அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Monday, April 27, 2020

இயேசுவின் திரு இரத்தச் செபமாலை.

இயேசுவின் திரு இரத்தச் செபமாலை.

நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.

இதோ! ஆண்டவரின் சிலுவை!. சத்துருக்கள் அகன்றுப் போகட்டும்.  இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும்.  யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார்.!
அல்லேலூயா (3)

இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும். (2 முறை)

இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே! எங்களைப் பரிசுத்தமாக்கியருளும். இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும்  (5 முறை சொல்லவும்)

இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.   இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (5 முறை சொல்லவும்)

இயேசுவின் திருவிலாவிலிருந்து வழிந்தோடிய பரிசத்த இரத்தமும், தண்ணீருமே! எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும். (5 முறை சொல்லவும்)

இயேசுவே! உமது திருக்கை, கால்களிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே! எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும். (5 முறை சொல்லவும்)

இயேசுவின் அனைத்துக் காயங்களிலிருந்தும் வழிந்தோடிய பரிசுத்தஇரத்தமே! எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும். (5 முறை சொல்லவும்)

செபிப்போமாக:
எங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரே! எங்கள் பகைவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.  சகல அபாய மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மகா பாக்கியமான நல்ல மரணத்தையும், நித்திய பரலோக ஜீவியத்தையும் எங்களுக்குக் கட்டளை இட்டருளும்.   இரக்கம் நிறைந்த இயேசுவே! நீங்கள் சுமந்த பாரமான சிலுவையால் ஏற்பட்ட உம்தோளின் கொடூரக் காயத்தினையும் உம் ஐந்து திருக்காயங்களையும் பார்த்து, பாவிகளாகிய எங்கள் மேலும், பரிசுத்த சகல ஆத்துமாக்கள் மீதும் இரக்கமாயிரும்.   எங்களுக்காகப் பாடுகள் ஏற்ற இயேசுவே! அன்று புனிதத்துணியில் பதிந்த உம் திருமுகத்தை நாங்கள் தரிசிக்க இப்போதும் எப்போதும் எனக்கு வரம் அருளும்.

ஆமென்.

33 மணிச் செபமாலை.

33 மணிச் செபமாலை.

சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலேயிருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும் தேவரீருடைய அளவறுக்கப்படாத கிருபா கடாட்சத்தை நம்பிக் கொண்டு சேசுநாதருக்கு தோத்திரமாக முப்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி.

விசுவாச மந்திரம்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார்.

வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறேன்.
ஆமென்.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமியுடைய மூன்று பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று புண்ணியங்களைக் கேட்கிறது.

மெய்யான சர்வேசுரனாயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ விசுவாசமென்கிற புண்ணியமுண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும்.
1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான மனிதராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ நம்பிக்கையென்கிற புண்ணியமுண்டாகி வளரும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும்.
1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான இரட்சகராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ சிநேகமென்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி அநுக்கிரகம் பண்ணியருளும்.
1 பரலோகத்திலிருக்கின்ற...
பிதாவுக்கும், சுதனுக்கும்...

பரிசுத்த கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவுக்கு கபிரியேலென்கிற சம்மனசானவர் மங்கள வார்த்தை சொன்ன அருள் நிறை மந்திரம் சொல்லுகிறது.
1 அருள் நிறைந்த...

1-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! தேவரீர் அருளிச் செய்த திவ்விய கற்பனைகளுக்கு விரோதமான குற்றங்களைச் செய்தோமே. அவர்களையெல்லாம் தேவரீர் பொறுத்துக்கொண்டு இனிமேல் அடியோர்கள் சுமுத்திரையாய் நடக்கவும், தேவரீருடைய தோத்திரம் விக்கினமின்றி எங்கும் பரம்பவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதியில் இளைப்பாற்றியடைந்து மோட்ச பாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்ளவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.

10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.

பரலோகத்துக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...

2-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் சுபாவமாய் மகா பலவீனருமாய் தந்திரங்களினால் இழுக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறப்படியினாலே உலகம், பசாசு, சரீரமாகிய ஞான சத்துருக்களை ஜெயித்து நாங்கள் பாவ வழி போகாமலும், பஞ்சேந்திரியங்களுடைய அலைக்கழிப்புக்கு இனங்காமலும் ஒறுத்தல் உபவாசத்தால் உமது வேத வழிபாட்டில் சுமுத்திரையாய் நடக்கவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.

10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.

பூலோகத்துக்கு ஆண்டவளாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...


3-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் பிரதான புண்ணியங்களாகிய விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்தில் உயரவும், இஸ்பிரீத்துசாந்துவின் ஞான ஒளி கொண்டு பேரின்பத்தின் பாதையை பிடிக்கவும் உலகத்தில் உத்யோகத் தொழில்களை செய்கையில் எங்கள் மனது உம்மையும் உம்முடைய நித்திய இராச்சியத்தையும் மாத்திரம் தாவி நிற்கவும் எல்லா கிரிகைகளையும் உமக்காகவே செய்யவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.

10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.

விடியற்காலத்தின் நட்சத்திரமாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம்.
1 அருள் நிறைந்த...

பிரார்த்திக்கக்கடவோம்.

அவதரித்த தேவனுமாய், கிருபை நிறைந்த கர்த்தருமாய், மதுரமுள்ள இரட்சகருமாயிருக்கிற அன்புக்குரிய சேசுவே! தேவரீர் இவ்வுலகத்தில் வாசம் பண்ணின முப்பத்து மூன்று வருஷ காலம் மனிதர்களுக்கு திவ்விய மாதிரிகையாக செய்து வந்த சுகிர்த புண்ணியங்களை அடியோர்கள் அநுசரிக்கவும், தேவரீர் எங்களை இரட்சிக்கத்தக்கதாக, உம்முடைய திரு இரத்தமெல்லாம் சிந்தி அடைந்த கடின மரணத்தின் பலனாலே நாங்கள் மோட்சத்தின் பேரின்ப பாக்கியத்தைப் பெற்று உம்மை என்றென்றைக்கும் தரிசித்துச் சிநேகித்து ஸ்துதிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி! ஆமென்.

நற்கருணை வணக்க மணிமாலை

நற்கருணை வணக்க மணிமாலை 

திருச்சிலுவை, ஐந்து மணிகள்,  நற்கருணைப் பதக்கம் கொண்ட இந்த மணிமாலை  நற்கருணை வணக்கம் குறித்து சொல்லத்தகுந்தது. ஐந்து மணிகளை முழுதும் ஒரு முறை இயேசுவின் காயங்களைக் குறித்து ஏறுமுகமாக செபித்தும் மீண்டும் ஒரு முறை அன்னைமரியின் வியாகுலங்களைக் குறித்து இறங்குமுகமாக செபித்தும் சொல்லவேண்டும் . 

கீழ்காணும் செபத்தை மணிமாலையைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் மூன்று முறை சொல்ல வேண்டும். 

மரியாளின் மாசற்ற இருதயத்தைக் குறித்து செபம்  /  பெர்னதெத்தம்மாளின் செபம்:  

மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே!  
தயவுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டிவருகின்றோம். 
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம்.  அவதரித்த வார்த்தையின் தாயே! 
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே!  ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்தைக் குறித்து செபம்: 

சகல நன்மைகளின் ஊற்றாகியே இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை ஆராதிக்கிறேன். என் பாவங்களுக்காக மனம் வருந்தி, மாசு படிந்த என் இருதயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தேவரீர் உமது சித்தத்துக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் பொறுமையும் பரிசுத்தமும் தாழ்ச்சியும் கொண்ட இருதயமாக மாற்றும். ஓ நல்ல ஏசுவே! உம்மில், உமக்காக மட்டுமே நான் வாழச் செய்தருளும். என் ஆபத்துக் காலத்தில் அடைக்கலமாகவும், துன்ப நேரத்தில் ஆறுதலாகவும், நோயில் மருந்தாகவும், தேவையில் தீர்வாகவும், வேலைகளில் ஆசீர்வாதமாகவும் இருந்து நன் மரணத்தை எனக்குக் கட்டளையிடும்.  ஆமென். 

திருச் சிலுவையில் :
"நாங்கள் உம்மைப் புகழ்கிறோம் ஆண்டவரே" பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் இருப்பதாக!  ஆமென். 

முதல் மணியில் : "பாவிகளின் மீட்புக்காக" அருள் நிறைந்த மரியே ......

