அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Sunday, September 1, 2019

பூசையால் மனந்திருப்பப்பட்ட ஒரு ப்ரொட்டஸ்டான்ட் சபை உறுப்பினர்

பூசையால் மனந்திருப்பப்பட்ட ஒரு ப்ரொட்டஸ்டான்ட் சபை உறுப்பினர்

இங்கிலாந்திலிருந்து சுற்றுலா வந்திருந்த ப்ரொட் டஸ்டாண்ட் சபையினரின் குழு ஒன்று, ஃப்ளோரன்ஸ் மேற்றிராசனக் கோவிலில் திவ்விய பலிபூசை நடந்த போது அங்கிருந்தது. பூசை நிறைவேற்றிய குரு மிக ஆழ்ந்த பக்தியோடு பூசை நிறைவேற்றினார். ஆனால் அந்நியர் குழு ஒன்று தாம் செய்வதையெல்லாம் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணரவில்லை. அந்தக் குழுவில் உள்ள சிலர், தங்கள் வினோதப் பிரியத்தைத் தீர்த்துக் கொண்டவர்களாக, பீடத்தின் அருகில் தாங்கள் இருந்த இடங்களிலிருந்து நகர்ந்து, இந்தக் கோவிலின் அழகிய அம்சங்களைக் காணப் போய்விட்டார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாம் இருந்த இடத்திலேயே அசையாமல் இருந்து, பூசை முடியும் வரை குருவானவரின் ஒவ்வொரு அசை வையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டேயிருந்தார்.

பீடத்திலிருந்து சாக்றிஸ்திக்குச் சென்ற குருவானவரின் முகத்தில் வெளிப்பட்ட விசுவாச உணர்வும், வெளிப் படையான மகிழ்ச்சியும் இந்தப் பிரிவினை சபைக்காரரை மிக ஆழ்ந்த விதமாகப் பாதித்தது, அவருடைய மனதை சத்தியத்தைக் கொண்டு தாக்கியது. இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தவுடன் இந்த மனிதர் ஒரு கத்தோலிக்க குருவைத் தேடிச் சென்று, அடிப்படை ஞான உபதேசத்தை ஆர்வத்தோடு முழுமையாகக் கற்றுக் கொண்ட பின், ஞான ஸ்நானம் பெற்று, பக்தியார்வமிக்க கத்தோலிக்கராக மாறினார்.

பக்தியோடு செய்யப்படும் பூசைகளில் ப்ரொட்டஸ்டாண்ட்கள், அல்லது அவிசுவாசிகள் கலந்து கொள்ள நேரும்போதெல்லாம், நாம் இப்போது குறிப்பிட்ட ஆங்கிலேயரைப் போலவே, அவர்கள் எந்த அளவுக்கு மிக ஆழமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களில் பலர் மனந்திரும்பி, சத்தியத் திருச்சபையில் உட்படு கிறார்கள், இது மிக அடிக்கடி நிகழ்கிறது என்று எந்த தயக்கமுமின்றி நான் சொல்கிறேன்.

அவசரமாகவும், பக்தியும், வணக்கமும் இன்றியும் செய்யப்படும் பூசைகள்

அவசர அவசரமாகவும், உரிய பக்தியும், வணக்கமும் இல்லாமலும் செய்யப்படும் பூசைகளில் பங்கு பெறுவோர் மனங்களில் இந்தப் பூசைகள் விளைவிக்கிற மோசமான பாதிப்புகள் இதற்கு முன் சொல்லப்பட்ட நற்பாதிப்பு களிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

பதின்மூன்றாம் சிங்கராயரின் பூசை!

பதின்மூன்றாம் சிங்கராயரின் பூசை!

வணக்கத்துக்குரிய ஒரு குரு சொல்வதாவது: ''பாப்பரசர் 13-ம் சிங்கராயரின் பூசை ஒன்றில் பங்குபெற நான் ஒருமுறை அனுமதிக்கப்பட்டேன். பூசையைப் பற்றி நான் என் வாழ்வில் வாசித்த எந்த ஒரு புத்தகமும், நான் கேட்ட எந்த ஒரு பிரசங்கமும் அப்படிப்பட்ட ஒரு பாதிப்பை என் மனதில் அதற்கு முன் ஏற்படுத்தியதேயில்லை .

