் உம்மைச் சோதித்த போதும் பாறையை பிளந்து தண்ணீர் வரச் செய்தவரே, நன்றி ஆண்டவரே

279. மெரிபாவிலும் பாலை நிலத்திலும் மாசாவிலும் இஸ்ரயேலர் உம்மைச் சோதித்ததை வருத்தமாய் எடுத்துரைத்தவரே, நன்றி ஆண்டவரே

280. உம் செயல்களைக் கண்டிருந்தும் உம்மை சோதனைக்கு உட்படுத்தியதை வேதனையோடு எடுத்துரைத்தவரே, நன்றி ஆண்டவரே

281. விலையுயர்ந்த எங்கள் விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும் என்றவரே, நன்றி ஆண்டவரே

282. உலைக்களத்தில் வெள்ளியும் உலையில் பொன்னும் பரிசோதிக்கப்படுவது போல புகழ்கிறவனுடைய வாயால் எங்களை பரிசோதிக்கிறவரே, நன்றி ஆண்டவரே

283. செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனையில் வீழ்கிறான் என்ற உண்மையை உணர்த்தியவரே, நன்றி ஆண்டவரே

284. உம்மீது முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றோமா என்று எங்களை சோதிக்கிறவரே, நன்றி ஆண்டவரே

285. காலைதோறும் எம்மைச் சந்தித்து வினாடி தோறும் எம்மை பரிசோதிக்கிறவரே, நன்றி ஆண்டவரே

286. உம் திருக்கண்கள் எம்மைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக, நன்றி ஆண்டவரே 

287. ஆபிரகாமை சோதனை , துன்பங்களால் புடமிட்டு , உமக்கு அன்பராக்கிக் கொண்டதற்காக, நன்றி ஆண்டவரே

288. எம்மை ஆராய்ந்து சோதித்து பார்ப்பவரே, நன்றி ஆண்டவரே

289. எம் உணர்வுகளை அறிந்தவராய், எம் உள்ளத்தைப் பரிசோதித்துப் பார்க்கிறவரே, நன்றி ஆண்டவரே

290. வெள்ளி நெருப்பிலும் பொன் உலையிலும் பரிசோதிக்கப்படுவது போல எங்கள் இதயங்களை சோதித்து அறிகிறவரே, நன்றி ஆண்டவரே

291. மனதின் மறைபொருட்களையும் இதயத்தின் சிந்தனைகளையும் சோதித்து அறிகிறவரே, நன்றி ஆண்டவரே

292. நீர் பரிசோதிக்கப்படுவது போல எங்கள் இதயங்களை சோதித்து அறிகிறவரே, நன்றி ஆண்டவரே

293. நீதிமானை சோதிக்கிறவரே, உள்ளத்தையும் இதயத்தையும் பார்க்கிறவரே, நன்றி ஆண்டவரே

294. ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் என்று பரிசேயரின் கேடுமதியை உணர்த்தியவரே, நன்றி ஆண்டவரே

295. நீர் செய்யப்போகும் அற்புதத்தை அறிந்திருந்தும் பிலிப்புவைச் சோதிக்க கேள்வி கேட்டவரே, நன்றி ஆண்டவரே

296. எங்கள் அன்பு உண்மையானதா என்று சோதிக்க பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறவரே, நன்றி ஆண்டவரே

297. எங்கள் வாழ்க்கை விசுவாசத்தின் மேல் ஊன்றியுள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

298. குற்றத்தில் அகப்படுகிறவனைப் போல் நாங்களும் சோதனைக்கு உள்ளாகாதபடி பார்த்துக் கொள்ளச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே 

299. தூய ஆவியின் தூண்டுதல் கடவுளிடமிருந்து தான் வருகிறதா என்பதைச் சோதித்து அறியுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

​300. உம்மை சோதிக்காமல் இருக்கிறவர்கள் உம்மைக் கண்டடைவார்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே


வெறுக்கப்பட்டு விழும்போது 

301. அமைதியை அருளும் கடவுளே, நன்றி ஆண்டவரே

302. எங்கள் நுகத்தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்கச் செய்பவரே, நன்றி ஆண்டவரே

303. பகைவரிடமிருந்து எங்களை காப்பாற்றுபவரே, நன்றி ஆண்டவரே

304. உம் மக்களுக்கு ஆற்றலும் சமாதானமும் ஆசியும் வழங்குபவரே, நன்றி ஆண்டவரே

305. எங்களுக்காக இகழப்பட்டவரே, நன்றி ஆண்டவரே

306. எங்களுக்காக மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரே, நன்றி ஆண்டவரே

307. எங்களுக்காகச் சிறுமைப்படுத்தப்பட்டவரே, நன்றி ஆண்டவரே

308. காரணமின்றி என்னை வெறுத்தார்கள் என்ற வாக்கு உம்மில் நிறைவேறிற்று என்றவரே, நன்றி ஆண்டவரே

309. எங்களுக்காக இழிவுபடுத்தப்பட்டவரே, நன்றி ஆண்டவரே

310. உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

311. உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

312. உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

313. உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

314. உம் பொருட்டு மக்கள் எங்களை வெறுத்து ஒதுக்கி வைத்து நாங்கள் பொல்லாதவர்கள் என்று எங்களை இகழ்ந்து தள்ளி விடும்போது துள்ளி மகிழ்ந்து கொண்டாடச் சொன்னவரே,  நன்றி ஆண்டவரே

315. உம் பொருட்டு இகழப்படும் போது மகிழ்ந்து பேருவகை கொள்ளச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

316. உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே

317. நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல எனவே உலகு உங்களை வெறுக்கிறது என்றவரே, நன்றி ஆண்டவரே

318. உம்மை வெறுப்போர் உம் தந்தையையும் வெறுப்பதாகச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே

319. என் பெயரின் பொருட்டு உங்களை எல்லோரும் வெறுப்பர் என்று முன்னுரைத்தவரே, நன்றி ஆண்டவரே

320. காரணமின்றி என்னை வெறுப்போர் என் தலை முடியை விட மிகுதியாய் இருக்கின்றனர் என்று புலம்பிய தாவீதுக்கு இரங்கியவரே, நன்றி ஆண்டவரே

321. எதிரிகளின் பற்களுக்கு எங்களை இரையாக்கி விடாதவரே, நன்றி ஆண்டவரே

322. எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும் என்ற தாவாதுக்கு இரங்கியவரே, நன்றி ஆண்டவரே

323. மனிதரின் சூழ்ச்சியில் இருந்து எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைப்பவரே, நன்றி ஆண்டவரே

324. எம்மோடு போரிட்டோர் கையினின்று எம்மை விடுவித்துப் பாதுகாப்பவரே,  நன்றி ஆண்டவரே 

325. போரிடும் ஆற்றலை அரைக்கச்சையாக எமக்கு அளித்து, எம்மை எதிர்த்தவர்களை எமக்கு அடிபணியச் செய்தவரே,  நன்றி ஆண்டவரே 

326. எம் எதிரியின் கையில் எம்மை நீர் விட்டு விடாமல், அகன்ற இடத்தில் எம்மைக் காலூன்றி நிற்க வைத்தவரே,  நன்றி ஆண்டவரே 

327. உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் எதிர்த்துப் போராடுவேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே 

328. உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் எதிர்த்து நிற்க மாட்டான் என்றவரே,  நன்றி ஆண்டவரே 

329. உன் பகைவர்கள் ஒரு வழியில் உனக்கு எதிராக வருவர், ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப் போவர் என்றவரே,  நன்றி ஆண்டவரே 

330. எங்கள் பகைவர்களைப் பார்த்து சோர்ந்து போகவோ அஞ்சவோ கலங்கவோ தத்தளிக்கவோ வேண்டாம் என்றவரே,  நன்றி ஆண்டவரே 