இரண்டாம் மணியில் : "உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் மீட்புக்காக"  அருள் நிறைந்த மரியே ......

மூன்றாம் மணியில்  : "குடும்பங்களின் பாதுகாப்பிற்காக" அருள் நிறைந்த மரியே .....

நான்காம் மணியில் : "இறையழைத்தல் பெருக" கிருபை தயாபரத்து செபம்..... 

ஐந்தாம் மணியில் : "குருக்கள் ,கன்னியர்களுக்காக"  மிக்கேல் சம்மனசானவரை நோக்கி செபம்...... 

நற்கருணையின் அவசங்கைக்குப் பரிகாரமாகவும் ஐந்து திருக்காயங்களைக் குறித்தும் பதக்கத்தில் ஐந்து முறை சொல்ல வேண்டியது: 

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் ஸ்தோத்திர நமஸ்காரமும் உண்டாகக் கடவது.  ஆமென். 

தொடர்ந்து, மரியன்னையின் வியாகுலங்களுக்குப் பரிகாரமாக,  இந்த மணிமாலையை ஒப்புக் கொடுக்கும் விதம்: 

கீழ்காணும் இரு செபங்களை ஐந்து முறை சொல்லவும் 

மரியாளின் மாசற்ற இருதயத்தைக் குறித்து செபம் 

மிகவும் இரக்கமுள்ள தாயே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட  ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியாக கன்னிகையே! தயவுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடையதிருப்பாதத்தை அண்டிவருகின்றோம். 
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கின்ற நாங்கள் உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே!
எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத்தந்தருளும் தாயே!  ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்தைக் குறித்து செபம் 

சகல நன்மைகளின் ஊற்றாகியே இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே! நான் உம்மை நேசிக்கிறேன்; உம்மை ஆராதிக்கிறேன். என் பாவங்களுக்காக மனம் வருந்தி, மாசு படிந்த என் இருதயத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தேவரீர் உமது சித்தத்துக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் பொறுமையும் பரிசுத்தமும் தாழ்ச்சியும் கொண்ட இருதயமாக மாற்றும். ஓ நல்ல ஏசுவே! உம்மில், உமக்காக மட்டுமே நான் வாழச் செய்தருளும். என் ஆபத்துக் காலத்தில் அடைக்கலமாகவும், துன்ப நேரத்தில் ஆறுதலாகவும், நோயில் மருந்தாகவும், தேவையில் தீர்வாகவும், வேலைகளில் ஆசீர்வாதமாகவும் இருந்து நன் மரணத்தை எனக்குக் கட்டளையிடும். ஆமென். 


மரியன்னையின் வியாகுலங்களுக்குப் பரிகாரமாகவும், நற்கருணை ஆராதனைக்காகவும்  கீழ்காணும் செபத்தை ஐந்து முறை சொல்லவும். 


நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் ஸ்தோத்திர நமஸ்காரமும் உண்டாகக் கடவது: 

ஐந்து முறை சொன்ன பின் கீழ்காணும் செபத்தைச் சொல்லவும் 

"ஓ என் ஏசுவே! பரிசுத்த ஆவியின் வரங்களை எம் மேல் பொழிந்தருளும். உம்மிடம் நாங்கள் ஒப்படைக்கும் ஆத்துமங்களை ஆசீர்வதித்து ஒளிர்விக்கச் செய்யும்"

ஐந்தாம் மணியில் : "குருக்கள் , கன்னியர்களுக்காக" நித்திய ஸ்துதிக்குரிய ..

நான்காம் மணியில் : "இறையழைத்தல் பெருக"  நித்திய ஸ்துதிக்குரிய ..

மூன்றாம் மணியில் : "குடும்பங்களின் பாதுகாப்பிற்காக" நித்திய ஸ்துதிக்குரிய ..

இரண்டாம் மணியில் :  "உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக"  
நித்திய ஸ்துதிக்குரிய ..

முதல் மணியில் : "பாவிகள் இரட்சிக்கப்பட"  
நித்திய ஸ்துதிக்குரிய ..

திருச்சிலுவையில்: "நற்கருணை அருட்சாதன மகிமைக்காக" நித்திய ஸ்துதிக்குரிய ..

​நற்கருணை அருட்சாதன மணிமாலை

பக்தி மணிமாலைகள் 

முன்னுரை :

புராதன செபமாலைக்குச் சற்றும் தொடர்பில்லாத பல வடிவங்களினால் ஆன செபமாலைப் பக்தி நிலவுகிறது. பல, மரியன்னையோடு தொடர்புடையவை; பல, புனிதர்களோடு தொடர்புடையவை. இவற்றுக்கு சரியான வரலாறோ, பக்தி நடைமுறையோ இல்லை. கீழே சில மணிமாலைகளின் எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. வரலாற்று நுட்பமோ, வேத பாரம்பரியமோ கண்டறியப்படாதவை.  

1. நற்கருணை அருட்சாதன மணிமாலை
​2. நற்கருணை வணக்க மணிமாலை 

​நற்கருணை அருட்சாதன மணிமாலை 

நற்கருணைப் பதக்கத்துடன் முப்பத்து மூன்று மணிகள் கொண்ட மணிமாலை இது. இயேசுவின் உலக வாழ்க்கையைக் (33 வருடங்கள்) குறிக்கும் முப்பத்து மூன்று மணிகள் கொண்ட இந்த செப மாலை,  நற்கருணை பக்திக்காகக் சொல்லப்படுவதாகும். நற்கருணைத் துறவியரிடம் இதைப் பெறலாம்.

இயேசுக் கிறிஸ்துவோடு ஆன்மீக உறவை உருவாக்க செபிக்கப்படும் இந்த மணிமாலை நற்கருணைப் பதக்கத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

"நற்கருணையில் உம்மை இப்போது பெற முடியாததால், ஆன்மிகத்தில் என் உள்ளம் வாரும் ஆண்டவரே! என் உள்ளத்தை உம்முடையதாக்கும்"

செபமாலையின் ஒவ்வொரு மணியிலும் "நற்கருணையில் வீற்றிருக்கும் எங்கள் யேசுக் கிறிஸ்து  நாதரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லவும். 

திருசிலுவை செபமாலை

திருசிலுவை செபமாலை

அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

1.பாடுபட்ட சிலுவையில்: நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(பிறந்தார் எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்  

2. பெரிய மணியில்: இயேசு கற்பித்த செபம்

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.

3. மூன்று சிறிய மணியில்: 

1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே

புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த....

3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த....

4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்: திருத்துவப் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

திருச்சிலுவையில் இயேசு நமக்கு விட்டுச்சென்ற ஏழு வார்த்தைகளையும், இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் தியானித்து ஒப்புக்கொடுக்கும் செபம்.

1.முதல் ஐந்து மணி - "தந்தையே இவர்களை மன்னியும் (லூக்கா 23:34)"* பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

2. இரண்டாவது ஐந்து மணி - "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டிலிருப்பாய்" (லூக்கா 23:43)

பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

3. முன்றாவது ஐந்து மணி - "அம்மா, இவரே உம் மகன், சீடரிடம் இவரே உம் தாய்" (யோவா 19:26,27)

பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

4. நான்காவது ஐந்து மணி - "என் இறைவா, என் இறைவா என் என்னைக் கைவிட்டீர்" - (மத். 27: 46)

பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

5. ஐந்தாவது ஐந்து மணி - "தாகமாய் இருக்கிறது" (யோவா. 19: 28)

பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

6. ஆறாவது ஐந்து மணி - "எல்லாம் நிறைவேறிற்று" (யோவா. 19: 30)

பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.

7. ஏழாவது ஐந்து மணி - "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" - (லூக்கா 23: 46)

பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ... 

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....   

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....

திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

முடிவில் 
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன். 

ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.




Saturday, April 25, 2020

ஆற்றலின் செபமாலை

ஆற்றலின் செபமாலை 

Picture1. துவக்க செபம்

அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

2. நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(பிறந்தார் எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்

3. பெரிய மணியில்: இயேசு கற்பித்த செபம்

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.

4. மூன்று சிறிய மணியில்: 

1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே

புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த....

3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த....

5. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்: திருத்துவப் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ  தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

6. செபமாலையின் பெரிய மணிகளில் 
"நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" மாற்கு 9:23

7. செபமாலையின் சிறிய மணிகளில் 

"எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு." பிலி 4:13

ஐந்து தேவ இரகசியங்களுக்கும் இவ்வாறு சொல்லவும் 


8. கிருபை தயாபத்து மந்திரம்:
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதனின்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக: சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரமும் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். – ஆமென்.