அந்த மகிழ்ச்சியான நாளுக்குப் பின் பதினைந்து வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்று வரை பரிசுத்த பிதாவின் அந்தப் பூசையை என்னால் மறக்கவே முடியவில்லை. அவரிடம் வெளிப்பட்ட பக்தியைக் கண்டு பாவிக்க நான் எவ்வளவோ முயன்றும், என் பூசைகளில் அத்தகைய பக்தியை என்னால் வெளிப்படுத்தமுடியவில்லை.

அப்போது பாப்பரசருக்கு எண்பத்தைந்து வயதாகி யிருந்தது. அவர் மிகவும் பலவீனமாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. மிகவும் குனிந்தபடிதான் அவர் சிற்றாலயத்திற்குள் பிரவேசித்தார். ஆனாலும் பலிபீடத்தை நோக்கிச் செல்கையில், அவர் ஒரு புதிய உயிராலும், ஒரு புதிய ஆற்றலாலும் நிரப்பப்பட்டார்.

தேவ பக்தியால் கிரகிக்கப்பட்ட நிலையில் அவர் திவ்விய பலிபூசையைத் தொடங்கினார். அவருடைய அடக்கவொடுக்கமும், அசைவுகளும், வார்த்தைகளை மெதுவாகவும், தெள்ளத் தெளிவாகவும் அவர் உச்சரித்த விதமும், கடவுளின் பிரசன்னத்தில் தாம் இருப்பதை அவர் உணர்ந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டின. தேவ வசீகர நேரத்தில், அவரது முகம் ஓர் அழகிய ஒளியால் ஒளிர்ந்தது, அவரது அற்புதமான கண்கள் சுடர் வீசின, அவரது பாவனை முழுவதுமே, சர்வ வல்லப சர்வேசுரனோடு உரையாடிக் கொண்டிருக்கிற ஒருவருடைய பாவனையாக இருந்தன.

மகா உத்தமமான வணக்கத்துடன் அவர் தம் கரங் களில் அப்பத்தை எடுத்து, தேவ வசீகர வார்த்தைகளை உச்சரித்தார். எப்பேர்ப்பட்ட அதிசயத்தைத் தாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் முழுவதுமாக உணர்ந் திருந்தார் என்பது அவருடைய தோற்றத்தில் தெளிவாக வெளிப்பட்டது.

அதன்பின் மோட்சத்தில் சர்வேசுரனுடைய சிம்மா சனத்திற்கு முன்பாக இருப்பவரைப் போல அவர் முழந்தா விட்டார். பின் எழுந்து தேவ அப்பத்தை உயர்த்தி, பரவசப் பட்டவராக அதை உற்றுநோக்கினார். அதன்பின் மெது வாக அதை இறக்கி, திருமேனித் துகிலில் அதை வைத்தார்.
மகா பரிசுத்த இரத்தத்தின் வசீகரத்தின் போதும், இதே மேலான உணர்வுகளையும், உயிருள்ள விசுவாசத் தையும் அவர் வெளிப்படுத்தினார்.

அந்நேரம் தொடங்கி, திவ்விய நன்மை அருந்துவது வரையில் ஒவ்வொரு கணமும் அவரது பக்தியார்வத்தை எங்களால் வெளிப்படையாகக் காண முடிந்தது.

ஆஞ்ஞஸ் தேயியின் போது அவர் கடவுளோடு நேருக்கு நேராகப் பேசுபவரைப் போலத் தோன்றினார்.

எத்தகைய நேசத்தோடு அவர் திவ்விய அப்பத்தை உட்கொண்டு, சேசுநாதருடைய திரு இரத்தத்தைப் பருகினார் என்பதை விளக்கிக் கூற எனக்குத் துணிவில்லை.

இவ்வளவிற்கும் பூசை மிக நீண்டதாக இருக்க வில்லை. இந்த முழு திருச்சடங்கும் எளிமையானதாக இருந்தது. ஆனாலும், நான் சொன்னது போல, இந்த ஐம்பது நீண்ட வருடங்களாக அது எப்போதும் என் கண்களுக்கு முன்பாக இருந்து வரும் அளவுக்கு அது என் மனதை வெகுவாகப் பாதிப்பதாக இருந்தது.''

