அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, March 29, 2020

அதிதூதர்கள் மிக்கேல், ரபேல், கபிரியேல்.

அதிதூதர்கள் மிக்கேல், ரபேல், கபிரியேல்.

அதிதூதர் மிக்கேல் 

மிக்கேல் எனப்படுவர் யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின் படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர் என விவிலியம் குறிக்கின்றது. எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு கடவுளுக்கு நிகர் யார்? என்று பொருள் உண்டு.

பழைய ஏற்பாட்டில் மிக்கேல் :
பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இசுரயேலின் பாதுக்காப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை "தலைமைக் காவலர்" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது:

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் மிக்கேல் :
வெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர் பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் )

7. பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். 8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. 9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.
யூதா 1 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது.

9. தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார்.

அதிதூதர் ரபேல்.

எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பதாகும். இவரும் இறைவனின் முக்கிய தூதர்கள் எழுவரில் ஒருவர் ஆவார். இவர் கடவுளிடம் பரிந்து பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார்.

யூத மற்றும் கிறிஸ்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபுவழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான தோபித்து நூலில் அதிதூதர் புனிதர் ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்பட்டுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.

இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும், அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.

அதிதூதர் கபிரியேல்.

கபிரியேல், ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழு பேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான்.

கிறிஸ்தவ நம்பிக்கைகள் :
இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.

தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர்.

இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தி, இன்று திருச்சபையில் மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய நம்பிக்கைகள் :
இஸ்லாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார். இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் குறிப்பிடுகின்றது.

இவர், இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் குறிப்பிடுகிறது.

இசுலாமிய நம்பிக்கையில் இவர்தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது.

மேலும், புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பது இசுலாமிய நம்பிக்கை.

பிற நம்பிக்கைகள் :
சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

அதிதூதர்களான தூய மிக்கேல் கபிரியேல் ரபேல்.

அதிதூதர்களான தூய மிக்கேல் கபிரியேல் ரபேல்.

ஒருசமயம் திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது திடிரென மூர்ச்சையானார். மக்கள் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால் திருத்தந்தை இறக்கவில்லை, மாறாக ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் அதிதூதர் மிக்கேல் சாத்தானோடு போர் தொடுத்து வெற்றிக்கொண்டார். இந்தக் காட்சியைக் கண்டபிறகு அவர் விழித்தெழுந்து தூய மிக்கேல் அதிதூதருக்கு ஒரு ஜெபத்தை எழுதினார். அந்த ஜெபம் இதுதான்: அதிதூதரான தூய மிக்கேலே! எங்கள் போராட்டத்தில் எங்களைக் காத்தருளும். சாத்தானின் வஞ்சக தந்திரங்களில் எங்களுக்குத் துணையாயிரும்; தாழ்மையான எங்கள் மன்றாட்டுகளைக் கேட்டு, எல்லாம் வல்ல இறைவன் சாத்தனைத் தண்டிப்பாராக; வான் படையின் தலைவரே, ஆன்மாக்களைக் கெடுக்க இவ்வுலகில் சுற்றித் திரியும் சாத்தானையும் மற்ற தீய ஆவிகளையும் இறை வல்லமையால் நரகத்தில் தள்ளுவீராக – ஆமென்.

இந்த ஜெபத்தை அவர் எழுதி முடித்துவிட்டு, மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தீமைகளும் சோதனைகளும் வரும்போது இச்செபத்தைச் சொல்லி மன்றாடும்படி கேட்டுக்கொண்டார்.

வானதூதர் என்பவர் யார்?

அதிதூதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் முதலில் வானதூதர்கள் யார் என அறிந்துகொள்வோம். வானதூதர் என்பவர் யார் என்பதற்கு தூய அகுஸ்தினார் இவ்வாறு விளக்கம் தருவார், “வானதூதர் என்பது இயல்பு கிடையாது, மாறாக செய்யக்கூடிய பணி. வானதூதர்கள் கடவுளின் திருமுன் நின்று எப்போதும் அவரைப் புகழ்ந்துகொண்டிருப்பவர்கள்; அவர்கள் கடவுள் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றக் கூடியவர்கள்; தீமைக்கெதிரான போராட்டில் நம்மோடு உடன் இருப்பவர்கள்”. தூய கிரகோரியார் வானதூதர்களை அவர்கள் செய்யக்கூடிய பணிகளை வைத்து இரு வகைப்படுத்துவார். முக்கியமான பணிகளைக் செய்பவர்களை வானதூதர்கள் என்றும், மிக முக்கியமான பணிகளைச் செய்பவர்களை அதிதூதர்கள் என்றும் அவர் குறிப்பிடுவார்.

மிக முக்கியமான பணிகளைச் செய்ய அதிதூதர்கள் எழுவர் இருப்பதாக திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத ஏனோக் நூலில் வாசிக்கின்றோம். அவர்களுடைய பெயர்கள் பின்வருவனவாகும் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், சீத்தியேல், ஜுகுதியேல், பரசியேல். அந்த ஏழு அதிதூதர்களில் மூவரின் பெருவிழாவை இன்று திருச்சபையானது நினைவுகூறுகின்றது. அவர்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிக்கேல்

மிக்கேல் அதிதூதர்
ஏற்கும் சபை/சமயம் அங்கிலிக்கம், கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, போது மரபுவழி திருச்சபை, லூதரனியம், இசுலாம், யூதம்
திருவிழா நவம்பர் 8 (கிழக்கு மரபுவழித் திருச்சபையின் புதிய நாட்காட்டி) / நவம்பர் 21 (கிழக்கு மரபுவழித் திருச்சபையின் பழைய நாட்காட்டி), செப்டம்பர் 29 ("Michaelmas"); மே 8; மேலும் பல
சித்தரிக்கப்படும் வகை அலகையை காலால் மிதித்தல்; கொடி, தராசு, வாள் ஏந்தியவாறு
பாதுகாவல் கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலர்; கீவ், யூதர்களைப் பாதுகாப்பவர், காவலர், இராணுவ வீரர், காவலர், வியாபாரி, கடற்படையினர், வானிலிருந்து குதிக்கும் வீரர்மிக்கேல் என்றால் ‘கடவுளுக்கு நிகர் யார்?’ என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் மிக்கேல் இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருந்து, எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் (தானி 10:13, 12:11), தூய யூதா புத்தகத்தில், மிக்கேல் சாத்தானோடு மோசேயின் இறந்த உடலைக் குறித்து வாதிடுவதையும், அப்போதும் சாத்தான் மோசேயின் உடலை புதைக்கவேண்டும் என்று சொல்ல, மிக்கேல் அதனைக் கடிந்துகொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம் (யூதா 1:8,9). எதற்காக சாத்தான் மோசேயின் உடலைப் புதைக்கவேண்டும் என்று வாதிட்டது என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லும் விளக்கம். சாத்தான் சொல்வதுபோன்று மோசேயின் உடலை புதைக்கும் பட்சத்தில் மக்கள் அவரைக் கடவுளாக வழிபடத் தொடங்கிவிடுவார்கள். அதுவே மிகப்பெரிய பாவம் ஆகிவிடும் என்பதற்காகத்தான் மிக்கேல் சாத்தானைக் கடிந்துகொள்கிறார்.

திருவெளிப்பாடு நூலில் மிக்கேல் சாத்தானோடு போரிட்டு வெல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒரு சமயம் விண்ணகத்தில் கடுமையான போர் மூழ அந்தப் போரில் ஒரு பக்கம் அரக்கப் பாம்பும் (அலகை) அதன் தூதுவர்களும் இன்னொரு பக்கம் தலைமைத் தூதரான தூய மிக்கேலும் அதன் தூதுவர்களும் நின்று போரிட்டார்கள். மிக்கேல் அதிதூதரோடு போரிட்ட இந்த அலகை வேறு யாரும் கிடையாது தொடக்கத்தில் கடவுளை எதிர்த்து நின்ற லூசிபர் என்ற சாத்தான்தான். அப்படிப்பட்ட அலகைதான் இங்கே மிக்கேலுக்கும் அதன் தூதர்களுக்கும் எதிராக நின்றது. இரு தரப்புக்கும் இடையே கடுமையாக நடைபெற்ற அந்தப் போரில் இறுதியில் மிக்கேலும் அதன் தூதர்களுமே வென்றார்கள். இதனால் அலகையும் அதன் தூதர்களும் விண்ணகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார்கள். அவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லாது போனது (திவெ 12: 7-9)

மிக்கேல் அதிதூதருக்கு விழா எடுத்தும் கொண்டாடும் வழக்கம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. 404 ஆம் ஆண்டில் சிபான்றோ என்ற இடத்தில் அதிதூதர் மிக்கேல் காட்சி கொடுத்தார். அந்த இடத்தில் மக்கள் ஒரு கெபி கட்டி வழிபட்டு வந்தார்கள். இந்த நேரத்தில் எதிரி நாட்டவர் சிபான்றோவின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஆயர் அதிதூதர் மிக்கேலிடம் மன்றாட, மிக்கேல் அதிதூதர் அவரிடம், “நீங்கள் எதைக் குறித்தும் கவலைகொள்ளவேண்டாம், நாளைய நாளில் எதிரி நாட்டினர் இங்கு வரும்போது அவர்கள் திக்குத் தெரியாமல் ஓடுவார்கள்” என்று வாக்குறுதி கொடுத்தார். அதேபோன்று அடுத்த நாள் எதிரி நாட்டவர் சிபான்றோவின் மீது படையெடுத்து வந்தபோது பெரும் காற்றும் இடியும் மின்னலும் வெட்டி, அவர்கள் திசை தெரியாமல் ஓடிப்போனார்கள். அன்றிலிருந்தே மக்கள் மிக்கேல் அதிதூதரை தங்களுடைய பாதுகாவலராகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள்.

மிக்கேல் அதிதூதர் தொடக்கத்திலிருந்தே திருச்சபையின் பாதுகாவலராக இருந்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் அவர் சாத்தானை எதிர்த்து போரிடுபவராகவும், சாவிலிருந்து ஆன்மாக்களை விடுவிப்பவராகவும், வெற்றிவீரராகவும், இறுதித்தீர்ப்பின்போது மானிட மகனோடு உடன் வருபவராகவும் இருக்கின்றார்.

கபிரியேல்

கபிரியேல் அதிதூதர்
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
திருவிழா செப்டம்பர் 29 (தூய மிக்கேல் மற்றும் தூய ரபேலோடு சேர்ந்து) மரபு வழி திருச்சபைகளில்: நவம்பர் 8

அதிதூதர்களில் இரண்டாம் ஆளாகிய கபிரியேல் என்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் என்பது அர்த்தமாகும். கபிரியேல் தூதரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் லூக்கா நற்செய்தியிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் கபிரியேல் தூதர் தானியேலுக்குத் தோன்றி அவர் கண்ட காட்சியின் உட்பொருளை விளக்கிக்கூறுகின்றார் (தானி 9:21). லூக்கா நற்செய்தியில் சக்கரியாவிற்கும், மரியாவிற்கும் தோன்றி முறையே திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் இயேசுவின் பிறப்பையும் குறித்து எடுத்துச் சொல்கிறார். கபிரியல் தூதர் ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செய்வதால், அவர் தொலை தொடர்புச் சாதனங்களுக்குப் பாதுகாவலராக இருக்கின்றார்.