9.  சிலுவை அடையாளம் வரையவும்
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

அன்னையின் இரத்தக்கண்ணீர் ஜெபமாலை

கண்ணீரின் அன்னை வரலாறு 

PicturePicturePicture

Pictureகண்ணீரின் அன்னை பக்தி முயற்சி அருட்சகோதரி அமலியாவினால் துவங்கப்பட்டது. சிலுவைப் பாடுகளின் மீது மிகுந்த பக்தி உருக்கம் கொண்ட அருட்சகோதரி அமலியா (Sister Amalia Aguirre (1901- 1977)) 1901 ம் ஆண்டில் ஸ்பெயினில் பிறந்தார். 1919 ம் ஆண்டில் அவரது குடும்பம் பிரேசிலுக்கு இடம் பெயர்ந்தது. 1920ம் ஆண்டில் பாடுபட்ட ஏசுவின் துறவற இயக்கத்தில் இணைந்த இவர், அந்த சபையில் சேர்ந்த பின் பாடுபட்ட இயேசுவின் பேரில் மிகுந்த பக்தி உருக்கம் கொண்டவர் ஆனார். சமூகப் பணிகளையும் அந்த சபையின் மூலம் செய்த இவர் 1931 ல் நித்திய வார்த்தைப்பாடு கொடுத்து , தனது பெயரை 'கசையடி பட்ட இயேசுவின் அருட்சகோதரி அமலியா ' (Sr. Amalia of the Scourged Jesus) என்று மாற்றிக் கொண்டார். இவர் தன் உடலில் இயேசுவின் ஐந்து காய வரத்தைப் பெற்றுள்ளார். 

அவர் இருந்த 'பாடுபட்ட ஏசுவின் துறவற இயக்கம்' ஒரு சபையாக உருவெடுத்தது. ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவ விரும்பிய இந்த சகோதரி, அதற்கென ஒரு இல்லத்தை நிறுவி, அவர்களைப் பராமரித்து வந்தார். இருபது குழந்தைகளைக் கொண்டு ஆரம்பித்த இந்த இல்லம் இன்று வரை செயல்படுகிறது. குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மறுவாழ்வு இல்லமும் தொடங்கப்பட்டது .

இவரது உறவினரின் மனைவி ஒருமுறை நோயினால் அவதிப்பட, அவரது கணவரும் குழந்தைகளும் இவரிடம் வந்து கண்கலங்கினர். "அவள் மரித்துப் போனால், எங்கள் குடும்பமே நிர்கதியற்றுப் போகும்" என்று அவர்கள் வருந்த, அவர்களுக்காக அமலியா ஆலயத்தில் செபம் செய்யத் துவங்கினார். 

அப்பொழுது நமதாண்டவர் இயேசுக் கிறிஸ்து  இவருக்குத் தோன்றி  அன்னையின் கண்ணீரில் பேரில் செபிக்கப் பணித்தார்.

எவ்வாறு செபிப்பது என அருட்சகோதரி வினவ, நமதாண்டவர் செபங்களைக் கொடுத்தார். 

 ‘O Jesus, hear our prayer for the sake of the tears of Your Most Holy Mother!’
‘O Jesus, behold the tears of the one who loved You most on earth and who loves You most ardently in heaven!’ 

"ஓ இயேசுவே! உமது மகா பரிசுத்த தாயாரின் கண்ணீரைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் "

"ஒ என் இயேசுவே! இவ்வுலகில் உம்மை அதிகமாக நேசிக்கவும் , பரலோகத்தில் உம்மை அதிகமாகப் போற்றவும், உம்மோடு வாழவும் செய்கின்ற பரிசுத்த அன்னையின் இரத்தக் கண்ணீரின் துளிகளை, நீர் கனிவோடு தயவாய் கண்ணோக்கிப் பார்த்தருளும். "
 {or}
"ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக."

இந்த செபங்களைத் தந்த பின் ஆண்டவர் சொன்னதாவது: 
‘My daughter, whatever people will ask of Me for the sake of the tears of My Mother, I shall lovingly grant them. Later, my Mother will hand over this treasure to Our beloved Institute as a Magnet of Mercy.’

"என் மகளே, என் அன்னையின் கண்ணீரின் பெயரால் கேட்கப்படும் பக்தர்களின் வேண்டுதல்களை நான் ஒருபோதும் மறுப்பதே இல்லை. இம்மாபெரும் பொக்கிஷத்தை இரக்கத்தின் கருவூலமாக என் அன்னை திருச்சபைக்கு அளிப்பார்" என்று கூறினார். 

கண்ணீரின் அன்னை செபமாலையானது, அன்னை, அருட்சகோதரிக்குத் தந்த காட்சியில் கொடுக்கப்பட்டது. அன்னை,  காட்சியில் ஊதா நிற அங்கியையும், நீல நிற மேலங்கியும், வெண்ணிற முக்காடும் அணிந்திருந்தார்.

மேலங்கியின் நீல நிறம், பரலோகத்தைக் குறிக்கிறது. நமது வாழ்க்கையில் நாம் காணும் பிரச்சனை, போராட்டங்கள், சிலுவைகளில் நாம் மனம் தளர்ந்து போகையில் பரலோகைக் குறித்த நினைவில் நாம் ஆறுதல் அடைய வேண்டும்.

இளஞ்சிவப்பு  - ஊதா நிறம் வலியையும் வேதனையையும் குறிப்பிடுவது. பாடுகளில் இயேசுவின் வேதனையையும், துன்புறும் இயேசுவைக் கண்ட அன்னையின் வியாகுலத்தையும் குறிப்பது.

முக்காட்டின் வெண்ணிறம் பரிசுத்தத்தைக் குறிப்பது . மூவொரு இறைவனின் வெண்ணிற லீலியான மரியாள் பரிசுத்தத்தின் அடையாளமான வெண்ணிறத்தைப் பிரதிபலிக்கிறார் .

அன்னை, கீழ்நோக்கிப் பார்த்த வண்ணமாய் காட்சி தருகிறார்.  அமல உற்பவத்தைக் காண்பிக்கும் வண்ணம் ஓவியர்கள் அன்னையின் கண்கள் பரலோகத்தை நோக்கும் வண்ணமாகவே பொதுவாக வரைகின்றனர். ஆனால் அன்னை நமது கண்ணீரையும் வருத்தங்களையும் காண்கிறார். நம்மைக் காண்கிறார். அன்னையை நாம் அண்டி வரும்போது அவர் நம்மைக் கருணையோடு நோக்குவதை நாம் காண வேண்டும். எனவே பூலோகத்தை, நம்மைப் பார்த்த வண்ணமாய் காட்சி தருகிறார். அருட்சகோதரி காட்சி கண்ட விதமாகவே அன்னையின் திரு உருவம் வரையப்படுகிறது. அவர் தந்த செபமாலையே கண்ணீரின் அன்னையின் செபமாலை. 

இந்த செபமாலையை தொடர்ந்து 9 நாட்களுக்கு நவநாளாக செபித்து வந்தவர்கள் பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள் .நமதாண்டவர் கொடுத்த வாக்குறுதி ஏதெனில், 'என் அன்னையின் கண்ணீரின் நிமித்தமாய்க் கேட்கப்படும் எந்த மன்றாட்டும் கேட்கப்படும்" என்பதே மரியன்னையின் கண்ணீரை தியானிக்கிற நாம் அவரது வியாகுலங்களையே தியானிக்கிறோம். அவரது வியாகுலங்களுக்கு நமதாண்டவர் இரங்குவதால்,   வியாதிகள் நீங்கவும், மனமாற்றம் பெறவும், ஆத்துமாக்கள் உத்தரிப்புக் கடன் தீர்க்கவும், போராட்டங்களை வெல்லவும், விசுவாசத்தில் உறுதிப்படவும், இன்னும் பல ஆசீர்வாதங்களைப் பெறவும் இந்த செபமாலையை செபிக்க திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் இந்த செபமாலை பக்தியை அங்கீகரித்தார். 