மனிதர்களில் அதிக மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள்!

மனிதர்களில் அதிக மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள்!

அர்ச்சியசிஷ்டவர்கள் மட்டுமல்ல, பக்தியுள்ள குருக்களும் கூட பூசை நிறைவேற்றும்போது மிக ஆழ்ந்த திருப்தியையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள். பின்வருவனவற்றை அறிந்திருப்பது அவர்களுக்குப் போது மானதாக இருக்கிறது:

1. அவர்கள் கடவுளுடனேயே ஒரு நேரடியான, நெருங்கிய , தனிப்பட்ட தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; அவரைக் கரங்களில் ஏந்துகிறார்கள், அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவருடன் உரையாடுகிறார்கள்; அவரும் வாக்குக் கெட்டாத நேசத்தோடு அவர்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

2. சகல சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சத்தில் அவருக்குத் தருவதை விட மேலான மகிமையை, அவரே ஆசிக்கக்கூடிய அனைத்திலும் மேலான மகிழ்ச்சியையும் மகிமையையும், குருக்கள் அவருக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

3. குருக்கள் தங்கள் மீதும், உலகத்தின் மீதும், தங்கள் சொந்த நாட்டின் மீதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறார்கள்.

4. குருக்கள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிற பரிசுத்த சம்மனசுக்களின் படையணிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள்.

5. இறுதியாக, அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள பரிசுத்த ஆன்மாக்களுக்கு உதவி செய்கிறார்கள், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறார்கள்.

பக்தியும், நல்லறிவும் கொண்ட ஒரு குரு இதையெல்லாம் அறிந்திருந்தும், அவற்றின் காரணமாக மகிழ்ச்சியால் நிரப்பப்படாமல் இருப்பது எப்படி?

புறமத பிரபு மனந்திரும்பின புதுமை.

புறமத பிரபு மனந்திரும்பின புதுமை.

தேவநற்கருணையில் நடந்த புதுமையைக் கண்டு புறமதத்தவனான ஒரு பிரபு மனந்திரும்பின புதுமை.

சாக்ஸனி தேசத்தில் அக்காயானியான விட்டிக்கின் என்னும் பிரபு ரோமாபுரி இராயனோடு சண்டை செய்த போது இராயன் வெற்றிபெற்றதால் அவன் சமாதானமாய்ப் போனான். இராயன் பாளையம் நீங்கி போவதற்கு முன் நாற்பது நாள் ஒருசந்தியின் கடைசியில் வருகிற பெரிய வியாழக்கிழமை, பெரிய வெள்ளிக்கிழமை, பெரிய சனிக்கிழமை அங்கே மகா ஆடம்பரத்தோடு கொண்டாடினான் சாக்ஸன் பிரபு. 

ரோமபுரி இராயனும் மற்றக் கிறிஸ்தவர்களும் அந்தத் திருநாளில் செய்த காரியங்களைப் பார்ப்பதற்காக மாறுவேடம் பூண்டு பரதேசி போல இராயனின் பாளையத்துக்குப் போனான். திருநாள் முடியுமட்டும் அவனங்கேயிருந்து திருநாளில் செய்கிற சடங்குகளையெல்லாம் நன்றாய் பார்த்தான். அங்கே ஒருவன் அவனுடைய முகத்தை உற்றுப்பார்த்து விட்டிக்கின் என்று அறிந்து, இராயனிடத்தில் சொன்னான்.

இதை விட்டிக்கின் அறிந்து, தானே வலிய இராயனுடைய கூடாரத்துக்குள்ளே போனான். இராயன் இவனைக் கண்டு வரவேற்று "நீர் இங்கே வரவிரும்பினால் மகிமையோடு வராமல் இந்த நீசவேசத்தோடு வருவதேன்? " என்று வினவினான். இதற்கு விட்டிக்கின் "இந்தத் திருநாளிலே நீங்கள் செய்வது என்னவென்று பார்க்கவே மாறுவேடத்துடன் வந்தேன்" என்றான்.