ரபேல்
அதிதூதரான புனித ரபேல்
ஏற்கும் சபை/சமயம் : கிறித்தவம்,  யூதம்,  இசுலாம்
திருவிழா  : செப்டம்பர் 29
சித்தரிக்கப்படும் வகை : இளைஞர் ஒருவர் கையில் கோளும் மீனும் ஏந்தியவாறு
பாதுகாவல் : மருந்தகர்கள்; குருடர்; உடல் நோய்; மேடிசன் உயர்மறைமாவட்டம்; கண்கோளாருகள்; காதலர்கள்; செவிலியர்கள்; சியாட்டில் உயர்மறைமாவட்டம்; இடையர்கள்; நோயாளிகள்; பயணிகள்; இளையோர்
மூன்றாம் அதிதூதரான ரபேல் என்பதற்கு ‘ஆண்டவர் குணப்படுத்துகிறார்’ என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து நாம் தோபித்து புத்தகம் முழுவதும் வாசிக்கின்றோம். மிதியா நோக்கிய பயணத்தில் தோபித்தோடு ஒரு வழிபோக்கரைப் போன்று பயணித்து, கொடிய மீனிடமிருந்து அவரைக் காப்பாற்றி, தோபித்து மணந்துகொள்ள இருந்த சாராவிடமிருந்து தீய ஆவியை விரட்டி, இறுதியாக தோபித்துவின் தந்தை தொபியாசுகு பார்வை கொடுக்கிறார் இந்த ரபேல் அதிதூதர். தனக்குப் பணிக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, ரபேல் அதிதூதர் அவர்களிடம், “நான் இரபேல்!, ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வான தூதர்களுள் ஒருவர்” என்று தன்னை வெளிப்படுத்துகிறார் (தோபி 12:15)

தீமைக்கெதிரான போராட்டம்

தென்காசியில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நடைபெற்றதாக பாரம்பரியாகச் சொல்லப்படும் நிகழ்வு. ஒரு சமயம் தூய மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனியின்போது நாத்திகர் பலர் இழிவான காரியங்களைச் செய்தார்கள். அன்றிரவே அவர்கள் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துபோனார்கள். அதனால் நிறையப் பெண்கள் தங்களுடைய தாலிகளை இழந்து கைம்பெண்கள் ஆனார்கள். அப்பெண்களின் தாலி ஒரு நாழி அளவு பிடித்தது. இதைப் பார்த்து பயந்துபோன நாத்திகர்கள் தூய மிக்கேல் அதிதூதரிடம் மன்னிப்புக் கோரி, ஆத்திகர்கள் ஆனார்கள். இப்படி நிறையப் பெண்களின் தாலி அறுத்ததால் தூய மிக்கேல் அதிதூதரை நாழி அளவு தாலி அறுத்த தூய மிக்கேல் அதிதூதரே எனவும், நாத்தினரும் ஆத்திகராக மாறி, கடவுளை வழிபட்டதால் தூய அதிதூதர் கோவில் சர்வேசுவரன் கோவில்’ என இன்றளவும் அழைக்கப்படுகின்றது.

அதிதூதர்(கள்) எப்போதும் தீமைக்கெதிரான போராட்டத்தில் நமக்கு முன்னின்று போராடுபவராக (களாக) இருக்கின்றார்(கள்) என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று. அவர்களது விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவர்களைப் போன்று தீமையை எதிர்த்து போரிடுபவர்களாக இருக்கவேண்டும் என்பது இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கின்றது.

நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எத்தனையோ தீமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. லஞ்சம், ஊழல், சாதி, வன்முறை, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு போன்றே பல்வேறு தீமைகளை நாம் துணிவோடு எதிர்த்துப் போராடி, நாம் வாழும் இந்த பூமியில் இறைவனின் ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்யும்போது உண்மையிலே இவ்விழாவைக் கொண்டாடுவதில் முழுமையான அர்த்தம் இருக்கின்றது. ஆகவே, அதிதூதர்களின் விழா நாளில் அவர்களைப் போன்று கடவுளுக்குத் தொண்டு செய்து வாழ்வோம், தீமைக்கெதிரான போராடத்தில் எப்போப்தும் நாம் இறைவன் பக்கம் நின்று போராடி வெற்றிகொள்வோம்; இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

தேவதூதர்கள்

தேவதூதர்கள் ஹீப்ரு விவிலியம் (מלאך என மொழிபெயர்க்கப்படுகிறது) புதிய ஏற்பாடு மற்றும் குரான் ஆகியவற்றில் கடவுளின் தூதுவர்களாக இருக்கின்றனர். மதங்கள் பலவற்றில் "ஆன்மீகம் சார்ந்த வடிவங்களை" பல்வேறு விதமாகக் குறிப்பிடுவதற்கு "தேவதூதர்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களைப் பாதுகாத்தலும் வழிநடத்திச் செல்லுதலும் தேவதூதர்களின் மற்ற பணிகள் ஆகும்.

தேவதூதர்கள் சார்ந்த சமயயியல் ஆய்வு தேவதூதவியல் என அறியப்படுகிறது. ஓவியத்தில் தேவதூதர்கள் பொதுவாக இறக்கைகளுடன் இருப்பது போல் சித்தரிக்கப்படுகின்றனர். முடிவாக இது எசகீல்லின் மெர்கபா தோற்றத்தில் சாயோட் அல்லது இசைய்யாவின் செராபிம் போன்று ஹீப்ரு விவிலியத்தில் விவரித்திருப்பதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. 
சொற்பிறப்பியல்

ஆபிரகாம் லோடோவிகோ கார்ராஸியால் (1555–1619) வரையப்பட்ட மூன்று தேவதூதர்கள் ஓவியம்.
ஆங்கிலத்தில் angel என்ற வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையான engel (இதில் g கடினமாக உச்சரிக்கப்படும்) மற்றும் பழைய பிரஞ்சு வார்த்தையான angele ஆகியவற்றின் இணைவாக இருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளும் இலத்தினின் angelus என்ற வார்த்தையில் இருந்து வந்தவையாகும். அது "தூதுவர்" என்று பொருள்படும் பண்டைய கிரேக்க ἄγγελος (angelos) என்ற வார்த்தையின் ரோமானியப்பதமாக இருக்கிறது.[1] இந்த வார்த்தையின் ஆரம்ப வடிவம் லீனியர் B அசை எழுத்து வடிவத்தில் இணைக்கப்பட்ட மைசெனாயியன் a-ke-ro ஆக இருக்கிறது.

யூதம்
விவிலியம் מלאך אלהים (mal'akh Elohim ; கடவுளின் தூதுவர்), מלאך יהוה (mal'akh Adonai ; பகவானின் தூதுவர்), בני אלהים (b'nai Elohim ; கடவுளின் மகன்கள்) மற்றும் הקודשים (ha-qodeshim ; புனிதமான ஒன்று) போன்ற வார்த்தைகளை தேவதூதர்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துகிறது. העליונים (ha'elyoneem ; உயர்வான ஒன்று) போன்ற மற்ற வார்த்தைகள் பின்னர் வந்த புனித நூல்களில் பயன்படுத்தப்பட்டன. டேனியல் என்பவர் பெயர் மூலமாக தனிப்பட்ட தேவதூதர்களைக் குறிப்பிடுவதற்கான முதல் விவிலியம் சார்ந்த நபர் ஆவார்.

விவிலியத்திற்கு பின்னரான யூதத்தில் சில தேவதூதர்கள் குறிப்பிட்ட தனிமுறைச்சிறப்பு மற்றும் மேம்பட்ட தனித்த மனோபாவங்களும் பங்குகளும் எடுத்துக் கொள்வதற்கு வருகின்றனர். எனினும் இந்த உயர் தேவதூதர்கள் (archangels) வானுலகைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் உயர் தரநிலையைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. எனினும் திட்டமிட்ட படிநிலை எதுவும் உருவாக்கப்படவில்லை. மெட்டாட்ரோன் என்பவர் மெர்காபா மற்றும் கபாலிய உள்ளுணர்வின் தேவதூதர்களில் உயர்வானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இவர் பொதுவாக ஒரு படி எடுப்பவராகச் சேவையாற்றுகிறார். இவர் டால்முத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார். மேலும் மெர்காபா புனித உரைகளில் முக்கியமாக இடம்பெறுகிறார். இஸ்ரேலுக்கான (Daniel 10:13) போர் வீரரும் வழக்குரைஞராகப் பணியாற்றும் மைக்கேல் குறிப்பாக பிரியமுள்ளவராகக் கருதப்படுகிறார். கேப்ரியேல் என்பவர் டேனியல் புத்தகம் (Daniel 8:15–17), டோபிட் புத்தகம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். மேலும் டால்முத்தில் சுருக்கமாகவும் அத்துடன் பல மெர்காபா புனித நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். யூதத்தில் தேவதூதர்களை வழிபடுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் தொடக்க வழிபாடு மற்றும் சில நேரங்களில் தேவதூதர்களை மனமார வேண்டிக்கொள்ளல் ஆகியவற்றுக்கான சான்றுகள் இருக்கின்றன.

இடைக்கால யூதத் தத்துவஞானி மாய்மோனிடஸ் அவரது கைடு ஃபார் த பெர்ஃப்லெக்ஸ்டு II:4 மற்றும் II:6 இல் தேவதூதர்கள் தொடர்பான அவரது பார்வையை விவரித்திருக்கிறார்:

...This leads Aristotle in turn to the demonstrated fact that God, glory and majesty to Him, does not do things by direct contact. God burns things by means of fire; fire is moved by the motion of the sphere; the sphere is moved by means of a disembodied intellect, these intellects being the 'angels which are near to Him', through whose mediation the spheres [planets] move... thus totally disembodied minds exist which emanate from God and are the intermediaries between God and all the bodies [objects] here in this world.

– Guide for the Perplexed II:4, Maimonides

கபாலாவைப் பொறுத்தவரை நான்கு உலகங்கள் இருக்கின்றன. அதில் நமது உலகமே இறுதி உலகம் ஆகும். இது நடவடிக்கைகளின் உலகம் (அஸ்ஸியா) ஆகும். தேவதூதர்கள் கடவுளின் 'பணிக்காக' உலகின் மேல் இருக்கின்றனர். அவர்கள் இந்த உலகின் விளைவுகளை உருவாக்குவதற்காக கடவுளின் பிரதிநிதியாக இருக்கின்றனர். தேவதூதர் அதன் பணியை நிறைவு செய்த பிறகு அது வெளியேறுகிறது. தேவதூதர் பணியின் விளைவில் எப்போதும் இருப்பார். இது ஆதி ஆகமத்தில் ஆப்ரகாம் மூன்று தேவதூதர்களைச் சந்தித்தது மற்றும் பலர் இரண்டு தேவதூதர்களைச் சந்தித்தது ஆகிய நிகழ்வுகளில் இருந்து வருவிக்கப்பட்டது. தேவதூதர்களில் ஒருவரின் பணி ஆப்ரகாமிடம் அவரது பிறக்கப் போகும் குழந்தை குறித்து அறிவிப்பது ஆகும். மற்ற இருவரின் பணிகள் பலவற்றைப் பாதுகாத்தல் மற்றும் சோடோம் மற்றும் கோமொர்ராவை அழித்தல் ஆகும்.