செபமாலையில் ஏழு மணிகளைக் கொண்ட ஏழு கோர்வைகள் உள்ளன. அன்னையின் ஏழு வியாகுலங்களைக் குறிப்பவை இவை. முடிவில் மூன்று மணிகளும் பதக்கமும் உள்ளன. 
பதக்கத்தில் அன்னையின் திரு உருவம் உள்ளது. நடுப்பதக்கத்தில் இயேசுவின் திருவுருவம் உள்ளது. 
இந்த செபங்களை செபிக்க இந்த செபமாலை பரிந்துரைக்கப்படுகிறதே தவிர செபமாலை கட்டாயமல்ல. விரல்களால் எண்ணியும், மனக்கணக்கால் எண்ணியும்  இந்த செபமாலையைச் செபிக்கலாம். 

இதல்லாமல் கழுத்தில் அணிய ஒரு பதக்கத்தை அன்னை தந்தார். பதக்கத்தில் ஒரு புறம் கண்ணீரின் அன்னையின் திரு உருவமும், மறுபுறம் கற்றூணில் கட்டுண்டு கசையடிபட்ட இயேசுவின் திருவுருவமும் உள்ளது.
அன்னையின் திரு உருவத்தைச் சுற்றி "வியாகுல அன்னையே, உமது வியாகுலக் கண்ணீரால் நரகத்தை நிர்மூலமாக்கினீர்"
(உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும்) என்று எழுதியுள்ளது.(“O Virgin Most Sorrowful, Your Tears Have Destroyed the Infernal Empire.”)

இயேசுவின் உருவத்தைச் சுற்றி  "தெய்வீக சிநேகத்தால் கட்டுண்டவராகிய சேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும் " என்று எழுதியுள்ளது .(“By Your Divine Meekness, O Jesus Bound, Save the World from the Error which Threatens It.”)

உத்தரியத்தைப் போல இதுவும் ஒரு பக்தி முயற்சியே .

கண்ணீரின் அன்னையின்  செபமாலையை செபிக்கும் விதம்


On the Medal of Jesus 

O crucified Jesus, we fall at Your feet and offer You the tears of the one, who with deep compassionate love accompanied You on Your sorrowful way of the Cross. O good Master, grant that we take to heart the lessons which the tears of Your most holy Mother teach us, so that we may fulfill Your holy will on earth, that we may be worthy to praise and exalt You in Heaven for all eternity. Amen.

In the large beads (instead of the “Our Father”):
V. O Jesus, look upon the tears of the one who loved You most on earth,
R. And loves You most ardently in heaven.

In the small beads (instead of the “Hail Mary”):
V. O Jesus, listen to our prayers,
R. For the sake of the tears of Your most Holy Mother.

On the final three beads:
V. O Jesus, look upon the tears of the one who loved You most on earth,
R. And loves You most ardently in heaven.

On the Medal of Mary
O Mary, Mother of Love, Sorrow and Mercy, we beseech you to unite your prayers with ours so that Jesus, your Divine Son, to whom we turn, may hear our petitions in the name of your maternal tears, and grant us, not only the favors we now ask, but the crown of everlasting life. Amen.

With your tears, O sorrowful Mother, destroy the rule of Satan. Through Your divine tenderness, O Jesus bound and fettered, defend the world from the errors that threaten it. Amen.

இரத்தக்கண்ணீர் ஜெபமாலை.

(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)

ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்: சிலுவையில் அறையப்பட்ட சேசுவே! உமது பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம்முடைய தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நல்லவரான ஆண்டவரே, உம் மிகப்புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும் மோட்சத்தில் நித்தியத்திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ஆமென்.

ஏழு மன்றாட்டுக்கள்:

1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு உமது மாதா சிந்தின கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்கக் கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

2. சேசுவே! உமது மாதா எகிப்துக்கு ஓடிப்போனபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத்திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

3. சேசுவே! மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து உம்மை இழந்துவிட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவையின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும் துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறைகளில் விழுகிறவர்களின் வழியும் உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டியருள்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்பட்டபோது உமது மாதா வடித்த கண்ணீர்களைப் பார்த்து, மரண அவஸ்தையாயிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங்களிலிருந்து அன்போடு ஏற்றுக்கொள்ள கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு வியாகுல மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டார் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும்.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

7. சேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.

பெரிய மணியில்:
ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)

சிறிய மணிகளில்:
சேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)

ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது திருத்தாயாரின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.
(3 முறை சொல்லவும்).

முடிவு ஜெபம்.

ஓ மரியாயே, சிநேகத்தினுடையவும் துயரங்களுடையவும், இரக்கத்தினுடையவும் தாயே, உம்முடைய ஜெபங்களை எங்களுடைய ஜெபங்களுடன் சேர்த்து, எங்களுடைய வேண்டுதல்களை உமது தாய்மையுள்ள இரத்தக்கண்ணீரின் பெயரால் ஏற்றுக்கொண்டு, நாங்கள் சேசுவையே எப்போதும் நோக்கியிருக்கவும், நாங்கள் கேட்கும் வரப்பிரசாதங்களுடன் இறுதியாக நித்திய ஜீவியக் கொடையையும் தந்தருளும்படி உம்மிடம் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும்.

தெய்வீக சிநேகத்தால் கட்டுண்டவராகிய சேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும்.

ஆமென்.

புனித ஜெர்துருத்தம்மாளின் ஜெபமாலை

புனித ஜெர்துருத்தம்மாளின் ஜெபமாலை

1. துவக்க செபம்

அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

2. நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(பிறந்தார் எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்

3. பெரிய மணியில்: இயேசு கற்பித்த செபம்

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.

4. மூன்று சிறிய மணியில்: 

1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே

புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த....

3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.

#அருள் நிறைந்த....

5. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்: திருத்துவப் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
6. பதக்கத்திலும் பெரிய மணிகளிலும் கர்த்தர் கற்பித்த செபத்தை சொல்லவும் .

7. ஒவ்வொரு சிறிய பத்து மணிகளிலும் 
"நித்திய பிதாவே உமது திருமகனின் விலையேறப் பெற்ற இரத்தத்தோடு, இன்று உலகெங்கிலும் நிறைவேற்றப்படும் சகல திருப்பலிகளை ஒன்றித்து, எங்கள் இல்லத்திலும், குடும்பத்திலும் திருச்சபையிலும் உலகெங்கிலும் உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் சகல ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் "
(ஒவ்வொரு முறை செபிக்கும் போதும் 1000 உத்தரிக்கிற ஆத்துமாக்களின் கடன் தீர்கிறது.)

8. ஒவ்வொரு பத்து மணி முடிவிலும்  

"இயேசுவின் மகா பரிசுத்த இருதயமே , பாவிகளின் இருதயங்களை தேவ பிதாவின் சத்தியத்திற்கும் ஒளிக்கும் திறந்தருளும். மரியாளின் மாசற்ற இருதயமே பாவிகள் மனந்திரும்ப மன்றாடும் ஆமென் "


மற்றும் ஒரு திரி செபம் சொல்லவும் 

Friday, April 24, 2020

தூய ஆவியார் நவநாள்

தூய ஆவியார் நவநாள்

Holy_Spirit_2ஆண்டவரின் விண்ணேற்பு வியாழனுக்கு அடுத்த நாள் (வெள்ளி) முதல் தூய ஆவியாரின் பெருவிழாவுக்கு முந்திய நாள் (சனி) வரை சொல்ல வேண்டியது.

தொடக்கப் பாடல்
ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கிறேன். இறைவா ஆராதனை செய்கிறேன்.

என்னை ஒளிரச் செய்து வழி காட்டும் புது வலுவுட்டி என்னைத் தேற்றும்.
என் கடமை என்னவென்றுக் காட்டும் அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்.
என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப் பணிவேன் என் இறைவா.
உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும்.

இறை தந்தையின் முகத்தைக் காட்டும் இயேசு கிறிஸ்துவின் அறிவை ஊட்டும்.
இறை வார்த்தையை விளங்க வையும் நற்செய்தியை முழங்கச் செய்யும்.
என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப் பணிவேன் என் இறைவா.
உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும்.

தொடக்க செபம்
முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…
எல்: ஆமென்.

முத: தூய ஆவியே, எங்கள் ஆருயிரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களில் ஒளியேற்றி எங்களை வழி நடத்தியருளும். எங்களுக்குத் திடம் அளித்து எங்களைத் தேற்றியருளும். நாங்கள் செய்ய வேண்டியவற்றை எங்களுக்குச் சொல்லி ஆணையிடும். உமது திட்டத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். எப்படி நாங்கள் நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நாங்கள் அன்புடன் ஏற்று அடிபணிகிறோம்.
எல்: ஆமென்.