331. உமது வல்லமை மிக்க கரத்தின் கீழ் எங்களைத் தாழ்த்தும்போது ஏற்ற காலத்தில் எங்களை உயர்த்துபவரே,  நன்றி ஆண்டவரே 

332. எம் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்பவரே,  நன்றி ஆண்டவரே 

333. காரணமின்றி எம்மை வெறுப்போர், கண்ஜாடை காட்டி எம்மை இகழ விடாதவரே,  நன்றி ஆண்டவரே 

334. எம்மைத் தலை நிமிரச் செய்பவரே,  நன்றி ஆண்டவரே 

335. சீடர்கள் நடுவில் நின்று உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாழ்த்தியவரே,  நன்றி ஆண்டவரே 

336. நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என்று திருத்தூதர்களைத் திடப்படுத்தியவரே,  நன்றி ஆண்டவரே 

337. போர் நடந்த நாளில் எம் தலையை மறைத்துக் காத்தவரே,  நன்றி ஆண்டவரே 

338. பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுபவரே,  நன்றி ஆண்டவரே 

339. பொல்லார் கட்டிய கயிறுகளை அறுத்தெறிகிற நீதியுள்ள ஆண்டவரே,  நன்றி ஆண்டவரே 

340. நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய் உன் கால் ஒருபோதும் இடறாது என்றவரே,  நன்றி ஆண்டவரே 

341. யாருக்கும் அஞ்சி நடுங்கவோ மனம் கலங்கவோ வேண்டாம் என்றவரே,  நன்றி ஆண்டவரே  

342. கிறிஸ்துவின் பொருட்டு பிறர் உங்கள் மீது வசை கூறும்போது மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும் என்ற வாக்கிற்காக,  நன்றி ஆண்டவரே 

343. உலகம் உங்களை வெறுக்கிறது என்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம் என்ற வாக்கிற்காக,  நன்றி ஆண்டவரே 

344. ஆண்டவரே உங்களுக்காக போராடுவார். நீங்கள் அமைதியாக இருங்கள் என்ற வாக்கிற்காக,  நன்றி ஆண்டவரே 

345. கேடு வரும் நாளில் எங்களை உம் கூடாரத்தில் மறைத்து வைப்பதற்காக,  நன்றி ஆண்டவரே 

346. செல்லும் இடமெல்லாம் எம்மைக் காக்கும்படி உம் தூதருக்குக் கட்டளையிடுவதற்காக,  நன்றி ஆண்டவரே 

347. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் இருக்கச் செய்வதற்காக,  நன்றி ஆண்டவரே 

348. உம் வியத்தகு செயல்களால் எம்மை மகிழ்விப்பதற்காக,  நன்றி ஆண்டவரே 

349. நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாக புகழ் என்னும் ஆடையைத் தருவதற்காக,  நன்றி ஆண்டவரே 

350. மனந்திரும்புங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது என்று மொழிந்தவரே,  நன்றி ஆண்டவரே 

351. மனந்திரும்பியவர்களாய் உம குரலொலியைக் கேட்டு அதன்படி நடக்கச் செய்பவரே,  நன்றி ஆண்டவரே 

352. நீதிமான்களை அல்ல, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்தேன் என்றவரே,  நன்றி ஆண்டவரே 

353. இஸ்ராயேலரின் பாவத்தை மன்னிக்க வேண்டும்; அல்லது உமது புத்தகத்தில் இருந்து எனது பெயரையும் நீக்கி விடும் என்ற மோசேயின் செபத்தைக் கேட்டவரே,  நன்றி ஆண்டவரே 

354. மோசேயின் வேண்டுகோளின்படியே இஸ்ரயேலரை மன்னித்தவரே,  நன்றி ஆண்டவரே 

355. எசேக்கியாசின் மன்றாட்டை ஏற்று, திருச்சட்டத்திற்கு மாறாக பாஸ்காவை உண்டவர்களை மன்னித்தவரே,  நன்றி ஆண்டவரே 

356. திமிர்வாதக்காரனைப் பார்த்து உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சுகம் தந்தவரே,  நன்றி ஆண்டவரே 

357. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று பாவியான பெண்ணுக்கு பாவ மன்னிப்பின் நிச்சயம் தந்தவரே,  நன்றி ஆண்டவரே 

358. அக்கிரமத்தையும் பாவங்களையும் பாதகங்களையும் போக்குபவரே,  நன்றி ஆண்டவரே 

359. உம் திருமுன் மறைக்காது குற்றத்தை ஒப்புக் கொண்ட தாவீதை மன்னித்தவரே,  நன்றி ஆண்டவரே 

360. மக்கள் செய்த குற்றங்களை மன்னித்து பாவங்களை போக்கியவரே,  நன்றி ஆண்டவரே 

​361. மக்கள் செய்த குற்றங்களை மன்னித்து பாவங்களை போக்கியவரே, நன்றி ஆண்டவரே 

362. எம்பாவங்களை எல்லாம் மன்னிக்கிறவரே, நன்றி ஆண்டவரே  

363. நாங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார் மேலாவது எங்களுக்கு மனத்தாங்கல் இருந்தால் மன்னிக்கச் சொல்பவரே, நன்றி ஆண்டவரே  

364. மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்றவரே, நன்றி ஆண்டவரே

 365. எழுபது முறை ஏழு முறை மன்னித்துக் கொண்டே இரு என்றவரே, நன்றி ஆண்டவரே  

366. குறைவாக மன்னிப்பு பெறுபவர்கள் குறைவாக அன்பு செய்கிறார்கள் என்றவரே, நன்றி ஆண்டவரே  

367. தந்தையே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று செபித்தவரே, நன்றி ஆண்டவரே  

368. எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும் என்று திருத்தூதர்களுக்கு அதிகாரம் தந்தவரே, நன்றி ஆண்டவரே  

369. பாவ மன்னிப்பிற்க்காக மனந்திரும்ப வேண்டும் என்று அறிவிக்கச் சொன்னவரே, நன்றி ஆண்டவரே  

370. மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளும்படி தலைவராகவும் மீட்பராகவும் உயர்த்தப் பெற்றவரே, நன்றி ஆண்டவரே  

371. எமது அக்கிரமத்தை மன்னித்து எம் பாவத்தை இனிமேல் நினைவு கூராதவரே, நன்றி ஆண்டவரே 

372. மங்கி எரியும் திரியை அணைக்காமல் ஒளி ஏற்றுபவரே, நன்றி ஆண்டவரே  

373. மனம் திருந்தாவிடில் நீங்கள் அழிவீர்கள் என்ற உமது எச்சரிப்பிற்காக, நன்றி ஆண்டவரே  

374. மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள் என்ற யோவானின் வாக்கிற்காக, நன்றி ஆண்டவரே  

375. மனம் திரும்பும் ஒரு பாவியைக் குறித்து பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாவதற்காக, நன்றி ஆண்டவரே  

376. நாங்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததை பொருட்படுத்தாமல் இப்போது எல்லாரும் மனம் திரும்ப வேண்டும் எனக் கட்டளை இடுவதற்காக, நன்றி ஆண்டவரே

377. உமது திருவுளத்தின்படி ஏற்கப்படும் துயரம் மீட்பு தரும் மனமாற்றத்தை விளைவிப்பதற்காக, நன்றி ஆண்டவரே  

378. ஒருவரும் அழிவுறக் கூடாது எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என பொறுமையாய் இருப்பதற்காக, நன்றி ஆண்டவரே  

379. மனந்திரும்பி ஆர்வமுள்ள வாழ்க்கை நடத்த சொல்வதற்காக, நன்றி ஆண்டவரே  

380. பெரிது நாங்கள் செய்த பாவம்; உமது பெயரின் பொருட்டு எம் பாவத்தை மன்னிப்பதற்காக, நன்றி ஆண்டவரே 


 அருட்தந்தை ஜேம்ஸ் பீட்டர் எழுதிய "ஆராதனை ஆயிரம் " என்ற நூலில் இருந்து