பிரபலமான தேவதூதர்களும் அவர்களின் பணிகளும் பின்வருமாறு:

மாலாசிம் (பொருள்: தூதுவர்கள்), தேவதூதர்களுக்கான பொதுவான வார்த்தை
மைக்கேல் (பொருள்: கடவுளை விரும்புபவர்), கடவுளின் அருட்குணத்தைச் செயல்படுத்துபவர்
கேப்ரியேல் (பொருள்: கடவுளின் வலிமை), நீதி மற்றும் ஆற்றல் போன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல்
ராபேல் (பொருள்: குணப்படுத்தும் கடவுள்), கடவுளின் குணப்படுத்தும் ஆற்றல்
யூரைல் (பொருள்: கடவுள் எனது ஒளி), நமக்கு ஊழ்வினைக்கு வழிவகுத்தல்
செராபிம் (பொருள்: எரிகின்ற ஒன்று), ஏதேன் தோட்டத்துக்கு வாயில் கதவாகப் பாதுகாத்தல்
மல்லாக் ஹமாவெட் (பொருள்: மரணத்தின் தேவதூதர்)
ஹாசாடன் (பொருள்: வழக்கு தொடுப்பவர்), வானுலக நீதிமன்றத்தில் மக்களின் பாவச்செயல்களை அவர்களுக்கு முன் கொடுப்பவர்
சாயோட் ஹாகோடெஷ் (பொருள்: புனித விலங்குகள்)
ஓபனிம் (பொருள்: மையங்கள்) வான்குறியியல் செல்வாக்கு
ஹாமெர்காவா (பொருள்: இரதம்), கடவுளின் புகழைப் பரப்புபவர்
கிறிஸ்துவம்

முந்தைய ரோமானிய இராணுவ உடை மற்றும் மார்புக்கவசம் அணிந்தபடி இருக்கும் பிரதான தேவதூதர் மைக்கேல் ஓவியம். இது 17 ஆம் நூற்றாண்டில் கைடோ ரேனியால் வரையப்பட்டது.
ஆரம்ப கால கிறிஸ்துவர்கள் தேவதூதர்களின் யூதப் புரிந்துகொள்ளல் மரபுடையவர்களாக இருந்தனர். ஆரம்பகால கட்டத்தில் தேவதூதர் தொடர்பான கிறிஸ்துவக் கருத்தாக்கத்தில் தேவதூதர் என்பவர் கடவுளின் தூதுவராகக் கருதப்படுவதாக இருந்தது. தேவதூதர்கள் என்பவர் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள், அன்பின் வெளிப்பாடுகள் மற்றும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கின்றனர். பின்னர் கேப்ரியேல், மைக்கேல், ராபேல் மற்றும் யூரைல் போன்றோர் தனிப்பட்ட தேவதூதர்களின் அடையாளமாக இருந்தனர். பின்னர் இரண்டுக்கு மேற்பட்ட நூற்றாண்டுகளின் (மூன்றாவதில் இருந்து ஐந்தாவது வரை) இடைவெளியில் தேவதூதர்களின் உருவப்படம் இறையியல் மற்றும் ஓவியம் ஆகிய இரண்டிலுமே நிச்சயமான சிறப்பியல்புகளைப் பெற்றது.

நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேவாலயத் தந்தைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தன்னேற்புத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுடன் கூடிய மாறுபட்ட பிரிவுகளில் தேவதூதர்கள் இருந்ததை ஏற்றுக் கொண்டனர். சில இறையியலாளர்கள் இயேசு இறைநிலை அடைந்தவர் அல்லர், ஆனால் திரித்துவத்துக்கு கீழ்ப்படிந்த பொருட்டல்லாத நிலையில் உள்ள மனிதர் என முன்மொழிகின்றனர். இந்த திரித்துவ சர்ச்சையின் முடிவில் தேவதூதர்கள் தொடர்பான சித்தாத்தங்களின் மேம்பாடும் அடங்கியிருக்கிறது.

தேவதூதர்கள் என்பவர்கள் கடவுள் மற்றும் மனிதர்களுக்கு இடையில் செயல்படுவர்களாக கிறிஸ்துவ விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: "நீ அவனை (மனிதன்) தேவதூதர்களைக் காட்டிலும் சிறிது குறைவாக உருவாக்க வேண்டும்..." (Psalms 8:4,5). சில கிறிஸ்துவர்கள் தேவதூதர்கள் என்பவர்கள் உருவாக்கப்பட்ட நபர்களாக நம்புகின்றனர். மேலும் பின்வரும் சொற்றொடரை அதற்கு ஆதாரமாகக் கூறுகின்றனர்: "அவன் பேசுவதற்காக... அவனது தேவதூதர்கள் அனைவரும் அவனைப் புகழுங்கள்: அனைத்து ஆவிகளும் அவனைப் புகழுங்கள். அவர்கள் அதற்காக உருவாக்கப்பட்டவர்கள். அவன் ஆணையிடுவதற்காக அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றனர்..." (Psalms 148:2-5; Colossians 1:16). தேவதூதர்கள் உருவாக்கப்பட்டவர்கள் என நான்காவது லேட்டரன் மன்றம் (1215) அறிவித்திருக்கிறது. அந்த மன்றத்தின் தீர்ப்பாணை ஃபர்மிடர் கிரெடிமஸ் (Firmiter credimus) (ஆல்பிகென்ஸஸுக்கு எதிராக வெளியிடப்பட்டது) தேவதூதர்கள் உருவாக்கப்பட்டவர்கள் எனவும் அவர்களுக்குப் பின்னர் மனிதர்கள் உருவாக்கப்பட்டனர் என்றும் அறிவித்திருக்கிறது. முதல் வாடிகன் மன்றம் (1869) "கத்தோலிக்க நம்பிக்கை மீதான பிடிவாதமான அமைப்பான" டெய் ஃபிலியஸில் இந்த அறிவித்தல் மீண்டும் இடம்பெற்றது. விவிலியத்தில் "தூதுவர்களாக" தேவதூதர்களின் செயல்பாடு விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எப்போது தேவதூதர்கள் உருவாக்கப்பட்டனர் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேவதூதர்கள் என்பவர்கள் பாலிலிகள் என்றும் இரு பாலினத்திலும் அடங்காதவர்கள் எனவும் பல கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர். இந்த வழியில் அவர்கள் மேத்தீவ் 22:30ஐ விளக்கமாகக் கூறுகின்றனர். மற்றொரு வகையில் தேவதூதர்கள் பொதுவாக ஆண் போன்ற தோற்றம் கொண்டவர்களாக விவரிக்கப்படுகின்றனர். அவர்களது பெயர்களும் கூட ஆண் பெயர்களாகவே உள்ளது. தேவதூதர்கள் மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அறிவுடையவர்களாக இருந்த போதும் மேத்தீவ் 24:36 இல் குறிப்பிட்டுள்ளவாறு அவர்கள் எல்லாமறிந்த கடவுள் அல்ல. மற்றொரு பார்வையில் தேவதூதர்கள் சோதனைக்காக இந்த உலகிற்கு மனிதர்கள் வடிவத்தில் அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.

தேவதூதர்களுடன் தொடர்புகொள்ளுதல்

இயேசுவை இளைப்பாற்றும் தேவதூதர். கார்ல் ஹெய்ன்ரிச் ப்ளோச்சால் (1865–1879) வரையப்பட்டது.
புதிய ஏற்பாடு தேவதூதர்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையில் பலமுறை தொடர்புகொள்ளுதல்கள் மற்றும் உரையாடல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்து ஆகியோரின் பிறப்புக்களுடன் தொடர்புடைய தேவதூதர்களுடன் தொடர்பு கொண்டதற்கான மூன்று தனித்த நிகழ்வுகள் இருக்கின்றன. லூக் 1:11 இல் ஒரு தேவதூதர் ஜெகாரியா முன் தோன்றி அவர் வயதானவராக இருந்த போதும் அவர் ஒரு குழந்தை பெறப்போவதாக அறிவித்தது. இவ்வாறு திருமுழுக்கு யோவான் பிறப்பதற்கான முன்னறிவிப்பாக அது அமைந்தது. மேலும் லூக் 1:26 இல் உயர் தேவதூதர் கேப்ரியேல் கன்னி மேரியைச் சந்தித்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து கணித்து முன்னறிவிப்பு செய்தது. தேவதூதர்கள் பின்னர் லூக் 2:10 இல் இடையர்களின் வழிபாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து முன்னறிவிப்பு செய்தனர். தேவதூதர்கள் பின்னர் புதிய ஏற்பாட்டிலும் தோன்றினர். லூக் 22:43 இல் ஒரு தேவதூதர் தோட்டத்தில் வேதனையுடன் இருந்த போது இயேசு கிறிஸ்துவுக்கு வசதியளித்தது. மேத்தீவ் 28:5 இல் இயேசு உயிர்த்தெழுகையைத் தொடர்ந்து ஒரு தேவதூதர் காலியான கல்லறையில் பேசியது மற்றும் தேவதூதர்கள் மூலமாக கற்கள் உருட்டப்பட்டன. ஹீப்ரூக்கள் 13:2 இல் அவர்கள் "தேவதூதர்களுக்குத் தெரியாமல் அவர்களை மகிழ்விக்கலாம்" என்று வாசிப்பவர் ஒருவர் நினைவூட்டுவார்.

புதிய ஏற்பாடு நிறைவுற்றதில் இருந்து கிறிஸ்துவ பாரம்பரியத்தில் தொடர்ந்து தேவதூதர்களுடன் தொடர்பு கொண்டதாக பல செய்திகள் வருகின்றன. எடுத்துக்காட்டாக 1851 ஆம் ஆண்டில் போப் பியஸ் IX 1751 ஆம் ஆண்டில் உயர் தேவதூதர் மைக்கேலிடம் இருந்து கார்மலைட் நன் ஆண்டொனியோ டி'அஸ்டோனக் பெற்ற தனிப்பட்ட இரகசிய வெளிப்பாடு சார்ந்து புதிய மைக்கேலின் செபமணிமாலையை ஏற்றுக் கொண்டார். மேலும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1986 ஆம் ஆண்டில் "விமோசனத்தின் வரலாற்றில் தேவதூதர்களின் பங்களிப்பு " (Angels Participate In History Of Salvation) என்ற தலைப்பிலான அவரது பேச்சில் கத்தோலிக்க நுட்பங்களில் தேவதூதர்களின் பங்கை வலியுறுத்தினார். அதில் அவர் நவீன மனநிலை தேவதூதர்களின் முக்கியத்துவத்தைக் காணமுற்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

20 ஆம் நூற்றாண்டில் அசாதரணத் தோற்றம் காண்பவர்களும் மறைபொருள் காண்பவர்களும் தேவதூதர்களுடன் தொடர்பு கொண்டதாகவும் உண்மையில் அவர்கள் சொன்னதை எழுதியதாகவும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக படுத்த படுக்கையான இத்தாலிய எழுத்தாளர் மற்றும் மறைபொருள் காண்பவரான மரியா வால்டோர்டா (Maria Valtorta) "சொல்வதெழுதுதல்" அடிப்படையில் த புக் ஆஃப் ஆஜரியாவை எழுதியிருக்கிறார். அதில் அவர் தனது பாதுகாவலர் தேவதூதர் அசாரியாவுடன் 1946 மற்றும் 1947 ஆம் ஆண்டுகளின் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்கு பயன்படுத்துவதற்கான ரோமன் மிஸ்ஸல் குறித்து நேரடியாகக் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டிருந்தார்.

உருவ விளக்கம்

மேன்மையான காவலர்களின் லோரோஸ் அணிந்த பிரதான தேவதூதர்கள் மைக்கேல் மற்றும் கேப்ரியேலினின் 12ஆம் நூற்றாண்டு உருவம்.
பிரிஸ்ஸில்லியாவின் பாதாளக் கல்லறை குபிகோலோ டெல் அன்னன்சியாசியொன்னில் தேவதூதரின் மிகவும் பழங்கால உருவப்படம் கண்டறியப்பட்டது. அதில் மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் உள்ள ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த உருவப்படம் இறக்கைகள் இல்லாமல் இருக்கிறது. அந்த காலத்திய கல்சவப்பெட்டி மீது மற்றும் விளக்குகள் மற்றும் நினைவுச் சின்னப் பேழைகள் போன்ற பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் தேவதூதர்களும் கூட இறக்கைகள் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக ஜூனியஸ் பாஸ்ஸஸ்சின் கல்சவப்பெட்டியில் உள்ள ஐசக்கை பலிகொடுக்கும் காட்சியில் தேவதூதர் இருக்கிறது.

இறக்கைகளுடன் கூடிய தேவதூதர்களைக் கொண்ட நன்கு அறியப்பட்ட ஆரம்ப கால வெளிப்பாடு இளவரசனின் கல்சவப்பெட்டி என்று அழைக்கப்படுகிறது. இது 1930களில் இஸ்தான்புல் அருகில் உள்ள சாரிகசலில் கண்டறியப்பட்டது. மேலும் அது தியோடோசியஸ் I (379-395) காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என யூக்கிக்கப்படுகிறது.

புனித ஜான் கிறிசோஸ்டோம் தேவதூதர்களின் இறக்கைகளின் தனிச்சிறப்பு குறித்து பின்வருமாறு விவரிக்கிறார்: "அவை இயற்கையின் மதிப்பு மிக்கவைகளை வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் கேப்ரியேல் இறக்கைகளுடன் குறிப்பிடப்படுகிறார். தேவதூதர்கள் இறக்கைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அவர்கள் உயரத்தில் விடப்பட்டவர்களாகவும் மனித அணுகுமுறைக்கு மிகவும் உயரத்தில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால் அவர்களுக்கு இறக்கைகள் இருப்பது அவர்களின் இயல்பில் உள்ள மேன்மையை உணர்த்துவதற்காக அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் இருக்காது" என்றார்.