தூய ஆவியாரால் நிரப்பப்படச் செபம்
‘நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெருவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திருத்தூதர் பணிகள் 2:38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. எனவே தூய ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில் நாம்:
1. நம் பாவங்களுக்காக மனத்துயரடைய வேண்டும்.
2. இயேசு கிறிஸ்துவை நம் ஒரே மீட்பராக ஏற்க வேண்டும்.
3. தூய ஆவியார் நம்மை நிரப்ப உருக்கமாகக் கெஞ்சி மன்றாட வேண்டும்.

(இந்த செபத்தை தினமும் 20 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் மனப்பற்றுதலுடன் தூய ஆவியாரை நோக்கி செபிக்கவும்)

எல்: என்றும் வாழும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, எங்கள் அன்பு இயேசுவே, நீர் வாக்களித்த தூய ஆவியாரை எங்கள் மீது அனுப்பியருளும். உம் தூய ஆவியாரின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எங்களுக்கு அருளி எங்களைப் புதிய படைப்பாக மாற்றியருளும். இயேசுவே, உமக்கு நன்றி! இயேசுவே உமக்குப் புகழ்! விண்ணுலகத் தந்தையே, எங்கள் மீது உம் தூய ஆவியாரைப் பொழிந்தருளும். நன்றி தந்தையே, என்றும் புகழ் உமக்கே. ஆமென்.

முத: மூவொரு இறைவா, உம்மைத் ஆராதிக்கிறோம்.
எல்: அனைத்திற்கும் முழு முதல் பொருள் நீரே.

முத: இறைவா, உம்மை விசுவசிக்கிறோம்.
எல்: என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.

முத: இறைவா, உம்மை நம்புகிறோம்.
எல்: எல்லையற்ற இரக்கமும், நிறை ஆற்றலும் கொண்டவர் நீரே.

முத: இறைவா உம்மை அன்பு செய்கிறோம்.
எல்: அளவற்ற நன்மையும் அன்பும் கொண்டவர் நீரே.

முத: அன்புத் தந்தையே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.
எல்: அவர் எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவராக.

முத: இனிய இயேசுவே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.
எல்: அனைத்திலும் நாங்கள் இறைவனை மாட்சிப்படுத்துவோமாக.

முத: தூய ஆவியே எம்மில் எழுந்தருளி வாரும்! உம்முடைய இறைமக்களின் உள்ளங்களை நிரப்பியருளும். உம் அன்புத் தீயால் எங்களின் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தருளும்.
எல்: உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! உம் மக்களின் உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவுப்படுத்தினீரே. அந்தத் தூய ஆவியின் ஒளியால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்ச்சி பெறவும் அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
பரிசுத்த ஆவியின் ஜெபமாலை
பரிசுத்த ஆவியின் ஜெபம்:
திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!
ஆமென்.

பரிசுத்த ஆவியே, தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.
ஆமென்.
பிதாவுக்கும்…

விசுவாசப்பிரமானம்…
பரலோகத்திலிருக்கின்ற…

(முதல் மூன்று மணியில் மூன்று முறை)
பரம பிதாவே பரிசுத்த ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே...

1. அர்ச்சிக்கும் தேவனாகிய பரிசுத்த ஆவி நம்மைப் புனிதத்தில், பரிசுத்தத்தனத்தில் உணர்ச்சியுறும்படி செய்யும் நன்மைக்கு நன்றி கூறுவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

2. உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேறச் செய்ததற்கு நன்றி செலுத்துவோம்

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

3. வார்த்தை மனுவுருவாகி மீட்புப் பணியை நிறைவேற்றியதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

4. பரிசுத்த ஆவி, தேவமாதாவின் பேரிலும், அப்போஸ்தலர்கள் பேரிலும் இறங்கியதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

5. பரிசுத்த திருச்சபையை விசுவாசத்திலும், பரம அன்பிலும் வழிநடத்திச் செல்வதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

6. திவ்விய பலி பூசை இவ்வுலகில் ஒவ்வொரு வினாடியும் நடைபெறும்படி செய்ததற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

7. பரிசுத்த திருச்சபையில் புனிதர் புனிதைகளை உருவாக்கும்படியாக மன்றாடுவோம்.

(பெரிய மணியில்)
பரலோகத்திலிருக்கின்ற…

(சிறிய மணிகளில்)
பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…

ஜெபிப்போமாக.
சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே, அந்த பரிசுத்த ஆவியினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக. 

ஆமென்.

தூய ஆவியாரின் புகழ்மாலை
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்
முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்கள் மேல் இரக்கமாயிரும் அல்லது எங்களைத் திடப்படுத்தியருளும் அல்லது எங்களில் செயலாற்றும் என்று சொல்லவும்)

முத: தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே…
முத: தந்தைக்கும் மகனுக்கும் இணையான தூய ஆவியாரே…
முத: தந்தையாகிய இறைவன் வாக்களித்த தூய ஆவியாரே…
முத: விண்ணக ஒளியின் கதிரான தூய ஆவியாரே…
முத: எல்லா நன்மைகளுக்கும் தொடக்கமாகிய தூய ஆவியாரே…
முத: விண்ணகத் தண்ணீரின் ஊற்றாகிய தூய ஆவியாரே…
முத: சுட்டெரிக்கும் தீயாகிய தூய ஆவியாரே…
முத: பற்றி எரியும் அன்பாகிய தூய ஆவியாரே…
முத: இறைப்பொழிவாகிய தூய ஆவியாரே…
முத: உண்மையும் அன்பும் கொண்ட தூய ஆவியாரே…
முத: ஞானமும் புரிந்துணர்வும் தரும் தூய ஆவியாரே…|
முத: ஆலோசனையும் மனவலிமையும் தரும் தூய ஆவியாரே…
முத: அறிவும் இறை பக்தியும் தரும் தூய ஆவியாரே…
முத: தேவ பயம் தரும் தூய ஆவியாரே…
முத: அருளும் செபமும் தரும் தூய ஆவியாரே…
முத: தூய்மையையும், மாண்பையும் அருளும் தூய ஆவியாரே…
முத: ஆறுதல் அளிக்கும் தூய ஆவியாரே…
முத: தூய்மைப்படுத்துகிறவராகிய தூய ஆவியாரே…
முத: திரு அவையை வழிநடத்தும் தூய ஆவியாரே…
முத: உன்னதக் கடவுளின் திருக்கொடையாகிய தூய ஆவியாரே…
முத: உலகனைத்தையும் நிரப்பும் தூய ஆவியாரே…
முத: எங்களை இறை மக்களாக மாற்றும் தூய ஆவியாரே…
முத: பாவத்தின்மீது அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக்கும் தூய ஆவியாரே…
முத: உலகின் முகத்தைப் புதுப்பிக்கும் தூய ஆவியாரே…
முத: எங்கள் ஆன்மாவில் ஒளி ஏற்றும் தூய ஆவியாரே…
முத: எங்கள் இதயங்களில் உம் சட்டத்தைப் பொறிக்கும் தூய ஆவியாரே…
முத: எங்கள் உள்ளங்களை உம் அன்புத் தீயால் ஒளிர்விக்கும் தூய ஆவியாரே…
முத: சரியாகச் செபிக்கக் கற்றுத்தரும் தூய ஆவியாரே…
முத: விண்ணகத் தூண்டுதல்களால் எங்களை ஊக்குவிக்கும் தூய ஆவியாரே…
முத: மீட்பின் வழியில் எங்களை வழிநடுத்தும் தூய ஆவியாரே…
முத: அவசியமான அறிவை மட்டும் தரும் தூய ஆவியாரே…
முத: வாழ்வு தரும் தண்ணீராகிய தூய ஆவியாரே…
முத: நீதியில் எம்மை நிலைத்திருக்கச் செய்யும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்காகப் பரிந்துரைக்கும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்கு நல்லவற்றை கற்பிக்கும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்கு எல்லா நற்பண்புகளை வழங்கும் தூய ஆவியாரே…
முத: எங்களுக்கு நீதியை நிலைநாட்டும் தூய ஆவியாரே…
முத: எங்களது நிலையான நித்தியக் கொடையான தூய ஆவியாரே…

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய ஆவியே எம்மில் எழுந்தருளி வாரும்! உம்முடைய இறைமக்களின் உள்ளங்களை நிரப்பியருளும். உம் அன்புத் தீயால் எங்களின் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தருளும்.
எல்: உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

முத: செபிப்போமாக! எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமாகிய இறைவா, உம்முடைய ஆவியால் எங்களை வழிநடத்துகின்றீர். உமது அருட்காவலில் நாங்கள் உயிர்வாழச் செய்கிறீர். எம்மீது இரங்கி, எங்கள் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். உம்மையே நம்பியிருக்கும் எங்கள் விசுவாசம் மேன்மேலும் உறுதி பெருமாறு உம்முடைய ஆவியின் அருட்கொடைகளை எங்களுக்கு நிறைவாய்த் தந்து உதவியருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.