இராயன் "என்ன பார்த்தீர்கள்" என்று கேட்டதற்கு, அவன்" நான் பார்த்த காரியங்களுள் ஆச்சரியமான இரண்டு காரியங்களாவன :

வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் துக்கமாயிருந்து, சனிக்கிழமை சந்தோசமாயிருந்தீர். இரண்டாவது குருவானவர் உமக்கும் சேவகர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிறபோது குருவின் கையில் நல்ல குழந்தையை கண்டதுமல்லாமல், தேவரீரும் சேவகரும் நன்மை வாங்கினபோது அந்தக் குழந்தை உம்முடைய வாயிலும் சில சேவகர்கள் வாயிலும் சந்தோஷமாய்ப் போனதையும், சில சேவகர்கள் வாயில் கஸ்தியோடு கட்டாயம்போல போவதையும் கண்டேன். ஆனால், அந்தக் குழந்தை யாரென்று நானறியேன். தேவரீர் துக்கமாய் இருந்ததற்குக் காரணம் இன்னதென்றும் அறியேன் என்றான்.

இராயன் இச்செய்தியெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்ட பிறகு "வியாழன் வெள்ளி இரண்டு நாளும் நம்முடைய கர்த்தர் இயேசுநாதருடைய திருமரணத்தின் சடங்குக்குகளைச் செய்ததினால் அவர் திருமரணத்தின் பேரில் நாம் வைத்த இரக்கத்தின் காரணமாக இரண்டு நாளும் மனவருத்தமாயிருந்தோம். பிறகு ஆண்டவர் உயிர்த்தெழுந்தருளின சடங்கு செய்ததினால் அன்றைக்கு நாங்கள் சந்தோஷமாயிருந்தோம்" என்று சொன்னான்.

பிறகு இராயன் தேவநற்கருணையின் இரகசியத்தையும் சொல்லி "திவ்ய நற்கருணையிலிருக்கும் இயேசுநாதரை நான் காணதிருக்கையில் அவரை நீர் கண்டதினால் முன்போல் இராமல் ஏதாவது செய்ய வேண்டியதிருக்கிறது. சில சேவகர்கள் பாவத்தோடு தேவநற்கருணை வாங்கியதால் அதிலிருக்கிற இயேசுநாதர் அவர்கள் வாயிலே கட்டாயமாய்ப் போவதைக் கண்டீர்" என்று சொன்னான். அந்தத் பிரபு இதையெல்லாம் கேட்ட பிறகு கிறிஸ்தவ மதத்தில் சேர அவனுக்கு ஆசை வந்தது. உடனே உபதேசம் கேட்டு மேற்றிராணியாரான புனித எரிபேர்த் என்பவர் கையினால் ஞானஸ்நானம் பெற்றான். அவனுக்கு இராயனே ஞானத்தகப்பனாயிருந்தான்.

அன்பான இறைமக்களே! அந்த ரோமாபுரி இராயன் இயேசுநாதர் பேரில் வைத்த இரக்கத்தினால் பெரிய வியாழக்கிழமையும் பெரிய வெள்ளிக்கிழமையில் மனவருத்தமாயிருந்தாரென்று கேட்டீர்கள். வெள்ளிக் கிழமைதோறும் கர்த்தர் நமக்காக அனுபவித்த துன்பங்களை சிந்தனை செய்து அவர் பேரில் உங்களுக்கு இரக்க உணர்ச்சி ஏற்படச் செய்வது புண்ணிய முயற்சியாகும்.

சேவகர்கள் தேவநற்கருணை வாங்கும் போது இயேசுநாதர் சில சேவகர்களிடம் சந்தோஷமாய் எழுந்தருளினார். சில சேவகர்களிடம் துக்கத்தோடு எழுந்தருளினார். கர்த்தர் உங்களிடத்தில் சந்தோஷமாய் எழுந்தருளத்தக்கதாக நீங்கள் அருளுயிரோடு இருக்க வேண்டும். இப்படியிருந்தால் தேவநற்கருணை உங்களுக்கு நன்மையாயிருக்கும். சாவானபாவத்தோடு நன்மை வாங்குபவர்களுக்கு அந்த தேவநற்கருணை தானே ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும்.