டெய் சாண்டி அபோஸ்டோலி திருச்சபையில் இருந்து எடுக்கப்பட்ட மெலோஸ்ஸோவின் பிரபலமான ஒரு தேவதூதர் ஓவியம். தற்போது புனித பீட்டர்ஸ் களஞ்சியத்தில் இருக்கிறது.
அதன் பிறகு சில விதிவிலக்குகள் இருந்த போதும் புனித மேரி மேஜர் திருச்சபையின் (432–440) பளபளப்புக் கற்களின் சுழற்சியில் இருப்பது போன்ற கிறிஸ்துவ ஓவிய வெளிப்பாடுகளில் தேவதூதர்கள் இறக்கைகளுடன் சித்தரிக்கப்பட்டனர். பொதுவாக முகம், இறக்கைகள் மட்டுமே வெளிப்படும்படியும் நான்கு முதல் ஆறு இறக்கைகள் கொண்ட தேவதைகள், குறிப்பாக செருபிம் மற்றும் செராபிம் போன்ற பிரதான தேவதைகளில் இருந்து வரையப்பட்ட அந்த ஓவியங்கள் பெர்சிய ஓவியங்களாகத் எண்ணப்பட்டன. அவை பொதுவாக பூமியின் மீது பணிகளைச் செய்வதற்கு எதிராக புனித நூல்களில் மட்டுமே காணப்படுகின்றன. அவை பொதுவாக தேவாலயங்களில் குவிமாடங்கள் அல்லது அரை-குவிமாடங்களின் தொங்கணங்களில் காட்சியளிக்கின்றன.

குறிப்பாக உயர் தேவதூதர் மைக்கேல் போன்ற தேவதூதர்கள் கடவுளின் இராணுவ பாணி முகவர்களாகச் சித்திரக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பழங்கால வடிவிலான இராணுவ சீருடை அணிந்திருப்பர். இது முழுங்கால்களைச் சுற்றியிருக்கும் மூடு உறை, மார்ப்புக் கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றுடன் கூடிய சாதாரண இராணுவ உடையாக இருக்கலாம். அவை நீண்ட மூடு உறையுடன் கூடிய பைசாண்டியப் பேரரசரின் பாதுகாவலரின் குறிப்பிட்ட உடை மற்றும் அரச குடும்பங்கள் மற்றும் அவர்களது நெருங்கிய பாதுகாவலர்கள் மட்டுமே அணிவதற்கு அனுமதிக்கப்பட்ட நீண்ட தங்கம் மற்றும் அணிகலன்கள் கொண்ட மேல்போர்வையான லோரோஸ் போன்ற உடைகளுடனும் சித்தரிக்கப்பட்டன. அடிப்படை இராணுவ உடை பாரோக் கலைவடிவ காலகட்டத்திய புகைப்படங்கள் மற்றும் மேற்கிற்கு அப்பால் (மேலே உள்ள ரேனி புகைப்படத்தைப் பார்க்கவும்) மற்றும் தற்போது வரை உள்ள கிழக்கத்திய மரபு சார்ந்த சிலைகள் ஆகியவற்றில் தற்போதும் அணிவிக்கப்படுகிறது. பிற தேவதூதர்கள் வழக்கமாக தளர்வான மேலங்கிகளுடன் சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் மத்திய காலங்களின் பின்பகுதியில் அவர்கள் பொதுவாக திறந்த தளர் சட்டை மீது மேல் கீழ் அச்சு வடிவம் கொண்ட தேவாலய அதிகாரிகள் அணியும் சமயச் சடங்குக்குரிய உடை அணிவிக்கப்பட்டது. குறிப்பாக ஜான் வான் எயிக் வரைந்த முன்னறிவிப்புக் காட்சிகளில் எடுத்துக்காட்டாக வாஷிங்டனின் முன்னறிவிப்பில் கேப்ரியல் இந்த உடை அணிந்திருப்பார்.

தேவதூதர்கள் யார்?

தேவதூதர்கள் யார்? பைபிள் தரும் பதில்
தேவதூதர்கள் மனிதர்களைவிட மகா பலசாலிகள், திறமைசாலிகள். (2 பேதுரு 2:11) அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்; பரலோகம் என்பது விண்வெளிக்கும் அப்பாற்பட்ட ஓர் இடம், ஆவி நபர்கள் வசிக்கிற மேலான இடம். (1 ராஜாக்கள் 8:27; யோவான் 6:38) ஆவி சிருஷ்டிகள் பல வசனங்களில் ‘தேவதூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.—1 ராஜாக்கள் 22:21; சங்கீதம் 18:10.

தேவதூதர்கள் எப்படி வந்தார்கள்?
“படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிற இயேசுவின் மூலமாகக் கடவுள் தேவதூதர்களைப் படைத்தார். படைப்பு வேலையில் கடவுள் எப்படி இயேசுவைப் பயன்படுத்தினார் என்பதை பைபிள் இப்படிச் சொல்கிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம் . . . [இயேசு] மூலம்தான் படைக்கப்பட்டன.” (கொலோசெயர் 1:13-17) தேவதூதர்கள் திருமணம் செய்துகொள்வதோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதோ இல்லை. (மாற்கு 12:25) ‘உண்மைக் கடவுளின் மகன்களாக’ இருக்கிற இந்தத் தேவதூதர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் தனித்தனியாகப் படைத்தார்.—யோபு 1:6, அடிக்குறிப்பு.

இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு ரொம்பக் காலத்திற்கு முன்பாகவே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள். கடவுள் இந்தப் பூமியைப் படைத்தபோது, தேவதூதர்கள் “சந்தோஷ ஆரவாரம்” செய்தார்கள்.—யோபு 38:4-7.

எவ்வளவு தேவதூதர்கள் இருக்கிறார்கள்?
அவர்களுடைய எண்ணிக்கையை பைபிள் சொல்வதில்லை; ஆனால், மிக அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணத்துக்கு, லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தேவதூதர்கள் இருக்கிற ஒரு காட்சியை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார்.—வெளிப்படுத்துதல் 5:11.

ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருக்கிறதா? ஒவ்வொரு சுபாவம் இருக்கிறதா?
ஆம். இரண்டு தேவதூதர்களுடைய பெயர்கள் பைபிளில் இருக்கின்றன. ஒன்று மிகாவேல் மற்றொன்று காபிரியேல். (தானியேல் 12:1; லூக்கா 1:26) * வேறுசில தேவதூதர்கள் தங்களுக்குப் பெயர் இருப்பதாக ஒத்துக்கொண்டபோதிலும், அவற்றைத் தெரிவிக்கவில்லை.—ஆதியாகமம் 32:29; நியாயாதிபதிகள் 13:17, 18.

ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒவ்வொரு விதமான சுபாவம் இருக்கிறது. அவர்களால் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியும். (1 கொரிந்தியர் 13:1) அவர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருக்கிறது, அதனால் வார்த்தைகளைக் கோர்த்து அவர்களால் கடவுளுக்குப் புகழ்மாலை சூட்ட முடியும். (லூக்கா 2:13, 14) நல்லது கெட்டதைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது; அதனால்தான், தேவதூதர்களில் சிலர் பிசாசாகிய சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.—மத்தேயு 25:41; 2 பேதுரு 2:4.

தேவதூதர்கள் மத்தியில் வெவ்வேறு ஸ்தானங்கள் இருக்கின்றனவா?
ஆம், இருக்கின்றன. பலத்திலும் அதிகாரத்திலும் மிக உன்னதமான ஸ்தானத்தில் இருப்பவர் தலைமைத் தூதரான மிகாவேல். (யூதா 9; வெளிப்படுத்துதல் 12:7) சேராபீன்கள், உயர்ந்த ஸ்தானத்திலுள்ள தேவதூதர்கள்; இவர்கள் யெகோவாவின் சிம்மாசனத்துக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். (ஏசாயா 6:2, 6) கேருபீன்கள், உயர்ந்த ஸ்தானத்திலுள்ள மற்றொரு வகையான தேவதூதர்கள்; இவர்களுக்கு விசேஷ நியமிப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாம் ஏவாள் வெளியே துரத்தப்பட்ட பின்னர், அதன் நுழைவாசலை கேருபீன்கள் காவல்காத்தார்கள்.—ஆதியாகமம் 3:23, 24.

ஏதேன் தோட்டத்தின் நுழைவாசலை கேருபீன்கள் காவல் காக்கிறார்கள்
தேவதூதர்கள் மக்களுக்கு உதவுகிறார்களா?
ஆம். இன்று தன் மக்களுக்கு உதவி செய்வதற்காக, கடவுள் தன்னுடைய உண்மையுள்ள தூதர்களைப் பயன்படுத்துகிறார்.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிற தன் ஊழியர்களை வழிநடத்த தேவதூதர்களைக் கடவுள் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7) இதனால், அந்தச் செய்தியை அறிவிக்கிறவர்களும் சரி, கேட்கிறவர்களும் சரி, நன்மையடைகிறார்கள்.—அப்போஸ்தலர் 8:26, 27.

கிறிஸ்தவ சபை பொல்லாத ஆட்களால் கறைபட்டுவிடாதபடி தேவதூதர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.—மத்தேயு 13:49.

கடவுளுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத் தேவதூதர்கள் வழிநடத்துகிறார்கள், பாதுகாக்கிறார்கள்.—சங்கீதம் 34:7; 91:10, 11; எபிரெயர் 1:7, 14.

தேவதூதர்கள் சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து போர் செய்து, இந்தப் பூமியிலிருந்து தீமையை ஒழித்துக்கட்டி, மனிதர்களுக்கு நிம்மதியைக் கொண்டுவரப்போகிறார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:6-8.

நம் ஒவ்வொருவரோடுகூட ஒரு காவல் தூதர் இருக்கிறாரா?
கடவுளுடைய ஊழியர்கள் ஆன்மீக ரீதியில் பாதிக்கப்படாதபடி தேவதூதர்கள் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு காவல் தூதரை * நியமிக்கிறார் என்று அர்த்தம் கிடையாது. (மத்தேயு 18:10) தேவதூதர்கள் கடவுளுடைய ஊழியர்களை ஒவ்வொரு கஷ்டத்திலிருந்தும் சோதனையிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றுவதில்லை. மாறாக, சோதனையைச் சகித்துக்கொள்ள கடவுள் தன் ஊழியர்களுக்கு ஞானத்தைத் தந்து, பலத்தைக் கொடுத்து, ‘அதிலிருந்து விடுபடுவதற்கு வழிசெய்வார்’ என்று பைபிள் சொல்கிறது.—1 கொரிந்தியர் 10:12, 13; யாக்கோபு 1:2-5.

தேவதூதர்களைப் பற்றிய தவறான கருத்துகள்
தவறான கருத்து: எல்லா தேவதூதர்களுமே நல்லவர்கள்.

உண்மை: ‘பொல்லாத தூதர் கூட்டம்’ என்றும், ‘பாவம் செய்த தேவதூதர்கள்’ என்றும் பைபிள் சில தேவதூதர்களைக் குறிப்பிடுகிறது. (எபேசியர் 6:12; 2 பேதுரு 2:4) இந்தப் பொல்லாத தேவதூதர்கள்தான் பேய்கள்; சாத்தானோடு சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள்.

தவறான கருத்து: தேவதூதர்கள் சாவாமை உள்ளவர்கள்.

உண்மை: பிசாசாகிய சாத்தான் உட்பட பொல்லாத தேவதூதர்கள் அனைவருமே அழிக்கப்படுவார்கள்.—யூதா 6.

தவறான கருத்து: மனிதர்கள் செத்த பிறகு தேவதூதர்களாக ஆகிவிடுகிறார்கள்.