தூய ஆவியார் செபம்
(இரு குழுக்களாக மாறி மாறி பாடலாம்)

தூய ஆவியே எழுந்தருள்வீர்.
வானினின்று எமது பேரொளியின்,
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்.
நன்கொடை வள்ளலே வந்தருள்வீர்.
இருதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே,

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே,

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை.
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்.
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்.
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.

தூய ஆவியார் நவநாள் செபம்
(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

ஓ தூய ஆவியாரே! எங்கள் இறைவா! நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது தெய்வீகத்தன்மையின்றி நாங்கள் ஒன்றுமில்லாதவர்கள், நீரின்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்;. வாரும் தேற்றரவாளரே, எளியோரின் தந்தையே, சிறந்த ஆறுதலளிப்பவரே, எங்களை அநாதைகளை விட்டு விடாத எங்கள் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. பெந்தக்கோஸ்தே நாளன்று அன்னை மரியா மீதும், திருத்தூதர்கள் மீதும் இறங்கி வந்ததைப் போல, உமது தகுதியற்ற படைப்பாகிய ஏழைகள் எங்கள் மீதும் இறங்கி, எங்கள் உள்ளத்தையும் இதயத்தையும் நிரப்புவீராக. மிக அற்புதமாகவும், மிகுந்த இரக்கத்தோடும், தாராள மனத்தோடும் நீர் அன்று அவர்களுக்கு வழங்கிய அதே கொடைகளை இன்று எங்களுக்கும் வழங்குவீராக. உமக்கு வருத்தமளிக்கும் செயல்கள் அனைத்தையும் எங்கள் இதயத்திலிருந்து எடுத்துவிட்டு, அதை உமக்குத் தகுந்த உறைவிடமாக மாற்றுவீராக. நித்திய பேறுபலன்களை நாங்கள் காணவும், புரிந்து கொள்ளவும் எங்கள் மனதை ஒளிரச் செய்வீராக. எல்லாவற்றிற்கும் மேலாக எங்களிடமுள்ள தகுதியற்ற பிணைப்புகளைக் அகற்றி, எங்கள் இதயத்தை உம் அன்பால் பற்றி எரியச் செய்து, எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் ஆண்டவராகிய இயேசுவில் மறைந்திருக்கச் செய்வீராக. இறைவனின் திருவுளத்தின்படி நாங்கள் நடந்து, தூய ஆவியாரின் துண்டுதலால் வழிநடத்தப்பட எங்கள் சிந்தையை திடப்படுத்துவீராக. இயேசு கிறிஸ்து தமது மண்ணுலக வாழ்வில் கடைப்பிடித்துக் கற்றுக்கொடுத்த தாழ்ச்சி, வறுமை, கீழ்ப்படிதல், இவ்வுலக அலட்சியம் ஆகிய தெய்வீகப் படிப்பினைகளை நாங்களும் கடைப்பிடிக்க உமது அருளினால் எங்களுக்கு உதவுவீராக.

ஓ ஆறுதலளிக்கும் தூய ஆவியாரே! மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் கடமைகளை நிறைவேற்றவும், எங்களது அன்றாடச் சிலுவைகளை நாங்கள் பொறுமையுடன் சுமக்கவும், இறைவனின் திருவுளத்தை நாங்கள் முழுமையாக நிறைவேற்றவும், வானத்தைத் திறந்து வெண்புறாவாக எங்கள் மேல் இறங்கி வருவீராக. அன்பின் ஆவியாரே! தூய்மையின் ஆவியாரே! அமைதியின் ஆவியாரே! என் ஆன்மாவை மேன்மேலும் தூய்மையாக்கும். இந்த உலகம் தர முடியாத அந்த விண்ணக அமைதியை எங்களுக்குத் தருவீராக. உமது இறையரசு இந்த உலகெங்கும் பரவிட அயராது உழைக்கும் எங்கள் திருஅவையையும், எங்கள் திருத்தந்தையையும், ஆயர்களையும், திருப்பணியாளர்களையும், துறவறத்தார் அனைவரையும், இறை மக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பி ஆசீர்வதியும்.

ஓ தூய ஆவியாரே! எல்லா நல்லவற்றையும் முழுமையாக அளிப்பவரே! இந்த நவநாள் வழியாக நான் வேண்டும் அனைத்தையும் அருள்வீராக. என்னிலும், என் வழியாகவும் உமது திருவுளம் நிறைவேறுவதாக. நீர் என்றென்றும் புகழப்படவும் மாட்சிப்படவும் தகுந்தவர். ஆமென்.

தூய ஆவியார் நவநாள் சிறப்பு செபம்

முதல் நாள்
தூய ஆவியே எழுந்தருள்வீர், வானினின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
வாசகம்: உரோமையர் 8 : 18 – 23, 26

தூய ஆவியார்:
நிலைவாழ்வு மட்டுமே நமக்கு முக்கியமான ஒன்று. பாவத்திற்கு மட்டுமே நாம் பயப்பட வேண்டும். அறியாமை, பலவீனம், அலட்சியம் ஆகியவற்றின் விளைவே பாவம். தூய ஆவியார் – ஒளியின் ஆவி, வலிமையின் ஆவி, அன்பின் ஆவி. அவரது ஏழு கொடைகளால் அவர் நம் மனதை விழிப்பூட்டுகிறார், நம் சிந்தனையை வலுப்படுத்துகிறார், நம் இதயத்தை கடவுளின் அன்பால் பற்றி எரியச் செய்கிறார், நம் மீட்பை உறுதிப்படுத்த நாம் தினந்தோறும் கடவுளின் ஆவியாரைத் தூண்டி எழுப்ப வேண்டும், ஏனெனில் ‘பலவீனத்தின் உதவி அவரே”. நாம் எதற்காக செபிக்க வேண்டுமென்று நாமே அறியாதிருக்கிறோம். தூய ஆவியாரே நமக்காக செபிக்கிறார்.

செபம்:
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனே, தண்ணீரினாலும் தூய ஆவியாராலும் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வல்லவரே, எங்களது எல்லா பாவங்களையும் மன்னித்தவரே, விண்ணகத்திலிருந்து உமது ஏழு கொடைகளான ஞானத்தின் ஆவி, புரிந்துணர்வின் ஆவி, ஆலோசனையின் ஆவி, மனவலிமையின் ஆவி, அறிவின் ஆவி, இறை பக்தியின் ஆவி, தேவ பயத்தின் ஆவி ஆகியவற்றை எங்கள் மேல் நிறைவாகப் பொழிந்தருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

இரண்டாம் நாள்
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்! நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்! வாழ்வோரின் இருதய ஒளியே வந்தருள்வீர்.
வாசகம்: யோவான் 14 : 15 – 17, 26 – 27

தேவ பயம் என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் தேவ பயம் என்னும் கொடை, நாம் கடவுள் மீது இறையாண்மை கொண்ட மரியாதை கொள்ள நம்மை நிரப்பி, நமது கொடிய பாவத்தினால் நாம் கடவுளுக்கு எவ்வித வருத்தமும் விளைவிக்காமல் இருக்கச் செய்கிறது. இது, நமது சிந்தனையிலிருக்கும் நரகத்தைப் பற்றிய பயமல்ல. நமது விண்ணகத் தந்தையின் மேலுள்ள இறை பக்தியின் உணர்வினாலும் நாம் அவரது பிள்ளைகள் என்ற மரியாதையினாலும் எழுகின்ற பயம். இதுவே நம்மை இவ்வுலகச் சிற்றின்பங்களிலிருந்து பிரித்து, எவ்விதத்திலும் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் பயம். ‘கடவுளுக்கு பயப்படுவோர் தங்கள் இதயத்தைத் திடப்படுத்தி, அவருடைய கண்களுக்கு முன்பாகத் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்.”