உண்மை: தேவதூதர்கள் கடவுளுடைய பிரத்தியேகமான படைப்புகள், உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதர்கள் கிடையாது. (கொலோசெயர் 1:16) பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிற நபர்கள்தான் சாவாமை வரத்தைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். (1 கொரிந்தியர் 15:53, 54) அப்போது அவர்கள், தேவதூதர்களைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள்.—1 கொரிந்தியர் 6:3.

தவறான கருத்து: மனிதர்களுக்குச் சேவை செய்யத்தான் தேவதூதர்கள் இருக்கிறார்கள்.

உண்மை: தேவதூதர்கள் கடவுளுடைய சொல்கிறபடிதான் கேட்டு நடப்பார்கள், நாம் சொல்கிறபடி அல்ல. (சங்கீதம் 103:20, 21) உதவிக்கு தேவதூதர்களை நேரடியாய் கூப்பிடப்போவதாக இயேசுவும்கூட சொல்லவில்லை, உதவி கேட்டு கடவுளிடம் வேண்டிக்கொள்ளப்போவதாகத்தான் சொன்னார்.—மத்தேயு 26:53.

தவறான கருத்து: உதவி கேட்டு தேவதூதர்களிடம் நாம் ஜெபம் செய்யலாம்.

உண்மை: ஜெபம் என்பது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம்; அந்த வணக்கம் யெகோவா தேவனுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (வெளிப்படுத்துதல் 19:10) இயேசு மூலமாகக் கடவுளிடம் மட்டுமே நாம் ஜெபம் செய்ய வேண்டும்.—யோவான் 14:6.

நவ விலாச வானதூதர்கள்

நவ விலாச வானதூதர்கள்
பிரான்செஸ்கோ பாட்டிசினி வரைந்த மரியாவின் விண்ணேற்பு ஓவியத்தில்
நவ விலாச வானதூதர்கள்

நவ விலாச வானதூதர்களை சித்தரிக்கும் கிழக்கு மரபுவழி திருச்சபையின் ஓவியம்.
கிறித்தவத்தில் நவ விலாச வானதூதர்கள் என்போர் கடவுளுக்கு பணிவிடை செய்யும், ஒன்பது குழுக்களைச் சார்ந்த உடலற்ற ”தூய அரூபிகள்” ஆவர். வானதூதர்கள் கிறிஸ்தவ கலைகளில் பொதுவாக, சிறகுகளுடன் கூடிய மனித உருவத்தில் சித்தரிக்கப்படுகின்றனர். கிரேக்க யூத மரபின்படியும், அதைப் பின்பற்றும் கிறிஸ்தவ மரபிலும் வானதூதர்கள் அவர்களது பணிகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளில் அடக்கப்படுகின்றனர். அவர்கள் நவ விலாச சபையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஒன்பது குழுக்கள்
வானதூதர்களின் ஒன்பது குழுக்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:

முதல் வட்டம்
பத்திசுவாலகர் (சுடரொளி வீசுவோர்)
நாதகிருத்தியர் (புகழ்ந்தேற்றுவோர்)
பத்திராசனர் (அரியணையில் அமர்வோர்)
இரண்டாம் வட்டம்
ஞானாதிக்கர் (ஒழுங்கு செய்வோர்)
சத்துவகர் (புனிதத்தில் மிகுந்தோர்)
பலவத்தர் (அதிகாரம் கொண்டோர்)
மூன்றாம் வட்டம்
பிராதமிகர் (ஆட்சியாளர்)
அதிதூதர் (தலைமை தாங்குவோர்)
தேவதூதர் (இறைசெய்தி அளிப்போர்)

முதல் வட்டம்
முதல் வட்டத்தின் வானதூதர்கள் கடவுளை புகழ்ந்து போற்றி வணங்குவோராக உள்ளனர்.
பத்திசுவாலகர்
பத்திசுவாலகர்
பத்திசுவாலகர் அல்லது சேராபீன்கள் (Seraphim) என்னும் வானதூதர்கள் பற்றி திருவிவிலியத்தின் எசாயா 6:1-7ல் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இவர்கள் கடவுளாகிய ஆண்டவரின் அரியணையை சூழ்ந்து நிற்கின்றனர்; சேராபீன்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருக்கின்றன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டிருக்கின்றனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்திருக்கின்றனர்; மற்ற இரண்டால் பறக்கின்றனர்.

இவர்கள், "படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கடவுளைப் புகழ்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். சேராபீன் என்பதற்கு எரிந்து சுடரொளி வீசுவோர் என்பது பொருள். இவர்கள் கடவுள் மீதான அன்பாலும், ஆர்வத்தினாலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றனர்.

நாதகிருத்தியர்
நாதகிருத்தியர்
நாதகிருத்தியர் அல்லது கெருபுகள் (Cherubim) என்னும் வானதூதர்கள் பற்றி திருவெளிப்பாடு 4:6-8ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஆண்டவரின் அரியணையை சுற்றி நான்கு புறமும் நிற்கும் நான்கு உயிர்கள் ஆகும். அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம்போலும், இரண்டாவது இளங்காளை போலும், மூன்றாவது மனிதன் போலும், நான்காவது பறக்கும் கழுகைப் போலும் முக அமைப்பு கொண்டிருக்கின்றன.

இவ்வுயிர்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளும் புறமும் கண்கள் நிறைந்த ஆறு சிறகுகள் இருக்கின்றன. "தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே" என்று இந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கின்றன.

பத்திராசனர்
எசேக்கியேலின் காட்சியில் பத்திராசனர்
பத்திராசனர் (Thrones or Ophanim) என்னும் வானதூதர்கள் பற்றி திருவெளிப்பாடு 11:16-8ல் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித பவுலும் (Colossians 1:16) இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். இவர்கள் அரியணையில் அமர்ந்து கடவுளின் நீதிக்கும், ஆட்சியுரிமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றனர்.

இவர்கள் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களின் உருவம், வளையத்தில் பல கண்கள் கொண்ட நெருப்பு சக்கரம் போன்று இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இரண்டாம் வட்டம்
இரண்டாம் வட்டத்தின் வானதூதர்கள் விண்ணகப் பணிகளை கவனிப்போராக உள்ளனர்.

ஞானாதிக்கர் (Dominions or Hashmallim) என்னும் வானதூதர்கள் பிரபுத்துவம் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் தங்களின் கீழுள்ள வானதூதர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துகின்றனர். அரிதாக சில தருணங்களில் இவர்கள் மனித உருவில் தங்களை வெளிப்படுத்துவது உண்டு. இவர்கள் உலக நாடுகளின் பொறுப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஞானாதிக்கரின் உருவம் இரண்டு சிறகுகளைக் கொண்ட மனிதரைப் போன்று இருக்கும்; மேலும், இவர்கள் செங்கோலில் அல்லது வாளின் கைப்பிடியில் அதிகாரத்தைக் குறிக்கும் ஓர் ஒளி வட்டமும் காணப்படுகிறது.

சத்துவகர்
சத்துவகர் (Virtues or Strongholds) என்னும் வானதூதர்கள் விண்ணகப் பொருட்களை கண்காணிக்கும் அதிகாரம் கொண்டவர்கள் ஆவர். பிரபஞ்சத்தின் இயக்க முறைமைகளை இவர்களே ஒழுங்குபடுத்தி பராமரிக்கின்றனர்.

புனைவு-டையோனைசியஸ் நூல் பின்வருமாறு கூறுகிறது: "சத்துவகரின் பெயர் அவர்களின் அசைக்க முடியாத வல்லமையை, கடவுளை ஒத்த ஆற்றல்களைக் குறிக்கிறது. இறை வாழ்வில் இருந்து தம் பலவீனத்தால் விலகாமல், புண்ணியத்தின் அதிமிகத் தேவையில் நிலைத்து வளர்கின்றனர். இவர்கள் புண்ணியத்தின் ஊற்றாகவும், மிகை நிறைவாகவும் திகழ்கின்றனர்."

பலவத்தர்
பலவத்தர் (Powers or Authorities) என்னும் வானதூதர்கள், பிராதமிகரோடு இணைந்து அதிகாரம் செலுத்துவோர் (எபேசியர் 3:10) ஆவர்.

பலவத்தர் மனச்சான்றைத் தாங்குவோராகவும், வரலாற்றைக் காப்போராகவும் இருக்கின்றனர். இவர்கள் கடவுளுக்காகப் பிரமாணிக்கத்துடன் போரிட உருவாக்கப்பட்ட வானதூதர்கள். இவர்கள் மனிதரிடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வதாலேயே இப்பெயரைப் பெறுகின்றனர்.

மூன்றாம் வட்டம்

மிக்கேல் அதிதூதர் சாத்தானை வீழ்த்தல்
மூன்றாம் வட்டத்தின் வானதூதர்கள் விண்ணகத் தூதுவர்களாகவும், வீரர்களாகவும் உள்ளனர்.

பிராதமிகர்
பிராதமிகர் (Principalities or Rulers) என்னும் வானதூதர்கள், பலவத்தரை இணைத்து ஆட்சி புரிவோர் ஆவர்.

பிராதமிகர் தலையில் மகுடமும், கையில் செங்கோலும் கொண்டிருப்பர். ஞானாதிக்கரின் கட்டளைகளை நிறைவேற்றுவதும், பூவுலகுக்கு குறிக்கப்பட்ட ஆசிகளை வழங்குவதும் இவர்களின் பணி ஆகும். இவர்கள் மக்கள் குழுக்களை கண்காணித்து, கற்பிப்பவர்களாகவும் பாதுகாப்பவர்களாகவும் இருக்கின்றனர். மனிதரின் அறிவியல் மற்றும் கலை ஆர்வத்தை இவர்களே தூண்டுகின்றனர்.

அதிதூதர்
அதிதூதர் (Archangel, கிரேக்கம்: Greek αρχάγγελος (archangělǒs), எபிரேயம்: רב־מלאך (rav-mal'ákh)) என்னும் சொல்லுக்கு தலைமை வானதூதர் என்பது பொருள். புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் ஒரே அதிதூதர் மிக்கேல் ஆவார்.

இயேசுவைத் தேற்றும் தேவதூதர்
தலைமை வானதூதர்களின் எண்ணிக்கை ஏழு என்பது பொதுவான நம்பிக்கை. இவர்கள் கடவுளின் திருமுன் நின்று பணி செய்கின்றனர். இவர்கள் உண்மையுள்ள போர் வீரர்களாக இருக்கின்றனர். கத்தோலிக்க மரபின்படி மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகிய மூவரும் முக்கியமான அதிதூதர்களாக கருதப்படுகின்றனர்.

தேவதூதர்
தேவதூதர் (Angels or Malakhim) என்னும் வானதூதர்கள் மனிதருக்கு இறைசெய்தியை வழங்கும் தூதுவர்களாக செயல்படுகின்றனர். உயிருள்ளவற்றின் நலன்களுக்கு பொறுப்பானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் மனிதர்களின் பாதுகாவலர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஆதாரங்கள்
 Chase, Steven (2002). Angelic spirituality. பக். 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780809139484.
 "Isaiah 6 - NET Bible". Bible.org. பார்த்த நாள் 2007-03-13.
 http://www.esoteric.msu.edu/VolumeII/CelestialHierarchy.html
 Strong, J, Strong's Exhaustive Concordance of the Bible, Riverside Books and Bible House, Iowa Falls (Iowa), ISBN 0-917006-01-1.
 திருவெளிப்பாடு 12:7-8 'விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.

Saturday, March 28, 2020

நாம் அறிந்திராத வேதாகம துணுக்குகள்

நாம் அறிந்திராத வேதாகம துணுக்குகள்
========================

* "தள்ளப்பட்ட வேதம்" அல்லது "தள்ளுபடி வேதாகமம்" (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.

* சீகன் பால்கு ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.

* சீகன் பால்கு ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன் ஊழியங்களை செய்து, ஒரு சபையை கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது.

* ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு ஐயர் என்பவர் தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர்.

* 2இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

* இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.

1. மெல்கொயர் – பரிசு பொன்.

2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.

3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..

1. திஸ்மாஸ்

2. கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.

* வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது .

1. மண்ணிலிருந்து ஆதாம்.
2. எலும்பிலிருந்து ஏவாள்.
3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.

* மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அந்நூலின் ஆசிரியரான மாற்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.

* சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.

* சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரத்தை குறித்து மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.

* வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23

* கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர். ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.

* நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

* இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மிக பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.

* தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

* யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

* “தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.

* தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “What hath God wrought?” Num 23:23 அதாவது “தேவன் என்னென்ன செய்தார்?” எண் 23:23.

* மோசே குழந்தையாக இடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

* ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

* ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

* யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது

1. யோசு 4:7,19.

2. 2 இரா 2:8.

3. 2 இரா 2:13,14.

* வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

* தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்

1. மோசே – யாத் 35:28-30
2. இயேசு – மத் 17:2
3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

* வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.

1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

* “அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது :-

மாற் 14:36,
ரோம 8:15;
கலா 4:6.

* லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது.

லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.

* லேவியராகமத்தில் “கர்த்தர்” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது.

லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.

* யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.

* ‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது

1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்

1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.

* “ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

* சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது

சங் 15,70,93,100,125.

* யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

* இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –

லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.

3 விதமான கிறிஸ்துக்கள்
a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.

a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

* தமிழ் புதிய ஏற்பாடு கி.பி 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

* ஹென்றி பாவர் என்பவர் தலைமையில் முழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவழுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.

* வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

* வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).

* கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமும் இதுவே).

* நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

* சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.

* தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

* சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

* புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

* “சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

* 2இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

* பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1.

Image may contain: text that says 'Damascus MEDITERRANEAN SEA) SEA OF NILE DELIA CANAAN GALILEE DEAD SEA Jaricno GOSHEN MOAB E GYPT (SINAI) Memphis'

பிரதான தேவதூதர்கள்

பிரதான தேவதூதர்கள்
""""""""""""""""""""""""
தேவதூதர்களை பற்றி வேதத்திலே மொத்தம் 273 குறிப்புகளை காணலாம். இவற்றில் பழைய ஏற்பாட்டில் 108 முறையும், புதிய ஏற்பாட்டில் 165 முறையும் வருகிறது. இதில் பஞ்சாகமத்தில் 32 முறையும், வெளிப்படுத்தின விசேஷத்தில் 65 முறையும் வருகிறது.
2. தேவதூதரை குறிக்க எபிரேய மொழியில் “மலாக்” என்ற வார்த்தையும் கிரேக்க மொழியில் “அங்கெலொஸ்” என்ற வார்த்தையும் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
3. தேவதூதர்கள் தானாக உறுவானது கிடையாது. இவர்கள் நம்முடைய பூமியை தேவன் சீரமைக்கும் காலத்திற்கு முன்னதாகவே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – யோபு 38:4-6; சங் 148:5; கொலோ 1:16.
4. தேவதூதர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவண்ணம் கோடிக்கணக்காக படைக்கப்பட்டுள்ளனர் – லூக் 2:13,14; சங் 68:17; வெளி 5:11; 2 இரா 6:17
5. தேவதூதர்களுக்கு நம்மை போல மாமிச சரீரம் கிடையாது. இவர்கள் விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – சங் 104:4; எபி 1:7,14
6. தேவதூதர்களை நம்முடைய மாமிச கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாது. தேவன் வெளிப்படுத்த சித்தமானால் இவர்களை நாம் பார்க்கவும் இவர்களுடன் பேசவும் முடியும்
7. வேதத்திலே ஆதியாகமம் 3-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் முதன் முதலாக தேவதூதர்களை பற்றிய குறுப்பு வருகிறது.
8. கேருபீன்கள், சேராபீன்கள், நான்கு ஜீவன்கள், பிரதான தூதர்கள், பணிவிடை ஆவிகள், ஆளக்கூடிய அதிகாரம் பெற்ற தூதர்கள், விழுந்து போன தூதர்கள் என்று பலவகை தேவதூதர்களை குறித்து வேதம் விளக்குகிறது – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16; ஏசா 14:12-15
9. ஒவ்வொரு வகை தேவதூதர்களும் வெவ்வேறு வகையான சரீர அமைப்பை கொண்டு வித்தியாச வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16
10. தேவதூதர்களுக்கு நம்மை போல அறிவாற்றலும், உணர்ச்சியும், முடிவெடுக்க கூடிய ஆற்றலும் உண்டு – மத் 28:5, யோபு 38:7; லூக் 2:13; ஏசா 14:12-15
11. பலத்த சவுரியவான்கள், பணிவிடைகாரர், ஊழியக்காரர், சேனை, இரதங்கள், காவலாளன், தேவபுத்திரர், பலவான்களின் புத்திரர், பரிசுத்தவான்கள், நட்சத்திரங்கள் என்று அநேக பெயர்களால் தேவதூதர்கள் அழைக்கபடுகிறார்கள் – சங் 103:20,21; சங் 104:4; ஆதி 32:1,2; சங் 68:17; தானி 4:13; யோபு 1:6; சங் 29:1, 89:6; தானி 8:13; யோபு 38:7
12. காபிரியேல் தூதனும் மீகாவேல் தூதனும் பிரதான தூதர்கள் ஆவர். இவர்களைபோலவே சாத்தானும் லூசிப்பர் என்ற பெயரில் பிரதான தூதனாக இருந்துவந்தான். இவன் தேவனுக்கு விரோதமாக கர்வம் கொண்டு எழும்பினபோது தேவன் இவனை பூமியின் மீது விழும்படி தள்ளிவிட்டார். இவனோடு இவனுடைய கூட்டமும் விழுந்தது. ஆகையால் தான் இவர்கள் தள்ளப்பட்ட தூதர்கள் என்றும் விழுந்துப்போன தூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்(ஏசா 14:12-15).
13. லூசிப்பர் என்ற பெயர் நம்முடைய தமிழ் வேதத்தில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. எபிரேய வேதத்தில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் “ஹெலேல்”. ஆங்கல வேதமாகிய கேஜேவி மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் “லூசிப்பர்”. நீங்களே ஏசாயா 14:12ம் வசனத்தை கேஜேவி பைபிளில் படித்துப்பாருங்கள்.
14. விழுந்து போன தேவதூதர்களை, பேய்கள், பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், வஞ்சிக்கிற ஆவிகள், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாத தூதர்கள், தேவர்கள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள் – உபா 2:17, மத் 25:41, வெளி 12:9, மத் 10:1, 1 தீமோ 4:1, லூக் 11:26, மத் 4:24, 2 பேது 2:4, ஏசா 37:19
15. விழுந்து போன தேவதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளன – 2 பேது 2:4, சங் 78:49, எபே 6:12, வெளி 12:7-9 பிரதான தேவதூதர்கள்

புனித லுயீஸ் டி மரிலாக்

புனித லுயீஸ் டி மரிலாக்
பிறப்பு ஆகத்து 12, 1591
பாரிஸ், பிரான்சு
இறப்பு மார்ச்சு 15, 1660 (அகவை 68)
பாரிஸ், பிரான்சு
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்-ஆல் மே 9, 1920, ரோம்
புனிதர் பட்டம் திருத்தந்தை 11ம் பயஸ்-ஆல் மார்ச் 11, 1934, ரோம்
முக்கிய திருத்தலங்கள் அற்புத பதக்க சிற்றாலயம், ரியூ டு பக், பாரிஸ், பிரான்சு
திருவிழா மார்ச் 15
சித்தரிக்கப்படும் வகை கைம்பெண் உடை
பாதுகாவல் பெற்றோரை இழந்தோர், நோயாளிகள், சமூக சேவகர்கள், கைம்பெண்கள்

புனித லுயீஸ் டி மரிலாக் (Saint Louise de Marillac, ஆகஸ்ட் 12, 1591 – மார்ச் 15, 1660), புனித வின்சென்ட் தே பவுலோடு இணைந்து பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவரும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். 

தொடக்க காலம்
லுயீஸ் டி மரிலாக், பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் 1591 ஆகஸ்ட் 12ந்தேதி பிறந்தார். சிறு வயதிலேயே, இவர் பெற்றோரை இழந்தார். இருந்தாலும் நல்ல முறையில் வளர்க்கப்பட்டார். பெரிய துறவற மடம் ஒன்றில் கல்வி பயின்றார். இதனால் இவருக்கு துறவற வாழ்வில் ஆர்வம் ஏற்பட்டது. திருப்பாடுகளின் புதல்விகள் என்ற துறவற சபையில் சேர இவர் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, இல்லற வாழ்வில் ஈடுபடுமாறு குடும்பத்தினர் இவரை அறிவுறுத்தினர்.

1617 பிப்ரவரி 5ந்தேதி, ஆன்டனி லீ க்ராஸ் என்பவரை மரிலாக் திருமணம் செய்து, மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு மைக்கேல் என்ற குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இவரது கணவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மரிலாக், தனது கணவரை அன்புடன் கவனித்துக் கொண்டார். ஆனாலும் கடவுளுக்காக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவரது மனதில் தொடர்ந்து நீடித்தது. 2 ஆண்டுகள் வேதனைக்கு பின்பு இவரது கணவர் மரணம் அடைந்தார்.

துறவற சபை
அந்த வேளையில் லுயீஸ் டி மரிலாக், புனித வின்சென்ட் தெ பவுலை சந்திக்க நேரிட்டது. அதன்பின் ஏழைகளுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யும் விதத்தில், இவர் துறவற வாழ்வை மேற்கொண்டார். புனித வின்சென்ட் தெ பவுலுடன் இணைந்து, பிறரன்பின் புதல்வியர் என்ற துறவற சபையைத் தோற்றுவித்தார்.

இவருடன் சேர்ந்து உழைத்த துறவற சபை அருட்கன்னியர்கள், பாவிகளை மனந்திருப்புவதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வமுடன் உழைத்தனர். நோயாளிகளை கவனிக்க மருத்துவ மனைகளும், ஆதரவற்றோரை கவனிக்க முதியோர் இல்லங்களும் இச்சபை சார்பில் அமைக்கப்பட்டன.

மரிலாக் மக்களுக்கு செய்த சேவையை, இயேசு கிறிஸ்துவுக்கு செய்த சேவையாக எண்ணினார். ஏழைகளிலும், கைவிடப்பட்டோரிலும் கடவுளைக் கண்டார். சிறப்பாக இவரது சபையினர் ஏழைப் பெண்களுக்கு உறைவிடம் அளித்து, உணவு கொடுத்து பாதுகாத்து வந்தனர். போரில் காயம் அடைந்த வீரர்களுக்கும் மருத்துவ சேவை செய்தனர்.

புனித லுயீஸ் டி மரிலாக்கின் அழியாத உடல், ரியூ டு பக், பாரிஸ்

புனிதர் பட்டம்
இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்களுக்கு சேவைகள் செய்து வந்த லுயீஸ் டி மரிலாக் 1660 மார்ச் 15ந்தேதி மரணம் அடைந்தார். 1920 மே 9ந்தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1934 மார்ச் 11ஆம் நாள், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

1960ஆம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் இவரை கிறிஸ்தவ சமூக சேவகர்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித லுயீஸ் டி மரிலாக்கின் அழியாத உடல், பாரிஸ் நகரில் இவர் வாழ்ந்த துறவற சபையின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புனித கத்தரீன் லபோரே

புனித கத்தரீன் லபோரே Saint Catherine Labouré


பிறப்பு மே 2, 1806
ஃபாய்ன்-லெஸ்- மாட்டைர்ஸ், பிரான்சு
இறப்பு திசம்பர் 31, 1876 (அகவை 70)
இங்கியன்-ரியூய்ல்லி, பிரான்சு
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம் திருத்தந்தை 11ம் பயஸ்-ஆல் மே 28, 1933
புனிதர் பட்டம் திருத்தந்தை 12ம் பயஸ்-ஆல் ஜூலை 27, 1947
திருவிழா நவம்பர் 25
சித்தரிக்கப்படும் வகை அற்புத பதக்கம்

புனித கத்தரீன் லபோரே (மே 2, 1806 – டிசம்பர் 31, 1876), பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாவைக் கண்ட திருகாட்சியாளரும் ஆவார். மரியாவின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.

தொடக்க காலம்
கத்தரீன் லபோரே, பிரான்சு நாட்டின் பர்கன்டிப் பகுதியில் 1806ம் ஆண்டு மே 2ந்தேதி பிறந்தார். இவரது திருமுழுக்கு பெயர் சோ லபோரே என்பதாகும். 1815 அக்டோபர் 9ந்தேதி, 9 வயதில் தனது தாயை இவர் இழந்தார். அப்போது இவர் மரியன்னையின் ஒரு சொரூபத்தை முத்தம் செய்து, "இப்போது முதல் நீரே என் தாய்" என்று கூறினார்.

அதன் பிறகு, இவர் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே, இவர் மரியன்னை மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். இளம்பெண்ணாக இருந்தபோது, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையில் உறுப்பினராக இணைந்தார். அதன் மற்ற உறுப்பினர்களோடு இணைந்து பிறரன்பு பணிகளை செய்து வந்தார்.

திருக்காட்சியாளர்
1830 ஜூலை 8ந்தேதி, இரவில் கத்தரீன் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒரு குழந்தை இவரைச் சிற்றாலயத்திற்கு அழைத்த குரல் கேட்டு விழித்து எழுந்தார். உடனே இவர் சிற்றாலயத்திற்கு விரைந்து சென்றார். அங்கு மரியன்னை நிற்கும் காட்சியை கண்டார். அன்னை இவரிடம், "கடவுள் உன்னை முக்கியமான ஒரு பணிக்குத் தேர்வு செய்துள்ளார்" என்று கூறி மறைந்தார்.

மீண்டும் 1830 நவம்பர் 27ந்தேதி, அன்னை மரியா இவருக்கு காட்சி அளித்தார். அப்போது மரியன்னை உலக உருண்டை மேல் நின்று கொண்டிருந்தார். அவரது கரங்களில் இருந்து ஒளிக் கதிர்கள் வெளிவந்தன. மரியன்னையைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன. காட்சி பின்பக்கம் திரும்பியது. அதில் சிலுவை அடையாளமும், அதன் கீழ் மாதாவை குறிக்கும் 'எம்' (M) என்ற எழுத்தும் காணப்பட்டன. அதன் அடியில் இயேசுவின் திவ்விய இருதயமும், மரியன்னையின் மாசற்ற இருதயமும் காணப்பட்டன. அவற்றைச் சுற்றி 12 விண்மீன்களும் காணப்பட்டன.


புதுமைப் பதக்கம்

மரியா காட்சி அளித்த சிற்றாலயப் பலிபீடம்
அந்த காட்சி முடிந்ததும் மரியன்னை கத்தரீனிடம், காட்சியில் கண்டது போன்ற ஒரு பதக்கத்தை கழுத்தில் அணியும் வகையில் தயார் செய்யச் சொன்னார். மேலும் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொள்பவர்கள் இயேசுவுக்கு ஏற்றவர்களாக வாழ்வார்கள் என்றும் பாவ வாழ்வில் இருந்து விலகுவார்கள் என்றும் மரியன்னை அறிவித்தார்.

இந்த காட்சிகளின் உண்மைத்தண்மை பின்பு திருச்சபையால் உறுதி செய்யப்பட்டது. கத்தரீனும் அன்னை மரியா சொன்னபடி செய்து, மக்கள் பலரும் அற்புத பதக்கத்தை அணிய வழிகாட்டினார். அதைக் கழுத்தில் அணிந்துகொண்ட பலரும் பல்வேறு நன்மைகளை அடைந்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாத சிலர் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொண்டதால் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னறிவிப்புகள்
கத்தரீன் லபோரே எதிர் காலத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை முன்னறிவிக்கும் வரமும் பெற்றிருந்தார். இவர் முன்னறிவித்தபடியே பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் சில முன்னறிவிப்புகள் பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

புனிதர் பட்டம்

புனித கத்தரீனின் அழியாத உடல்
தனது வாழ்நாள் முழுவதையும் கடவுளின் மேன்மைக்காகவும் மரியன்னையின் பக்தியைப் பரப்பவும் அர்ப்பணித்த கத்தரீன், 1876 டிசம்பர் 31ஆம் நாள் மரணம் அடைந்தார். 1933 மே 28ந்தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

கத்தரீன் இறந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு, இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் கத்தரீனின் உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 1947 ஜூலை 27ந்தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனித கத்தரீன் லபோரேயின் அழியாத உடல், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ரியூ டு பக்கில் உள்ள மரியன்னை காட்சி அளித்த சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புனித மரி பெர்னதெத் சூபிரூஸ்

புனித மரி பெர்னதெத் சூபிரூஸ்
லூர்து நகரின் புனித பெர்னதெத்
பிறப்பு சனவரி 7, 1844 [1]
லூர்துஸ், பிரான்சு
இறப்பு 16 ஏப்ரல் 1879 (அகவை 35)
நிவேர்ஸ், பிரான்சு
ஏற்கும் சபை/சமயம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம் திருத்தந்தை 11ம் பயஸ்-ஆல் 14 ஜூன் 1927, ரோம்
புனிதர் பட்டம் திருத்தந்தை 11ம் பயஸ்-ஆல் 8 திசம்பர் 1933, ரோம்
திருவிழா 16 ஏப்ரல் (பிரான்சில் 18 பெப்ரவரி)
பாதுகாவல் உடல் நோய்கள்

புனித மரி பெர்னதெத் சுபீரு அல்லது பெர்னதெத் சூபிரூஸ் (Saint Bernadette Soubirous, 7 ஜனவரி 1844 – 16 ஏப்ரல் 1879), ஒரு திருக்காட்சியாளரும் கத்தோலிக்க புனிதரும் ஆவார்.  

தொடக்க காலம்
பெர்னதெத் சூபிரூஸ், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1844 ஜனவரி 7ந்தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் மீதும், அன்னை மரியாவின் மேலும் பக்தியுள்ள கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு ஆலையில் வேலை செய்து வந்தார். பெர்னதெத் தனது நேரத்தை பெற்றோருக்கு பயனுள்ள விதத்தில் செலவழித்தார்.

மரியாவின் காட்சிகள்
பெர்னதெத்துக்கு 14 வயது நடந்தபோது, ஒருநாள் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் என்ற குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதத் ஒரு காட்சியைக் கண்டார். மரியன்னை ஒரு இளம் பெண்ணாக இவருக்கு காட்சி அளித்தார்.

பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும், “அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம் பெண்” என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த இளம் பெண், பெர்னதத்தை மீண்டும் அதே இடத்திற்கு வரச் சொன்னார். 1858 பிப்ரவரி 11 முதல் ஜூலை 16ந்தேதி வரை முதல் 18 முறை இவர் மரியன்னையின் காட்சிகளைக் காண பேறுபெற்றார். இவர் பின்னே ஒரு கூட்டம் பக்தியுடனும் மற்றொரு கூட்டம் கேலியுடனும் பின் தொடர்ந்தன.

அந்த இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்று மரியன்னை பெர்னதெத்திடம் கூறினார். அன்னையின் வேண்டுகோளை பங்குத்தந்தையிடம் பெர்னதெத் சொன்னபோது அவர் அந்த காட்சியை நம்ப மறுத்தார்; காட்சி அளித்த பெண்ணின் பெயரை கேட்டு வருமாறு சொல்லி அனுப்பினார். மரியா இவரிடம், “நானே அமல உற்பவம்” என்று தன்னைப் பற்றிக் கூறினார். இதற்கு பாவமின்றி பிறந்தவர் என்பது பொருள்.

அதைத் தொடர்ந்து திருச்சபை அதிகாரிகள் காட்சியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தனர். பெர்னதத் 16வது காட்சியைக் கண்டபோது, இவர் கையில் இருந்த மெழுகுவர்த்தி தலைகீழாக எரிந்தது. சிலர் 15 நிமிட அளவாக, இவரது கையை தீயினால் சுட்டனர். அது இவரை ஒன்றுமே செய்யவில்லை. ஒரு காட்சியின்போது, மரியாவின் கட்டளையை ஏற்று பெர்னதத் தோண்டிய ஊற்று நீர், இக்காலத்தில் அதைப் பருகுபவர்களின் நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபை இந்த காட்சிகளை முதலில் ஏற்க தயங்கினாலும், இவற்றை ஆய்வு செய்த நிபுணர் குழு இக்காட்சிகள் நம்பத்தகுந்தவை என சான்றளித்தது. இக்காட்சிகளில் காணப்பட்டவர் இயேசுவின் தாய் மரியா என்பதை ஏற்று, அவரை லூர்து அன்னை என்று கத்தோலிக்க திருச்சபை அழைக்கிறது.

அருட்சகோதரியாக

மெழுகினால் மூடப்பட்டுள்ள புனித பெர்னதெத் சூபிரூசின் அழியாத உடல்
பெர்னதெத் தனது 22ஆம் வயதில், நெவர்ஸ் நகரில் இருந்த இரக்கத்தின் சகோதரிகள் மடத்தில் துறவற வாழ்வைத் தொடங்கினார். அந்த மடத்தில்தான் இவர் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். இயேசுவிடமும் மரியன்னையிடமும் மிகுந்த பக்தி கொண்டவராய் வாழ்ந்தார்.

மேலும் அங்கே தையற்கலைஞராகவும், ஆலய பராமரிப்பாளராகவும் பெர்னதெத் சிறப்பாக பணி செய்தார். ஆலயத்தில் பயன்படுத்தப்படும் துணிகளில் இவர் பலவித கைவேலைப்பாடுகள் செய்து அழகுபடுத்தியுள்ளார். பின்னர், இவருக்கு வலது கால் முட்டியின் எலும்பில் காச நோய் வந்தது.

புனிதர் பட்டம்
நீண்ட நாட்கள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த பெர்னதெத், 1879ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி தனது 35ஆம் வயதில் இறந்தார். 1927 ஜூன் 14 அன்று, திருத்தந்தை பதினேராம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

1933 டிசம்பர் 8ந்தேதி அமல உற்பவ அன்னை திருவிழா அன்று திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனித பெர்னதத் சூபிரூசின் அழியாத உடல், இவர் வாழ்ந்த நெவர்ஸ் நகர மடத்தின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மெழுகினால் மூடப்பட்டுள்ள புனித பெர்னதெத் சூபிரூசின் அழியாத உடல்

புனித பியோ

பியட்ரல்சினா நகரின் புனித பியோ
Saint Pio of Pietrelcina

குரு, துறவி, ஒப்புரவாளர், ஐந்துகாய வரம் பெற்ற முதல் குரு
பிறப்பு மே 25, 1887
பியட்ரல்சினா, இத்தாலி
இறப்பு செப்டம்பர் 23, 1968 (அகவை 81)
சான் ஜியோவானி ரொட்டொன்டோ
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்  மே 2, 1999, ரோம், இத்தாலி
புனிதர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்  ஜூன் 16, 2002, ரோம், இத்தாலி
முக்கிய திருத்தலங்கள் சான் ஜியோவானி ரொட்டொன்டோ
திருவிழா செப்டம்பர் 23
பாதுகாவல் மக்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள், கத்தோலிக்க பதின்வயதினர்

பியட்ரல்சினா புனித பியோ (25 மே 1887 – 23 செப்டம்பர் 1968) கப்புச்சின் (Order of Friars Minor Capuchin) துறவற சபையின் குருவும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது திருமுழுக்கு பெயர் பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன், கப்புச்சின் சபையில் இணைந்தபோது பியோ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்; குருவானது முதல் பாத்ரே பியோ என்னும் பெயரில் பொதுவாக அறியப்படுகிறார். இவர் தனது உடலில் பெற்ற இயேசுவின் ஐந்து திருக்காயங்கள் இவரை உலகறியச் செய்தன. 2002 ஜூன் 16 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 
தொடக்க காலம்
இத்தாலியின் விவசாய நகரான பியட்ரல்சினாவில், க்ராசியோ மரியோ ஃபோர்ஜியொன் (1860–1946) - மரிய க்யுசெப்பா டி நுன்சியோ (1859–1929) தம்பதியரின் மகனாக பிரான்செஸ்கோ ஃபோர்ஜியொன் 1887 மே 25ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அங்கிருந்த சிற்றாலயத்தில், தனது சிறுவயதில் இவர் பலிபீடப் பணியாளராக இருந்து திருப்பலியில் குருவுக்கு உதவி செய்தார். இவருக்கு மைக்கேல் என்ற அண்ணனும், பெலிசிட்டா, பெலக்ரீனா மற்றும் க்ராசியா ஆகிய மூன்று தங்கைகளும் இருந்தனர். பக்தியுள்ள இவரது குடும்பத்தினர் தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்றதுடன், இரவில் செபமாலை செபிப்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் புலால் உணவைத் தவிர்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

சிறு வயது முதலே பக்தியில் சிறந்து விளங்கிய இவர், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவராக வாழ்ந்து வந்தார். இளம் வயதிலேயே இவர் விண்ணக காட்சிகளைக் கண்டார். 1903 ஜனவரி 6 அன்று, தனது 15ஆம், வயதில் மொர்கோனில் இருந்த கப்புச்சின் சபையில் நவசந்நியாசியாக நுழைந்த இவர், ஜனவரி 22ந்தேதி தனது துறவற ஆடையைப் பெற்றுக் கொண்டு, பியட்ரல்சினோவின் பாதுகாவலரான புனித ஐந்தாம் பயசின் (பியோ) பெயரைத் தனது துறவற பெயராக ஏற்றுக்கொண்டார். இவர் ஏழ்மை, கற்பு, கீழ்படிதல் ஆகிய துறவற வாக்குறுதிகளையும் எடுத்துக்கொண்டார்.