செபம்:
ஓ தெய்வீகத் தேவ பயத்தின் ஆவியாரே வாரும். வந்து என் உள்மனதை ஊடுருவி, என் கடவுளும் ஆண்டவருமாகிய உம்மை நோக்கி என்றென்றும் என் முகத்தைத் திருப்பி, உம்மை வருந்தச் செய்யும் எல்லா செயல்களைக் களையும்படிச் செய்து, விண்ணகத்தில் உம்முடைய தெய்வீக மகத்துவத்தின் தெளிவான கண்களுக்கு முன்பாக என்னைத் தகுதியுள்ளவராக்கியருளும். மூவொரு கடவுளின் ஒன்றிப்பில், உலகம் முடியும் வரை என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

மூன்றாம் நாள்
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மையும் தருபவரே வந்தருள்வீர்.
வாசகம்: 1 கொரிந்தியர் 12 : 12 – 14, 27

இறை பக்தி என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் இறை பக்தி என்னும் கொடை, நம் இருதயங்களில் நம் அன்பான தந்தையாம் கடவுளிடம் ஒரு அன்பான பாசத்தை உண்டாக்குகிறது. அது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மக்களையும் பொருட்களையும், அவரது அதிகாரம் பெற்றவர்களையும், இறைவனின் தாயாகிய அன்னை மரியாவையும், புனிதர்களையும், திரு அவையையும், அதன் தலைவர்களையும், நம் பெற்றோரையும், மூத்தோரையும், நம் நாட்டையும், அதன் ஆட்சியாளர்களையும், அன்பு செய்யவும், மதிக்கவும் நம்மை ஊக்குவிக்கிறது. இறை பக்தி என்னும் கொடையால் நிரப்பப்பட்டவர் தனது மதத்தை ஒரு பாரமான கடமையாகப் பார்க்காமல் மகிழ்ச்சியான பணியாக அதை நடைமுறைப்படுத்துகிறார். ‘எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே செயல்கள் உழைப்பாகக் கருதப்படுவதில்லை”.

செபம்:
ஓ தெய்வீக இறை பக்தியின் ஆவியாரே வாரும். வந்து என் இதயத்தைக் பற்றிக் கொள்ளும். நான் கடவுளது பணியில் மட்டுமே திருப்தி அடையவும், அவருக்காக அன்புடன் எல்லா நியாயமான திரு அவையின் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும், எனக்குக் கடவுள் மீதுள்ள அன்பின் ஆவலைத் தூண்டிவிடும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

நான்காம் நாள்
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே வந்தருள்வீர்.
வாசகம் 1: 1 கொரிந்தியர் 3 : 16 – 17
வாசகம் 2: உரோமையர் 8 : 14 – 17

மனவலிமை என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் மனவலிமை என்னும் கொடை, நம்மை எல்லா விதமான இயற்கையின் பயத்திற்கு எதிராக பலப்படுத்தப்பட்டு, நமது கடமைகளைத் திரம்பட நிறைவேற்ற ஆதரவளிக்கிறது. இக்கொடை நாம் மேற்கொள்ளும் மிகக் கடினமான ஆபத்துக்கள் நிறைந்த பணிகளை எதிர்கொள்ள உந்துதலையும் சக்தியையும் தந்து, சிலவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும், மனித அவமரியாதைகளைக் காலால் மிதித்துத் தள்ளி வாழ்நாளில் வரும் துன்பங்களை மெதுவாகத் தியாகம் செய்து சகித்துக் கொள்ளவும் திடம் அளிக்கிறது. ‘இறுதி வரை நிலைத்து நிற்பவன் மீட்படைவான்”.

செபம்:
ஓ தெய்வீக மனவலிமையின் ஆவியாரே வாரும். வந்து என் துன்ப நேரத்திலும் ஆபத்துக் காலத்திலும் என் ஆன்மாவைத் தூக்கி நிறுத்தி, என் பலவீனத்தை பலப்படுத்தி, என் எதிரிகளின் எல்லா தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் துணிவை அளித்து, நல்லவராகிய என் கடவுளைக்கு எதிராகப் பாவம் செய்து அவரிடமிருந்து என்றும் பிரியாதிருக்க உமது வல்லமை அளித்தருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

ஐந்தாம் நாள்
உன்னத பேரின்ப ஒளியே வந்தருள்வீர். உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
வாசகம்: 1 கொரிந்தியர் 12 : 4 – 11, 31, 13 : 13

அறிவு என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் அறிவு என்னும் கொடை, நம் ஆன்மாவைக் கடவுளுடைய தொடர்பில், உண்மையான மதிப்பில் படைக்கப்பட்டவற்றை மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த அறிவு, படைப்புக்களின் பாசாங்குத்தனத்தை மறைத்து, அதன் வெறுமைத்தனத்தை வெளிப்படுத்தி, இறைபணியில் உள்ள கருவிகளின் ஒரே உண்மையான நோக்கத்தைச் சுட்டிக்காட்ட உதவுகிறது. இது கடவுளின் அன்பான கவலையைத் துல்லியமாகக் காட்டி, எல்லா சூழ்நிலையிலும் அவரை மாட்சிப்படுத்த நம்மை வழிநடத்துகிறது. அதன் ஒளியால் வழிநடத்தப்படும் நாம், முதலானவற்றை முதலில் வைத்து, கடவுளின் கொடையான நட்பை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கத் தூண்டுகிறது. ‘அறிவைக் கொண்டோருக்கு அது வாழ்வின் நீரூற்று”.

செபம்:
ஓ தெய்வீக அறிவின் ஆவியாரே வாரும். வந்து என் தந்தையின் திருவுளத்தை நான் அறிந்து கொள்ளும்படி எனக்கு அருள் தாரும். இவ்வுலகப் பொருட்களின் வெறுமையை எனக்குக் காட்டி, அவற்றின் மாயையை உணர்த்தி, அவற்றை உமது மாட்சிக்காகவும், எனது மீட்புக்காகவும் பயன்படுத்தி, உம்மையும் நீர் அருளும் நிலையான கொடைகளையும் அவற்றுக்கு மேலாகக் காண வரமருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

ஆறாம் நாள்
உமது அருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை. நல்லது அவனில் ஏதுமில்லை.
வாசகம்: உரோமையர் 7 : 15 – 20, 8 : 26 – 27

புரிந்துணர்வு என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் புரிந்துணர்வு என்னும் கொடை, நம் புனித மதத்தின் உண்மைகளின் பொருளை அறியவும், நம்பிக்கையினால் தெரியவும், தெரிதலால் கற்கவும், கற்றலால் அதைப் பாராட்டி அதில் மகிழ்ந்திருக்கவும் உதவுகிறது. வெளிப்படுத்திய உண்மைகளின் உட்பொருளை ஊடுருவி, அவற்றின் வழியாக வாழ்க்கையின் புதுமைக்குள் விரைந்து செல்ல நம்மைத் தூண்டுகிறது. மலடாகவும் செயலற்றதாகவும் இருக்கும் நமது நம்பிக்கையை நலமான சாட்சியமிக்க வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்ல ஊக்கமளிக்கிறது. ஆதனால் நாம் ‘கடவுளுக்குப் பிரியமான செயல்களினால் மனமகிழ்ச்சி அடையவும், கடவுளை நாடும் அறிவை மிகுதியாகப் பெறவும்” தொடங்குகிறோம்.

செபம்:
ஓ தெய்வீகப் புரிந்துணர்வின் ஆவியாரே வாரும். வந்து உமது மீட்பின் மறை உண்மைகளை நாங்கள் நன்கு அறிந்து நம்பிக்கை கொள்ளவும், இறுதியில் உமது ஒளியின் உதவியால் அந்த நித்திய ஒளியைக் காணத் தகுதி பெறவும், அந்த மாட்சியின் பிரகாசத்தில் தெளிவான பார்வை பெறவும் எங்கள் உள்ளத்திற்கு விழிப்பூட்டியருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

ஏழாம் நாள்
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வாசகம்: கலாத்தியர் 5 : 1, 13 – 26

ஆலோசனை என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் ஆலோசனை என்னும் கொடை, நம் ஆன்மாவை இயற்கைக்கு முரணானவற்றைக் கடந்து, குறிப்பாகக் கடினமான சூழ்நிலைகளில், செய்ய வேண்டியவற்றை விரைவாகத் தீர்மானித்துச் சரியாகச் செயல்பட வைக்கிறது. பெற்றோர், ஆசிரியர், அரசு அலுவலர், கிறிஸ்தவ குடிமக்கள் என நம் அன்றாடக் கடமையில் எதிர்கொள்ளும் எண்ணற்ற திடமான நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க ஏற்ற அறிவையும் புரிந்துணர்வையும் வழங்குகிறது. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட பொது அறிவு, மீட்புக்கான தேடலின் விலைமதிப்பற்ற புதையல். ‘இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னதமானவரை நோக்கிச் செபியுங்கள், அவர் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.”

செபம்:
ஓ தெய்வீக ஆலோசனையின் ஆவியாரே வாரும். வந்து என் வழிகளிலெல்லாம் உதவி செய்து வழிகாட்டி, நான் என்றும் உமது திருவுளத்தை நிறைவேற்ற உதவியருளும். என் இதயம் என்றும் நன்மையை நாடவும், தீமையை விட்டு விலகவும், உமது கட்டளைகளின் நேரான வழிகளில் என்னை நடத்தி, எனது குறிக்கோளான நிலைவாழ்வைப் பெற என்னை வழிநடத்தியருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

எட்டாம் நாள்
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
வாசகம்: 1 கொரிந்தியர் 2 : 9 – 16

ஞானம் என்னும் கொடை:
எப்படி தானம் மற்ற எல்லா நல்லொழுக்கங்களையும் உள்ளடக்கியுள்ளதோ அதைப் போலவே தூய ஆவியார் அருளும் ஞானம் என்னும் கொடையே மற்ற எல்லாக் கொடைகளையும் நற்பண்புகளையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த கொடை. ‘அவள் வழியாகவே எல்லா நற்செயல்களும், எண்ணிலடங்காத செல்வங்களும் என்னை வந்தடைந்தது” என சாலமோனின் ஞான நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்த ஞானம் என்னும் கொடையே நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எதிர்நோக்கைத் திடப்படுத்தி, தானத்தை முழுமைப்படுத்தி, உயர்ந்த அளவில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க நம்மை ஊக்குவிக்கிறது. இந்த ஞானம் இவ்வுலகைச் சார்ந்த மகிழ்வின் பால் ஈர்ப்பை இழக்கும் தெய்வீக விஷயங்களைப் புரிந்து மகிழ நம் உள்ளத்திற்கு ஒளியூட்டுகிறது. மேலும், ‘உங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வாருங்கள். என் நுகம் இனிது. என் சுமை எளிது” என்னும் நம் மீட்பரின் வார்த்தை வழியாக கிறிஸ்து இயேசுவின் சிலுவை நமக்கு ஒரு தெய்வீக இனிமையை அளிக்கிறது.

செபம்:
ஓ தெய்வீக ஞானத்தின் ஆவியாரே வாரும். வந்து விண்ணகச் செயல்களின் மறை உண்மைகளையும், அவற்றின் மேலான பெருமைகளையும், வல்லமையையும், அழகையும் என் ஆன்மாவுக்கு வெளிப்படுத்தியருளும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை அன்பு செய்து, உலகெல்லாம் கடந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடையக் கற்றுத்தாரும். அவற்றைப் பெற்று என்றும் பற்றிக் கொள்ள உதவியருளும். ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

ஒன்பதாம் நாள்
இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர். அழிவிலா இன்பமும் அருள்வீரே. ஆமென்.
வாசகம் 1: யோவான் 20 : 19 – 23
வாசகம் 2: 2 கொரிந்தியர் 5 : 20 – 21, 6 : 4 – 6

தூய ஆவியாரின் கனிகள்:
தூய ஆவியாரின் கொடைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நல்லொழுக்கங்களை முழுமைப்படுத்தி, தெய்வீகத்தை அதிகக் கருத்தோடு ஊக்குவிக்க நம்மைப் பழக்கப் படுத்துகிறது. தூய ஆவியாரின் வழிநடத்துதலில் கடவுளின் அறிவிலும் அன்பிலும் நாம் வளரும்போது, நம்முடைய இறைப்பணி மிகவும் நேர்மையானதாகவும், தாராளமானதாகவும், நல்லொழுக்க முறையில் முழுமையடையும். நமது இதயத்தை மகிழ்ச்சியாலும் ஆறுதலாலும் நிறைவிக்கும் இப்படிப்பட்ட நல்லொழுக்கச் செயல்களே தூய ஆவியாரின் கனிகள். இக்கனிகள் நமது நல்லொழுக்கச் செயல்களை மேலும் கவர்ச்சிகரமானதாக்கி நம்மை ஆண்டு நடத்தும் இறைவனுக்கு அதிகமாகச் சேவை செய்ய வலுவான ஊக்கத்தை அளிக்கின்றன.

செபம்:
ஓ தெய்வீகத் தூய ஆவியாரே வாரும். வந்து உமது விண்ணகக் கனிகளாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றால் என் இதயத்தை நிரப்பி, நான் இறைப்பணியில் என்றும் சோர்ந்து போகாமல், உமது தொடர்ச்சியான வழிநடத்தலுக்கு நம்பிக்கையுடன் கீழ்ப்படிவதன்மூலம், தந்தையிடமும் மகனிடமும் உள்ள அன்பில் என்றென்றும் ஒன்றித்து வாழ அருள்புரியும் ஆமென்.

கர்த்தர் கற்பித்த செபம் (ஒரு முறை)
மங்கள வார்த்தை செபம் (ஒரு முறை)
திருத்துவப் புகழ் (7 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

விண்ணகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் தூய ஆவியாரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும். நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே, ‘ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்” என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும். ஆமென்.

தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத்திற்குச் செல்லும் முன் உமது திருத்தூதர்கள் மற்றும் சீடர்களின் ஆன்மாக்களின் வேலைகளை நிறைவேற்ற தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தீரே. உமது இரக்கத்தின் அன்பின் வேலைகளை எங்கள் ஆன்மாக்களில் முழுமையாக்க, அதே தூய ஆவியாரை எங்களுக்கும் தந்தருளும். அழிந்து போகும் இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று கொள்ளமல், நிலைவாழ்வை அளிக்கும் உன்னதச் செல்வத்தின் மீது ஆசை கொள்ள உமது ஞானத்தின் ஆவியைப் பொழிந்தருளும். உமது தெய்வீக உண்மையின் ஒளியால் எங்களது மனதை விழிப்பூட்ட உமது புரிந்துணர்வின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை மட்டும் மகிழ்வித்து விண்ணகத்தை அடையும் வழியைத் தேர்ந்தெடுக்க உமது ஆலோசனையின் ஆவியைப் பொழிந்தருளும். எங்கள் மீட்புக்கு எதிரானத் தடைகளைச் சகித்து, எங்களது சிலுவையை சுமந்து உம்மைப் பின்செல்ல உமது வலிமையின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை அறிய, எங்களை அறிய, புனிதர்களின் வழியைப் பின்பற்றி முழுமை அடைய உமது அறிவின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளுக்கு செய்யும் சேவையில் இனிமையும் மகிழ்ச்சியும் அடைய உமது பக்தியின் ஆவியைப் பொழிந்தருளும். நாங்கள் கடவுளிடம் அன்பான பயபக்தி கொண்டு, கடவுளை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யமலிருக்க உமது தேவபயத்தின் ஆவியைப் பொழிந்தருளும். ஆண்டவரே உமது உண்மைச் சீடர்களின் அடையாளத்தால் எங்களை முத்திரையிட்டு, உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும். ஆமென்.

இறுதி செபம்
முத: என்றென்றும் வாழும் இறைத் தந்தையே!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.
முத: என்றென்றும் வாழும் இறை மகனே!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.
முத: என்றென்றும் வாழும் இறை ஆவியே!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.
முத: மூவொரு கடவுளாகிய எங்கள் இறைவா!
எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

முத: எம்மைப் படைத்தத் தூய தந்தையே!
எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முத: எம்மைப் மீட்டத் திரு மகனே!
எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முத: எம்மைத் தூய்மைப்படுத்தும் தூய ஆவியே!
எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.
முத: தூய ஆவியே என்றும், வற்றாத இறை அன்பே!
எல்: உம்மை வணங்கி ஆராதிக்கிறோம்.
முத: தூய ஆவியாரின் பத்தினியாகிய தூய கன்னி மரியாவே!
எல்: எங்கள் ஆன்மாவைத் தூய ஆவியாரின் இல்லமாக்க பரிந்துரை செய்தருளும்.

முத: செபிப்போமாக, நிறையுள்ளவராகிய எங்கள் வானகத் தந்தையே! பனி போலத் தூய ஆவியாரை எங்கள் இதயத்தின் ஆழத்தில் இறங்கி வரச் செய்து எங்களைத் தூயவராக்கி, எங்கள் ஆன்மா வளம் பெறச் செய்தருள்வீராக.
எல்: ஆமென்.