குருத்துவ வாழ்வு
ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின்னர் 1910ம் ஆண்டு பியோ குருவானார். இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றியதால் இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ஆம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.

1917ஆம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார். அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார். ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார். இவர் உடல் நலமின்றி துன்புற்ற வேளைகளில் இயேசுவின் திருப்பாடுகளை அதிகமாக தியானம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் வேதனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும் உலக மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பியோ தனது வேதனைகளை இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுத்தார். பியோ மக்களை கடவுளுக்கு நெருக்கமானவர்களாக மாற்ற பெரிதும் முயற்சி செய்தார். மக்களின் உள்ளங்களை அறியும் திறன் பெற்றிருந்த இவரிடம் பலரும் ஆன்மீக ஆலோசனை கேட்கத் திரண்டு வந்தனர்.

திருக்காய வரம்
பியோவின் திருக்காயங்கள்
1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ந்தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறப் பேறுபெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.

அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது. இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.

இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாதது மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. இவரது காயங்கள் ஒருமுறை குணமடைந்தாலும், அவை மீண்டும் தோன்றின.[10] லுய்ஜி ரொம்னெல்லி என்ற மருத்துவர், இவரது காயங்களைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக ஆய்வு செய்தார். ஜியார்ஜியோ ஃபெஸ்டா, க்யுசெப்பே பாஸ்டியனெல்லி, அமிக்கோ பிக்னமி ஆகிய மருத்துவர்களும் பலமுறை அவற்றை ஆராய்ந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் கூறமுடியவில்லை. ஆல்பர்ட்டோ கசெர்ட்டா என்ற மருத்துவர் 1954ல் பியோவின் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு, இந்த காயங்களின் தாக்கம் எலும்புகளில் இல்லை என்று உறுதி செய்தார்.

புனித பியோவின் அழியாத உடல்.
இது இவருக்கு புகழைத் தேடித் தந்தாலும், அக்காயங்கள் இவரது வேதனையை அதிகரிப்பதாகவே இருந்தன. இவரது நிழற்படங்கள் பலவும் இவரது காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தின் பதிவுகளைக் காண்பிகின்றன. 1968ல் பியோ இறந்தபோது, இவரது காயங்கள் அனைத்தும் சுவடின்றி மறைந்துவிட்டன.

புனிதர் பட்டம்
கிறிஸ்தவ தியானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பியோ, "புத்தகங்கள் வழியாக கடவுளைத் தேடும் ஒருவர், தியானத்தின் வழியாக அவரைக் கண்டுகொள்ள முடியும்" என்று குறிப்பிடுவார். 1960களில் பியோவின் உடல்நலம் குன்றத் தொடங்கியபோதும், இவர் தொடர்ந்து ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். 1968 செப்டம்பர் 22ந்தேதி, தனது இறுதி திருப்பலியை பியோ நிறைவேற்றினார்.

1968 செப்டம்பர் 23ஆம் நாள், செபமாலையைக் கையில் பிடித்தவாறும், "இயேசு, மரியா" என்ற திருப்பெயர்களை உச்சரித்தவாறும் தனது 81வது வயதில் பியோ மரணம் அடைந்தார். இவரது அடக்கத் திருப்பலியில் சுமார் மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவருக்கு 1999ஆம் ஆண்டு அருளாளர் பட்டமும், 2002 ஜூன் 16ஆம் நாள் புனிதர் பட்டமும் வழங்கினார். இவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 மார்ச் 3ந்தேதி இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட பியோவின் அழியாத உடல், சான் ஜியோவானி ரொட்டொன்டோ அருகிலுள்ள புனித பியோ ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புனித ஜான் மரிய வியான்னி

புனித ஜான் மரிய வியான்னி
Saint John Baptist Mary Vianney

புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி
மறைப்பணியாளர்
பிறப்பு மே 8, 1786
டார்டில்லி, பிரான்சு
இறப்பு ஆகத்து 4, 1859 (அகவை 73)
ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், பிரான்சு
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம்
அருளாளர் பட்டம் திருத்தந்தை 10ம் பயஸ்-ஆல் ஜனவரி 8, 1905, ரோம்
புனிதர் பட்டம் திருத்தந்தை 11ம் பயஸ்-ஆல் 1925, ரோம்
முக்கிய திருத்தலங்கள் புனித ஜான் மரிய வியான்னி திருத்தலம்; ஆர்ஸ்-சுர்-பார்மன்ஸ், பிரான்சு
திருவிழா ஆகஸ்ட் 8
பாதுகாவல் குருக்கள், பங்கு குருக்கள்

புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney, மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார். 
தொடக்க காலம்
ஜான் மரிய வியான்னி லயன்ஸ் நகருக்கு அருகில் டார்டில்லி என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் மத்தேயு - மேரி என்ற பெற்றோருக்கு மகனாக 1786 மே 8ந்தேதி பிறந்தார். இவருக்கு 3 வயதாக இருக்கும்போது பிரஞ்சு புரட்சி வெடித்தது. இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திருப்பலியில் பங்கேற்பது எளிதானதாக இல்லை.

இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் நற்கருணை விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அந்நிகழ்வு 1799ல் இவருக்கு 13 வயது நிகழ்ந்தபோது, அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது. இவர் தன்னுடைய தோட்ட இல்லத்தை ஒரு சிறுவர்களின் மறைக்கல்விக்கூடமாக மாற்றினார். நெப்போலியன் மன்னன் புரட்சியாளர்களைத் தோற்கடித்து திருத்தந்தையோடு உடன்படிக்கை செய்துகொண்டதால் கத்தோலிக்க மறை பிரான்சு நாட்டில் 1802ஆம் ஆண்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.

குருப் பட்டம்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, வியான்னியின் தந்தை இவரது விருப்பத்துக்கு இணங்கி தோட்ட வேலையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்தார். பிறகு இவர், தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான பிரெஞ்சு மொழியிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே புனித ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.

1809-ல் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது. எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் சுகம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே அங்கு மக்களோடு இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். பின்பு நெப்போலியன் உடன்பாட்டுக்கு பின்பு 1811-ல் அவர் வீடு திரும்பினார்.

இவருக்கு 25 வயதானபோது, உயர்நிலைப் பள்ளி கல்வி தொடங்கும் கட்டத்தில் இருந்தார்; மீண்டும் தன் பங்குத் தந்தையிடம் சென்று குருத்துவப் பணிக்குத் தயாரித்தார். 1812ல் இளம் குரு மாணவர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கு இருந்த 200 மாணவர்களில் இவரே கடைசியாக இருந்தார். பின்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று கற்க வேண்டியிருந்தது. ஆனால் பங்குத் தந்தையின் பரிந்துரையால்தான் அவர் குருப்பட்டம் பெற்றார். தன் பங்குத் தந்தைக்கே உதவியாக இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார்.

ஆர்சின் குருவாக
வியான்னியின் பங்குத் தந்தை இறந்த பின்பு இவரை எங்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இறுதியாக மக்கள் அதிகம் இல்லாத ஆர்ஸ் என்ற கிராமத்தின் ஆலயத்துக்கு பங்குத்தந்தையாக அனுப்பப்பட்டார். அப்போது அந்த பங்கு ஆலயம் இடிந்து கிடந்தது. எனவே அதற்கு அருகில் இருந்த சிற்றாலயம் இவருடைய பங்கு ஆனது. அந்த ஆலயத்தைச் சார்ந்தவர்கள் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் சமயப் பற்று இல்லாதவர்கள்.

அந்த மறைமாவட்டத்தின் தலைமை குரு வியான்னியிடம் அப்பணியைக் கொடுத்தபோது, “கடவுள் அன்பற்ற மக்களிடம், அவர் அன்பை உணரச் செய்வதே உமது பணியாகும்” என்று கூறினார். இத்தகைய மேலான ஆன்மீகப் பணியையே இவர் தனது உடனிருப்பாலும், போதனைகளாலும், தவ முயற்சிகளாலும் மக்களிடையே ஆற்றினார். அதிகாலையில் எழுந்து திருப்பலி நிறைவேற்றிவிட்டு ஒப்புரவு அருட்சாதன இருக்கையில் அமரும் இவரிடம், எண்ணற்றோர் ஒப்புரவு அருட்சாதனம் பெற வந்தனர்.

நாட்கள் உருண்டோடின. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவரைத் தேடி வந்தனர். உணவு உண்பதற்கும் நோயாளிகளைச் சந்திப்பதற்கும், மறைக்கல்வி வகுப்புகள் கற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே வியான்னி சிறிது நேரம் ஒதுக்குவார்; மற்ற நேரங்களில் எல்லாம் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டே இருந்தார். இவருடைய மறையுரைகள், மக்கள் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக இவர் மக்களைப் பாதித்த பாவங்களைப் பற்றியே எடுத்துரைத்தார்; அங்கு வாழ்ந்த விவசாயக் குடும்பத்தினர் மத்தியில் பரவிக் கிடந்த குடிப் பழக்கம், இரவு நடனங்கள், பக்தியற்ற நிலைமை ஆகியவற்றை மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்கள் படிப்படியாக மனம் மாறினர்.

புனித அல்போன்ஸ் லிகோரி எழுதிய அறநெறிப் பாடங்களைக் கற்று இவர் தன் பணியில் பயன்படுத்தினார். குருக்கள் மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை இவர் உணர்த்தினார். இவர் ஆன்மாக்களின் பாவங்களைக் கண்டுகொள்ளும் வரம் பெற்றிருந்ததால், பாவிகளிடம் கண்டிப்புடனும் கனிவுடனும் நடந்துகொண்டார். இவர் பாவிகளிடம் மிகவும் கனிவுடன் இருப்பதாக பல குருக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.

புனிதர் பட்டம்

பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் நகரில் இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல்
வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும் துணிவுடனும் போராடி இறையருளால் வெற்றி கண்டார்.

இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக 1859 ஆகஸ்ட் 4ந்தேதி மரணம் அடைந்தார். 1905ஆம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ல், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். பங்குத்தந்தையரின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவரது இறப்பின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதத்தில், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஜூன் 2009 - ஜூன் 2010 காலத்தை கத்தோலிக்க திருச்சபையில் குருக்களின் ஆண்டாக அறிவித்தார். அச்சமயம் வத்திக்கான் இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
புனித ஜான் மரிய வியான்னி (8 மே 1786 – 4 ஆகஸ்ட் 1859).  பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் நகரில் இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல்